Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sooda Oru Cup Tea
Sooda Oru Cup Tea
Sooda Oru Cup Tea
Ebook100 pages35 minutes

Sooda Oru Cup Tea

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'ஒரு கதை சொல்லேன்' இதைச் சொல்பவரும் கேட்பவரும் இருக்கும்வரை கதைகளுக்கு அழிவில்லை. பேசாமல் அமைதியாய் இருப்பது ஒரு நேரம். ஏன் இவ்வளவு அமைதியாய் இருக்கிறது என்கிற பதற்றம் சில நேரம்.

பேசேன்... ஏதாவது கதையாவது சொல். சூழலில் அதிர்வுகள் தேவைப்படுகிறது. ஒரு பறவையின் ஒலியாவது. ஒரு கட்டில் நகர்த்தப்படும் சத்தம். ஒரு குழந்தையின் அழுகை. வானில் ஒரு இடி.

சொல்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் வார்த்தைச்சரம் தொடுக்கப்பட்டு விடுகிறது. கட்டிப் போடுகிறது.

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580111309888
Sooda Oru Cup Tea

Read more from Rishaban

Related to Sooda Oru Cup Tea

Related ebooks

Reviews for Sooda Oru Cup Tea

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sooda Oru Cup Tea - Rishaban

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சூடா ஒரு கப் டீ

    (சிறுகதைகள்)

    Sooda Oru Cup Tea

    (Sirukathaigal)

    Author:

    ரிஷபன்

    Rishaban

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rishaban-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. சூடா ஒரு கப் டீ

    2. திரும்பி வரத் தெரிந்த பூனை

    3. மீண்டும் பூக்கும்

    4. பையில் என்னடா வச்சிருக்கே

    5. அப்பா என்றொரு மனுசன்

    6. சுழல்

    7. இளிச்சவாயன்

    8. குட்டா

    9. உத்தவர்

    10. கட்டில்

    11. இன்னொரு வசந்தம்

    12. எனக்கு நீ வேணும்

    என்னுரை

    ‘ஒரு கதை சொல்லேன்’

    இதைச் சொல்பவரும் கேட்பவரும் இருக்கும்வரை கதைகளுக்கு அழிவில்லை. பேசாமல் அமைதியாய் இருப்பது ஒரு நேரம். ஏன் இவ்வளவு அமைதியாய் இருக்கிறது என்கிற பதற்றம் சில நேரம்.

    பேசேன்… ஏதாவது கதையாவது சொல். சூழலில் அதிர்வுகள் தேவைப்படுகிறது. ஒரு பறவையின் ஒலியாவது. ஒரு கட்டில் நகர்த்தப்படும் சத்தம். ஒரு குழந்தையின் அழுகை. வானில் ஒரு இடி.

    சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் வார்த்தைச்சரம் தொடுக்கப்பட்டு விடுகிறது. கட்டிப்போடுகிறது.

    பிரபல வார இதழ்களில் பிரசுரமான சிறுகதைகள் உங்கள் வாசிப்பிற்கு.

    தொகுப்பாய் கொண்டுவரும் புஸ்தகா-விற்கு அன்பு நன்றி.

    ரிஷபன்

    ஸ்ரீரங்கம்

    1. சூடா ஒரு கப் டீ

    அவள் பெயர் குணா என்று மட்டும் தெரியும். அதுவும் ‘ஏய் குணா’ என்று யாரோ கத்தியதால். சைக்கிளில் டீ கேன். டிஸ்போசபிள் கப். அவள் கணவன் இல்லாத நேரம் இவள் நிற்பாள்.

    எதிரே ஹாஸ்பிடல். அப்பாவைச் சேர்த்து நான்கு நாட்கள் ஓடிவிட்டன. ஆண்கள் வார்டில்தான் படுத்திருக்கிறார். அவர் தூங்குகிறார் என்று தோன்றும்போது எழுந்து வந்து டீ குடிப்பேன். அதில் பழக்கம் குணாவும் வீட்டுக்காரரும்.

    அவன் அவ்வளவு பேசுவதில்லை. வைத்திருப்பதே டீ கேன் ஒன்றுதான். எதிரில் வந்து நின்றால் ‘என்ன வேண்டும்’ என்பதுபோல் ஒரு பார்வை பார்ப்பான். டீ என்று உதடு அசைத்தால் மட்டுமே டீ கப் நிரப்புவான்.

