Chozhigal
By Rishaban
()
About this ebook
பெரியவர் உருட்டிப் பலன் சொல்லும் சோழிகள் தன் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்று மனைவி சொல்லும்போது வேறுவழியின்றி ஆமோதிக்கும் கணவன் கதை இறுதியில் மனைவி சோழி உருட்டுவதைப் பார்த்து அதிசயிக்கிறான்.
Read more from Rishaban
Uyir Poo Rating: 0 out of 5 stars0 ratingsSooda Oru Cup Tea Rating: 0 out of 5 stars0 ratingsEnakkendru Oru Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsMinmini - Inika Rating: 0 out of 5 stars0 ratingsKoottathin Naduvil Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pisasey Rating: 0 out of 5 stars0 ratingsSMS Rating: 0 out of 5 stars0 ratings9 Tharavum 9 Giragangalum Rating: 0 out of 5 stars0 ratingsKattazhagu Rajyam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Chozhigal
Related ebooks
Kandu Kondren Kandu Kondren Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsNesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5Naan Asaivan Rating: 0 out of 5 stars0 ratingsSoundarammal Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsSaraiyu Kaathirukkiral Rating: 0 out of 5 stars0 ratingsDaniel Rating: 4 out of 5 stars4/5Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsUyir Chedi Rating: 5 out of 5 stars5/5Manathodu Ondragum Uravaley... Rating: 0 out of 5 stars0 ratingsMangai Necklace Rating: 5 out of 5 stars5/5Kavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsயாருக்கு மாப்பிள்ளை யாரோ..? Rating: 0 out of 5 stars0 ratingsTheevugal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Thozhi Rating: 5 out of 5 stars5/5Uraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi! Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 0 out of 5 stars0 ratingsமலர்ந்த விழிகள் Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Ini Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratingsAdai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsYerikkadiyil Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsசொர்க்க வாசல்..! Rating: 0 out of 5 stars0 ratingsSorkka Vasal Rating: 0 out of 5 stars0 ratingsYaathumagi Nindrai! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Chozhigal
0 ratings0 reviews
Book preview
Chozhigal - Rishaban
https://www.pustaka.co.in
சோழிகள்
(சிறுகதைகள்)
Chozhigal
(Sirukathaigal)
Author:
ரிஷபன்
Rishaban
For more books
https://www.pustaka.co.in/home/author/rishaban-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
1. சோழிகள்
2. அடங்காதவள்
3. பந்தய பூமி
4. வாடிக்கை
5. மீண்டும் துளிர்க்கும்
6. புதிய வெளிச்சம்
7. அப்பா
8. பர்சைத் தொலைத்தவன்
9. ஓடாதே
10. மற்றை நம் காமங்கள்
என்னுரை
சிறுகதைகளுக்கான ஆர்வம் இன்றுவரை குறையவில்லை. வாசிப்பதிலும், எழுதுவதிலும். எழுத ஆரம்பித்த முதல் வடிவமே சிறுகதைதான். முதல் காதல்!
ஏன் நாவல் எழுதவில்லை என்று சகாக்கள் விசாரிக்கும்போது சிறுகதையில் கிட்டும் மகிழ்ச்சி அதில் இல்லையே என்றுதான் சொல்லத் தோன்றும். பின்னர் குறுநாவல்கள், தொடர் எழுதினாலும் இப்போதும் இந்த நிமிடம் தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் எனக்குப் பிடித்த வடிவம் சிறுகதை என்றே சொல்வேன்.
குங்குமம் ஆசிரியர் திரு கே.என். சிவராமன் அவர்கள் இத்தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளையும் எழுத வைத்தார். அப்படித்தான் சொல்ல வேண்டும். அவர் முதல் கதையைப் பிரசுரித்துத் தந்த ஊக்கம் பிற கதைகளை என்னை எழுதத் தூண்டியது. இத்தொகுப்பை அவருக்கு சமர்ப்பிப்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. சோழிகள் மட்டும் தினகரன், தீபாவளி மலரில் பிரசுரம். பிற கதைகள் குங்குமத்தில். குங்குமம் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.
என் எழுத்தை வாசித்து உற்சாகப்படுத்தும் அத்தனை அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. எழுத்தைக் கொண்டாடும்போது மேன்மேலும் சிறப்பாய் எழுத ஊக்கம் வரும். இந்த அன்பிற்கு வேறென்ன நான் பிரதியாய் செய்ய இயலும்? இன்னும் இன்னும் சிறப்பாய் எழுத முற்படுவதைத் தவிர!
தொகுப்பாய் கொண்டு வரும் புஸ்தகா நிறுவனத்திற்கு மனப்பூர்வ நன்றி.
