Naanum Naanum
()
About this ebook
இவரது சில கவிதைகள் காற்றாய் மிதக்கிறது. சில கவிதைகள் பாறையாய் கனக்கிறது. எனினும் ஒவ்வொரு கவிதையிலும் மனிதநேயம் துளிர்க்கிறது. மணலில் புதையும் பாதங்களை, உப்புக்காற்றை, மீன்களை, நத்தைகளை, தன் கவிதைக் கடலில் நீந்தவிடுவதையும், நானும் நானும் என்ற இவரது முதல் கவிதைப் புத்தகம் "நான் யார்" என்ற சுமதி ராணியின் சுயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும். வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.
Read more from Salem D. Sumathi Rani
Bodhimara Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNammilirunthu Naam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naanum Naanum
Related ebooks
Sherlock Homes Jamesbondagirar Rating: 0 out of 5 stars0 ratingsUravai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyil Payanikkum Kadal Rating: 0 out of 5 stars0 ratingsNeram Nam Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalum Veeramum Rating: 0 out of 5 stars0 ratingsKavithaiyum Kattru Mara Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Saamarangal Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pootha Veli Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyatha Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratingsஉறவுகள் உயிர்ப்பிக்கும் உலகம் Rating: 0 out of 5 stars0 ratingsEn Pandigaiyin Naatkuripilirunthu Rating: 0 out of 5 stars0 ratingsVanamalli Rating: 0 out of 5 stars0 ratingsMella Thirantha Mathakugal Rating: 0 out of 5 stars0 ratingsMuganool Kavithaigal Rating: 5 out of 5 stars5/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Andru Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Theriya Poovin Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsNilavil Uravadu Rating: 0 out of 5 stars0 ratingsImai Nadanam Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyin Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Archiram Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kolvenadi Rating: 0 out of 5 stars0 ratingsVanam Vasapadum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsAmmavukku Piditha Paadal Rating: 0 out of 5 stars0 ratingsOru Muraithan Varum Rating: 0 out of 5 stars0 ratingsOrayiram Meengalum Ottrai Kokkum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Naanum Naanum
0 ratings0 reviews
Book preview
Naanum Naanum - Salem D. Sumathi Rani
https://www.pustaka.co.in
நானும் நானும்
Naanum Naanum
Author:
சேலம் தெ. சுமதி ராணி
Salem D. Sumathi Rani
For more books
https://www.pustaka.co.in//home/author/salem-d-sumathi-rani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
வாழ்த்துரை
அணிந்துரை
என்னுரை
அதிகாலைப் பயணம்
அம்மா
அப்பா!!!!
இசை
ஆனந்த யாழ்
இதயம் உடைவதில்லை
ஆசையா! அவசியமா!
உறவு
என் குருவிற்கு
உன் சாதனை உன் திறமை அல்ல
கடல்
காதல் மாயாவி
ஏன் இந்த முரண்பாடு
காதல் வாக்குமூலம்
அற்புதக் காதல்
காத்திருப்பு
காலணி
காற்றாயும் மிதக்கிறேன்; பாறையாயும் கனக்கிறேன்
குழந்தைக்கு மடல்
மனிதம்
குழந்தை காலில் கொலுசு
கண்களன்றி ஏது காதல்?
சிற்பி - பூலோக பிரம்மா
சுய மதிப்பீடு
தழும்புகள்
தனிமை இனிமையே
திருநங்கை
தாய்மை ஒன்றே அறியும்
தீபச்சுடர்
தொலைக்காட்சி
நண்பன்
நானும், நானும்
நிமிர்ந்து நில்
பயம்
நீயின்றி தான் ஏது நானும்
புத்தகம்
புன்னகை
மகிழ்ச்சி
மண்வாசம்
மரணம்
மலை
மழைத்துளி
மன்னிப்பு
முதியோர் இல்லம்
முழுமை என்றொன்று இல்லை
மௌனம்
வலி
வாழ்வில் சிறப்பிடம்
விடியல்
தலைமுறைகள் கடந்தால்
விவசாயி
ஜன்னல்
கொளுத்தும் வெயிலில்
வறண்ட மலையில்
வெடித்த பாறையில்
மலரும்
வாசமிகும் வண்ணமலராய்
என்றுமே எனக்கொரு
நாளை உண்டு!
