Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எங்கே எனது கவிதை...
எங்கே எனது கவிதை...
எங்கே எனது கவிதை...
Ebook148 pages57 minutes

எங்கே எனது கவிதை...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திவாகர் யோசனையுடன் காரில் அமர்ந்திருந்தான்.

"டிரைவர் கொஞ்சம் வேகமாகப் போங்க..." 

"பதட்டப்படாதீங்க தம்பி... அப்பா நல்லாதான் இருக்காரு. ஹார்ட் அட்டாக்தான். ஆரம்பத்தில் பார்த்தாச்சு. கவலைப்படாதீங்க..." என்றான், நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டில் டிரைவராக இருக்கும் கோபி. 

கொடைக்கானலில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறான் திவாகர். பள்ளிப்படிப்பு முடியப் போகிறது. அப்பா பெரிய தொழிலதிபர். கிரானைட் பேக்டரி வைத்திருக்கிறார். திவாகரும், திவ்யாவும் அவருடைய வாரிசுகள். அம்மா சிவகாமி நான்கு வருடத்திற்கு முன் ஸ்ட்ரோக் வந்து படுக்கையிலும் வீல் சேரிலுமாக பொழுதைக் கழிக்கிறாள். 24 மணி நேரமும் அவளுக்கு உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வீட்டு நிர்வாகம் மேனேஜரிடம். அப்பாதான் எல்லாமுமாக இருந்தார். இப்போது அவரும் படுக்கையில். மனம் வலித்தது திவாகருக்கு. 

வேகமாக ஐ.சி.யூ. நோக்கிப் போனான். எதிரில் வந்தார் மேனேஜர். "வாங்க தம்பி... அப்பாவுக்குப் பரவாயில்லை. கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்ப் பார்க்கலாம்." என்றார். 

அருகில் நின்றிருந்த தங்கை திவ்யா, அண்ணனைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.

"திவ்யா! என்ன இது? அழாதே... அப்பாவுக்கு சரியாயிடும்..." தங்கையைச்  சமாதானப்படுத்தினான் திவாகர். 

மகனைப் பார்த்ததும் சந்திரசேகரின் கண்களில் கண்ணீர் வடிந்தது. சிறிது நேரம் அருகில் நின்றுவிட்டு வெளியில் வந்தான். 

"டாக்டர் கூப்பிடுகிறார் தம்பி..." என்று மேனேஜர் சொல்ல, திவாகர் டாக்டர் அறைக்குச் சென்றான். 

"நீதான் சந்திரசேகரின் மகனா...? இப்போதைக்கு பயப்படற மாதிரி எதுவும் இல்லை. இருந்தாலும் அப்பாவின் நிலைமை எதுவும் சொல்ல முடியாது. இனிமேல் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். உங்க அம்மாவுக்கும் ஸ்ட்ரோக் வந்து நடமாட முடியாம இருப்பதா சொன்னாங்க. நீதான் ஒரே பையன். தைரியமா இருக்கணும். நெருங்கிய சொந்தக்காரங்க யாரும் இருந்தால் வரச் சொல்லிப் பார்த்துக்கப்பா..." 

வீட்டிற்கு வந்தான் திவாகர். அம்மாவின் நிலைமை அதற்கு மேல். கண்ணீருடன் மகனின் கையைப் பிடித்தாள். 

"நம்ம நிலைமையைப் பார்த்தியா திவாகர்... அப்பாவுக்கு இப்படி ஆகும்னு கனவிலும் நினைக்கல. நான்தான் ஒண்ணுக்கும் உதவாம நாலு வருஷமா படுக்கையில் போராடுறேன்... அப்பாவுக்கும் இந்த நிலைமை... என்ன செய்யப் போறோம்..." 

"அம்மா! ப்ளீஸ்... இப்பதான் நாம் தைரியமா இருக்கணும். நீ கவலைப்படாதே. ஊரில் இருந்து சோமு மாமாவை வரவழைப்போம். அவர் உனக்கு ஆறுதலா இருப்பார். அப்பா கூடிய சீக்கிரம் வீட்டுக்கு வந்துருவாரு. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீயும் தைரியமா இரு. திவ்யா ரொம்பப் பயந்து போய் இருக்கா. நீ இப்படி அழுதுட்டு இருக்கக்கூடாது, சரியா... சாப்டியாம்மா...?" என்று கேட்டவன், "வைதேகி அக்கா... அம்மாவுக்குச் சாப்பாடு கொண்டு வாங்க..." என்று உள்நோக்கி குரல் கொடுத்தான். 

