Vasanthangal Varalam
()
About this ebook
சரணின் வாழ்வில் குறுக்கிடும் மூன்று பெண்கள்.
முதலாவது ஷெர்ரி ,அடுத்து சாதனா , அதன் பின் ஆர்த்தி
கூச்ச சுபாவமுள்ள சரண் வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த வசந்தங்கள்.... அதன் பின் ஏற்படும் பிரிவும் உறவும்.....
வாழ்வின் இலையுதிர் காலம் வேரின் உரமானாலும் மீண்டும் தழைக்கும் வசந்தத் துளிர்கள்..... வாழ்வின் புதிய போதி மர நிழலில் இவன் கற்ற பாடங்கள்...
கண்ணீரும் காதலும் கை கோர்த்துச் சொல்லும் கதை..
திடீர்த் திருப்பங்களும் திசை மாறும் வாழ்வின் பயணங்களும்..இந்த நாவல் கதை மட்டுமல்ல ஒரு வாழ்வின் சுவடுகள்.
படியுங்கள்...ரசியுங்கள் சரணுக்காக பரிதாபப் படுங்கள்....
Read more from Vimala Ramani
Kannalaney Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsTher Yeri Vandha Nila Rating: 2 out of 5 stars2/5Jatayu Rating: 0 out of 5 stars0 ratingsMaanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsMaane Maane Maane Kollathane Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyil Ore Anniya Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsNeer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNee Varuvaiyana Ninaithirunthean Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Udhaya Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Uthikatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Mandapam Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanam Parijatham Rating: 0 out of 5 stars0 ratingsThavarugal Thiruthapadum Rating: 0 out of 5 stars0 ratingsMegapaaraigal Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaala Vaanampadikal Rating: 0 out of 5 stars0 ratingsUzhaipal Uyarntha Uthamar Rating: 0 out of 5 stars0 ratingspudhayala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Ennai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsMalara Marantha Pookkal… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vasanthangal Varalam
Related ebooks
Rangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsUllam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Lakshmi Ramananin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Nila Rating: 0 out of 5 stars0 ratingsNeer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsMalara Marantha Pookkal… Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Mayakkam Rating: 4 out of 5 stars4/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Maavilai Thorangal Rating: 5 out of 5 stars5/5Ellai Kodu Rating: 3 out of 5 stars3/5Meendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Innoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Vizhundha Meengal Rating: 0 out of 5 stars0 ratingsYandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Kondaadum Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsIndriravu Unnai Rating: 5 out of 5 stars5/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsகேட்கும் வரம் கிடைக்கும் வரை... Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyil Ore Anniya Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Vanavasam Rating: 0 out of 5 stars0 ratingsNaandhan Avan! Rating: 5 out of 5 stars5/5காத்திருந்த கண்களே... Rating: 0 out of 5 stars0 ratingsUyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsSonthamena Nee Irunthal… Rating: 0 out of 5 stars0 ratingsKanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vasanthangal Varalam
0 ratings0 reviews
Book preview
Vasanthangal Varalam - Vimala Ramani
http://www.pustaka.co.in
வசந்தங்கள் வரலாம்
Vasanthangal Varalam
Author:
விமலா ரமணி
Vimala Ramani
For more books
http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
1
கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது ஷெர்ரி செய்ததில் தப்பு ஏதும் தெரியவில்லை.
ஷெர்ரி...? இவன் செக்ரட்டரி.
பம்பாயின் உயர்ந்த மாடிக் கட்டிடம் ஒன்றில் எட்டாவது ஃப்ளோரில், ஏ.சி. அறையில் இவன் டிக்டேட் செய்வதை நோட்ஸ் எடுக்கும் இவன் செக்ரட்டரி.
சரண் ரொம்பச் சாது.
ஒரு சராசரித் தென்னிந்திய வார்ப்படம். வட இந்தியாவில் அவன் பெற்றோர்கள் இருக்கிற காரணத்தால் அவன் பெயரில் வேண்டுமானால் வடக்கு வாசனை கொஞ்சம் அடிக்கலாம். ஆனால் இவன் நம்ம ஊர்க்காரன். முழுக்க முழுக்க. சரவணன் என்ற நல்ல தமிழ்ப் பெயரைச் சரணாக மாற்றியது அவன் தந்தைதான்.
