Varamaga Nee Varavendum
5/5
()
About this ebook
Read more from Pattukottai Prabakar
Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsThottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Varamaga Nee Varavendum
Related ebooks
Unnai Vidamaatten Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsNee Matrum Naan Rating: 0 out of 5 stars0 ratingsKalyaana Varam Rating: 5 out of 5 stars5/5Sirithu Sirithu Ennai... Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Muthirai Rating: 5 out of 5 stars5/5Konjam Kadhal Vendum Rating: 4 out of 5 stars4/5Arugey Vaa Anamika Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikku Kalyanam Rating: 5 out of 5 stars5/5Enathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Thittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Enakkendru Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Bathran Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Kaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsDecember Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratingsUruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsTheerpu Thedi Varum! Rating: 5 out of 5 stars5/5Uyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Katrathu Kaadhal Rating: 5 out of 5 stars5/5Kaakithap Poo Theen Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Oru Athikaalai Kolai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Varamaga Nee Varavendum
1 rating0 reviews
Book preview
Varamaga Nee Varavendum - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
வரமாக நீ வரவேண்டும்
Varamaga Nee Varavendum
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
1
காலை மணி ஏழு என்று நம்ப முடியாதபடி சூரியனை ஜீரணம் செய்த கர்ப்ப மேகங்கள் ஒரு பெரிய மழைக்கான ஒத்திகையாக சின்னத் தூறல்களைச் சிந்திக் கொண்டிருந்தன.
சாலைகள் நனைந்திருந்தன. ஒரு சுறுசுறுப்பான தினத்திற்குத் தயாராகி தேதி கிழித்த நகரத்து மக்களில் பலர் சோம்பேறியாகி தங்கள் காரியங்களை ஒத்திப் போடலாமா என்று யோசிக்கத் தொடங்கினர்.
அரவிந்த் எழுந்து சோம்பல் முறித்துவிட்டு போர்வையை மடித்துப் போட்டான். மெத்தையின் விரிப்பை சுருக்கமில்லாமல் சரிசெய்து, இரவு படித்து விட்டுக் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்து வைத்தான். இரவு விளக்கை அணைத்தான்.
அறையை விட்டு கூடத்திற்கு வந்தான். சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பா சோமசுந்தரம் செய்தித்தாளில் 'வீடு - நிலம் விற்பனைக்கு' விளம்பரங்கள் பிரசுரமான பகுதியைப் புரட்டி வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பு நோட்டில் சில விலாசங்களைப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தார்.
ரொம்ப நேரமா மழை பெய்யுதாப்பா?
என்றான் அவருக்கு அருகில் இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்து ஆங்கில நாளிதழை எடுத்தபடி.
இராத்திரிலேர்ந்து விட்டு விட்டு பெய்துகிட்டிருக்கு இன்னைக்கு பலத்த மழை பெய்யும்னு ரேடியோல சொன்னான்.
சமையலறையில் தாளிக்கும் ஓசையும், வாசனையும் இங்கே வந்தது. திடீரென்று வீசிய காற்றில் சன்னலின் திரைச்சீலைகள் உப்பலாகி மேலே உயர்ந்து, அவர்கள் கைகளில் பிடித்திருந்த செய்தித்தாள்கள் படபடத்தன.
அம்மா, நான் எழுந்துட்டேன். காபி கொடுத்துடும்மா
என்று குரல் கொடுத்தான் அரவிந்த்.
இருப்பா. பால் சுட வைச்சிருக்கேன்
என்று அம்மாவின் குரல் வந்தது.
அரவிந்த் பின்புறமிருந்த குளியலறைக்கு வந்து பல் மட்டும் துலக்கிவிட்டு, தோட்டத்து செம்பருத்தி செடிகளின் மேல் விழுகின்ற மழைத் துளிகளின் பாரம் தாங்காமல் அவை ஆடுவதை கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சமையலறைக்கே வந்து விட்டான்.
ஏம்மா இந்த மழையிலயும், குளிர்லயும்கூட தலைக்குக் குளிச்சியா என்ன?
என்றான் தலையில் ஈரத் துண்டை சுற்றிக் கொண்டு சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்த அம்மாவிடம்.
வெள்ளிக்கிழமைடா இன்னைக்கு
என்றாள் அம்மா அவனுக்கு காபி கலந்தபடி.
இன்னைக்கு வியாழன் இல்லை?
நேத்து தேதியை எடுத்து ஒட்டி வைச்சுக்கிட்டாதான் வியாழன்.
அரவிந்த் உடனே நாக்கைக் கடித்துக் கொண்டான் எதையோ மறந்தவன் போல.
