Andhi Nera Thendral Kaatru!
By Shrijo
4/5
()
About this ebook
Read more from Shrijo
Manathodu Mazhai Vaasam! Rating: 3 out of 5 stars3/5Nenjirukkum Varaikkum! Rating: 1 out of 5 stars1/5Azhagiya Vizhigaliley! Rating: 5 out of 5 stars5/5Santhana Thendral Rating: 4 out of 5 stars4/5Pani Vizhum Malarvanam! Rating: 4 out of 5 stars4/5Aayiram Nilavey Vaa! Rating: 4 out of 5 stars4/5Vaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5Nenjaankoottil Neeye Nirkkirai Rating: 0 out of 5 stars0 ratingsThen Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Putham Puthu Malare! Rating: 3 out of 5 stars3/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Shrijovin Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsNenjirukkum Varai!!! Rating: 4 out of 5 stars4/5
Related to Andhi Nera Thendral Kaatru!
Related ebooks
Ullam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Aayiram Nilavey Vaa! Rating: 4 out of 5 stars4/5Unnai Ponnena Kanda Pozhuthile! Rating: 4 out of 5 stars4/5Ninnai Saranadainthean Part - 2 Rating: 5 out of 5 stars5/5Idhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5Unakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsVaasal Vantha Vanaville Rating: 5 out of 5 stars5/5Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Imaipeeli Neeyadi Rating: 4 out of 5 stars4/5Idhayathai Thirudathe! Rating: 3 out of 5 stars3/5Imaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5Minsara Poove... Rating: 1 out of 5 stars1/5Veenaiyadi Nee Enakku rp Rating: 0 out of 5 stars0 ratingsNaaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnai Neenga Maatten! Rating: 5 out of 5 stars5/5Nooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsThanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5Neeyenge Ninaivugalange Rating: 2 out of 5 stars2/5Nenjamellam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Azhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Yamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Sippi Vantha Muthu... Rating: 4 out of 5 stars4/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Maiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Idhayam Meviya Kaadhalinaaley Rating: 5 out of 5 stars5/5Swasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5
Reviews for Andhi Nera Thendral Kaatru!
3 ratings0 reviews
Book preview
Andhi Nera Thendral Kaatru! - Shrijo
http://www.pustaka.co.in
அந்தி நேர தென்றல் காற்று!
Andhi Nera Thendral Kaatru!
Author :
ஸ்ரீஜோ
Shrijo
For more books
http://www.pustaka.co.in/home/author/shrijo
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அந்தி நேர தென்றல் காற்று!
1
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்ததுஓ .. காலை மேகம் சோலை ஆகும்வானம் எங்கள் சாலை ஆகும் தாமரை கொடை விறிக்கும் அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லுமலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும்பாதம் வந்தே கோலம் போடும்காவியம் தலை வணங்கும்அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே
என்ற பாடல் வரிகள் டிவியில் ஒலிபரப்பாகிக்கொண்டு இருக்க, அதனுடன் பின்பாட்டு பாடிக்கொண்டே துளசி தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாள்.
அம்மாடி துளசி, நீ சொன்ன மாதிரி கீரையை பறிச்சுட்டேன். அடுத்து என்னம்மா?
என்று அவளுக்கு பின்னால் வந்து நின்று, முத்துராமன் கேட்டார்.
அவர் குரலில் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தவள் மெல்லத் திரும்பி,
போதும்ப்பா. அதைக் கொண்டு போயி உள்ள வைங்க, நான் வந்து பார்த்துக்கறேன்
இருக்கட்டும்மா. நான் ஆய்ஞ்சு வைக்கிறேன். நீ மெல்ல வா
என்றவாரே தோட்டத்தில் பறித்த கீரைக் கற்றையை எடுத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.
வழக்கம் போல அவரது பார்வை, சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த அவரது திருமண புகைப்படத்தில் இருந்த அவரது மனைவி செண்பகத்தின் முகத்தில் ஒரு நிமிடம் நிலைத்து நின்றது.
பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் பார்வையைப் பதித்து நின்றவரை, பின்னால் வந்த துளசி தான் கலைத்தாள்.
என்னப்பா? இன்னிக்கு திடீர்னு?
ஒரு சிறு புன்னகையையே அவளுக்கு பதிலாக்கிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தார்.
முத்துராமன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி முடிந்து அவர் வேலைக்கு சேர்ந்தது செண்பகத்தின் அப்பாவிடம் தான்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், அவரது பிறவியிலேயே தொழில் நுணுக்கங்களும் சேர்ந்து பிறந்திருக்க, அவரின் கீழ் தொழில் சிறப்பாக நடைபெற்றது.
அவருடைய திறமையைப் பார்த்த செண்பகத்தின் அப்பா வித்யாம்பரம் அவருடைய செல்ல மகள் செண்பகத்திற்கு முத்துராமனை மணமுடித்து அவரை வீட்டோடு மாப்பிள்ளையாக்க முடிவு செய்து அதனை முத்துராமனிடமும் தெரிவித்தார்.
தன்மானத்திற்கு இழுக்கு வரும் என்பதால், அதற்கு முத்துராமன் இசைந்து கொடுக்காமல், வேறு இடத்திற்கு வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
அனைவரும் திரும்பிப்பார்க்கும் அழகு கொண்ட செண்பகத்தை, ஒரு முறை கூட தவறான முறையில் பார்க்காத முத்துராமனை செண்பகம் அவளறியாமல் மனதிற்குள் கொண்டு சென்று இருந்தார்.
அவருடைய தன்மான குணம் பற்றி கேள்விப்பட்ட செண்பகத்திற்கு முத்து ராமனை முற்றிலும் பிடித்துப் போக, அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் முத்துராமன் வீட்டோடு மாப்பிள்ளையாக வர சம்மதிக்காததால், திருமணத்திற்குப் பின், அவருடன் அவர் வீட்டிலேயே சென்று வசிக்க செண்பகம் ஒத்துக்கொண்டார்.
அதன்படி முத்துராமனின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார் வித்யாம்பரம்.
திருமணம் முடிந்து காதலுடன் இருவரும் வாழ்ந்து கொண்டிருக்க, அதற்கு ஏற்றார் போல, முத்துராமனும் மனைவி வசதி வாய்ப்பை விட்டுத் தன்னுடன் வாழ்வதால், அவளை நன்றாக வைத்துக்கொள்ளும் பொருட்டு, சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி, செய்ய ஆரம்பித்தார்.
அன்று அவர் ஆரம்பித்த ஒரு சிறிய மளிகை கடை தான், இன்று ஒரு மிகச் சிறந்த சூப்பர் மார்க்கெட்டாக மாறிவிட்டது.
ஆரம்பத்தில் வசதியைப் பார்க்காமல் இருந்த செண்பகம், கருத்தரித்தவுடன் அளவுக்கு அதிகமாக வசதிகள் எதிர்பார்த்தார்.
கணவரால் இந்த வசதிகளைக் கொடுக்க நாளாகும் என்று உணர்ந்தவர், பெற்றோருடன் சென்று வசிக்க முத்துராமனை வற்புறுத்த ஆரம்பித்தார். இடையில் முத்துராமனின் தன்மானத்தை அவர் சில இடங்களில் சீண்டிப் பார்க்க, இருவருக்கும் இடையே சண்டைகள் அதிகமாகி, புரிதல் குறைந்து போனது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, தான் மட்டும் பெற்றோர் வீட்டிலேயே சென்று தங்க செண்பகம் முடிவு செய்தார்.
வளைகாப்பு முடிந்து பிறந்தவீட்டிற்கு செல்ல முடிவு செய்தவர், தக்க சமயத்திற்கு காத்திருந்தார்.
2
நாளொரு சண்டையும் பொழுதொரு பிரச்சினையுமாக இருக்க, இதே