Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adimai Rajyam
Adimai Rajyam
Adimai Rajyam
Ebook82 pages43 minutes

Adimai Rajyam

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

பகல் வெளிச்சத்தில் அபார அழகாய்த் தெரிந்த ஒவ்வொன்றும் இப்போது பிசாசு பிசாசாக என்னைச் சுற்றி நிற்பதாகத் தோன்றியது. ராத்திரி நேரத்தின் ரீங்காரம் எட்டு திக்கிலிருந்தும் வந்துகொண்டிருந்தது. ஆந்தை ஒன்று எங்கிருந்தோ ழ்ழ்க், ழ்ழ்க் என்று குரல் கொடுத்தது. படபடவென்ற சத்தத்துடன் வௌவால்கள் பறந்துபோயின. பயம் காட்டும் சினிமாவின் ரீரெக்கார்டிங் போல, எத்தனைவித ஒலிகள் என்னை பயமுறுத்த? என்னவாக இருந்தாலும் சரி, இந்தக் காட்டுப் பகுதியை உடனே தாண்டியாக வேண்டும்.. உடனே.. டார்ச்சை எடுத்துக்கொண்டு, அது காட்டிய வெளிச்சத்தைத் தொடர்ந்தேன். ஒற்றைப் பாதையில் வேகமாக ஓடினேன். சில மீட்டர்கள் ஓடியிருப்பேன். செடிகளில் சரசர என்று ஓர் அசைவு. ர்ர்ற்ற்ர்ர்ற்ற்.. ப்ஹ்ர்ர்ஹ்ர்ர்ஹ்ர்ர்.. என்று என்னென்னவோ ஒலிகள் நான்கு புறமும் என்னை சூழ்ந்துவிட்டன.. நகராமல் ஆணியடித்தாற்போல் நின்றேன். கண்களைச் சுழலவிட்டேன். ஈயின் சிறகுகளைப்போல இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. பதறிப் பார்த்தேன். உறைந்தேன். நாய்கள், அதே வேட்டை நாய்கள். பிரவுன் நிற உடம்புடன், உக்கிரமான பார்வைகளுடன், பாய்வதற்குத் தயாரான கால்களுடன் என் கழுத்தைக் காதலுடன் பார்த்தன. ஆசை ஆசையாகக் காதலியைச் சந்திக்கச் சென்ற இடத்தில் இப்படி நீங்கள் சிறைப்பட்டு மாட்டியிருக்கிறீர்களா? என்னுடைய திடுக் திடுக் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தக் கதை..

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580102405988
Adimai Rajyam

Read more from Subha

Related to Adimai Rajyam

Related ebooks

Related categories

Reviews for Adimai Rajyam

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adimai Rajyam - Subha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அடிமை ராஜ்யம்

    Adimai Rajyam

    Author:

    சுபா

    Subha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/subha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 1

    சூரியன் பூமிக்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தான்.

    முற்பகலின் வெப்ப இழைகளால் புல்தரையை சூடேற்றியிருந்தான்.

    அந்தப் பழைய கார் ஒரு குலுக்கலுடன் நிறுத்தத்துக்கு வந்தது. பிரேக் அடித்தபோது அதன் பற்பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி, உராய்ந்து, இடித்து எழுப்பிய ரம்ப்ளிங் ஓய்ந்து, டிரைவர் என்னைப் பார்த்தான்.

    இறங்கு, இதற்குமேல் வண்டி போகாது என்றான்.

    பெயர்ந்துவிடும் போலிருந்த அதன் கதவை கவனமாகத் திறந்து இறங்கினேன். காரின் வழுக்கையான சக்கரங்கள் தேய்ந்து எழுப்பிய தூசுத் திரைகளினூடே ஒன்றிரண்டு காய்ந்த சருகுகளும் மிதந்து இறங்கின.

    என் தோள்பையை சுமந்து, டிரைவருக்குப் பேசிய பணத்தைக் கொடுத்தேன்.

    கொஞ்சம் வேகமாக நட... இருட்டு வருவதற்குள் போய்விடுவது புத்திசாலித்தனம் என்றான்.

