Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuttrangal Kuraivathillai
Kuttrangal Kuraivathillai
Kuttrangal Kuraivathillai
Ebook96 pages51 minutes

Kuttrangal Kuraivathillai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kuttrangal Kuraivathillai

Read more from Rajeshkumar

Related to Kuttrangal Kuraivathillai

Related ebooks

Related categories

Reviews for Kuttrangal Kuraivathillai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuttrangal Kuraivathillai - Rajeshkumar

    20

    1

    டி.வி. ஸ்டேஷன் கட்டிடம் பலஹீனமான வெளிச்சத்தில் இருந்த ராத்திரி எட்டரைமணி. டவரின் உச்சியில் ரத்தத் துளி ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பதைப் போல் சிவப்பு விளக்கு ஒன்று ஒளிர்ந்தது. அணைந்தது. ஒளிர்ந்தது. அணைந்தது. ஒளிர்ந்தது. அணைந்தது.

    கட்டிடத்தின் இரண்டாவது மாடி - கொஞ்சம் கெட்டியான இருட்டில் இருக்க - டாய்லெட் பகுதியில் பதுங்கியிருந்த அந்த நான்கு பேரும் வெளியே வந்தார்கள். நான்கு பேர்களின் கைகளிலும் பிஸ்டல்கள் முளைத்திருந்தன.

    வராந்தாவில் வரிசையாய் நடந்தார்கள்.

    கால்களில் சத்தம் எழுப்பாத ஷுக்கள்.

    "தாவூத்! மணி எவ்வளவு...?’’

    ‘‘எட்டு முப்பத்தி ஒண்ணு ...’’

    நியூஸ் வாசிக்க இன்னும் ஒன்பது நிமிஷம் இருக்கு...! நாம் போட்டிருக்கிற திட்டப்படி எல்லாம் நடக்குமா...?

    ‘‘நடக்கும்... இளங்கோ ...!’’

    ‘‘வராந்தா மூலையில எவனோ வர்றான்..."

    ஒளிஞ்சுக்குவோமா...?

    ‘‘வேண்டாம்... பார்த்துட்டான்..."

    "என்ன பண்ணலாம்?’’

    "ஃபேஸ் பண்ண வேண்டியதுதான்...! ஆள் அவ்வளவு திடகாத்திரமாய் இல்லை… சோனி தான்...’’

    கைகளில் இருந்த பிஸ்டல்களை மறைத்துக் கொண்டார்கள். ஆள் பக்கத்தில் வந்தான். சட்டைப்பாக்கெட்டில் - கறுப்பு செவ்வக நேம் பேட்ஜில் ஜி.கிருஷ்ணன் ட்ராஃப்ட்ஸ்மேன் என்ற விபரம் தெரிந்தது. இளைஞன். தலையை சிரத்தையாய் வாரியிருந்தான். மூச்சுக் காற்றில் சற்று முன் குடித்த சிகரெட் வாசனை.

    கிருஷ்ணன் அவர்களைக் கையமர்த்தினான்.

    ‘‘நில்லுங்க...’’

    நான்கு பேரும் நின்றார்கள்.

    "யார்... நீங்க...? எப்படி உள்ளே வந்தீங்க...? எட்டு மணிக்கு மேல எந்த விஸிட்டரும் உள்ளே இருக்கக் கூடாது...’

    "இருந்தா என்னவாம்...?’’

    "செக்யூரிடி ரூல்ஸ்படி இருக்கக் கூடாது... வெளியே போயிருங்க’’

    ‘‘சரி...’’

    நடந்தார்கள்.

    "அந்தப் பக்கம் இல்லை. இந்தப் பக்கம்...’’

    ‘இந்த கிருஷ்ணன் தொந்தரவு கொடுப்பான் போலிருக்கே?’

    தாவூத், இளங்கோவுக்கு கண்ணைக் காட்ட, இரு வரும் கிருஷ்ணனை நெருங்கினார்கள். ஒருவன் குரல் வளையை சட்டென்று பற்றிக் கொள்ள, இன்னொருவன் தன் வலுவான முஷ்டியைக் குவித்து கிருஷ்ணனின் அடிவயிற்றில் எஃகுத்தனமாய் குத்து விட்டான்.

    கிருஷ்ணனுக்குள் எது எதுவோ உடைந்து உடனே கடைவாயில் ரத்தம் தள்ளியது. சரிந்தான்.