இவன் அப்பாவின் சிபாரிசில் இவனுக்குப் பெரிய கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது. ஆரம்பத்தில் ஆபீசுக்குக் குனிந்த தலை நிமிராமல் தான் போய் வந்தான். இந்தப் பம்பாயின் பரபரப்பில் எலெக்ட்ரிக் ரயிலுக்குள் நெரிசலில் இடம் பிடித்து, கஷ்டப்பட்டு மற்றவர்களை இடிக்காமல் கற்புடன் நெளிந்து, போக்குவரத்துக்களின் அதி அதி வேகங்களைக் கடந்து, ரோட்டைக் கிராஸ் பண்ணி, ஜீன்ஸ், பெல்பாட்டம், உள்ளாடை அணியாத ஆட்டம் இவை எதனாலும் கவரப்படாமல் ஆபீஸ் விட்டால் வீடு, வீடு விட்டால் ஆபீஸ் என்று போய் வந்து கொண்டிருந்தான் அவன்.
அவர்களுக்குச் சொந்தமான அந்த டூ பெட்ரூம் பிளாட்டில் அப்பா தன் தனி ஏ.சி. அறையின் பெரிய பெரிய கப்போர்டின் ஷெல்ஃபிலிருந்து நீள நீளமான பாட்டில்களிலிருந்து கலர் கலரான திரவத்தைக் கடகடவென்று ஊற்றிக் கொண்டு ஃப்ரிஜ்ஜிலிருந்து ஐஸ் க்யூப்ஸ் எடுத்து வரும்படி இவனுக்குக் கட்டளை இட்டால் கூட, மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ் க்யூப்ஸை பவலில் வைத்து விட்டு இவன் திரும்பிப் பார்க்காமல் வந்து விடுவான்.
அம்மாவும் அடிக்கடி ஆஸ்திக சமாஜம், சித்தி வினாயகர் கோவில், மகாலட்சுமி கோவில், பஜன், கஜல், கிருஷ்ணப்பிரேமி சொற்பொழிவு, குஜராத்தி சமாஜம் என்று பரபரப்பாகப் போய்க் கொண்டிருப்பாள்.
பாதி நாட்களில் இரவு ஆறிப் போன சப்பாத்தியையும், சப்ஜியையும் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு தனியாகத் தின்றிருக்கிறான் சரண். இவனுக்கு வேலை கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்! பொழுது போக ஒரு வழி!
இவர்கள் ஓனர் ஷிப் ஃப்ளாட் சாண்டக்ரூஸில் இருந்தது.
பொழுது போகவில்லை என்றால் ஜுகு பீச்சில் போய் உட்காருவான். வேடிக்கை என்ற பெயரில், உல்லாசம் என்கிற பெயரில் மனிதர்கள் கிழட்டு ஒட்டகங்களின் மீதும் குதிரை வண்டிகளின் மீதும் பயணித்து அந்தப் பிராணிகளைத் துன்புறுத்துவதைப் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருப்பான்.
அந்த ஒட்டகங்களுக்கு நடக்க முடியாமல் மூச்சு வாங்கும். கீழே படுத்துக் கொண்டு வாயைத் திறந்து கொண்டு கத்தியபடியே சிரம பரிகாரம் செய்து கொண்டிருக்கும். அதே சமயம், வேறொரு வாடிக்கையாளர், தப்பு, வேடிக்கையாளர் வந்து விட்டால் அவர்களுக்காக அதை மீண்டும் எழுப்பித் துரத்தி அவைகள் கஷ்டப்பட்டு மூச்சு இரைக்க ஓட முடியாமல் ஓடி...
என்ன அவஸ்தை இது!
இதே மாதிரிதான் அந்தக் குதிரை வண்டிகளும் சாரட்டா அவை? தலை தெறிக்க அலை வீசும் சமுத்திர மணலில் அந்தக் குதிரைகளை விரட்ட, வண்டியை இழுத்துக் கொண்டு அவை தலை தெறிக்க ஓட, கொஞ்சம் சாய்ந்தால்... கொஞ்சம் நிலை தடுமாறினால்?