ஏன் என்னடா?
இன்னைக்குக் காலையில் ஒன்பது மணிக்கு பெங்களூரில் இருந்து ஒரு வியாபாரி வர்றான்மா. அவனுக்கு முப்பதாயிரம் ரூபா ரொக்கமா கொடுக்கணும்
என்றவன் அவசரமாக காபியைக் குடிக்க முனைந்து சூடு தாங்காமல் நாக்கைச் சுட்டுக் கொண்டான்.
மணி ஏழரைதானே ஆகுது? ஒரு மணி நேரத்துக்குள்ளேப் போய்ச் சேர்ந்துட மாட்டியா? எதுக்காகப் பதர்றே? நிதானமா ருசிச்சிக் குடி
அதில்லைம்மா. நான் பணத்தை ரெண்டு பேங்குகளுக்குப் போய் எடுத்துக்கிட்டு அப்புறம் தான் நம்ம நிறுவனத்துக்குப் போகணும். மழைவேற பெய்துகிட்டிருக்கு
என்றவன் மடமடவென்று காபியைக் குடித்து முடித்து தம்ளரை வைத்தான். புறங்கையால் தன் தாடையை தடவி சவரம் செய்து கொள்ள வேண்டுமா என்று பார்த்து, நாளைக்குச் செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து குளியலறைக்கு ஓடினான்.
அவசரம்னு சொல்லிவிட்டு டிபன் சாப்பிடாம கிளம்பிடாதே! நீ குளிச்சிட்டுக் கிளம்பறதுக்குள்ளே தயார் செஞ்சுடறேன்
என்ற குரல் கொடுத்தாள் அம்மா.
அரவிந்த் முப்பதே நிமிடங்களில் குளித்து, உடுத்தி சிறிய அலுவலக பெட்டி, பைக்கின் சாவி சகிதமா தயாராகி சமையல் அறைக்கு வந்தான்.
உட்கார்ந்து நிதானமா சாப்பிட நேரமில்லை. அப்படியே நின்னுக்கிட்டே சாப்பிடறேன். என்ன டிபன்?
என்றான்.
பறப்பியே. சேமியா கிச்சடி
அம்மா தட்டில் வைத்ததும் எடுத்து ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறு கையால் தொட்டுக் கொள்ள சட்னி போடப்படுவதற்குக் கூடக் காத்திருக்காமல் வேகவேகமாக விழுங்கினான்.
கொஞ்சம் மெதுவாதான் சாப்பிடேன். நம்ம ஆபீசு தானே? வர்றவன் பத்து நிமிடம் காத்திருந்து பணம் வாங்கிட்டுப் போறான்.
சொன்ன நேரத்துக்கு அவரைப் பார்க்கறது தான் மரியாதைம்மா. அவர் பெரிய நபர். நமக்கு மூலப்பொருள்களை அனுப்பறவர். காக்க வைக்கிறது நியாயம் இல்லை.
சாப்பிட்டு முடித்து சமையலறை குழாயிலேயே கை கழுவி அம்மாவின் முந்தானையிலேயே கை துடைத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தான் அரவிந்த்.
போயிட்டு வர்றேன் அப்பா
என்றான் தனது பைக்கின் பெட்டியை திறந்தபடி.
செய்தித்தாளிலிருந்து நிமிர்ந்த சோமசுந்தரம், இன்னும் லேசா மழை இருக்கே. ஆட்டோ பிடிச்சுக்கிட்டுப் போயேன்
என்றார்.
இல்லைப்பா. மழைக் கோட்டு இருக்கு. ரெண்டு பேங்குக்குப் போயிட்டுப் போகணும்
என்ற அரவிந்த் மழைக்கோட்டும், அதற்குரிய குல்லாயும் எடுத்து அணிந்து சிறு பெட்டியை வண்டியின் பெட்டிக்குள் வைத்தான். அது நீளமாக இருந்ததால் மூடமுடியவில்லை.
அம்மாவிடமும் சொல்லிவிட்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு சாலையில் இறங்கினான். மழை சற்று வலுக்கத் தொடங்கியிருக்க, தண்ணீரைச் சிதறடித்துக் கொண்டு வண்டி ஓடியது.
முகத்தில் ஜில்லென்று விழுந்த மழைத்துளிகளை ரசித்தபடி ஓட்டின அரவிந்தைப் பற்றிக் கொஞ்சம் விபரமாக:
இருபத்தி ஆறு வயது இளைஞன். பட்டப்படிப்பு முடித்தவன். உயரமானவன். சிவந்த நிறம். தீர்க்கமான நாசி. அடர்த்தியான மீசை. சற்றேப் பெண்மை கலந்த உதடுகள்.
