Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilakkam Please Vivek
Vilakkam Please Vivek
Vilakkam Please Vivek
Ebook219 pages2 hours

Vilakkam Please Vivek

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vilakkam Please Vivek

Read more from Rajeshkumar

Related to Vilakkam Please Vivek

Related ebooks

Reviews for Vilakkam Please Vivek

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilakkam Please Vivek - Rajeshkumar

    பதில்கள்

    விளக்கம் ப்ளீஸ் விவேக்

    (3ஆம் பாகம்)

    * தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் அழகு சாதனப் பொருள்களை எந்த அளவுக்கு நம்பி உபயோகிக்கலாம்?

    (டி.என்.ராஜவேலு, நல்லூர்)

    ** டாக்டர்களிடம் நான் பேசிப் பார்த்த அளவில் எல்லாமே கெமிக்கல்ஸ்! பத்து பேர் உபயோகித்தால் அதில் நிச்சயம் இரண்டு பேர் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற உண்மை வெளிப்பட்டது. டாக்டர்களின் இந்த கூற்றை உறுதிப்படுத்துவதுபோல் ஆஸ்திரேலியாவில் ஒரு சம்பவம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தற்போது ‘அனார்க்கியா நெர்வோஸா’ என்கிற ஒருவித நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இந்த நோய் சிறுமிகளையும் இளம் பெண்களையும்தான் தாக்கியுள்ளது. நோய் தாக்கப்பட்ட பெண்கள் தங்கள் தோற்றப் பொலிவை ஆறு மாதத்திற்குள் இழந்து விடுகிறார்கள். பிறகு உடல் அழகை மீண்டும் பெற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்று கூறப்படுகிறது. சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடப்படும் அழகு சாதன விளம்பரங்களைப் பார்த்துவிட்டு அவற்றைப் பயன்படுத்துவதால் இந்த ‘அனார்க்கியா நெர்வோஸா’ நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    * ஆபரேஷன் செய்யும்போது நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருக்க டாக்டர்கள் அனஸ்தீஷியா கொடுக்கிறார்கள். எல்லா வகை ஆபரேஷன்களுக்கும் ஒரே மாதிரியான மயக்க மருந்தைத்தான் தருகிறார்களா...? இல்லை அதிலும் வேறுபாடு உண்டா விவேக் ஸார்...?

    (வெ.காமாட்சிநாதன், கண்டியூர்)

    ** நோயாளி ஒருவர்க்கு அனஸ்தீஷியா கொடுக்கப்படும் பொழுது, மயக்க மருந்து, உடம்பிலிருந்து நரம்புகள் மூலமாக மூளைக்கு அனுப்பும் பல்வேறு வகையான கட்டளைகளை சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கின்றது. இதனால் டாக்டர்கள் ஆபரேஷன் செய்யும்போது நோயாளிக்கு வலி தெரிவது இல்லை. ஆபரேஷனின் தன்மையைப் பொறுத்து அனஸ்தீஷியா கொடுக்கப்படுகிறது. இதில் மூன்று முக்கியமான வகைகள் உண்டு.

    1) லோகல் அனஸ்தடிக்ஸ் (LOCAL ANASTHETICS): சிறிய ஆபரேஷன்களுக்கு ஊசி மூலம் மயக்க மருந்துகளை தோல் வழியாக உடம்புக்குள் செலுத்தி, குறிப்பிட்ட உறுப்புகளை மட்டும் மரக்க வைத்து செய்யப்படுவது. மயக்க மருந்தின் பெயர் ப்ரோகைன்.

    2) சர்பேஸ் அனஸ்தடிக்ஸ் (SURFACE ANASTHETICS): தோலின் மேற்பரப்பில் செய்யப்படும் ஆபரேஷன்களின் போது டாக்டர்கள் நோயாளியின் தோல் பகுதியில் ஒருவகையான ஜெல்லைப் பூசுவார்கள். உடனே அந்தப் பகுதி மரத்துப் போகும். பிறகு அந்தப் பகுதியில் ஆபரேஷன் செய்வார்கள். அந்த ஜெல்லின் பெயர் லிக்னோகைன்.

    3) ஸ்பைனல் அனஸ்தீஷியா (SPINAL ANASTHESIA): சிக்கலான மிகப்பெரிய ஆபரேஷன்களுக்கும், சிசேரியன் பிரசவம் போன்றவற்றுக்கும் இந்த வகை அனஸ்தீஷியா உபயோகப்படுகிறது. இந்த வகை அனஸ்தீஷியாவின் போது நோயாளியின் முதுகுத் தண்டுவடத்தில் மயக்க ஊசி மருந்து போடப்படுகிறது.

