Vizhiye kathai Ezhuthu
()
About this ebook
Read more from Parimala Rajendran
Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Ithayam Oru Kovil Rating: 4 out of 5 stars4/5Mayangukiraal Oru Maathu Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Kangalin Jalangal Rating: 5 out of 5 stars5/5Oli Tharum Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Niram Maarumo Rating: 5 out of 5 stars5/5Poojaikku Vantha Malare Rating: 4 out of 5 stars4/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5
Related to Vizhiye kathai Ezhuthu
Related ebooks
விழியே கதை எழுது! Rating: 0 out of 5 stars0 ratingsசொர்ணப் புறா! Rating: 0 out of 5 stars0 ratingsSorna Pura Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingskannak Kathuppil Oru Kavithai Rating: 5 out of 5 stars5/5Endravadhu Oru Naal Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsVenpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Anal Mele Panithuli Rating: 5 out of 5 stars5/59 Tharavum 9 Giragangalum Rating: 0 out of 5 stars0 ratingsVazhithunai Rating: 0 out of 5 stars0 ratingsPoove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5பூவே... உன்னை நேசிப்பேன்...! Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Oru Seethai Rating: 0 out of 5 stars0 ratingsNesa Veli Rating: 4 out of 5 stars4/5Kanavugal Ingey! Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Thodum Rating: 5 out of 5 stars5/5தென்றல் வந்து என்னை தொடும் Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakave Rating: 0 out of 5 stars0 ratingsஇதயங்களின் சங்கமம்... Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் எடுத்த முடிவு! Rating: 0 out of 5 stars0 ratingsOru Athikaalaik Kolai Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Ninaithen Kondren! Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Vazha Ninaithaal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vizhiye kathai Ezhuthu
0 ratings0 reviews
Book preview
Vizhiye kathai Ezhuthu - Parimala Rajendran
25
1
பொழுது விடியும் நேரம். இன்னும் இருட்டு மிச்சமிருந்தது. ஆனந்தி எழுந்துக்கொண்டாள். அருகில் அருணா புடவை கால்களின் மேல் ஏறிக் கொண்டிருக்க, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
எப்படி படுத்திருக்கா பாரு... புடவையை சரி செய்தவள், தூங்கும் தங்கையின் முகத்தைப் பார்த்தாள். கடவுளே இவளுக்காவது ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடு. மனம் வேண்டியது.
காலை வேலைகள் மலை போல் காத்திருக்க, மளமளவென்று வேலையில் ஈடுபட்டாள்.
பின்புறம் சென்று, தொட்டியில் இருந்த குளிர்ந்த நீரை ஊற்றிக் குளித்து, ஈரக் கூந்தலை முடிந்துகொண்டு, அடுப்பை பற்ற வைத்து, சாம்பாருக்கான பருப்பை குக்கரில் வைத்து, வடைக்கு உளுந்தை போட்டவள், வாசலுக்கு வரவும், பொழுது நன்றாக விடியவும் சரியாக இருந்தது. பனி விலகாத காலை வேளை, பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது. மலை சார்ந்த இந்த கிராமத்துக்கு வந்து, மொத்தமாக பத்து வருடங்கள் ஓடிவிட்டது.
பச்சை பசேலென்று மரம், செடி, கொடிகள் பசுமைக் கம்பளம் விரித்தாற்போல வியாபித்திருக்க, வெளியில் இருந்த பைப்பில் தண்ணீர் பிடித்துத் தெளித்து, சின்னதாக ஒரு கோலம் போட்டு நிமிர,.
அக்கா, எழுந்து குளிச்சாச்சா
வா வள்ளி, இன்னைக்கு வழக்கமாக செய்யறதைவிட, முப்பது பேருக்கு டிபன் ஆர்டர் இருக்கு. எட்டு மணிக்குள் ரெடியாகணும். சரி, சரி நீ போய் உளுந்து ஊறவச்சதை கிரைண்டரில் போடு, ரொம்ப நேரம் ஊறினா எண்ணெய் குடிச்சுடும்.
இவளுக்குமாக, பில்டரில் இருந்த டிகாஷனில் ராத்திரி பாலை ஊற்றி காபி போட்டவள்,
இந்தா வள்ளி காபி குடிச்சுட்டு வேலையை பாரு
சொன்னவள் தானும் குடிக்க ஆரம்பித்தாள்.
சூடான காபி, தொண்டை வழியாக இறங்குவது, குளிருக்கு இதமாக இருந்தது.
என்னக்கா, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, இதுதானே...
கொஞ்சம் காரசட்னியும் அரைக்கணும் வள்ளி.
மணி எட்டை நெருங்க ஏறக்குறைய எல்லா வேலைகளும் முடிந்திருந்தது.
வெளியே வீட்டை ஒட்டி வாசலில் சார்பு இறக்கப்பட்டு, பெஞ்சுகள் போடப்பட்டிருந்த இடத்தை மருது கூட்டி சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தான்.
