Thinai Mozhi Aimbathu
()
About this ebook
நுண்ணிய கருத்துக்களும், எண்ணில் அடங்கா இயற்கை வர்ணனைகளும், வண்ணக் காட்சிகள் காட்டும் இயற்கையும், கண்ணையும், கருத்தையும் கவரச் செய்யும் இலக்கிய நயமும் கொண்டது திணைமொழி ஐம்பது.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்களில் சிறப்பு மிக்கவராக கருதப்படக் கூடியவர் நச்சினாகினியர். அவர் இந்த நூலில் உள்ள பாடல்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்த நூலை இயற்றிய ஆசிரியர் கண்ணஞ் சேந்தனார் என்பவர் ஆவார். இவர் சாத் தந்தையாரின் மகன் என்றும் சிலர் கூறுவார்கள். ஒரு சிலர் கார் நாற்பது எழுதிய மதுரையைச் சேர்ந்த கண்ணன் கூத்தனாரின் உடன்பிறந்த சகோதரர் என்றும் கூறுவர். இவர் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அகப் பொருள் விளக்கும் நூல்களில் ஒன்றாக திணைமொழி ஐம்பது விளங்குகிறது. இந்த நூலில் ஒரு திணைக்கு 10 பாடல் வீதம் 5 திணைகளுக்கும் சேர்த்து மொத்தம் 50 பாடல்களைக் கொண்டது.
திணைமொழி ஐம்பது என்ற பெயர் ஐந்து திணைகளுக்கும் சேர்ந்து ஐம்பது பாடல்களைக் கொண்டதால் இந்தப் பெயர் வந்தது. அனைத்து பாக்களும் வெண்பாக்களால் ஆனது.
தமிழர்களின் காதல்நெறியையும் கற்பின் நெறியையும் அறிந்து கொள்ளவும் கருத்து சுவை பெறவும் இந்த நூல் பெரிதும் உதவும்.
Read more from Azhwargal Aaivu Maiyam
Neelakesi Rating: 0 out of 5 stars0 ratingsThirumurugatrupadai Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Madurai Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsNagakumara Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsSoolamani Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsPattinapaalai Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsPari Paadal Rating: 0 out of 5 stars0 ratingsNedunal Vaadai Rating: 0 out of 5 stars0 ratingsPuranaanuru Rating: 0 out of 5 stars0 ratingsUthayana Kumara Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsThirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsMalaipadukadam Rating: 0 out of 5 stars0 ratingsThinai Maalai Nootraimbathu Rating: 0 out of 5 stars0 ratingsIniyavai Narpathu Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Paattu Rating: 0 out of 5 stars0 ratingsNaaladiyar Rating: 0 out of 5 stars0 ratingsPerumpanatrupadai Rating: 0 out of 5 stars0 ratingsNatrinai Rating: 0 out of 5 stars0 ratingsKalavazhi Narpathu Rating: 0 out of 5 stars0 ratingsSoolamani Part – 2 Rating: 0 out of 5 stars0 ratingsInnilai Rating: 5 out of 5 stars5/5Akanaanuru Rating: 0 out of 5 stars0 ratingsMullai Paattu Rating: 0 out of 5 stars0 ratingsKar Narpathu Rating: 2 out of 5 stars2/5Kai Nilai Rating: 0 out of 5 stars0 ratingsAinguru Nooru Rating: 0 out of 5 stars0 ratingsSirupanatrupadai Rating: 0 out of 5 stars0 ratingsNanmanikkatigai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thinai Mozhi Aimbathu
Related ebooks
Thinai Maalai Nootraimbathu Rating: 0 out of 5 stars0 ratingsAinthinai Ezhupathu Rating: 0 out of 5 stars0 ratingsKalanthorum Aram Rating: 0 out of 5 stars0 ratingsAkanaanuru Rating: 0 out of 5 stars0 ratingsKai Nilai Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Paattu Rating: 0 out of 5 stars0 ratingsAinguru Nooru Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsNatrinai Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pootha Veli Rating: 0 out of 5 stars0 ratingsAinthinai Aimbathu Rating: 0 out of 5 stars0 ratingsMutham Yaarudaiyathu? Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsThaaragai Rating: 0 out of 5 stars0 ratingsஅம்மும்மா சொல்லும் அமுதகதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsAmmumma Sollum Amuthakathaigal Rating: 0 out of 5 stars0 ratingsYasothara Kaaviyam Rating: 1 out of 5 stars1/5Maadevan Malarthogai Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Rating: 0 out of 5 stars0 ratingsNamam Ondre Pothume.. Rating: 0 out of 5 stars0 ratingsNaalu Vari Note Rating: 0 out of 5 stars0 ratingsDevahuti! Rating: 0 out of 5 stars0 ratingsMullai Paattu Rating: 0 out of 5 stars0 ratingsKali Thogai Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nayagi Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsNee Pathi Naan Pathi Kanney Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thinai Mozhi Aimbathu
0 ratings0 reviews
Book preview
Thinai Mozhi Aimbathu - Azhwargal Aaivu Maiyam
https://www.pustaka.co.in
திணைமொழி ஐம்பது
Thinai Mozhi Aimbathu
Author:
டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்
Dr. S. Jagathrakshakan
For more books
https://www.pustaka.co.in/home/author/ azhwargal-aaivu-maiyam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
முன்னுரை
நுண்ணிய கருத்துக்களும், எண்ணில் அடங்கா இயற்கை வர்ணனைகளும், வண்ணக் காட்சிகள் காட்டும் இயற்கையும், கண்ணையும், கருத்தையும் கவரச் செய்யும் இலக்கிய நயமும் கொண்டது திணைமொழி ஐம்பது.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்களில் சிறப்பு மிக்கவராக கருதப்படக் கூடியவர் நச்சினாகினியர். அவர் இந்த நூலில் உள்ள பாடல்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்த நூலை இயற்றிய ஆசிரியர் கண்ணஞ் சேந்தனார் என்பவர் ஆவார். இவர் சாத் தந்தையாரின் மகன் என்றும் சிலர் கூறுவார்கள். ஒரு சிலர் கார் நாற்பது எழுதிய மதுரையைச் சேர்ந்த கண்ணன் கூத்தனாரின் உடன்பிறந்த சகோதரர் என்றும் கூறுவர். இவர் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அகப் பொருள் விளக்கும் நூல்களில் ஒன்றாக திணைமொழி ஐம்பது விளங்குகிறது. இந்த நூலில் ஒரு திணைக்கு 10 பாடல் வீதம் 5 திணைகளுக்கும் சேர்த்து மொத்தம் 50 பாடல்களைக் கொண்டது.