    இன்னும் நடுப்பகல்கூட ஆகவில்லை. இருட்டுவதற்குள் போவதற்கு என்ன பிரச்சனை? கையசைத்து விடை கொடுத்தேன். கார் பெட்ரோல் புகையை என்மீது உமிழ்ந்துவிட்டு, கடகடத்து நகர்ந்தது.

    தனிமையானேன்.

    சூழ்ந்திருந்த அத்தனையும் பிரமிப்பூட்டும் அழகாக, பரவசமூட்டும் அம்சங்களாக இருந்தன. நூற்றுக்கணக்கான கசந்த வாசனைகள் காற்றில் மிதந்து வந்தன. கண் பார்க்கும் தூரம்வரை பசுமை. தாழ்வான செடிகளினூடே தெரிந்த பாதை இரண்டுபேர் நடக்கக்கூடிய அகலமிருந்தது. புல்தரையின் வகிடு போலிருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் என் ரகசியப் பயணத்தைத் துவங்கினேன்.

    கார் கிளப்பிய தூசை காற்று நல்லவேளை வேறு திசையில் விரட்டியது. மரங்களிலிருந்து சில குரங்குகள் என்னை சந்தேகத்துடன் பார்த்தன. என் வரவு பிடிக்காத ஒரு குரங்கு உதடுகளை விலக்கி பற்களால் மிரட்டியது. பட்சிகள் என்னை கவனிக்காமல் பறந்தன. கிழித்துப் பறக்கவிட்ட காகிதங்கள் போல பட்டாம்பூச்சிகள் பூக்களின்மீது மிதந்தன.

    உப்பு மூட்டைக் குழந்தை போல தோள்பையை முதுகில் சுமந்து நடந்தேன்.

    இன்னும் சில கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். வாகனங்களுக்கு பாதை இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது.

    ‘இந்தப் பயணம் தேவையா? சந்தியா என்னைப் பார்த்ததும் மலர்வாளா, மிரள்வாளா?’

    என் மூக்கில் மோதிய பட்டாம்பூச்சி பதறி விலகியது. விசில் காற்றை உதடுகளுக்கிடையில் அவிழ்த்தேன். முறைத்துப் பார்த்த அணிலுக்கு காற்றில் முத்தம் கொடுத்தேன்.

    ஒற்றையடிப் பாதையில் புல்லும், சிறு செடிகளும் மூடியிருந்தன. அடிக்கடி நடமாட்டம் இல்லை போலும். இன்னும் சில மீட்டர்கள் கடந்ததும் நசிந்து போன ஒரு வேலி கவிழ்ந்திருக்க, இற்றுப்போன ஒரு கேட் பார்வையில் பட்டது.

    பெயிண்ட் சாயம் போன போர்டு – ‘இது தனியார் இடம், உத்தரவின்றி பிரவேசிக்காதே!’ என்று எச்சரித்தது.

    காவலுக்கு வாட்ச்மேன் யாரும் இல்லாததால் எச்சரிக்கையை மீறினேன். கேட் சற்று ஒருக்களித்திருந்தது. என் மெல்லிய உடம்பு நுழைய இடம் கொடுத்தது.

    மீண்டும் பசுமை. குரங்குகள், அணில்கள், பட்சிகள்! கலைந்துபோன ஒற்றையடிப் பாதை.

    முட்செடிகள் உடையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தன. சில தைரிய முட்கள் என் முழங்கையையோ, ஆடு சதையையோ கீறின. வேகம் குறைத்தன. புற்கள் வளமாக வளர்ந்திருந்தன. வினோதக் கதம்ப வாசம் சூழ்ந்தது. சலசல என்று ஓசையுடன் நீர்க்கோடு ஒன்று பூமியில் கீறி ஓடியது. ‘குடிநீரா, சாக்கடையா?’

    நான் தேடி வந்த கட்டிடம் கண்ணில் படவேயில்லை. இன்னும் எத்தனை மரங்களைக் கடக்க வேண்டும்? மிருதுவான பூமி கோரைப் புற்களின் நடுவே ஒளிந்திருக்க, கையால் விலக்கி விலக்கி நடந்தேன்.

    சில பாராக்களில் சொல்லிவிட்ட இந்தப் பயணம் கிட்டத்தட்ட இரண்டு மணி

    Enjoying the preview?
    Page 1 of 1