அவன் அப்பா சோமசுந்தரம் கட்டிடங்கள் கட்டித் தருகிற ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வு காலம் தானே என்று வீட்டில் சும்மா இருப்பதில்லை அவர்.
வீடு, மனை, நிலம் வாங்கிக் கொடுப்பதிலும், விற்றுக் கொடுப்பதிலும் உதவி செய்யும் தரகர் வேலை செய்து வருகிறார்.
ஒரு இடத்தை வாங்குவதில் உள்ள சூட்சமமான விபரங்களும், வழிமுறைகளும் அவருக்கு அத்துப்படி. அழைத்துச் சென்று இடம் காட்டுவதிலிருந்து, வில்லங்கம் பார்த்து, விலை பேசி முடித்து பத்திரம் பதிவு செய்து முடித்துத் தரும்வரை சகல வேலைகளையும் செய்துத் தருவார். இரண்டு பக்கங்களிலும் வருமானம் வரும்.
அப்படி சம்பாதித்த தொகையை எல்லாம் ஒழுங்காக சேமித்து, அரவிந்த் படித்து முடித்ததும் அவன் தொழில் தொடங்குவதற்கு மூலதனமாகக் கொடுத்தார்.
மற்ற அப்பாக்களைப் போல் அவர் தன் மகனை 'நீ படித்து முடித்து அரசாங்க உத்யோகத்திற்குப் போக வேண்டும்' என்று சொல்லி வளர்க்கவில்லை. 'நீ உன் செந்தக் கால்களில் நின்று பெரிய தொழிலதிபராக வர வேண்டும்' என்கிற எண்ணத்தை அவன் நெஞ்சத்தில் விதைத்து தான் வளர்த்தார்.
விதைத்தது மரமாகி நின்றது. அரவிந்த் படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு அலுவலகத்தை நோக்கி ஓடாமல் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு ஓடினான்.
பலரை சந்தித்துப் பேசினான். தகவல்கள் சேகரித்தான் இறுதியில் எந்தப் பொருளைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்கிற தீர்மானத்திற்கு வந்தான்.
அவன் முடிவுக்கு வந்த தொழில் பாலீதின் பைகள் தயாரிக்கும் தொழில்! இந்த நாகரீக உலகில் யார் எந்தப் பொருளை தயாரித்தாலும், அல்லது விற்பனை செய்தாலும், பொருளை ஒரு பாலீதின் பையில் போடுகிறார்கள் என்பதால் அதன் தேவை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று யோசித்து எடுத்த முடிவு இது.
பிறகு அது தொடர்பாக இயந்திரங்கள், மூலதனம், தயாரிப்பு முறை, விற்பனை வாய்ப்பு என்று சகல விபரங்களும் திரட்டி அப்பா கொடுத்த பணத்தோடு வங்கியிலும், கடனுதவி பெற்று, 'பார்வதி பாலீதின் தொழிற்சாலை' என்று தன் அம்மா பெயரில் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
தொழிற்சாலை என்கிற வார்த்தை பெரிய மதிப்பை ஏற்படுத்தும். ஆனால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஒரு சிறிய இடத்தில் ஒரே ஒரு இயந்திரமும், சின்ன அலுவலக அறையும், சின்ன கிட்டங்கியும்தான் அவனது தொழிற்சாலை.
தற்போது மொத்தம் ஏழு பேர் வேலை செய்கிறார்கள். இரண்டு வருடத்தில் முன்னேற்ற அறிகுறி தெரிகிறது கொஞ்சம் லாபமும் பார்த்து பைக் வாங்கி விட்டான் வங்கிக் கடன் பெரும்பகுதி அடைத்து விட்டான்.
வீடு இருப்பது சைதாப்பேட்டையில். தொழிற்சாலை இருப்பது திருவான்மியூரில். தினசரி காலை ஒன்பது மணிக்கு வந்து விட்டால் இரவு ஏழு அல்லது எட்டுக்கு தான் வீட்டிற்குத் திரும்புவான்.
தொழிலில் பெரிய அளவில் உயர வேண்டும் என்கிற தீவிரமான ஆர்வமும், உழைப்பும் உள்ள அரவிந்திற்கு பக்கபலமாக நண்பன் மனோகரன் கிடைத்தது பெரிய யோகம்.
இவனோடு படித்த மனோகரை சென்ற வருடம் சந்தித்தபோது, அவன் எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று சோகமாகச் சொல்ல, அவனை தனது நிறுவனத்தின் விற்பனை மேலாளராக செயல்படச் சொல்லி விட்டான்.
