Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kangal Enge Nenjamum Enge
Kangal Enge Nenjamum Enge
Kangal Enge Nenjamum Enge
Ebook75 pages29 minutes

Kangal Enge Nenjamum Enge

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Indhumathi
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466862
Kangal Enge Nenjamum Enge

Read more from Indhumathi

Related to Kangal Enge Nenjamum Enge

Related ebooks

Reviews for Kangal Enge Nenjamum Enge

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kangal Enge Nenjamum Enge - Indhumathi

    1

    வெகு நேரமாகத் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் சுகுமாரன். அன்று மட்டுமில்லை. கடந்த நாலைந்து மாதமாகவே அப்படித்தான் இருக்கிறது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாலும் சடக்கென்று விழித்துக் கொண்டு விடுகிறது. ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் தூக்கம் கலைந்து போகிறது. அப்போதெல்லாம் ராதிகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பாள். குழந்தை மாதிரி தலையிலிருந்து கால் வரை போர்த்திக் கொண்டு படுத்திருப்பாள். அவன் ஏமாற்றுவது தெரியாமல் தூங்குவாள். எத்தனை நாளுக்குத்தான் ஏமாற்ற முடியும்? ஒருநாள் உண்மை தெரியாமலா போய்விடும்? தெரிந்து விட்டால்...? என்னை விட்டு போய் விடுவாளோ...

    ரகு சொன்னது போல இப்போதே அவளை எழுப்பி சொல்லிவிட்டால் என்ன...? எவ்வளவு நாள் தான் மறைத்து வைக்க முடியும்...! அன்று எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்ற அவன் திரும்பின போது ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. சொல்ல வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொரு முறையும் வேண்டாம் என்று ஒரு மனம் தடுத்து நிறுத்தி விடுகிறது. ஆனாலும் சொல்லிவிட வேண்டும். அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்றாலும் சொல்லத்தான் வேண்டும். அதன் பின் அவள் எடுக்கப் போகிற முடிவு எதுவாக இருந்தாலும் அதையும் தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்.

    அதன் சத்தம் போடாமல் எழுந்து அறை மூலைக்குப் போய் மேஜை டிராயரைத் திறந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு ஜன்னல் கர்ட்டனைத் தள்ளி வெளியில் பார்த்தான். தெரு அமைதியாக இருந்தது. தெரு விளக்கு அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது. சோன்பப்டி விற்றவன் வண்டியைத் தள்ளிக் கொண்டு போனான். அந்த நேரத்தில் திரும்பிப் போகும்போது மட்டும் அவன் மணி அடிப்பதில்லை. மணி அடித்து அந்த இரவின் நிசப்தத்தைக் கலைப்பது இல்லை. தெருக் கோடிக்குச் சென்று அவன் மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான், சுகுமாரன். பின் சிகரெட்டை அணைத்துத் தூக்கிப் போட்டுவிட்டு படுக்கையில் வந்து படுத்துக் கொணடான். திரும்பி ராதிகாவின் முகத்திலிருந்த போர்வையை விலக்கி அவள் முகத்தைப் பார்த்தான். தூக்கத்தில் கூட பளிச்சென்றிருந்தது அந்த முகம். அந்த அமைதியான முகமும். புன்சிரிப்பும், அவன் சொல்லப் போகிற வார்த்தைகளில் எப்படி மாறிப் போகும்! அவளுக்கு இன்னும் எவ்வளவு எதிர்பார்ப்பு! தனக்கு நிச்சயம் ஒரு குழந்தை பிறந்துவிடும் என்பதில் எவ்வளவு நம்பிக்கை! அதையெல்லாம் கலைக்கப் போகிறோமா...? எத்தனை நாள் மறைத்து வைக்க முடியும்?" சொல்லாமல் இருப்பது அவளின் நம்பிக்கையை இன்னும் வளர்த்து விடாதோ...? ஏக்கம் அதிகமாகி விடாதோ! ஒருவேளை சொன்னபின் அவனைப் பிடிக்காமல் போய்விட்டால்...? அவனை ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று அவனை நினைக்க ஆரம்பித்தால்...? விவாகரத்து கோர நினைத்து அவள் கேஸ் போட்டால் என்ன செய்வது...? அவள் செய்வாள். ஏமாற்றத்தை மட்டும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது, ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதே அவளின் கோபத்தை அதிகமாகத் தூண்டிவிடும். அவள் அப்படி விவாகரத்துக் கேட்டுவிட்டால் அவளைப் பிரிந்து தன்னால் இருக்க முடியுமோ...?

    நீங்கள் இன்னும் தூங்கவில்லை...? எழுந்து உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? அவன் விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ராதிகா கேட்டாள். அவள் கை அவன் தோளை அணைத்தது.

    தூக்கம் வரவில்லை ராதி. ஒரு பேட்டியை இன்னும் எழுதி முடிக்கவில்லை. அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

    தூங்குகின்ற நேரத்தில் கூட உங்களுக்கு பத்திரிகையின் நினைப்புதானா?

    வேலை பாக்கி இருக்கும்போது தூக்கம் வரமாட்டேன் என்கிறதே...

    நான்கு நாட்களாக வேலை பாக்கி இருக்கிறதா…?

    ஏன் கேட்கிறாய்?

    "நான்கு நாட்களாக நானும் உங்களைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சரியாக தூங்குவதில்லை. சாப்பிடுவதில்லை. எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனை. அப்படி என்ன யோசிக்கிறீர்கள்...?

    பத்திரிகை வேலையைப் பற்றித்தான். நான் வேறு என்ன யோசிக்கப் போகிறேன். ஒவ்வொரு பேட்டியையும் எப்படி வித்தியாசமாகப் பண்ண முடியும் என்பதைப் பற்றி யோசிப்பேன்.

    இன்றைக்கு ரகு உங்களின் பத்திரிகைக்கு போட்ட படத்தைப் பார்த்தீர்களா...

    இல்லையே, என்ன படம் அது...?

    மர்பி பேபி மாதிரி ஒரு குழந்தைப்படம். எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா.

    "அப்படியா...! நான் இன்னும் பார்க்கவில்லை. நீ தூங்கு ராதி,

    Enjoying the preview?
    Page 1 of 1