இன்னும் சிறிது நேரத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட வந்துவிடுவார்கள்.
அருணா எழுந்திரு. மணி எட்டாச்சு. காலேஜ் லீவ் விட்டா, இப்படித்தான் தூங்கணுமா, எழுந்திரும்மா.
தங்கையை எழுப்பிக் கொண்டிருக்கும் ஆனந்தியை பார்த்து வள்ளி,
அக்கா, நீங்க அருணாவுக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்கறீங்க. முதலிலேயே எழுப்பியிருந்தா கூடமாட வேலை செய்து கொடுக்கும் இல்லையா?
அவ சின்ன குழந்தைதான் வள்ளி. இன்னும் பொறுப்பு வரலை. தன்னால எல்லாம் கத்துப்பா. நான்தான் மனசு நிறைய கவலையை சுமந்துகிட்டு இருக்கேன். அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்."
குரலில் பாசம் வழிந்தோடுகிறது.
அக்கா, ஏன் என்னை எழுப்பறே. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே... ப்ளீஸ்.
மெல்லிய சிணுங்கலோடு கண்ணை திறக்காமலேயே சொல்ல,
இல்லடா அருணா. நீ எழுந்திருச்சுதான் ஆகணும். இன்னும் கொஞ்ச நேரத்தில் கபாலி ஆட்டோ எடுத்துட்டு வந்துடுவான். பாலையூர் பண்ணையார் வீட்டில், டிபன் வகையறாக்களை சரிபார்த்து நீதான் கொடுத்துட்டு வரணும். அக்காவுக்கு வேலை இருக்கு. எழுந்திரு பார்ப்போம். என் செல்லம் இல்லையா...
கெஞ்சி, கூத்தாடி தங்கையை படுக்கையை விட்டு எழுப்பி உட்கார வைக்கிறாள் ஆனந்தி.
கபாலி அண்ணே, கொஞ்சம் மெதுவா போங்க. சாம்பார் தூக்கு அப்புறம் தளும்ப ஆரம்பிச்சுடும்."
நான்தான் என்ன செய்யட்டும். நம்ம மலை ரோடு அப்படி இருக்கு. தூக்கு வாளியை ஆடாம கையிலே பிடிச்சுட்டு உட்காரு.
அண்ணே, பண்ணையாரு வீட்டில் இன்னைக்கு என்ன விசேஷம், தெரியுமா?
அவரு மகன் படிப்பை முடிச்சுட்டு அமெரிக்காவிலிருந்து வந்திருக்கானாம். சென்னைக்குப் போய் கூட்டிட்டு வந்திருக்காங்க. உறவு ஜனம் வந்திருக்கு. அதான் ஊருக்கு போறதுக்கு முன்னால, அக்காகிட்டே ஆர்டர் கொடுத்துட்டு போனாங்க.
அப்படியா... சரி, சரி.
வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள் அருணா. வயது இருபதை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த வயதுக்குரிய இளமை மினுமினுப்புடன் அழகாக தெரிந்தாள். மாநிறமானாலும், நீண்ட விழிகளும், பவள உதடுகளும், மாம்பழக் கன்னங்களும், அவள் ஒரு அழகி என சொல்லாமல் சொல்லியது.
பக்கத்திலிருக்கும் டவுன் காலேஜில் பி.எஸ்ஸி., ஐ.டி. படித்துக் கொண்டிருந்தாள்.
ஆனந்திக்கு, தான் படிக்கவில்லை. தங்கையாவது படிக்கவேண்டும் என்ற ஆதங்கம் மனசு நிறைய இருந்தது.
ஆட்டோவை பண்ணையார் வீட்டின் முன்பு நிறுத்தினான் கபாலி.
வாசலில் நான்கைந்து பெரிய மனிதர்கள் நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அருணா இறங்கிக்கொள்ள, ஆட்டோவில் இருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக இறக்கினான்.
வாசலுக்கு வந்த பண்ணையார் வைத்தியலிங்கம் ஆட்டோவை பார்த்துவிட்டு,
டேய் சிவசு, டிபன் வந்திருச்சு பாரு. போய் எல்லாத்தையும் உள்ளாறக் கொண்டு வா
குரல் கொடுக்க,
வேலையாட்கள் இரண்டு பேர், எல்லாவற்றையும் வீட்டினுள் கொண்டு சென்றார்கள்.
ஐயா, எல்லாம் சரியா இருக்கா பார்த்துட்டீங்களா?
என்ன அருணா, இப்படி கேட்டுட்டே... ஆர்டர் கொடுத்தது யாருகிட்டே... உங்க அக்கா ஆனந்திக்கிட்டே. சரியா மட்டுமில்லை; ருசியாகவும் இருக்கும்