Ainthinai Ezhupathu
()
About this ebook
ஐந்திணை எழுபது என்னும் இந்த நூலை எழுதியவர் மூவாதியார் என்பவர். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நூலில் கருத்தாழ மிக்க செய்யுள்கள் பல உள்ளன.
அவற்றுள் சில இளம்பூரணார், நச்சினார்கினியர் போன்ற தமிழில் மிகச் சிறந்த உரையாசிரியர்களால் பாராட்டப்பட்டவை. இவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்.
அவர்கள் உரை எழுதும்போது இந்த நூலில் உள்ள பல்வேறு வரிகளை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
இந்த நூலில் பழைய காலத்தில் உள்ள பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பல இடங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
ஐந்திணை எழுபது என்னும் இந்த நூல் அகப்பொருளை விளக்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.
ஐந்திணைகளில் ஒவ்வொரு திணைக்கும் 14 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இந்த நூலில் 70 பாடல்கள் ஐந்திணைகளை விளக்கி உள்ளதால் இந்த நூலுக்கு ஐந்திணை எழுபது என்று பெயர் உண்டாகியுள்ளது.
இந்த நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் திணைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த நூலில் வரக்கூடிய திணைகளில் முல்லை திணையில் 25, 26 ஆகிய இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை.
அதுபோல நெய்தல் திணையில் 69, 70 ஆகிய பாடல்கள் மறைந்து போயுள்ளன. ஆக மொத்தம் 70 பாடல்களில் நான்கு பாடல்கள் குறைந்து 66 பாடல்கள் மட்டுமே இப்போது காணப்படுகிறது. ‘‘சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி வலி ஆகிப் பின்னும் பயக்கும்’’ என்ற பாடல் சான்றோர்களின் நட்பு வலிமையுடையதாகி நிலைபெற்று நிற்கும் என்று கூறுகின்றது.
இதுபோன்ற பயனுடைய பல நல்ல கருத்துக்கள் இந்நூலில் ஆங்காங்கு அமைந்துள்ளது. அவற்றைப் படித்துப் பயன்பெறுவோமா.
Read more from Azhwargal Aaivu Maiyam
Pattinapaalai Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Thirumurugatrupadai Rating: 0 out of 5 stars0 ratingsNeelakesi Rating: 0 out of 5 stars0 ratingsNaaladiyar Rating: 0 out of 5 stars0 ratingsSoolamani Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsNatrinai Rating: 0 out of 5 stars0 ratingsPuranaanuru Rating: 0 out of 5 stars0 ratingsNagakumara Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsThirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsPathitru Pathu Rating: 0 out of 5 stars0 ratingsUthayana Kumara Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsSoolamani Part – 2 Rating: 0 out of 5 stars0 ratingsInnilai Rating: 5 out of 5 stars5/5Pari Paadal Rating: 0 out of 5 stars0 ratingsNedunal Vaadai Rating: 0 out of 5 stars0 ratingsAkanaanuru Rating: 0 out of 5 stars0 ratingsAinguru Nooru Rating: 0 out of 5 stars0 ratingsMadurai Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsKai Nilai Rating: 0 out of 5 stars0 ratingsPorunaratruppadai Rating: 0 out of 5 stars0 ratingsThinai Maalai Nootraimbathu Rating: 0 out of 5 stars0 ratingsMalaipadukadam Rating: 0 out of 5 stars0 ratingsMuthumozhi Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsKar Narpathu Rating: 2 out of 5 stars2/5Thinai Mozhi Aimbathu Rating: 0 out of 5 stars0 ratingsPerumpanatrupadai Rating: 0 out of 5 stars0 ratingsKali Thogai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ainthinai Ezhupathu
Related ebooks