பல இடங்களுக்குச் சென்று வியாபாரம் பேசி ஆர்டர் வாங்கி வருவான் மனோ. அவன் மூலம் நடக்கிற விற்பனைக்கு சம்பளம் தவிர குறிப்பிட்ட சதவிகிதம் கமிசனும் உண்டு.
அதனால் மனோகரன் ஆர்வமாக உழைக்க, அரவிந்திற்கு தொழில் அபிவிருத்தியாகிக் கொண்டிருந்தது.
அரவிந்த் இன்றைக்கு தான் பார்க்க வேண்டிய அலுவல்கள், கொடுக்க வேண்டிய உத்தரவுகள் இவற்றை யோசித்தபடி வண்டியை செலுத்தினான்.
பணம் எடுக்க வேண்டிய அந்த வங்கி வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கிய அவன் அதிர்ச்சியடைந்தான்.
அவனுடைய அலுவலக சிறுபெட்டியைக் காணவில்லை! வெளியே நீட்டிக் கொண்டிருந்த பெட்டி ஏதாவது பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியபோது விழுந்து விட்டதா?
அய்யோ! அதற்குள் பேங்க் பாஸ் புத்தகங்களும், செக் புத்தகங்களும், பல முக்கியமான அலுவலக் காகிதங்களும், ரொக்கமாக ரூபாய் ஐந்தாயிரமும் உள்ளனவே!
வியர்த்துப்போன அரவிந்த் பதட்டமாகத் தன் வண்டியைத் திருப்பி தான் வந்த பாதையெல்லாம் தேடியபடி ஓட்டினான்.
ஒருமணி நேரம் தேடியும் பெட்டி கிடைக்கவில்லை. அருகில் இருந்த போலீசு நிலையத்தில் விபரமாக புகார் எழுதிக் கொடுத்துவிட்டு, மிகுந்த வேதனையோடு, அரவிந்த் திருவான்மியூர் வந்து சேர்ந்தான்.
பெங்களூர் வியாபாரிக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தபடி தனது நிறுவனத்திற்குள் வர... அங்கே மேசை மேலே அவனது பெட்டி இருப்பதைப் பார்த்து திகைத்துத் திரும்ப...
எதிரில் நாற்காலியில் அந்த அழகான பெண் அமர்ந்திருந்தாள்.
2
அந்தப் பெண் புடவை உடுத்தியிருந்தாள். ஊதா நிறப் புடவையில் மஞ்சள் நிறத்தில் சின்னச் சின்னப் பூக்கள் சிதறியிருந்தன. புடவைக் கட்டலில் ஒரு நேர்த்தி இருந்தது.
அதே நிறத்தில் ஜாக்கெட். அதன் கைகளில் தோள் பட்டையருகில் உப்பலாக இன்றைய நாகரீகத்தின்படி தைக்கப்பட்டிருந்தது. கருகருவென்ற கூந்தலை ஒற்றைப் பின்னலாக்கி, பின்னலை முன்புறம் போட்டிருந்தாள். அதனால் தலையருகில் கூந்தல் ஒரு பக்கமாக நெகிழ்ந்திருந்ததில் ஒரு தனி அழகு இருந்தது.
நெற்றியில் ஊதா நிறத்தில் ஒட்டுப் பொட்டு. கைகளில் அதே நிறத்தில் வளையல்கள். அதே நிறத்தில் காதணிகள். தோளில் வார் வைத்த ஒரு கைப்பை போட்டிருந்தாள்.
அவளின் அகலமான கண்களில் ஒரு கவர்ச்சி இருந்தது. ஒழுங்குபடுத்தப்பட்ட, புருவங்கள். சாயம் பூசாத, ஆனால் மினுமினுப்பான சின்ன உதடுகள்.
அடக்கமான அழகோடு, நாகரிகமாக இருந்த அவளைப் பார்த்ததுமே ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிற பெண் என்பது புரிந்தது.
அரவிந்த் தான் அணிந்திருந்த குல்லாயையும், மழைக் கோட்டையும் அலுவலக அறைக்கு வெளியிலேயே கழற்றி ஒரு ஆணியில் மாட்டிவிட்டு, கைக்குட்டை எடுத்து தன் ஈர முகத்தைத் துடைத்தபடி உள்ளே வந்ததும், அவள், சார்! அரவிந்த் நீங்கள் தானா?
என்றாள்.
ஆமாங்க. இந்தப் பெட்டி நீங்கள் தான் கொண்டு வந்தீங்களா?
"ஆமாம்