எல்லோருக்கும் ஆறுதல் சொன்னாலும், இளம் வயதான திவாகரின் மனதிலும் 'என்ன செய்யப் போகிறோம்?' என்ற எண்ணம் பயத்தை உண்டாக்கியது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 28, 2023
ISBN9798223761198
எங்கே எனது கவிதை...

Read more from Parimala Rajendran

Related to எங்கே எனது கவிதை...

Related ebooks

Reviews for எங்கே எனது கவிதை...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எங்கே எனது கவிதை... - Parimala Rajendran

    1

    திவாகர் யோசனையுடன் காரில் அமர்ந்திருந்தான்.

    டிரைவர் கொஞ்சம் வேகமாகப் போங்க...

    பதட்டப்படாதீங்க தம்பி... அப்பா நல்லாதான் இருக்காரு. ஹார்ட் அட்டாக்தான். ஆரம்பத்தில் பார்த்தாச்சு. கவலைப்படாதீங்க... என்றான், நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டில் டிரைவராக இருக்கும் கோபி.

    கொடைக்கானலில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறான் திவாகர். பள்ளிப்படிப்பு முடியப் போகிறது. அப்பா பெரிய தொழிலதிபர். கிரானைட் பேக்டரி வைத்திருக்கிறார். திவாகரும், திவ்யாவும் அவருடைய வாரிசுகள். அம்மா சிவகாமி நான்கு வருடத்திற்கு முன் ஸ்ட்ரோக் வந்து படுக்கையிலும் வீல் சேரிலுமாக பொழுதைக் கழிக்கிறாள். 24 மணி நேரமும் அவளுக்கு உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வீட்டு நிர்வாகம் மேனேஜரிடம். அப்பாதான் எல்லாமுமாக இருந்தார். இப்போது அவரும் படுக்கையில். மனம் வலித்தது திவாகருக்கு.

    வேகமாக ஐ.சி.யூ. நோக்கிப் போனான். எதிரில் வந்தார் மேனேஜர். வாங்க தம்பி... அப்பாவுக்குப் பரவாயில்லை. கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்ப் பார்க்கலாம். என்றார்.

    அருகில் நின்றிருந்த தங்கை திவ்யா, அண்ணனைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.

    திவ்யா! என்ன இது? அழாதே... அப்பாவுக்கு சரியாயிடும்... தங்கையைச் சமாதானப்படுத்தினான் திவாகர்.

    மகனைப் பார்த்ததும் சந்திரசேகரின் கண்களில் கண்ணீர் வடிந்தது. சிறிது நேரம் அருகில் நின்றுவிட்டு வெளியில் வந்தான்.

    டாக்டர் கூப்பிடுகிறார் தம்பி... என்று மேனேஜர் சொல்ல, திவாகர் டாக்டர் அறைக்குச் சென்றான்.

    நீதான் சந்திரசேகரின் மகனா...? இப்போதைக்கு பயப்படற மாதிரி எதுவும் இல்லை. இருந்தாலும் அப்பாவின் நிலைமை எதுவும் சொல்ல முடியாது. இனிமேல் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். உங்க அம்மாவுக்கும் ஸ்ட்ரோக் வந்து நடமாட முடியாம இருப்பதா சொன்னாங்க. நீதான் ஒரே பையன். தைரியமா இருக்கணும். நெருங்கிய சொந்தக்காரங்க யாரும் இருந்தால் வரச் சொல்லிப் பார்த்துக்கப்பா...

    வீட்டிற்கு வந்தான் திவாகர். அம்மாவின் நிலைமை அதற்கு மேல். கண்ணீருடன் மகனின் கையைப் பிடித்தாள்.

    நம்ம நிலைமையைப் பார்த்தியா திவாகர்... அப்பாவுக்கு இப்படி ஆகும்னு கனவிலும் நினைக்கல. நான்தான் ஒண்ணுக்கும் உதவாம நாலு வருஷமா படுக்கையில் போராடுறேன்... அப்பாவுக்கும் இந்த நிலைமை... என்ன செய்யப் போறோம்...

    அம்மா! ப்ளீஸ்... இப்பதான் நாம் தைரியமா இருக்கணும். நீ கவலைப்படாதே. ஊரில் இருந்து சோமு மாமாவை வரவழைப்போம். அவர் உனக்கு ஆறுதலா இருப்பார். அப்பா கூடிய சீக்கிரம் வீட்டுக்கு வந்துருவாரு. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீயும் தைரியமா இரு. திவ்யா ரொம்பப் பயந்து போய் இருக்கா. நீ இப்படி அழுதுட்டு இருக்கக்கூடாது, சரியா... சாப்டியாம்மா...? என்று கேட்டவன், வைதேகி அக்கா... அம்மாவுக்குச் சாப்பாடு கொண்டு வாங்க... என்று உள்நோக்கி குரல் கொடுத்தான்.