    * வேற்று கிரகத்தில் இருந்து பூமியைப் பார்த்தால் பூமி என்ன நிறத்தில் இருக்கும்...?

    (பி.எல்.மணியன், காஞ்சிபுரம்)

    ** கடல்கள் இருப்பதால் எழுபது சதவீதம் நீல நிறத்திலும் மலைகளின் மேல் மேகங்கள் தவழுவதால் முப்பது சதவீதம் வெண்மை நிறத்திலும் இருக்கும். இதையே விண்வெளி வீரர்களும் தங்கள் பேட்டிகளில் சொல்லியுள்ளார்கள்.

    * இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முறைப்படி அனுமதி பெற வேண்டுமா?

    (எம்.சாம்பசிவம், கும்பகோணம்)

    ** கண்டிப்பாக! எவரெஸ்ட் சிகரத்தில் நினைத்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் ஏறிவிட முடியாது. முதலில் இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். பின் நேபாள அரசிடம் அனுமதி பெற வேண்டும். அது மட்டும் இல்லை; எந்த சிகரத்தில் ஏற விரும்புகிறார்களோ அந்தச் சிகரத்துக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வரியைச் செலுத்த வேண்டும். மேலே போகப் போக இந்த வரி அதிகமாகும்.

    * ‘நெதர்லாந்து’, ‘ஹாலந்து’ - இந்த இரண்டும் ஒன்றுதானா? இல்லை வெவ்வேறு நாடுகளா...?

    (எஸ். கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை)

    ** ஒன்றேதான்! உங்களை உங்கள் நண்பர்கள் ‘கோபி’ என்று கூப்பிடுவதுபோல் அந்த நாட்டின் டச்சுக்காரர்கள் நெதர்லாந்தை சுருக்கி ஹாலந்து என்று கூப்பிடுகிறார்கள். ஹாலந்து ஒரு வித்தியாசமான பூமியமைப்பைக் கொண்ட நாடு. பூமி உருண்டையில் இந்த நாடு கடல் மட்டத்தைக் காட்டிலும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. கடல் லேசாய் சீறினாலும் போதும்- மொத்த நாடும் தண்ணீரில் மூழ்கிவிடும். ஆனால் டச்சுக்காரர்கள் அதற்கெல்லாம் பயப்படாமல் கடல் நீர் உள்ளே வராதபடிக்கு கடற்கரையோரமாய் சுவர்களைக் கட்டி கடலை ஒரு நாய் மாதிரி கட்டிப் போட்டு வைத்து இருக்கிறார்கள். ரோட்டில் கார் போகும்போது பக்கத்திலேயே பத்தடி உயர சுவரின் மேல் கடல் நீர் ததும்பிக் கொண்டிருக்குமாம்.

    போனஸ் நியூஸ்: சுற்றிலும் கடல் நீர் நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தாலும் ஹாலந்து மக்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலங்களைத் தேர்ந்து எடுத்து அவைகளில் கடல்நீர் உட்புகாத படிக்கு சுவர்கள் கட்டி செழிப்புள்ள விளைநிலங்களாய் மாற்றியுள்ளார்கள். இயற்கை பயமுறுத்திக் கொண்டிருந்தாலும் ஹாலந்து ஒரு அழகான நாடு.

    * டென்னீஸ் விளையாட்டு வீரர்களுக்கு, போட்டியில் வெற்றி பெற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும்...? (அதாவது விம்பிள்டன் போட்டியில்)

    (பா.திருமலை, அடையாறு, சென்னை-20)

    ** ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 4 கோடியே 75 லட்சம் கிடைக்கும். மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 4 கோடியே 50 லட்சம் கொடுக்கப்படும். ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு 1 கோடியே 50 லட்சமும் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு 1 கோடியே 25 லட்சமும் பரிசுப் பணமாகக் கிடைக்கும்.

    போனஸ் நியூஸ்: ஆடவர் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றவர்களுக்கு ஒன்றரையடி உயரமுள்ள வெள்ளிக் கோப்பை பரிசாக அளிக்கப்படுகிறது. 1887-ம் வருடத்திலிருந்து வழங்கப்படும் இந்தக் கோப்பையின் மேல் ’THE ALL ENGLAND LAWN TENNIS CLUB SINGLE HANDED CHAMPION OF THE WORLD’ என்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும். மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பட்டம் வென்றவர்களுக்கு ’VENUS ROSE WATER DISC’ என்றழைக்கப்படும் வெள்ளித் தட்டு வழங்கப்படும்.