Natrinai Rating: 0 out of 5 stars0 ratingsAinthinai Aimbathu Rating: 0 out of 5 stars0 ratingsKai Nilai Rating: 0 out of 5 stars0 ratingsThinai Mozhi Aimbathu Rating: 0 out of 5 stars0 ratingsThinai Maalai Nootraimbathu Rating: 0 out of 5 stars0 ratingsAkanaanuru Rating: 0 out of 5 stars0 ratingsAinguru Nooru Rating: 0 out of 5 stars0 ratingsKonja Neram Konja Neram Rating: 0 out of 5 stars0 ratingsThirumalai Thiruvanthathi Rating: 0 out of 5 stars0 ratingsThirukurugoor Thiruvanthathi Rating: 0 out of 5 stars0 ratingsAadi Pattam Thedi Vithai... Rating: 0 out of 5 stars0 ratingsMalaipadukadam Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pootha Veli Rating: 0 out of 5 stars0 ratingsNee Pathi Naan Pathi Kanney Rating: 0 out of 5 stars0 ratingsKali Thogai Rating: 0 out of 5 stars0 ratingsManam Kamazhum Thirumaraigal Rating: 0 out of 5 stars0 ratingsSoolamani Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsSinthaiyil Thulirthavai Rating: 0 out of 5 stars0 ratingsThanjai Ezhilan Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsKuruthukkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Muraithan Varum Rating: 0 out of 5 stars0 ratingsBodhi Maram Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Mottu Rating: 0 out of 5 stars0 ratingsMaadevan Malarthogai Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsSoundarya... Rating: 0 out of 5 stars0 ratingsArivulaga Methai Anna Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ainthinai Ezhupathu
0 ratings0 reviews
Book preview
Ainthinai Ezhupathu - Azhwargal Aaivu Maiyam
https://www.pustaka.co.in
ஐந்திணை எழுபது
Ainthinai Ezhupathu
Author:
டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்
Dr. S. Jagathrakshakan
For more books
https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. குறிஞ்சி
2.முல்லை
4. மருதம்
5. நெய்தல்
முன்னுரை
ஐந்திணை எழுபது என்னும் இந்த நூலை எழுதியவர் மூவாதியார் என்பவர். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நூலில் கருத்தாழ மிக்க செய்யுள்கள் பல உள்ளன.
அவற்றுள் சில இளம்பூரணார், நச்சினார்கினியர் போன்ற தமிழில் மிகச் சிறந்த உரையாசிரியர்களால் பாராட்டப்பட்டவை. இவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்.
அவர்கள் உரை எழுதும்போது இந்த நூலில் உள்ள பல்வேறு வரிகளை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
இந்த நூலில் பழைய காலத்தில் உள்ள பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பல இடங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
ஐந்திணை எழுபது என்னும் இந்த நூல் அகப்பொருளை விளக்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.
ஐந்திணைகளில் ஒவ்வொரு திணைக்கும் 14 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இந்த நூலில் 70 பாடல்கள் ஐந்திணைகளை விளக்கி உள்ளதால் இந்த நூலுக்கு ஐந்திணை எழுபது என்று பெயர் உண்டாகியுள்ளது.
இந்த நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் திணைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த நூலில் வரக்கூடிய திணைகளில் முல்லை திணையில் 25, 26 ஆகிய இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை.
அதுபோல நெய்தல் திணையில் 69, 70 ஆகிய பாடல்கள் மறைந்து போயுள்ளன. ஆக மொத்தம் 70 பாடல்களில் நான்கு பாடல்கள் குறைந்து 66 பாடல்கள் மட்டுமே இப்போது காணப்படுகிறது.
‘‘சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி வலி ஆகிப் பின்னும் பயக்கும்’’ என்ற பாடல் சான்றோர்களின் நட்பு வலிமையுடையதாகி நிலைபெற்று நிற்கும் என்று கூறுகின்றது.
இதுபோன்ற பயனுடைய பல நல்ல கருத்துக்கள் இந்நூலில் ஆங்காங்கு அமைந்துள்ளது. அவற்றைப் படித்துப் பயன்பெறுவோமா.
சங்கம் மருவிய நூல்களில் அகப் பொருளைப் பற்றி விளக்கிச் சொல்லக் கூடிய நூல்கள் ஐந்து உள்ளன. அந்த ஐந்தில் ஐந்திணை ஐம்பதும் ஒன்றாகும்.
மற்றும் உள்ளவை ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைநிலை என்பவையாகும்.
தலைவனும் தலைவியும் இருத்தல் குறித்து பாடக் கூடிய திணை முல்லைத் திணையாகும். அவர்கள் இருவரும் புணர்தல் பற்றி விளக்கக் கூடிய திணை குறிஞ்சித் திணையாகும்.