    எல்லோருக்கும் ஆறுதல் சொன்னாலும், இளம் வயதான திவாகரின் மனதிலும் ‘என்ன செய்யப் போகிறோம்?’ என்ற எண்ணம் பயத்தை உண்டாக்கியது.

    2

    அப்பாவை ஐ.சி.யூ.வில் இருந்து வார்டுக்கு மாற்றியிருந்தார்கள்.

    திவாகர்... உனக்கு ஸ்கூல் போகுது. அதிகமாக லீவு எடுத்தால் படிப்பு பாழாகும்... என்று அப்பா சொல்ல, இருக்கட்டும்பா... நீங்க நல்லபடியா வீட்டுக்கு வர்ற வரைக்கும் நான் ஸ்கூல் போகப் போறதில்லை... பார்த்துப்போம்... என்றான் திவாகர்.

    அம்மா எப்படிப்பா இருக்கா...? அம்மாவுக்கு தைரியம் சொன்னியா...?

    உங்களை வந்து பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருக்காங்க. கஷ்டம்பா அவங்களை அழைச்சிட்டு வர முடியாது. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்கன்னு சொல்லி இருக்கேன். மாமாவுக்கு போன் பண்ணினேன். நாளைக்கு வருவதாக சொல்லி இருக்காங்க... என்றான்.

    திவாகர்... இப்படி பக்கத்தில் உக்காரு... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ப்பா...

    வேண்டாம்பா... அப்புறமா பேசிக்கலாம். ரெஸ்ட் எடுங்கப்பா. உங்களுக்கு இப்பதான் உடம்பு கொஞ்சம் தேவலாம் போல இருக்கு...

    இல்லை திவாகர்... அப்புறம் இதைப்பற்றி பேச முடியாமலே போயிடும்... கட்டாயம் உன்கிட்ட நான் இந்த விஷயத்தைச் சொல்லணும். நீதான் எனக்கு உதவி செய்யணும்...

    புரியாமல் அப்பாவைப் பார்த்தான்.

    திவாகர்... என்னோட போனை எடுப்பா... என்றார் அப்பா. திவாகர் போனை எடுத்து அவரிடம் தர, மேனேஜர் அனாதை இல்லத்திற்கு போனபோது எடுத்த போட்டா ஒண்ணு அதுல இருக்கு. போன மாசம் என்று நினைக்கிறேன். தேதி 10. அதை எடு... என்றார்.

    அந்த போட்டோவில் அங்கு இருக்கும் பிள்ளைகளுடன் இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

    பார்த்தவன், என்னப்பா, சொல்லுங்க... என்றான்.

    அதுல சிகப்பு கலரில் புடவை கட்டிட்டு பெண் நிற்கிறார். இல்லையா...?

    ஆமாம்பா... அவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா...?

    அதுக்கும் மேலே. நான் காலேஜில் படிக்கும்போது அவளை என் உயிருக்கும் மேலாக நேசித்தேன். மூன்று வருட காதல் ஒரே நாளில் முடிவுக்கு வந்துருச்சு. இந்த வயசுல இதையெல்லாம் உன்கிட்ட சொல்லக்கூடாது. இருந்தாலும் என் உடல் நிலை இருக்கும் நிலையில் நான் கட்டாயம் இதைப்பற்றி உன்னிடம் பேசித்தான் ஆக வேண்டும். தயவு செய்து தப்பா நினைச்சுக்காதே...

    இல்லைப்பா. உங்க மனசுல எது இருந்தாலும் தைரியமா என்கிட்ட சொல்லலாம்...

    அன்போடு மகனைப் பார்த்தார் சந்திரசேகர்.

    அவ பேரு சுகந்தி... அவளுக்குன்னு யாரும் கிடையாது. அவளும் அனாதை இல்லத்தில் வளர்ந்தவ. ஆரம்ப காலத்தில் நண்பர்களாகத்தான் பழகினோம். நாளாக ஆக எங்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம்... அன்பு... இது எங்களை நேசிக்க வைத்தது... மௌனமாக அப்பா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

    "படிப்பு முடிந்து ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம்ன்னு என் வீட்டில் பேச நினைச்சேன்...

