Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thadumaarum Thanimaram
Thadumaarum Thanimaram
Thadumaarum Thanimaram
Ebook83 pages32 minutes

Thadumaarum Thanimaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704036
Thadumaarum Thanimaram

Read more from Lakshmi Rajarathnam

Related to Thadumaarum Thanimaram

Related ebooks

Reviews for Thadumaarum Thanimaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thadumaarum Thanimaram - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    தடுமாறும் தனிமரம்

    Thadumaarum Thanimaram

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அனிதா செருப்பை வாசலில் உதறும் பொழுது இடமில்லாமல், நிறைய செருப்புக்கள் கிடந்தன. யார் வந்திருக்கிறார்கள்? காலையில் அம்மா எதுவும் சொல்லவில்லையே? மெதுவாக நடையைக் கடந்து ஹாலில் நுழைந்தாள். சின்ன ஹால் நிறைய மனிதர்கள். நான்கு பட்டுப்புடவைகள்... அதில் ஒன்று வயதானவளாக... இரண்டு ஆண்கள்... ஒருவர் வயதானவர். ஒருவர் இளைஞர். அப்படியே அவர்களைப் படம் பிடித்துக் கொண்டாள் அனிதா.

    தோ… எம் பெண்ணே வந்துட்டா என்று அம்மா சற்று பலமாகக் கூறினாள்.

    பெண்கள் நடுவே தாம்பாளத்தட்டு... ஒரு புடவை, ரவிக்கை, தேங்காய், மல்லிகைப் பூச்சரங்கள் வெற்றிலைக் கட்டு, மஞ்சக்கிழங்கு.

    என்னைப் பெண் கேட்டு வந்திருப்பார்களோ? காற்றின் வீச்சில் மலரும் மலர்ச்சியாக மனம் ஒரு கணம் விகசித்தது, ஒன்றும் பேசாமல் உள்ளே போனாள். உள்ளறையில் மூன்றாவது தங்கை பட்டுச் சேலை உடுத்தி தலை நிறையப் பூவுடன் தலை குனிந்து உட்கார்ந்திருப்பது, தெரிந்தது. விசுக்கென்று தூக்கிவாரிப் போட்டது.

    மகளுக்கென்று கோபம் பூத்தது. இரண்டாவது தங்கை மாலா இவளிடம் ஒடி வந்தாள். கைப்பையை ஆணியில் மாட்டினாள் அனிதா.

    என்னக்கா லேட்டா வந்திருக்கே?

    நீ எப்ப வந்தே?

    அம்மா போன் பண்ணினாங்க காலையில் பத்தரைக்கே வந்துட்டேன்.

    இன்னிக்கு வீட்ல என்ன விசேஷம் மாலா?

    ஏங்க்கா, உனக்குத் தெரியாதா?

    தெரிஞ்சா ஏன் கேட்கப் போறேன்?

    நாராயணியைப் பெண் பார்க்க வந்திருக்காங்க...

    உனக்கு சேதி சொன்ன அம்மா எனக்கும் சேதி சொல்லலையே... ஏன் மாலா?

    மாலா விழித்தாள். ஒருவேளை அம்மாவுக்கு லேட்டா தகவல் வந்திருக்குமோ என்னமோ?

    இல்ல... என் ஆபீஸ் போன் கிடைச்சிருக்காது.

    சட்டென்று அதையே பிடித்துக் கொண்டாள் மாலா. அதனால் தான் உனக்குச் சொல்ல முடிஞ்சிருக்காது.

    தேறிட்டே… உன் புருஷன் வந்துட்டாரா?

    குழந்தையைக் ஸ்கூல்லேர்ந்து அழைச்சிட்டு வருவாரு...

    கமலி வந்துட்டாளா?

    அனிதாவுக்கு அடுத்தவள் மாலா, அவளுக்கு அடுத்தவள் கமலி. கடைசி தங்கை இன்று பெண் பார்க்க காத்திருக்கும் நாராயணி.

    கமலி வந்துண்டு இருக்கேன்னு போன் பண்ணினா.

    குட்… எல்லாரும் வந்தாச்சு... எனக்கு முன்னாடியே சொல்ல முடியாம அப்பா சைக்கிளும் ரிப்பேரா இருக்குமோ?

    கேட்டபடி துண்டை எடுத்துத் தோளில் போட்டபடி அனிதா கொல்லைப்புறம் போனாள். கொல்லைப்புறத்திற்கு முன்னால் பெரிய சமையலறை. நெய், ஏலக்காய் மணம் மூக்கைத் துளைத்தது. புது டிகாஷன்… எண்ணெயில் மிதக்கும் போண்டாக்கள்...

    நின்று சமையலறையை நோட்டம் விட்டாள். அடுத்த வீட்டு அகிலாண்டாம் போண்டாவை திருப்பி விட்டாள்.

    அனி, உன் குரல் கேட்டது. காபி இத்தாகலந்துட்டேன்.

    மன உளைச்சலுக்கு காபி அமிர்தமாக இருந்தது. ரசித்துக் குடித்தவள் காபி தம்ளரை நீட்டினாள்.

    நீ லேட்டாக வந்துட்டே... ஏம்மா, ஆபீஸ்ல வேலையோ?

    சோகையாக ஒரு புன்னகை பூத்தாள்.

    இப்பத்தான் வீட்டுக்குள் நுழைஞ்சதும் தான் தெரிஞ்சது.

    நிற்காமல் கொல்லைப்புறம் போனாள். சிமெண்ட் தொட்டி. நிறைய ஜில்லென்று தண்ணீர் நிரம்பி இருந்தது. குனிந்த பொழுது நிழலாக அவள் முகம் ஆடியது. விடும் மூச்சு கனத்தது. கைகையாகத் தண்ணீரை முகத்தில் வாரி அடித்துக் கொண்டாள். சோப்பு நுரை முகத்தை மூடியது. தண்ணீர்த்துளிகள் கன்னத்தில் இறங்கின.

    அனிதா, வரயாம்மா...

    அம்மாவின் தேன் குரல் காதில் விழுகிறது. பதில் கூற முடியாத மன இறுக்கம் இன்னும் இன்னும் என்று தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டாலும் உடைந்து விடுவோமோ என்று சொல் வெளியே வராதா தயக்கம்.

    அனிதா, இன்னும் என்ன பண்றே?

    துவைக்கிற கல்லில் உட்கார்ந்து சாவகாசமா முகத்தை துடைக்கும் பொழுது அம்மா வந்துவிட்டாள்.

    அனீம்மா, அவங்களாம் காத்துகிட்டு இருக்காங்க...

    அனிதா நல்ல நிறம் தான். ஆரஞ்சு சுளைகள் போல் சின்ன மெல்லிய உதடுகள். பிறைத் துண்டு போன்ற நெற்றி, கருகருவென்ற கேசம், சின்னச் சின்ன பற்கள்... அதிகம் சதைப்பிடிப்பில்லாத

    Enjoying the preview?
    Page 1 of 1