    குணா படு ஸ்மார்ட். அவள் நிற்கும்போது போனால் கேள்வியே இல்லை. டீ கப்பில் கொஞ்சம் கூடுதலாகவே நிரப்பும் பிரமை. ஒரு தடவை பன் பாக்கட் ஒன்றையும் சேர்த்து நீட்டினாள்.

    சொம்மா வெறும் டீயை குடிச்சுகிட்டு இருக்கே. இதைத் தின்னுட்டு டீயைக் குடி.

    பன்னா?

    ஏன் வகுத்துல இறங்காதா?

    முகம் என் பக்கமே பார்க்காது. வாய் மட்டும் பேசும். மூன்றாம் முறை அவளிடம் டீ வாங்கிக் குடித்த நேரம் நாங்கள் இருவர் மட்டுமே. மொத்த சரித்திரத்தையும் என்னிடம் பேசி வாங்கிவிட்டாள்.

    உனக்குக் கூட பொறந்தவங்க யாரும் இல்லியா?

    இருக்காங்க.

    கண்ணாலம் ஆயிருச்சா?

    இல்ல.

    ஒத்தையிலயே காலம் கழிச்சிரலாம்னா?

    சொல்லிவிட்டு சிரித்தாள். என் வூட்டுக்காரரும் இத்தையேதான் பொலம்புவாரு. கட்டாம இருந்தா நிம்மதியா இருந்துருப்பேன்னு.

    பக்கத்திலேயே குப்பைத்தொட்டி. ‘அதுல போட்டுரு’ன்னு அவள் சொல்வதற்கு முன்பே அதில்தான் போட்டேன். அம்பது ரூபாயை நீட்டினேன்.

    பத்து ரூபா இல்லியா என்றாள்.

    இல்லை என்றதும்,

    சரி. அடுத்த தபா வரப்போ சேர்த்து வாங்கிக்கறேன் என்றாள்.

    இதுதான் அவளிடம் என்னை ஈர்த்தது. ஒரு அலட்சியம்… ஒரு தீர்மானம். ஒரு நம்பிக்கை. இது அவள் கணவனிடம் இல்லை என்கிற யோசனை என்னிடம்.

    எங்கேடா போயிட்ட என்றார் அப்பா.

    கட்டிலில் துவண்டு படுத்திருந்தார். இரண்டாவது நாளே தன்னைக் கீழே படுக்க விடு என்று அடம்பிடித்தார். இங்கெல்லாம் அப்படி படுக்க விட முடியாதுப்பா என்றால், அப்போ வீட்டுக்கே போயிரலாம். என்னமா நாறுது என்றார் முகம் சுளித்து.

    இன்று ஒரு மாதிரி செட் ஆகிவிட்டார். முதல் நாள் சேர்த்தபோது இருந்த தெம்பு வடிய ஆரம்பித்துவிட்டது. கையைத் தூக்குவதாய் அவர் நினைப்பதும், கை ஒத்துழைக்க மறுப்பதும் பார்க்கவே சங்கடமாய் இருந்தது.

    அவர் கையைப் பற்றி என் கைக்குள் வைத்துக்கொண்டேன். அப்படியே மொத்த உடம்பும் என்னுள் ஒடுங்கிய நிம்மதி அவர் முகத்தில் பார்த்தபோது கொஞ்சம் திகைப்பாகவும் இருந்தது.

    இருவரும்தான் சேர்ந்து இருக்கிறோம். சில நாட்கள் அவர் சமையல். சில நாட்கள் நான். இருவருக்கும் போரடித்தால் மாமி மெஸ்.

    வனஜாட்ட வேணா போய் ஒரு வாரம் இருந்துட்டு வாயேன்.

    உனக்கு என்னால ஏதாச்சும் தொந்திரவா?

    அதுக்கு இல்லைப்பா.

    அந்தப் பேச்சை விடு.

    வனஜாவின் கணவனோடு ஒருமுறை வாய்த் தகராறு வந்துவிட்டது. அவனும் சீண்டல் பேர்வழி. அப்பாவின் மென்மையான பக்கத்தைத் தொட்டுவிட்டான். பொறுக்க முடியாமல் பதில் சொல்லிவிட்டார். அதிலிருந்து அவள் வீட்டுக்கே போவதில்லை.

    ரெயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றதில் பென்ஷன் வருகிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1