இந்த அபாயகரமான வேகங்களில் மனிதர்களுக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி?
இப்படிப்பட்ட ஒரு நாளில்தான் அவன் அவளைச் சந்தித்தான்.
அந்தப் பெண் அழகாக இருந்தாள்.
என்ன அழகு, என்ன அழகு! காஜுரஹோ சிற்பம் மாதிரி அவள் உடம்பில் ஒரு கவர்ச்சி இருந்தது.
தன்னந்தனியே உட்கார்ந்தபடி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிவந்த சின்ன உதடுகளும் திருத்தப் பட்ட புருவங்களும் பாப் தலையும் மினி ஸ்கர்ட்டும் அவளை ஒரு வட இந்தியப் பெண் என்று சொல்லாமல் சொல்லிற்று. ஆனால் திருத்தமான அழகு இவளைத் தென்னிந்தியப் பெண்ணோ என்று நினைக்கத் தூண்டியது. ஒரு வேளை கலப்புத் திருமணமோ?
அவள் எந்த இனமாக இருந்தால் என்ன?
அவள் ஒரு பெண். அழகான பெண். இவள் அப்பாவோ, அம்மாவோ பஞ்சாபியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் பொன் நிற மேனி வராது. அந்த மழமழப்பான நீண்ட கால்கள், டி.வி.யில் அடிக்கடி சோப் விளம்பரத்திற்காக ஸ்னானம் செய்யும் ஓர் அழகிய பெண்ணின் அங்க அமைப்புக்களை அவள் நினைவுபடுத்தினாள்.
இது இவன் முதல் காதல். மானசீக முதல் காதல்.
தினம் தினம் அவளைச் சந்திக்கும் சாக்கில் இவன் மாலை வேளைகளில் ஜுகு பீச்சைத் தேடி ஓடுவான். அவளும் தனியாகக் காத்திருப்பாள்.
யாருக்காகக் காத்திருக்கிறாள்? எனக்கா?
அன்று
கட்டாயம் அவளைச் சந்தித்துப் பேசிவிடுவது என்கிற தீர்மானத்துடன் தான் டிப்டாப்பாக டிரெஸ் பண்ணிக் கொண்டு, சென்ட் பூசிக் கொண்டு (காதல் மணம்) கிளம்பினான்.
ஆனால் வழக்கமாக அவள் காத்திருக்கும் இடத்தில் அவளைக் காணவில்லை.
என்னவாயிற்று?
இவன் சரிப்படாது என்று இடத்தை மாற்றிவிட்டாளா?
இவன் அந்த ஈர மணலில் முழுவதிலும் அவளைத் தேடித் தேடிப் பைத்தியக்காரன் மாதிரி அலைந்ததுதான் மிச்சம்.
அவளைக் காணவேயில்லை.
அவனைத் தாண்டிக் குதிரைகள் ஓடின...
ஒட்டகங்கள் ஓடின...
இவன் நடந்து கொண்டிருந்தான்.
அந்தச் சமுத்திர மணலில் தனக்கே தெரியாத ஓர் ஏக்கத் தேடுதலை ஆரம்பித்தான்.
லைலாவைத் தேடிப் பாலைவனத்தில் கயஸ் அலைந்த மாதிரி.
கானல் நீர் ஊற்றைத் தேடிக் கொண்டு கலைமான்கள் அலைகிற மாதிரி...
இவன் பைத்தியக்காரனாய் அலைந்ததுதான் மிச்சம்.
கால் சோர்ந்தது. மனம் சோர்ந்து இவன் உட்கார்ந்த போது
அப்போதுதான்... அப்போதுதான்.
அதோ... அதோ அவள்... அவள் வருகிறாள்!
இதென்ன!