    * வாகனம் ஓட்டுபவர்கள் குடிபோதையில் உள்ளார்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க போலீஸார் ஒரு கருவியைக் கையில் வைத்துக் கொண்டு ஊதச் சொல்கிறார்கள். அந்தக் கருவிக்கு என்ன பெயர்?

    (டி.அரசு, தர்மபுரி-2)

    ** வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய போலீஸார்க்கு BREATHING ANALYSER (ப்ரீத்திங் அனலைசர்) என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வரும் நபரை அச்சாதனம் முன் வாயை ஊதச் செய்து கண்டுபிடிக்கின்றனர். அதே இடத்தில் அபராதம் வசூலித்தபின் எச்சரித்து விடுவிக்கின்றனர்.

    போனஸ் நியூஸ்: இந்த ப்ரீத்திங் அனலைஸர் கருவி வருவதற்கு முன்பு போலீஸார் ஒரு வாகன ஓட்டி குடித்துள்ளாரா இல்லையா என்பதைக் கண்டறிய வாயை ஊதச் செய்து வெளிப்படும் மது நாற்றத்தை வைத்து அந்த நபர் குடித்துள்ளார் என்று முடிவு செய்த பிறகு அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டாக்டரிடம் சான்று பெற்று அதன் பிறகே அபராதம் வசூலித்து வந்தனர்.

    * ஹார்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாதா விவேக் ஸார்...?

    (ஜே.அருள்குமரன், ஈரோடு-1)

    ** உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், பருமனாக இருப்போர், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சிகரெட் அதிகமாக புகைப்போர் - இவர்களுக்கெல்லாம் திடீரென்று ‘ஹார்ட் அட்டாக்’ வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஹார்ட் அட்டாக் என்பது திடீரென்று ஏற்படுவது. இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் வகையில் எந்த ஒரு ஸ்கேன் கருவியும் சென்ற வருடம் வரையிலும் இல்லாமல் இருந்தது. இப்போது அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. பழைய ஸ்கேன், இருதயத்தை 16 துண்டாக ஸ்கேன் செய்து காட்டும். அப்புறம் 32 துண்டாக ஸ்கேன் செய்து காட்டும் ஸ்கேன் உபயோகத்தில் இருந்தது. இப்போது புதிதாய் வந்துள்ள ஸ்கேன் இருதயத்தை 64 துண்டுகளாக பிரித்து துல்லியமாக படம் பிடித்துக் காட்டும். எல்லாமே கம்ப்யூட்டர் உதவியால் நடப்பது. எங்கே அடைப்பு உள்ளது.... எங்கே கால்சியம் இருக்கிறது... வால்வு எப்படி வேலை செய்கிறது... இருதயத்துடிப்பு இயல்பாக உள்ளதா என்பதை இந்த ஸ்கேன் கருவி துல்லியமாய் சொல்லி விடுகிறது. இதுவரை இருக்கும் இருதய சோதனை மெஷின்களைப் போல் இல்லாமல் முழுமையான, துல்லியமான ஆஞ்சியோ மெஷின் இது. அமெரிக்கா உட்பட பல பணக்கார நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்த சாதனம் இப்போது இந்தியாவுக்கு வந்துவிட்டது. இதன் பெயர் 64 ஸ்லைஸ் சிடி. ஆஞ்சியோ.

    போனஸ் நியூஸ்: இந்த மிஷின் இருதயத்தை துல்லியமாய் ஸ்கேன் எடுத்து பார்த்து விடுவதால் ஒருவர்க்கு ஹார்ட் அட்டாக் வருமா இல்லையா என்பதை உறுதியாய் சொல்லிவிடலாம். இதற்கு மருத்துவமனையில் அட்மிட்டாவதோ... மயக்க மருந்து கொடுப்பதோ தேவையில்லை. இருதயம் தவிர அடி வயிறு, மூளை, எலும்பு, மூட்டுகள், நுரையீரல் போன்ற பகுதிகளில் ஸ்கேன் எடுத்து சோதனை செய்யவும் இந்த 64 ஸ்லைஸ் சிடி. ஆஞ்சியோ மெஷின் உபயோகப்படும்.

    * வாயு

    Enjoying the preview?
    Page 1 of 1