    "செத்துட்டானா...? பார்த்துடு...’’

    ‘‘அடி வாங்கின கணமே செத்திருப்பான்... தாவூத் விட்டகுத்தில் ரெண்டு கிட்னியும் ‘ஜாம்’ ஆயிருக்கும்...’’

    ‘‘அவனை இழுத்து டாய்லெட்டுக்குள்ள போடு...??

    ஒருவன் இழுத்துப் போட்டான். கதவைச் சாத்தி தாழிட்டுவிட்டு நடந்தார்கள். வராந்தா பூராவும் வெறிச்.

    செய்திகள் வாசிக்கிற ஸ்டூடியோ வந்தது. .

    ‘உள்ளே போக அனுமதியில்லை’ - தொங்கிய போர்டுக்கு பக்கத்தில் ஒருவன் நின்றிருந்தான். காக்கி யூனிஃபார்ம் சிப்பந்தி.

    கத்தினான்.

    ஏய்... நீங்கெள்ளாம் யாரு...?

    ஒருவன் துப்பாக்கியைக் காட்ட - சிப்பந்தியின் வாய் அப்படியே நின்றது. "மரியாதையா கதவைத் தொற...’’

    அவன் வியர்த்துக் கொண்டு தாழ்ப்பாளை திறக்க - அவனையும் தள்ளிக் கொண்டு உள்ளே போனார்கள்.

    அறை வெளிச்சமாய் இருந்தது. டி.வி. மானிட்டரில் விளம்பரம் கலர் கலராய் போய்க் கொண்டிருக்க - செய்தி வாசிக்கப் போகிற பிரமிளா கணேஷ், காமிரா மேன்கள் சந்திரகுமார், சீனிவாஸ் பிரபு, செய்தி ஆசிரி யார் கலீல், இரண்டு லைட்மேன்கள் - எல்லோருமே சத்தம் கேட்டு கலைந்து நிமிர்ந்தார்கள்.

    துப்பாக்கிகள் நீண்டன. இளங்கோ குரலை உயர்த்தினான். ‘‘இங்கே இருக்கிற எல்லாரும் ஒரே லைன்ல ஃபார்மாகி அப்படி சுவரோரமா போய் நில்லுங்க..."

    ஒவ்வொருவராய் தயக்கமாய் நகர்ந்து சுவரோர மாய் போய் நின்றார்கள்.

    ‘‘நாங்க சொன்னபடி கேட்டா... நாளைக்கு காலையில் நீங்க சூரியோதயத்தைப் பார்க்கலாம்"

    சொன்ன இளங்கோ மெதுவாய் நடையிட்டு பிரமிளா கணேஷை நெருங்கினான்.

    அழகாக இருந்தாள். போட்டிருந்த கொண்டை, உடுத்தியிருந்த சேலை, கழுத்தை கவ்வியிருந்த நெக்லஸ், வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு எல்லாமே வித்தியாசமாய் இருந்தது.

    இளங்கோ தன் கையில் வைத்திருந்த பிஸ்டலை பிரமிளா கணேஷின் வெண்ணெய்க் கட்டி போல் இருந்த மோவாயில் பதித்தான்.

    கையில் என்ன வெச்சிருக்கே...?

    ப... ப... படிக்க வே... வேண்டிய... நியூஸ் பர்ட்டிகுலர்ஸ்...

    "அதை அப்படி எறி...’’

    உடனே எறிந்தாள்.

    "தாவூத்...’’ வந்தான்.

    நாம கொண்டு வந்திருக்கிற நியூஸ் பர்ட்டிகுலர்ஸை அம்மிணி கையில குடு.

    மார்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்த - அந்த கற்றையான தாள்களை எடுத்துக் கொடுத்தான்.

    ‘‘ம்... வாங்கிக்க... இன்னிக்கு படிக்கப் போகிற 8.40 நியூஸ்ல இதுல என்ன எழுதியிருக்கோ அதைத் தான் நீ படிக்கப் போறே..."

    பிரமிளா கணேஷ் அந்தத் தாள்களை வாங்கி பிரித்து பார்த்தாள்.

    இன்றைய தலைப்புச் செய்திகள்

    ‘எனது மந்திரிசபையில் இருக்கும் அத்தனை மந்திரிகளும் ஊழல் பேர்வழிகள். இந்தியா வெளிநாடுகளில் பிச்சை எடுத்து வரும் பணத்தை - மறைமுகமாக பங்கு போட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1