    "அப்பாகிட்ட என்ன தயக்கம்? என்ன சொல்லணும்ன்னு நினைக்றேப்பா... சும்மா சொல்லுப்பா..."

    அப்பா... நீங்க நினைச்ச மாதிரி நல்லபடியா படிச்சு முடிச்சு வேலையிலும் சேர்ந்துட்டேன். ரெண்டு வருஷமா என் மனசுல இருக்கிற விருப்பத்தை உங்ககிட்ட சொல்லப் போறேன். நிச்சயம் இதுக்கு நீங்க சம்மதிப்பீங்கன்னு எனக்குத் தெரியும்…

    சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் அப்பா.

    என்னோட காலேஜில் படித்த பொண்ணு... பேரு சுகந்தி. அவளுக்குன்னு யாரும் கிடையாதுப்பா. உண்மையா என்னை நேசிக்கிறாள். நானும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்குக் கொடுத்திட்டேன், நிச்சயம் உங்க சம்மதம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்...

    நிமிர்ந்தவர் கண்கள் கலங்கியிருந்தது.

    அப்பா... என்ன ஆச்சுப்பா... நான் ஒரு முட்டாள். உங்ககிட்ட முதலிலேயே சொல்லி இருக்கிறேன். பத்து வருஷ கதைப்பா... என்னோட பிசினஸ் நஷ்டத்தில் போச்சுன்னு என் நண்பர் கண்ணதாசன்கிட்ட கடனா கொஞ்சம் பணம் கேட்டேன். அவர் யோசிக்காம இருபது லட்சம் எடுத்துக் கொடுத்தார். அப்ப அவரு சொன்னாரு, ‘என் பொண்ணு சிவகாமி அம்மா இல்லாதவ. சின்ன வயசுல காக்கா வலிப்பு அடிக்கடி வரும். டாக்டர்கிட்ட காமிச்சு நல்லபடியா குணமாயிடுச்சு. இருந்தாலும் மனசுக்குள்ள சின்ன பயம். நாளைக்கு கல்யாணம் ஆகிப் போற இடத்தில ஏதாவது பிரச்சனைன்னா என் பெண்ணோட வாழ்க்கை என்ன ஆகும்ன்னு மனசு கலங்குது. கோடி கோடியா சொத்து இருக்கு. அதுக்கு ஆசைப்பட்டு யாராவது. வந்து பின்னால பிரச்சனையாகக் கூடாது. உன்கிட்ட ஒரே ஒரு உதவி கேட்கிறேன். என் மகளை உன்னால் வாழ வைக்க முடியுமா? இந்த உபகாரம் உன்னால் செய்ய முடியுமா’ன்னு கேட்டார். நான் புரியாமல் பார்த்தேன். என்னப்பா சொல்றே... நான் எப்படி உதவ முடியும்?"

    இப்படி கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே. நீயும் ஒரு மகனை வெச்சிருக்கே. அருமை பெருமையாக வளர்கிற உன் வீட்டில் என் மகள் வாழ வந்தா நிச்சயம் அவளை நீங்க நல்லபடியா வாழ வைப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு...

    ‘காலத்தில் செய்த உதவி இதற்குப் பரிகாரம் கேட்கிறார், என்னால் முடியுமா?’ - சிறிது யோசித்தவர், என் மேல் நம்பிக்கை வைத்து கேட்கிறே... அதற்கான நேரம் காலம் வரும்போது கட்டாயம் செய்வேன். உன் மகள்தான் என் வீட்டு மருமகள். என் வார்த்தையை நீ நம்பலாம்.

    ரொம்ப சந்தோஷம். இந்த உதவி மட்டும் போதும். மனநிறைவோடு வாழ்ந்துட்டுப் போயிடுவேன். என் சொத்து சுகம் எல்லாம் என் மகளுக்குத்தான். நிச்சயம் உன் மகனோடு அவள் வாழ்க்கை நல்லவடியா அமையும்... கண் கலங்க சொன்னார் கண்ணதாசன்.

    அப்பாவைப் பார்த்தான். என்ன செய்வது? மனம் குமுறுகிறது.

    "சேகர்... கவலைப்படாதே. இது முழுக்க முழுக்க என்னோட தப்பு. உன்னோட எதிர்காலத்தை நான் முடிவு செய்ய முடியாது. ஏதோ ஓர் ஆர்வத்தில் வாக்குக் கொடுத்துவிட்டேன். பரவாயில்லை. நீ

    Enjoying the preview?
    Page 1 of 1