அவளுடன்... அவளுடன் ஒருவன். துணையாக மட்டும் வரவில்லை. தொட்டுக் கொண்டு வந்தான். அவள் இடுப்பில் கை கோத்தபடி ஓர் ஆண் அவளை அணைத்தபடி மற்றவர்களின் பார்வைகளை அலட்சியம் செய்தபடி, அந்தச் சமுத்திரத்தின் ஈரமான மணலில் அவளுடன் நடந்து கொண்டிருந்தான்.
யார் இவன்?
இவள் காதலனா? இவளைத் தேடியா இவள் தினம் தினம் இங்கு வந்து காத்திருக்கிறாள்?
அவன் அதோ ஏதோ அசிங்க ஜோக் சொல்லியிருப்பான் போலிருக்கிறது. அந்தப் பெண் முகம் சிவந்தாள்.
யூ... யூ...
என்றபடி அவன் நெஞ்சில் செல்லமாகக் குத்தினாள்.
அவன் நெஞ்சில் 'ஐ லவ் யூ' வை ஒட்ட வைத்திருந்தான்.
அவர்கள், தனியாக அமர்ந்திருந்த இவனைக் கடந்தபோது ஏதோ ஓர் அற்பப் புழுவைப் பார்ப்பது போல் இவனைப் பார்த்தார்கள்.
ஓட்டகங்களின் கத்தல்கள்...
குதிரைகளின் குளம்படிச் சத்தங்கள்...
ஜோடிகள் சிரிப்பொலிகள்...
இவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான்.
அவன் பின் சரியாக ஒரே வாரத்தில் இவனுக்கு வேலை கிடைக்க, புது வேலைக்குப் போய் இவன் சேர்ந்த முதல் நாள் -
மீட் மிஸ் ஷெர்ரீ. யுவர் செக்ரட்டரி,
என்று ஒருத்தியை இவன் பாஸ் அறிமுகம் செய்து வைத்தான்.
அந்தப் பெண்!
அன்று ஜுகு பீச்சில் பார்த்த அதே பெண்.
2
சரண் முதலில் அதிர்ந்தான்.
இவளா?
அந்த ஜுகு பீச் பெண்!
அடுத்த நிமிடம் அவள் இடையில் கை போட்ட அந்த முரட்டு வாலிபனின் முகம் நினைவுக்கு வரவே கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.
சே, இவன் கற்புடையவன்.
பெண்களைப் பற்றி அவதூறு பேசினால் கூட இவனுக்குப் பொறுக்காது. இவன் காதுக்குக் கூடக் கற்பு உண்டு.
அவளும் ஒரு நிமிடம் திகைத்திருக்க வேண்டும். முகம் சொல்லியது!
அதன் பின், இவன் தலை நிமிராமல் நோட்ஸ் கொடுப்பதும் அவள் எழுதிக் கொள்வதும் ஒரு தப்பில்லாமல் டைப் அடிப்பதும் பெரிய பெரிய லெட்ஜர்களைப் புரட்டிக் கம்பெனி கணக்கு வழக்கு பார்ப்பதும் பெரிய பெரிய ப்ராஜக்ட்கள் பற்றிக் கண்களை மூடிக் கொண்டு இவன் விவரிப்பதும் அவள் குறிப்பெடுப்பதும் சர்வ சாதாரணமான நிகழ்ச்சிகள்.
ஒவ்வொருத்தன் எத்தனை அதிர்ஷ்டம் செய்தவன்!
செக்ரட்டரியிடம் எத்தனை எத்தனை விஷமங்கள் செய்கிறான்!
மீண்டும் கோகிலா கமலஹாசன் மாதிரி செக்ரட்டரியின் வழ வழா இடுப்புப் பிரதேசங்களைக் கிள்ளிப் பார்த்து, இவன் உதடுகளால் அவள் கன்னத்தில் மென்மையை உரசிப் பார்த்து, இவன் மீசை அவள் மேலுதட்டில் ஒட்டுகிறதா என்று முயற்சித்து...
ஊஹூம்... நம் சரணுக்கு அதெல்லாம் கொடுத்து வைக்கவில்லை. பாவம் அப்பாவி!
ஒரு நாள் இவன் ஆபீஸுக்கு வரும்போது தன்