Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

California Kathali
California Kathali
California Kathali
Ebook166 pages42 minutes

California Kathali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
California Kathali

Read more from Rajeshkumar

Related to California Kathali

Related ebooks

Related categories

Reviews for California Kathali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    California Kathali - Rajeshkumar

    17

    1

    அமெரிக்கா கலிபோர்னியாவின் பத்து பெரிய நகரங்களில் ஒன்றான சான்பிரான்ஸிஸ்கோ ஆரஞ்சு வர்ணத்தோடும் பனிப்புகையோடும் ஒரு பூவைப் போல் விடிந்து கொண்டிருந்தது. பனிப்புகையில் உயரமான கட்டிடங்களின் உச்சிமுனைகள் மட்டும் தெரிய தொலைவில் தெரிந்த விமான நிலையத்தின் டவர் சிவப்பு விளக்கோடு சுழன்றது.

    நகரின் மையத்தில் இருந்த லேக் - பார்க் அவென்யூவில் இருந்த 401-வது அபார்ட்மெண்ட்டில் குளிர்காற்றோடு கலந்து தமிழ்க்குரல்கள் கேட்டுக் கொண்டிந்தன.

    டேய்... ஜாகீர்! இவ்வளவு காலையில் எந்திரிச்சு குளிச்சிட்டு அமர்க்களமாய் ட்ரஸ் பண்ணிட்டு எங்கடா கிளம்பிட்டே? கேள்வி கேட்ட செங்குட்டுவனை கண்ணாடி முன் நின்றிருந்த ஜாகீர் ஒரு புன்னகையோடு பார்த்தான். திரும்பிப் பார்க்காமல் கேட்டான்.

    இன்னிக்கு தேதி என்ன?

    பதினாலு

    இது என்ன மாசம்?

    பிப்ரவரி

    பிப்ரவரி - 14 ன்னு சொன்னதுமே உனக்கு என்ன ஞாபகம் வருது...?

    கம்பளியைப் போர்த்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து இருந்த செங்குட்டுவன் சில விநாடிகள் யோசித்துவிட்டு உதட்டைப் பிதுக்கி தலையாட்டினான்.

    ஒண்ணும் ஞாபகத்துக்கு வரலையே?

    ஜாகீர் முறைத்தான். டேய் செங்கு...! நீ அண்ணா யூனிவர்ஸிடியில் படிச்சு கோல்ட் மெடல் வாங்கினதும், இப்போ சான்பிரான்ஸிஸ்கோவுக்கு வந்து ‘ஹெவன் கேட் சாஃப்ட்வேர் கம்பெனி’யில் டீம் லீடராய் வேலை பார்த்து மாசம் ரெண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கறதும் தண்டம்ண்டா...! நீ உன்னோட ஜென்ரல் நாலேட்ஜை ரொம்பவும் இம்ப்ரூவ் பண்ணிக்கணும். இல்லேன்னா உன்னைக் கட்டிக்கப் போற பொண்ணு ரொம்பவும் கஷ்டப்படுவா...! ஏண்டா! உனக்கு உண்மையிலேயே பிப்ரவரி 14 ன்னு சொன்னதும் எதுவுமே ஞாபகத்துக்கு வரலையா?

    வரலையே!

    "அது ‘காதலர்தினம்’டா... பாவி...!"

    அப்படியா...?

    என்ன அப்படியா...? எந்த பொண்ணையாவது நீ நிமிர்ந்து பார்த்து இருந்தாத்தானே காதல் எப்படிப்பட்டதுன்னு தெரியும். எப்பப் பார்த்தாலும் லேப்-டாப்பைப் பார்த்துகிட்டும், தடித்தடியாய் புஸ்தகங்களைப் படிச்சுகிட்டும் இருந்தா எந்தப் பொண்ணு பக்கத்துல வருவா...?

    செங்குட்டுவன் சிரித்தான்.

    என்னடா சிரிப்பு...?

    எனக்கு இந்த காதல் என்கிற வார்த்தையில் ஒரு பர்செண்ட் கூட நம்பிக்கை கிடையாது. அது ஒரு மாய்மால வார்த்தை...!

    மாய்மால வார்த்தையா...!

    ஆமாண்டா...! காதல் என்கிற வார்த்தைக்கு நீ நினைக்கிற மாதிரி எந்த ஒரு தெய்வீக உணர்வும் கிடையாது. உடம்புக்குள்ளே நடக்கிற எத்தனையோ ரசாயன மாற்றங்களில் இந்த காதலும் ஒண்ணு...! பதின்மூன்று வயது வரை ‘தேமே’ன்னு சோம்பிக்கிடக்கும் ஹார்மோன்கள் அதுக்கப்புறம் வன்முறையில் ஈடுபட்டு கலாட்டா செய்யப் போக ஒரு டீன்ஏஜ் ஆண் மகனுக்கு எதிர்வீட்டு வேலைக்காரப் பெண் உலக அழகியாய் தெரிகிற கோமாளித்தனத்துக்குப் பெயர்தான் காதல். ஒரு பெண்ணுக்கும் அதே வயதில்தான் ஹார்மோன் களின் கலாட்டா ஆரம்பமாகி கண்ணாடி முன் நிறைய நேரம் நிற்க ஆரம்பித்து எதிர்வீட்டு குமாரைப் பார்த்ததும் ஒழுங்காய்ப் போட்டிருக்கிற தாவணியை சரிப்படுத்திக் கொள்கிற கிறுக்குத் தனத்துக்குப் பெயர்தான் காதல்.

    டேய்... செங்கு...! வேண்டாம்... இதுக்கு மேலே பேசாதே...!

