Nizhal Suduvathillai
By Indhumathi
()
About this ebook
Read more from Indhumathi
Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Sarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Tholaithoorath Thandavalangal Rating: 3 out of 5 stars3/5Irandu Per Rating: 5 out of 5 stars5/5Koondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Maaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsOru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Enakkendru Nee Rating: 5 out of 5 stars5/5Yaar Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Kaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Maalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Nenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Manithan - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsOdum Megangale Rating: 5 out of 5 stars5/5Geethamadi Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Thotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Neeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Enge Antha Sorkkam Rating: 5 out of 5 stars5/5Kadalorak Karaigal Rating: 4 out of 5 stars4/5Antha Sila Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Avalukku Amuthendru Per Rating: 4 out of 5 stars4/5Veliyorathup Pookkal Rating: 5 out of 5 stars5/5Anbe Aaruyire Rating: 5 out of 5 stars5/5
Related to Nizhal Suduvathillai
Related ebooks
Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Pagal Nera Nila Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsParakka Thayangum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsNee Andha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsIthuthan Kaadhala? Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsAndha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Neer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsArugil Miga Arugil... Rating: 5 out of 5 stars5/5குங்குமக் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsNandhini En Nandhini Rating: 5 out of 5 stars5/5Kaalamellam Kaathirupen Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Rating: 4 out of 5 stars4/5என் உயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsNee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratings3 கதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsNin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsThavamirunthean! Varam Tharuvai… Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Enbathu Varam Rating: 0 out of 5 stars0 ratingsManathil Amarntha Mayile... Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Nizhal Suduvathillai
0 ratings0 reviews
Book preview
Nizhal Suduvathillai - Indhumathi
1
மூன்று மணி அடித்ததும் வகுப்பை விட்டு வெளியில் வந்தாள் ஹரிணி. அடுத்த வகுப்பு, மிஸஸ் மானுயுவலினுடையது. அவள் அன்றைக்கு எமர்ஸனின் ‘தி அமெரிக்கன் ஸ்காலர்’ நடத்தப் போவதாகச் சொல்லியிருந்தாள்.
ஹரிணி முன்பே ஒரு முறை அவரின் அந்த சொற்பொழிவைப் படித்திருக்கிறாள். அருமையான ஒன்று. அதை மிஸஸ் மான்யுவல் நடத்திக் கேட்க வேண்டும்.
அவள் நடத்துகின்ற ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி அழகு வரும். அதுவும் எமர்ஸனை நடத்தினால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றும்.
மான்யுவலுக்கு எமர்ஸனையும், எமிலிடிக்ஸனையும் மிகவும் பிடிக்கும் என்பது அவள் நடத்துவதிலிருந்தே புரிகிறது. எமிலிடிக்ஸனின் ஐந்நூறு கவிதைகளையுமே படித்திருப்பாள் போலிருக்கிறது.
தினமும் புதுப்புது கவிதைகளாக சொல்லுவாள். நடத்துகின்ற எல்லாவற்றிலும் எமிலிடிக்ஸனின் ஏதாவது ஒரு கவிதை புகுந்துவிடும்.
அந்தக் கவிதைகளுக்கு அவள் தரும் விளக்கங்களைக் கேட்டே ஹரிணிக்கும் அந்தக் கவிதைகளில் ஆர்வம் வந்துவிட்டது. எமிலிடிக்கின்ஸனைத் தேடித் தேடி படிக்க வைத்தது.
அவற்றைப் படிக்க படிக்க அந்த கவிதைகள் மிஸஸ் மான்யுவலைக் கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை என்று தோன்றிற்று. மிஸஸ் மான்யுவலின் மூலமாகவே ஹரிணி நிறைய படிக்க ஆரம்பித்துவிட்டாள்.
பாடங்களைத் தவிர ஹென்றி ஜேம்ஸ், ஜாக்லாண்டன், ஸ்டீபன், க்ரேன், மெல்விஸ், நாத்தானியல் ஹாத்தார்ன் என்று எதையாவது படித்துவிட்டு, ராத்திரி ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் படுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.
முந்தினநாள் இரவும்கூட எட்கர் ஆலன் போவின் சிறுகதை ஒன்றை படித்து புரியாமல் மூடி வைத்திருக்கிறாள். அன்று ராத்திரி அதை மறுபடியும் ஒரு முறை படித்து விட்டும் புரியாமல் போனால் மிஸஸ் மான்யுவலிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டிற்கு வந்தாள் ஹரிணி. ராதிகா இவளைப் பார்த்துவிட்டு வகுப்பிலிருந்து எழுந்து வந்தாள்.
