Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaloora Karaigal
Kadaloora Karaigal
Kadaloora Karaigal
Ebook57 pages21 minutes

Kadaloora Karaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிதா - நந்தகுமார் திருமணம் இவர்களின் விருப்பமின்றி முடிந்தது. ஏன் தனக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை செய்துக் கொள்கிறார்கள். இவர்கள் வாழ்வில் என்ன நடந்தது? இதற்குப் பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? வாங்க கடலோர கரைகளில் பயணிக்கலாம்...>
Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580123903898
Kadaloora Karaigal

Read more from Indhumathi

Related authors

Related to Kadaloora Karaigal

Related ebooks

Reviews for Kadaloora Karaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaloora Karaigal - Indhumathi

    http://www. pustaka.co.in

    கடலோரக் கரைகள்

    Kadaloora Karaigal

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http: //www. pustaka. co. in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கட்டிலில் மல்லாந்து படுத்து ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தாள், கவிதா. வானம் இருண்டு கிடந்தது. மழை வருவதற்கான அறிகுறி தெரிந்தது. ஜரிகைப் பொடிகளாக ஒட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எதுவுமில்லை. யாரோ பெரிதாய் ஒரு கறுப்புப் போர்வையை இழுத்துப் போர்த்துவிட்டுப் போன மாதிரி கிடந்தது. நடுவில் கிராஃப் கோடுகள் மாதிரி மின்னல் வெட்டியது. சட்டென்று நினைத்துக் கொண்டாற்போல் சடசடவென்று தூற்றலாக விழ ஆரம்பித்தது.

    கவிதாவின் உதடுகளில் சின்னச் சிரிப்பாக ஒன்று எட்டிப் பார்த்தது, இந்த மழைக்குத்தான் எத்தனை சக்தி என்று நினைத்துக் கொண்டாள். மனசும் உடம்பும் எப்படிக் குளிர்ந்து போகிறது!

    இதில் நனைந்துகொண்டே நடக்க வேண்டும். நிமிர்ந்து பார்த்து முகத்தில் விழுகிற தூற்றலைச் சின்னச் சினுங்கலாகச் சிணுங்கிக்கொண்டே ரசிக்க வேண்டும். ஏரியில் படகு வலிக்க வேண்டும். உடம்பு முழுதும் நனைய உடை தொப்பமாக - நடக்க முடியாமல் கால் தடுக்க...

    ஆனால் அதெல்லாம் இப்போது முடியாது. அதெல்லாம் கொடைக்கானலோடு முடிந்துபோன விஷயங்கள். அந்த போர்டிங் ஸ்கூலோடு மறந்துபோன விஷயங்கள், ராகேஷோடு ஓய்ந்துபோன,

    ராகேஷ்...!

    சட்டென்று உடம்பு சிலிர்த்தது. மனசுக்குள்ளும் அதே சிலிர்ப்பு ஓட ஜன்னல் கர்ட்டனை இழுத்துவிட்டாள் தூற்றல் சத்தம் கேட்காமல் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும்போல் தோன்றியது. கர்ட்டனை இழுத்து விடலாம். காதைப் பொத்திக் கொள்ளலாம். ஆனால், மனசு...? அதை என்ன செய்ய முடியும்? எப்படி ஓயச் செய்ய முடியும்? ஒருவேளை ராகேஷ் மாதிரி...

    ‘ராகேஷ், ராகேஷ்... ஹெல் வித் யூ...! ’

    ‘உன்னை ஏன் என்னால் மறக்க முடியவில்லை? நீ ஏன் என் மனசுக்குள் ஒட்டிக்கொண்டு என்னை இப்படி ஹிம்சை பண்ணுகிறாய், நோ... ஐ மஸ்ட் ஃபர்கெட் யூ. உன்னை நான் மறக்கப் போகிறேன், அடியோடு, ஒரே வழியாய்... முடியுமா...? முடிய வேண்டும்... ’

    அவள் சட்டென்று திரும்பி மணி பார்த்தாள். ஒன்று பத்து. வழக்கப்படி இன்றும் நந்தகுமார் வரவில்லை. இனிமேல் வரமாட்டான். காலையில் நேராக நர்சிங் ஹோமிற்குப்போய் இஷ்டமிருந்தால் ராத்திரி வருவான்.

    Enjoying the preview?
    Page 1 of 1