    செங்குட்டுவன் சிரித்தான்.

    அப்படித்தாண்டா பேசுவேன்...! இன்னமும் காதலைப்பற்றி சொல்லட்டுமா...? காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லுவாங்க. என்னைக்கேட்டா மூளையே இல்லைன்னு சொல்லுவேன்.

    செங்கு...! நான் கிளம்பறேன்... காதலோட அருமையைப் பற்றித் தெரியாமே நீ பேசிட்டு இருக்கே... உனக்கும் ஒரு நாள் காதல் வரும். அப்போ நீ பேசற வார்த்தைகளே வேற விதமாய் இருக்கும். நான் இப்பவே கிளம்பிப் போனாத்தான் மெட்ரோ ட்ரெய்னை பிடிச்சு ஹட்டன் ஸ்ட்ரீட்ல இருக்கிற கோல்டன் கேட் போய்ச் சேர முடியும். லூசி எனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பா...

    செங்குட்டுவன் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டான்.

    லூசி எப்படியிருக்கா ஜாகீர்?

    உனக்குத்தான் காதல் பிடிக்காதே... எதுக்காக அவளைப் பத்தி கேட்கிறே...?

    எனக்கு காதல்தான் பிடிக்காது. பட் லூசியை எனக்குப் பிடிக்கும்...! வெரி இண்ட்டலிஜென்ட் கேர்ள்....

    நீ தான் அவளை மெச்சிக்கணும்.

    ஏண்டா...?

    அந்த இண்ட்டலிஜெண்ட் கேர்ள் என்ன பண்ணினா தெரியுமா?

    சொல்லு... என்ன பண்ணினா?

    சான் ஜோஸ் சாஃப்ட் வேர் கம்பெனியில் மாசம் ரெண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஒரு ராணி மாதிரி வேலை பார்த்துட்டு இருந்தா இல்லையா...?

    ஆமா...

    அந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டா

    அட... ஏன்...?

    கம்பெனியோட ஏ.வி.பி. இவளைப் பார்த்து ஜொள்ளு விடறானாம். தேவையில்லாமே தன்னோட அறைக்கு வரச்சொல்லி பேசறானாம். அவனை புத்திசாலித்தனமாய் அவாய்ட் பண்றதை விட்டுட்டு ரிசைன் பண்ணிட்டு வந்து நிக்கிறா...! ஒரு இண்ட்டலிஜெண்ட் கேர்ள் செய்யற வேலையா இது? இந்த சான்பிரான்சிஸ்கோவில் இருக்கிற எல்லா சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் ஒரு ஜொள்ளு பார்ட்டி இருக்கத்தான் செய்வான். அதுக்கெல்லாம் பயந்தா வேலை பார்க்க முடியுமா...?

    ஸோ... லூசி இப்போ அன் எம்ப்ளாய்ட்?

    ஆமா...!

    கவலைப்படாதே ஜாகீர்...! அவளோட புத்திசாலித்தனத்துக்கும் கெட்டிக் காரத்தனத்துக்கும் சீக்கிரமே ஒரு நல்ல வேலை கிடைக்கும்...

    எப்படி கிடைக்கும்...? இன்னிக்கு ஐ.டி. இண்டஸ்ட்ரி மெல்ல மெல்ல ஒரு கோமா ஸ்டேஜுக்குப் போய்க்கிட்டு இருக்கு... நீயும் நானும் வேலை பார்க்கிற நம்ம கம்பெனி மல்டி நேஷ்னல் கம்பெனி என்கிற ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் ‘தம்’ பிடிச்சுட்டு இருக்கு... ‘சான் ஜோஸ் ஸாஃப்ட்வேர் கம்பெனி’ நம்ம கம்பெனியைக் காட்டிலும் ஜென்யூன் கம்பெனி. அந்த கம்பெனி வேலையை ரிசைன் பண்ணலாமா...?

    சரி... சரி... புலம்பாதே...! இன்னிக்கு காதலர்தினம். லூசிக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அவளை சந்தோஷப்படுத்து. நல்ல ரெஸ்டாரெண்ட்டுக்கு கூட்டிட்டுப்போ... ஹெவியா லஞ்ச் வாங்கிக் கொடு!

    நல்ல ரெஸ்டாரெண்ட் எதுன்னு நீயே சொல்லேன். உனக்குத்தான் சான்பிரான்ஸிஸ்கோ முழுவதும் அத்துபடியாச்சே...

    நான் ஒரு ரெஸ்டாரெண்ட் சொல்றேன்... போறியா?

    சொல்லு...! லூசிக்கும் அது பிடிக்கணும்...

    கண்டிப்பாய் பிடிக்கும். இந்த சான் பிரான்ஸிஸ் கோவில் சைனா டவுன்னு ஒரு இடம் இருக்கு... அங்கே லூசியைக் கூட்டிட்டுப் போ, அங்கேயிருக்கிற கோல்ட் லைன் ரெஸ்டாரெண்ட் புது வகையான உணவுகளுக்கு ரொம்பவும் பிரசித்தம். சௌத் இண்டியன், நார்த் இண்டியன் ஃபுட்ஸும் கிடைக்கும். ரெண்டு பேரும் போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க...!

    சரி... சரி... லூசிகிட்டே சொல்லிப் பார்க்கிறேன். ஜாகீர் சொல்லிக் கொண்டே தன்னுடைய அலமாரியில் இருந்த தெர்மாகோல் கோட்டை அணித்து கொண்டான். குளிர் உடனே காணாமல் போயிற்று. உடம்புக்குள் சூடு

    Enjoying the preview?
    Page 1 of 1