காதல் கொண்ட தலைவன், தலைவி ஆகிய இருவரும் ஊடல் கொண்டிருப்பதை விளக்கக் கூடிய திணை மருதத் திணையாகும்.
தலைவன், தலைவியும் பிரிந்திருப்பது பற்றி விளக்கிக் கூறக் கூடிய திணை நெய்தல் திணையாகும். பிரிந்து போன இருவரும் ஒருவரையொருவர் நினைத்து இரங்குவது பாலைத் திணையாகும்.
இந்த ஐந்திணை எழுபது என்ற நூல் அகநூல் வரிசையில் விரிவாக தலைவன், தலைவி நிமித்தமாக சங்கம் மருவிய காலத்தில் நிலவிய கலாச்சார, பண்பாட்டின் ஒரு மிகச் சிறந்த பதிவாக விளங்குகிறது.
ஐந்திணையை விளக்கும் ஒவ்வொரு நூலும் பத்து பாடல்களிலிருந்து மிகைப்படுத்திக் கொண்டே செல்லுகின்றன. அவற்றில் ஐந்து திணைகளுக்கும் சேர்ந்து 70 பாடல்கள் பாடப்பட்டுள்ள ஐந்திணை எழுபதை அனைவரும் படித்து பயன் அடையும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்
கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு
நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் – கண்ணுதலின்
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் நலஞ்சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு.
சிவபெருமான் நெற்றிக்கண்ணுடன் மூன்று கண்களைக் கொண்ட இறைவனாகவும் தெய்வங் களில் முதலாவது இடத்தில் உள்ளவனாகவும் எண்ணி வணங்கிப் போற்றப்படுகின்றான்.
மிகவும் சிறியது அணு. இந்த உலகத்தில் அனைத்தையும் விட மிகவும் பெரியது அண்டம். அணுவாகவும், அண்டமாகவும் சிவனே விளங்கு கின்றான்.
இந்த உலகத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய யாவரின் மூலம் எதுவென்று தேடிப் பார்த்தால் அனைத்திற்கும் சிவபெருமானே மூலக் காரணமாக இருக்கின்றான்.
அன்று திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அதில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்கு அளித்து தான் நஞ்சை விரும்பி உண்டதால் கழுத்தில் நீலகண்டத்துடன் காணப்படுபவன்.
இந்த சிவபெருமான் யானையைப் போன்ற முகத்தைக் கொண்ட விநாயகப் பெருமானுக்குத் தந்தையாக விளங்குபவன். இந்த சிவனை வணங்கித் தொடங்கினால் அனைத்து காரியங்களும் நன்மை தரக் கூடியதாக இருக்கும்.
அவனே எனக்கு அனைத்துக் கலைகளையும் தந்தருள் புரிய வேண்டும்.
1. குறிஞ்சி
இடம்: மலையும் மலை சார்ந்த பகுதியும்
ஒழுக்கம் : புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
1
தோழி தலைமகனை வரைவு கடாயது
அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி கடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு)
யானிடை நின்ற புணை
தலைவனும் தலைவியும் நீண்ட காலமாக இரவு நேரங்களில் காதல் செய்து மகிழ்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
காதல் கொள்வதில் எல்லை என்பது திருமணமாகும். அந்த எல்லையைக் காணாமலேயே தலைவனும், தலைவியும் இன்பத்தின் எல்லைக்குச் சென்று விடுகிறார்கள்.
இவர்கள் இருவரும் ரகசியமாகக் காதலிப்பதும் சந்திப்பதும் சேர்ந்திருப்பதும் இதுவரை வெளி உலகத்திற்குத் தெரியவில்லை.
நிச்சயம் இந்த நிலை தொடர்ந்தால் பலரும் அவர்களைத் தூற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தலைவன் விரைந்து வந்து தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்த குறிப்பைத் தலைவனுக்கு தலைவி சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
அவரைக் கொடிகள் பூத்துக்குலுங்கும் பசுமையான சோலைக்கு தலைவனாக விளங்கக் கூடியவனே.
உன்னுடைய நாட்டில் உள்ள திணை புனங்களில் அழகு மிக்க இளமையான கவரி மான்கள் வந்து