Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ainthinai Aimbathu
Ainthinai Aimbathu
Ainthinai Aimbathu
Ebook109 pages33 minutes

Ainthinai Aimbathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்றவை ஐந்து நிலங்களாக தமிழகத்தில் பன்னெடுங் காலமாக சிறந்து விளங்கிக் கொண்டு வருகின்றது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இந்த ஐந்து திணைகளையும் பாடிய நூலாக இந்த ஐந்திணை ஐம்பது விளங்குகிறது

சங்கம் மருவிய நூல்களில் அகப் பொருளைப் பற்றி விளக்கிச் சொல்லக் கூடிய நூல்கள் ஐந்து உள்ளன. அந்த ஐந்தில் ஐந்திணை ஐம்பதும் ஒன்றாகும். மற்றும் உள்ளவை ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைநிலை என்பவையாகும். இதில் ஒவ்வொரு திணையையும், திணைக்கு பத்து என்று ஐந்திணைகளுக்கும் ஐம்பது பாடல்கள் அமைத்து பாடப்பட்டிருப்பதால் இந்த நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது.

அன்பின் அமைதியாகிய ஐந்து திணைகளுக் குரிய ஒழுக்கத்தை சொற்சுவை, பொருட்சுவை கொண்டு இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது.

கற்றவருடைய மனதை விட்டு எப்போதும் நீங்காமல் மகிழ்ச்சியை தரக் கூடிய நூலாக இந்த ஐந்திணை ஐம்பது அமைந்துள்ளது. ‘‘ஐந்திணை ஐம்பதும், ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்’’ என்று கூறப்படுவதுண்டு. அதாவது இந்த ஐந்திணை ஐம்பதைப் படிக்காதவர்கள் செந்தமிழ் இனத்தில் சேர்த்துக் கொள்ள தகுதி இல்லாதவர் என்று கூறப்பட்டு வருகிறது.

இதிலிருந்து இந்த நூலின் சிறப்பு தெரிய வருகிறது. இந்த நூலை எழுதிய ஆசிரியர் மாறன்பொறையனார் என்பவர்.

சங்க காலத்தில் தமிழர்களின் அக வாழ்க்கையை ஐந்திணைகளிலும் படம் பிடித்துக் காட்டும் மிகச் சிறந்த இலக்கியமாக ஐந்திணை ஐம்பது விளங்குகிறது.

இந்த நூலை படிக்காதவர்கள் தமிழர்களே இல்லை என்பது போல பழமொழி கூட விளங்குகிறது. அத்தகைய சிறப்புக்குரிய நூலை தமிழர்கள் அனைவரும் படித்து பயன் அடைய வேண்டும்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580144206844
Ainthinai Aimbathu

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Ainthinai Aimbathu

Related ebooks

Reviews for Ainthinai Aimbathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ainthinai Aimbathu - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    ஐந்திணை ஐம்பது

    Ainthinai Aimbathu

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. முல்லை திணை

    2. குறிஞ்சி திணை

    3. மருதம்

    4. பாலை

    5. நெய்தல்

    முன்னுரை

    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்றவை ஐந்து நிலங்களாக தமிழகத்தில் பன்னெடுங் காலமாக சிறந்து விளங்கிக் கொண்டு வருகின்றது.

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இந்த ஐந்து திணைகளையும் பாடிய நூலாக இந்த ஐந்திணை ஐம்பது விளங்குகிறது.

    சங்கம் மருவிய நூல்களில் அகப் பொருளைப் பற்றி விளக்கிச் சொல்லக் கூடிய நூல்கள் ஐந்து உள்ளன. அந்த ஐந்தில் ஐந்திணை ஐம்பதும் ஒன்றாகும்.

    மற்றும் உள்ளவை ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைநிலை என்பவையாகும்.

    தலைவனும் தலைவியும் இருத்தல் குறித்து பாடக் கூடிய திணை முல்லைத் திணையாகும். அவர்கள் இருவரும் புணர்தல் பற்றி விளக்கக் கூடிய திணை குறிஞ்சி திணையாகும்.

    காதல் கொண்ட தலைவன், தலைவி ஆகிய இருவரும் ஊடல் கொண்டிருப்பதை விளக்கக் கூடிய திணை மருதத் திணையாகும்.

    தலைவன், தலைவியும் பிரிந்திருப்பது பற்றி விளக்கிக் கூறக் கூடிய திணை நெய்தல் திணையாகும். பிரிந்து போன இருவரும் ஒருவரையொருவர் நினைத்து இரங்குவது பாலைத் திணையாகும்.