திணைமொழி ஐம்பது என்ற பெயர் ஐந்து திணைகளுக்கும் சேர்ந்து ஐம்பது பாடல்களைக் கொண்டதால் இந்தப் பெயர் வந்தது. அனைத்து பாக்களும் வெண்பாக்களால் ஆனது.
தமிழர்களின் காதல்நெறியையும் கற்பின் நெறியையும் அறிந்து கொள்ளவும் கருத்து சுவை பெறவும் இந்த நூல் பெரிதும் உதவும்.
அன்புடன்
டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்
திணைமொழி ஐம்பது
(கண்ணன் சேந்தனார்)
1. குறிஞ்சி திணை
இடம் : மலையும் மலை சார்ந்த பகுதியும்
ஒழுக்கம் : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
1
அஞ்சி அச்சுறுத்துவது
புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்
புகைகொடுக்கப் பெற்ற புலவோர் – துகள்பொழியும்
வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா
யானை யுடைய கரம்
குறிஞ்சி நிலத்தில் காதலர்கள் இரவு நேரங்களில் சந்திப்பதும் உரையாடுவதும், சேர்ந்திருப்பதும் முக்கியமான நிமித்தங்களாகும்.
தொடர்ந்து தலைவியைக் காண்பதற்காக தலைவன் இரவு நேரங்களில் வந்து கொண்டு இருக்கின்றான்.
காதல் என்பது தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் அச்சத்துடன் சந்திக்கும் சந்திப்பாகும். இந்த சந்திப்புக்களால் மகிழ்ச்சியை விடத் துன்பம் அதிகம். எனவே, காதலின் உச்சகட்ட வெற்றி எனச் சொல்லப்படுவது திருமணமாகும்.
அவ்வாறு திருமணம் செய்வதற்கு முன்பு அச்சத்துடன் சந்திக்கும்போது காட்டு விலங்குகளின் துன்பமும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளின் துன்பமும் அதிகம்.
தலைவன்தான் தலைவியை சந்திப்பதற்காக வெகுதூரம் நடந்து வருவான். சந்திப்புக்குப் பின் அவன் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
அப்போது அவனுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று தலைவி அஞ்சுகிறாள். தலைவியின் அச்சத்தை தலைவனுக்குத் தெரிவிக்கும் விதமாகவே இந்த பாடல் அமைந்துள்ளது.
மணம் வீசக் கூடிய மரமாக விளங்குவது சந்தன மரம். அதனை வெட்டி எறிந்து நெருப்பு வைத்து புகைய செய்வார்கள்.
அவ்வாறு செய்யும் இடத்தில் தேவர்கள் பூத்தாதுக்களை அள்ளி மழைத்துளிகளைப் போல பொழிய செய்வார்கள்.
தேவர்களால் பூமாரி பொழிய வைக்கக் கூடிய வளமான பகுதியாக மலைநாடு விளங்குகிறது. அத்தகைய மலை நாட்டில் தலைவனாக விளங்கக் கூடியவன் நீ.
நீ கடந்து வரும் பாதைகள் ஆபத்து நிறைந்தவைகளாக உள்ளன. காட்டு யானைகள் இரவு நேரங்களில் உலவிக் கொண்டு திரியக் கூடிய பகுதிகளாகும்.
இரவு நேரங்களில் அந்த வழியில் நீ வரவேண்டாம். அதனால் எப்போதும் தலைவியுடன் நிரந்தரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த வழியாகும்.
2
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது
கணமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ
புனமும் அடங்கின காப்பு
தலைவி தோழியுடன் இருக்கும்போது தலைவனிடம் சென்று சொல்லுமாறு சில தகவல்களை சொல்லுவாள்.
காதலர்கள் இருவரும் தனியே சந்திக்கும்போது அவர்களுக்கு இடையே அதிகமான காதல் மொழிகள் தான் பரிமாறப்படும். யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் சந்திக்கும்போது அவர்கள் தங்கள் கவனத்தை வேறு திசையில் செல்வதை விரும்பமாட்டார்கள்.
இன்றைய காதலர்களைப் போல தொடக்கத் திலேயே ஒருவருக்கு ஒருவர் புத்திமதிகளைச் சொல்லிக்