ரிஷபன்.
1. சோழிகள்
கிழவர் சோழிகளை உருட்டிக் கொண்டிருந்தார். எதிரில் நானும் விஜியும். எங்களைப் பற்றிக் கிழவருக்குத் தெரியாத விவரங்களே இல்லை என்கிற அளவுக்கு இங்கே வந்தாகிவிட்டது. ஆனாலும் விஜிக்கு அவர் மீது அசாத்திய நம்பிக்கை. ஒரு பயணம் செய்வதானாலும் அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு போகலாமே என்பாள்.
அடுத்த தெருதான். நடக்கிற தூரம்தான். வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவளுக்கு அதுவே ஒரு வரப்பிரசாதம். நீ எப்ப வேணா வா
என்று வாக்கு கொடுத்திருந்தார். அதனால் கூடுதல் துணிச்சல். யாராவது அவரிடம் ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தாலும் எதிர் திண்ணையில் உட்காரச் சொல்வார். குடிக்கத் தண்ணி வேணுமா. ஏ குட்டி அத்தைக்கு தண்ணி கொண்டு வா
என்று உள்ளே பார்த்து ஒரு குரல் கொடுப்பார். குட்டைப் பாவாடையில் விசுக் விசுக்கென்று கௌரி ஓடி வருவாள். சொம்புத் தண்ணீர் வழியெங்கும் சிதறும். பாதிச் சொம்பு நீரில், தாகம் அடங்காமல் இன்னொரு முறை கேட்டாலும் கௌரி உள்ளே மீண்டும் ஓடிவிட்டு வருவாள்.
கிழவருக்கு ஏனோ இன்று திருப்தி வரவில்லை. வழக்கமாய் ஓரிரு உருட்டல்களிலேயே பலன் சொல்லி அனுப்பி விடுவார். இன்று ஏழெட்டு முறை உருட்டியாகிவிட்டது. மேலே பார்த்தார். வெளியே பார்த்தார். உச்சு கொட்டினார். ஹ்ம்ம் என்று முனகிக் கொண்டார்.
சித்த இருங்க
எழுந்து உள்ளே போனார். பூஜை ரூமுக்குள் போனது தெரிந்தது.
சில நாட்களில் இவருக்கும் கூட்டம் முட்டித் தள்ளும். விசித்திரம் என்னவென்றால் இவரது வீட்டு வாசலில் இடம் போதாது. பார்க்கும் நேரமும் மதியம் 12 என்று சொல்லி வைத்திருக்கிறார். ஆனால் ஒரு மணி ஆகிவிடும். நாலு மணிக்கு மேல் பார்க்க மாட்டார். வருகிறவர்கள் எதிர்சாரி வீட்டுத் திண்ணைகள், வாசல் என்று எங்கே இடம் வாகாகக் கிடைக்கிறதோ அங்கே நிற்பார்கள். டோக்கன் சிஸ்டம் என்றில்லை. அவர்களே அனுசரித்து யார் முன்னால் வந்தது யார் பிறகு வந்தது என்று மனக்கணக்கில் அவர் முன் போய் நிற்பார்கள்.
இன்று ஏனோ அதிசயமாய் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இதுவரை வரவில்லை. இன்னிக்கு ஏதாச்சும் பண்டிகையா
என்று விஜியிடம் கேட்டேன். அவளுக்கு என் கேள்வியின் அர்த்தம் புரியவில்லை. இங்கு வந்த பின் கிழவரைத் தவிர வேறு யாரும் அவளுடன் பேசக் கூடாது என்கிற எழுதப்படாத விதி. வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். அதுவரை பொறுமை இல்லியா
என்று கடிப்பாள்.
கௌரிக் குட்டி வெளியே வந்தாள். தண்ணி வேணுமா
என்று விஜியிடம் கேட்டாள். விஜி அவளைத் தன்னருகில் இழுத்துக்கொண்டாள். ஆரஞ்சு மிட்டாய் வேணுமா
என்று ஒரு கவரை நீட்டினாள். எப்போது வாங்கினாள் என்று குழம்பினேன். தேங்க்ஸ்
என்றது கௌரி. கிழவரின் பேத்தியைத்தான் பார்த்திருக்கிறோமே தவிர கௌரியின் அம்மா அப்பாவைப் பார்த்ததில்லை. விஜியிடம் ஒரு தடவை கேட்டதற்கு தெரிஞ்சு என்ன பண்ணப் போறிங்க
என்றாள்.
எங்களுக்குக் கல்யாணமாகி ஏழு வருடங்கள் நிறைந்துவிட்டன. தப்பு. ஓடிவிட்டன.