Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indhu Ini Illai
Indhu Ini Illai
Indhu Ini Illai
Ebook85 pages52 minutes

Indhu Ini Illai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Indhu Ini Illai

Read more from Rajeshkumar

Related to Indhu Ini Illai

Related ebooks

Related categories

Reviews for Indhu Ini Illai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indhu Ini Illai - Rajeshkumar

    30

    1

    அந்த வயல் வரப்பில் இருபது சதவீதம் பசுமையாய் கண்ணை அள்ள இன்னொரு இருபது சதவீதம் நீர் பாய்ச்சப்பட்ட சகதியாய் தெரிந்தது. அதன் மேல் வரிவரியாய் ஏர் காயப்படுத்தின தழும்புகள். இன்னொரு பக்கம் சேற்றுக்குள் கால் புதைந்து வரிசையாய் நின்று நாற்று நடுகிற பெண்களின் அழகான கெண்டைக் கால்கள்.

    கைகள் தன்னிச்சையாய் நாற்றைப் பதித்துக் கொண்டிருக்க வரிசையில் மூன்றாவதாய் நின்றிருந்த மல்லிகா தலையை மட்டும் வெட்டி கணேசனைப் பார்த்தாள்.

    ஏனுங்க சின்னையா

    கணேசன் கொஞ்சம் மேடான பகுதியில் இருந்த ஒரு மரத்தின் கீழே கல் மேல் உட்கார்ந்திருந்தான். இரண்டு டஜன் வயது இருக்கலாம் என்பது தோற்றம். லுங்கியை மடித்துக் கட்டின கால்களில் தூண்களின் இமிடேஷன் இருந்தது. பழைய புளியின் நிறத்தில் இருந்தான்.

    ஏம் புள்ளே?

    நீங்க - எத்தினியாவது, முட்டும் படிச்சிருக்கீங்க?

    ஏன்?

    கேக்கறனில்லே? சொல்லுங்க...

    என்ன மிரட்டிப்பார்க்கறியா? கொஞ்சம் விட்டா தலைக்கு மேலே ஏறிடுவே போலிருக்கு?

    பொசுக்... பொசுக்னு கோபம் வந்துடுது... சாதாரணமாத் தானுங்க கேக்கறேன்! எத்தினியாவது வரைக்கும் படிச்சிருக்கீங்க?

    அதான் ஏன் கேக்கறேன்னு கேக்கறேன்?

    தெரிஞ்சுக்கலாம்னுதான்!

    தெரிஞ்சு என்ன பண்ணப்போறே? நீ என்னைக் கண்ணாலம் கட்டிக்கறதா கெட்டுப்போச்சு?

    சின்னய்யா... என்னை வம்புக்கு இழுக்கறீங்க!

    பாத்தியா பாக்கியம்! இவளாத்தானே கூப்பிட்டு எத்தனாவது வரை படிச்சிருக்கீங்கன்னு கேட்டா?

    அந்த பாக்கியம் காரணமில்லாமல் முகத்தை வெட்கத்தில் கோணினாள்.

    என்னை விடுங்கய்யா... பெரியவர் வர்ற நேரம்.

    வந்தா என்ன? வேலையை பார்க்காமே வம்பளந்தா தான் பெரியவர் தாக்குச்சியை எடுத்துக்குவார்!

    ரத்னா! இன்னிக்கு கொட்டாயில் படம் எடுக்கப் போறானாம்... இன்னொரு வாட்டி வாத்தியார் படத்தை பார்த்துடலாமா?

    வேண்டாண்டி, எத்தனை வாட்டி பாக்கிறது?

    இல்லேன்னா டவுனுக்கு போலாமா?

    இன்னிக்கு வேண்டாம்.

    ஏன்?

    முத்தம்மா பொண்ணு சமைஞ்ச சீரு இன்னிக்கு... நான் தண்ணி வார்க்கப்போகணும்.

    அப்படியா? முத்தம்மா சிலுக்கி என்னெ கூப்பிடவே இல்லையே?

    ஏய்... எல்லாரும் ஒழுங்கா வேலை செய்யுங்கடி, பெரியய்யா வர்றாரு!

    கணேசன் தலையை உயர்த்தினான்.

    கொஞ்ச தூரத்தில் வரப்புகளுக்கு மத்தியில் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடந்து வருகிற அவனின் அப்பா ராமசாமி தெரிந்தார். அடிக்கிற வெய்யிலின் உக்கிரத்தை குடை கேடயத்தால் தடுத்திருந்தார். உரமேறிய உடம்பு, கைகளும் கால்களும் கரணை கரணையாய் திம்மென்றிருந்தது. மேலுதட்டில் வளர்த்து வைத்திருந்த மீசை நரைத்துப் போனாலும் இன்னமும் வானத்தைப் பார்த்தது. ஒவ்வொரு கிலோ எடை செருப்புகளை கால்களுக்கு கொடுத்து அவர் வயல் வரப்பில் நடந்து வரும்போது ஒரு சிம்மம் நடந்து -வருவது மாதிரி இருந்தது.

    ராமசாமிக்கு இரண்டு மகன்கள், பெரியவன் படிப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நல்லதனமாய் படித்து காலேஜில் உலாவிடிஸ்கஷன் வாங்கி ஸ்காலர்ஷிப் கவர்ன்மெண்ட் சலுகைகளோடு இப்பொழுது மேல் படிப்புக்காக அயல் தேசமே போய்விட்டான்.

    சின்னவன் கணேசன் ஸ்கூலில் வாத்தியார் ரயில். எஞ்சினைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறபோது வெளியே பெட்டிக் கடையில் சிகரெட் புகைக்கக் கற்றுக் கொண்டிருந்தான். எல்லா மாணவர்களும் பரீட்சையில் பாஸ் செய்வது எப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறபோது - யாருக்கும் தெரியாமல் பள்ளிக் கூடத்து முள் வேலியை பாஸ் செய்து போவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

    விளைவு - பத்தாவதுக்கு மேல் அவனால் இடம் பெயர் முடியவில்லை. இப்போது வயலையும் வாய்க்காலையும் சுற்றிக் கொண்டிருக்கிறான். புதுசாய் வேலைக்கு சேர்ந்த மல்லிகா மனசைக் கிள்ளவே அடிக்கடி அவளை சீண்டிக் கொண்டிருக்கிறான்.

    வேப்ப மரத்தடிக்கு வந்ததும் உஸ்ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வேஷ்டியை கீழே இறக்கிவிட்டார் ராமசாமி, குடையை மடக்கினார்.

    என்னடா கணேசா... வடக்கால பாத்தி பூரா காலியாவே இருக்கு?

    இனிமேதாம்ப்பா நாத்து நடணும்...

    "ஏம் புள்ளைங்களா! இந்தாரு கால் பாகத்தையே எத்தனை நேரந்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1