    இதில் ஒவ்வொரு திணையையும், திணைக்கு பத்து என்று ஐந்திணைகளுக்கும் ஐம்பது பாடல்கள் அமைத்து பாடப்பட்டிருப்பதால் இந்த நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது.

    அன்பின் அமைதியாகிய ஐந்து திணைகளுக் குரிய ஒழுக்கத்தை சொற்சுவை, பொருட்சுவை கொண்டு இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது.

    கற்றவருடைய மனதை விட்டு எப்போதும் நீங்காமல் மகிழ்ச்சியை தரக் கூடிய நூலாக இந்த ஐந்திணை ஐம்பது அமைந்துள்ளது.

    ‘‘ஐந்திணை ஐம்பதும், ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்’’ என்று கூறப்படுவதுண்டு. அதாவது இந்த ஐந்திணை ஐம்பதைப் படிக்காதவர்கள் செந்தமிழ் இனத்தில் சேர்த்துக் கொள்ள தகுதி இல்லாதவர் என்று கூறப்பட்டு வருகிறது.

    இதிலிருந்து இந்த நூலின் சிறப்பு தெரிய வருகிறது. இந்த நூலை எழுதிய ஆசிரியர் மாறன்பொறையனார் என்பவர்.

    இவருடைய பெயரில் வரும் மாறன் என்பது பாண்டிய மன்னனையும், பொறையன் என்பது சேர மன்னனையும் குறிக்கும்.

    இந்த நூலை எழுதிய புலவர் இவர்கள் இருவர் பெயரையும் வைத்துள்ளார். இதிலிருந்து இந்தப் புலவர் இந்த இரண்டு பேரரசர்களுடனும் தொடர்புடையவராகவோ அல்லது நட்பு கொண்டவராகவோ இருந்திருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    வேறு சிலர் இந்த புலவரின் பெயர் குறித்து வேறு ஒரு அர்த்தமும் கூறுகின்றனர். இந்த புலவரின் பெயரில் வரும் பொறையனார் என்பது இந்த புலவரின இயற்பெயர் என்றும் மாறன் என்பது இவருடைய தந்தையர் பெயர் என்றும் கூறுகிறார்கள்.

    இந்த செய்யுள் தொடர்களில் வண்புள்ளி மாறன் பொறையன் என்று பாயிரத்தில் கூறப்பட்டுள்ளதால் பொறையன் என்ற தன்னுடைய இயற்பெயருடன் மாறன் என்ற சிறப்புப் பெயரையும் இந்த புலவர் பெற்று பாண்டிய மன்னின் அரசபையில் உயர்ந்த நிலையில் இருந்திருப்பார் என்றும் சிலர் கூறுகின்றார்கள்.

    ஐந்திணை ஐம்பதில் முதலாவது செய்யுளில்  மல்லர் கடந்தான் என்றும் கடம்ப மர்த்தான் என்று வரக் கூடிய பெயர்கள் எல்லாம் மாயோன் என்று சொல்லப்படும் திருமாலின் நிறத்தையும் முருகப் பெருமானையும் குறிக்கின்றது.

    சங்க காலத்தில் தமிழர்களின் அக வாழ்க்கையை ஐந்திணைகளிலும் படம் பிடித்துக் காட்டும் மிகச் சிறந்த இலக்கியமாக ஐந்திணை ஐம்பது விளங்குகிறது.

    இந்த நூலை படிக்காதவர்கள் தமிழர்களே இல்லை என்பது போல பழமொழி கூட விளங்குகிறது. அத்தகைய சிறப்புக்குரிய நூலை தமிழர்கள் அனைவரும் படித்து பயன் அடைய வேண்டும்.

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    ஐந்திணை ஐம்பது
    மாறன் பொறையனார் அருளியது
    (காலம் - கி. பி. நான்காம் நூற்றாண்டு)
    பாயிரம்

    பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய

    வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த

    ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்

    செந்தமிழ் சேரா தவர்.

    எண்ணும் எழுத்தும் கண்களைப் போன்றது என்பது திருவள்ளுவர் பெருந்தகையின் கருத்து. இதில் எண் என்பது கணிதத்தைக் குறிக்கும். எழுத்து என்பது இலக்கியத்தைக் குறிக்கும்.

    இந்த நூலாசிரியர் மாறன் பொறையன் என்பவர் எண் என்று சொல்லப்படும் கணக்கில் மிகச் சிறந்த பேரறிஞராக விளங்கியவர்.

    மக்களுக்கு அவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1