வாழ்த்துரை
காசோலைகளால் நிரம்பட்டும்
சிட்டுக் குருவியாய் சிறகடிக்கும் வண்ணக் கவிதைகளை வாசிப்பவரின் இதய வானத்தில் பறக்க வைப்பவர் கவிஞர் தெ. சுமதிராணி.
இனிய உதயத்தில் தொடர்ந்து எழுதும் இனிய இதயத்திற்கு சொந்தக்காரர்.
அண்ணன் ஆரூர்தமிழ்நாடன் மூலம் அறிமுகமானவர் என்றாலும் தாகம் தணிக்கும் தண்ணீரைப் போல் பழகும் எவரிடத்திலும் பாசம் காட்டும் பண்பாளர். நானும் நானும் என்ற இவரது முதல் கவிதைப் புத்தகம் நான் யார்
என்ற சுமதிராணியின் சுயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இவரது சில கவிதைகள் காற்றாய் மிதக்கிறது. சில கவிதைகள் பாறையாய் கனக்கிறது. எனினும் ஒவ்வொரு கவிதையிலும் மனிதநேயம் துளிர்க்கிறது.
மணலில் புதையும் பாதங்களை, உப்புக்காற்றை, மீன்களை, நத்தைகளை, தன் கவிதைக் கடலில் நீந்தவிடும் சுமதிராணி வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். பல காத்திருப்புகளுக்கு பின்பு அவரது கவிதைகள் புத்தகம் என்னும் புத்தாடை அணிந்து நம் கைகளில் தவழ்கிறது.
அவரது மொழிநடையில் கூறினால் அவரது காத்திருப்பு கடினமானதுதான் ஓய்வற்றதுதான் என்றாலும் சுகமான எதிர்பார்ப்புகளோடு சுமதிராணியின் கனவுகளும் கவிதைகளும் ஒன்றையொன்று கைபிடித்துக் கொண்டே அவரோடு நடைபயின்று வந்திருக்கிறது. அவரது உழைப்பும் வாசிப்பும் அவரை அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்லும் என்றே நம்புகிறேன்.
வங்கிப் பணியில் கரன்சி நோட்டுகளுக்கும், கணக்கு நோட்டுகளுக்கும் மத்தியில் கவிதை நோட்டுக்களை காதலித்த சுமதிராணி தனது எழுத்துக்களின் மூலம் எண்ணற்ற வாசகர்களை பேங்க் பேலன்சாக சேர்த்து வைத்துள்ளார்.
சமூகம் மனிதனுக்கு வைத்திருக்கும் ‘செக்’குகளுக்கு தனது நேர்மையான விரல்களால் கையெழுத்திடுவதை அவரது ஒவ்வொரு கவிதையிலும் காண முடிகிறது.
இனி
கற்பனையில் மட்டுமல்ல விற்பனையிலும்
அவரது கவிதைகள் காசோலைகளால் நிரம்பட்டும்.
வளர்பிறை வாழ்த்துகள்.
அள்ளித்தரும் அன்புடன்
பாடலாசிரியர் அருண்பாரதி.
அணிந்துரை
தமிழன்னையின் தலைமகள்
பிறந்த ஒவ்வொருவரும் தாம் வாழ்ந்ததற்கான தடயத்தை ஏதோ ஒரு வடிவத்தில் இந்த பிரபஞ்சத்தில் பதித்துவிட்டுச் செல்ல வேண்டும். இலட்சியமற்ற வாழ்வும் கனவுகளற்ற எதிர்காலமும், எதிர்பார்ப்புகளற்ற நடைமுறைகளும் எந்த மனிதனையும் சரி... மனித வாழ்வையும் சரி.... முழுமைப்படுத்தாது. அவை நாள்காட்டியிலிருந்து கிழித்தெறியப்பட்ட காதிதத்தைப் போல பயனற்றுப்போகும்...
வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து பூமிப் பரப்பெங்கும் செங்கொன்றை மலர்கள் குடை பிடிக்கத் தொடங்கியிருக்கும் இந்த வசந்தகாலத்தில், தனது முதல் கவிதைத் தொகுப்போடு களமிறங்கியிருக்கிறார் என் இலக்கியச் சகோதரி சேலம் சுமதி ராணி அவர்கள்...
வங்கிப் பணியிலிருந்து