என்ன ஹரிணி கிளாஸ் இல்லையா?
என்று கேட்டாள்.
நான் போகவில்லை. மிஸஸ் மான்யுவலின் கிளாஸை மிஸ் பண்ணிவிட்டு வந்திருக்கிறேன்.
அவங்களோட கிளாஸை மிஸ் பண்ணிவிட்டு வரும்படி என்ன முக்கியமான வேலை ஹரிணி?
கொஞ்சம் வெளியில் போக வேண்டும் ராதிகா. கூட வர்றியான்னு கேட்கலாம்னு வந்தேன்.
காலேஜ் விடட்டுமே போகலாம். எனக்கு இப்போது ரெகார்ட் சப்மிட் பண்ண வேண்டுமே...
இன்றைக்கு அப்பாவின் ஐம்பதாவது பிறந்தநாள் ராதிகா. முன்பே தெரிந்திருந்தால் ஏதாவது வாங்கி வைத்திருந்திருப்பேன். இன்று காலையில்தான் சொல்கிறார். ரெடியாக இரு. ஐந்து மணிக்கு வெளியில் போக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். காலேஜ் விட்டதும் போனால் லேட்டாகிவிடுமே.
பத்து நிமிஷன் இரேன். ரெகார்ட் மட்டும் சப்மிட் பண்ணிவிட்டு வந்துவிடுகிறேன்.
சரி. இங்கேயே இருக்கேன். சீக்கிரம் வா.
அவள் போவதையே பார்த்துக்கொண்டு எதிரில் புல்வெளியில் உட்கார்ந்து கொண்டாள் ஹரிணி. அவளால் பத்து நிமிடத்தில் வர முடியாது என்று தெரியும். அரை மணி நேரமாவது ஆகிவிடும். ஒழுங்காக மிஸஸ் மான்யுவலின் வகுப்பிற்கே போயிருந்திருக்கலாம் என்று தோன்றிற்று. ஐந்து மணிக்குப்பின் அப்பாவையே அழைத்துக்கொண்டு போய் அவருக்குப் பிடித்தமான நிறத்தில் பாண்ட்டையும் ஷர்ட்டையும் வாங்கித் தந்திருக்கலாம்.
இதுவரை அவளுக்கு ஷர்ட்டும் பாண்ட்டும் வாங்கிப் பழக்கமில்லை. அப்பாவிற்கு எவ்வளவு துணி வாங்க வேண்டும் என்பதுகூட தெரியாது. அப்பா தொள தொளவென்றுதான் ஷர்ட் போட்டுக் கொள்கிறார். அதுவும் வெளிர் மஞ்சளும் பிரவுனுமாகத்தான் இருக்கும்.
அவர் போட்டுக் கொள்ளும் எந்த ஷர்ட்டுமே அவளுக்குப் பிடித்ததில்லை. அப்பாவின் உயரத்திற்கு அந்த நிறத்திற்கு கறுப்பில் ஆழ்ந்த நீலத்தில் உடுத்திக்கொண்டால் எத்தனை அழகாக இருக்கும் என்று தோன்றிற்று. பார்க்கப்போனால் அப்பாவிற்கு பரிசாக இதுவரை எதையுமே தந்ததில்லை.
அப்பா வாங்கித் தருகிற சின்னச் சின்ன பொருள்களில் தனக்கு மனம் மகிழ்வது போல அப்பாவிற்கும் ஏதாவது வாங்கித் தந்தால் அவர் மனமும் மகிழ்ச்சி அடையுமே என்பது இத்தனை நாள் வரையில் தனக்குத் தோன்றாமல் போயிற்றே... அப்பாவிற்குச் செய்ய யார் இருக்கிறார்கள்?
அவள் பிறந்ததிலிருந்தே அம்மாவின் முகத்தைப் பார்த்ததில்லை. அம்மாவின் பாசமும் குடும்ப வாழ்க்கையும் அவளுக்குத் தெரியாத ஒன்று அவளின் ஐந்து வயது வரை அம்மாவின் தங்கையின் வீட்டில்தான் இருந்திருக்கிறாள். பின்பு ஸ்கூல் ஹாஸ்டல் வாசம்.
அப்பா சனிக்கிழமைகளிலோ, ஞாயிற்றுக்கிழமைகளிலோ அவளை வந்து பார்ப்பது உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அதிகம் வந்திருக்கிறார். காலையில் எட்டு மணிக்கே வந்துவிடுவார்.
அவள் குளித்துவிட்டு அவருக்காக காத்திருப்பாள். அவர் வருவதற்கு நேரமானால் ஹிண்டு பேப்பரைத் திருப்பி சினிமா காலத்தை தேடி அன்றைக்கு எந்த தியேட்டருக்குப் போகலாம் என்று பார்த்து வைத்துக்கொள்வாள்.
சின்ன வயதில் தியேட்டருக்குப் போவதும் சினிமா பார்த்துவிட்டு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு பீச்சிற்குப் போவதும் சந்தோஷமான விஷயமாகத்தான் இருந்தது. அன்றைக்கு முழுவதும் படிக்க வேண்டாம்.
வேலை எதுவும் செய்யாமல் நிம்மதியாக அப்பாவின்கூட இருக்கலாம் என்பதே சந்தோஷமாக இருக்கும். அதுகூட சில சனிக்கிழமைகளில் நின்று போய்விடும்.
அப்பா ஹாஸ்டலுக்கு வந்து அந்த வாரம் வர முடியாது என்பதைத் தெரிவித்துவிட்டுப் போய்விடுவார். அவர் ஊருக்குப் போனால் ஒரு வாரத்தில் திரும்ப முடியாது. இரண்டு வாரமாகிவிடும். அவர் திரும்பி வரும்போது தனக்காக என்ன வாங்கிக்கொண்டு வரப் போகிறார் என்கிற நினைப்பில் கழியும்.
அப்பாவிற்கு செல்கிற ஊர்களில் வெளியில் போகக்கூட நேரம் கிடைக்காது என்பதும் பொருள்களை சென்னைக்கு வந்தபின்பே வாங்கிவந்து தந்ததும்கூட அவளுக்கு அவர் பின்னால் சொல்லித் தெரியும்.
அந்தப் பொருள்களில் ஆர்வம் இருந்ததெல்லாம் சிறிய வயதில்தான். ஒவ்வொரு வருஷமாக வயது ஏறும்போது நண்பர்கள் எல்லோரும் டிபன் பாக்ஸில் வகை வகையாக உணவு வைத்துச் சாப்பிடும்போது, வித்தியாசமாக தலைமுடியை அலங்கரித்து பின்னல் போட்டுக் கொண்டு வரும்போது, விதவிதமாக பாவாடையில் பூக்கள் தைத்து போட்டுக்கொண்டு வரும்போது, அப்பா வாங்கித்தரும் பொருள்களில் ஆர்வம் குறைய ஆரம்பித்தது.
அம்மாவிற்காக மனசு ஏங்க ஆரம்பித்தது.
நீ ஏம்ப்பா கல்யாணம் பண்ணிக்கலை?
என்று ஒரு நாள் அப்பா அவளைப் பார்க்க வந்தபோது கேட்டாள்.
எதுக்கு கேக்கறேம்மா?
என்று கேட்டார் அவர்.
நீ முதல்லே பதில் சொல்லு
அதுக்கு அவசியம் இல்லைன்னு தோணித்து பண்ணிக்கலை.
நீ பண்ணிண்டு இருந்தால் எனக்கு ஒரு அம்மா கிடைச்சிருப்பா இல்லே?
இருக்கிறதும் போயிருந்திருக்கலாம் இல்லையாம்மா...
அதன் அர்த்தம் வெகு நாட்கள்வரை புரியவில்லை. அப்போது அவளுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் அழகான அன்பான அம்மா மட்டும்தான். காலையில் காபி போட்டு எழுப்ப, பாடங்களைச் சொல்லித்தர, தலைபின்னி ஸ்கூலுக்கு அனுப்ப ஒரு அம்மா...
அவளுக்கு ஹாஸ்டல் வெறுத்துப் போயிற்று. அந்த இடத்தின் இரைச்சலும், அமைதியின்மையும் ஒட்டுதல் இல்லாமல் அமைந்துபோன வாழ்க்கையும் வெறுத்துப் போய் அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். அப்பாவுடன் கோபித்துக்கொண்டு அவர் அவளைப் பார்க்க வரும் நாட்களில் எங்காவது நண்பர்கள் வீடு என்று கிளம்பிப் போய் அவரை ஆறு மணி வரை காத்திருக்கச் செய்ததும்