Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatril Kalaiyatha Mehangal
Kaatril Kalaiyatha Mehangal
Kaatril Kalaiyatha Mehangal
Ebook115 pages46 minutes

Kaatril Kalaiyatha Mehangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580115705096
Kaatril Kalaiyatha Mehangal

Read more from Lakshmi Rajarathnam

Related to Kaatril Kalaiyatha Mehangal

Related ebooks

Reviews for Kaatril Kalaiyatha Mehangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatril Kalaiyatha Mehangal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    காற்றில் கலையாத மேகங்கள்

    Kaatril Kalaiyatha Mehangal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அந்த வீட்டினுள் நுழைந்தார் கனகசபை. கையில் அல்வா, பாதாம் அல்வா என்று இனிப்பு பெட்டிகள். மணக்கும் மல்லிகைப் பூ நாலு முழம். கையில் உள்ள எக்ஸிக்யூடிவ் பேக்கில் அன்பளிப்பான தங்க நெக்லஸ் பெட்டி. ஹாலில் ஒருவரும் இல்லை. ஆனால் சன்னமாகக் கசிந்து வரும் வயலின் இசை துவிஜாவந்தி ராகத்தில் தவழ்ந்து. ஹாலை நிரப்பியது.

    அந்த மென்மையான இசை உள்ளத்தைக் கிளறி அவரைத் தாலாட்டியது.

    வதனா... வதனா... மெல்லக் கூப்பிட்டார். அழுத்திக் கூப்பிட்டால் பெயர் உடைந்து விடுமோ என்ற பயம்.

    அவர் குரல் எட்ட தலையில் பூச்சரங்களை வளைத்து வைத்து ஹேர்பின்னைச் செருகியவாறே ஓடி வந்தாள் வதனா. அழுத்தமான மெரூன் வண்ண மைசூர் சில்க் புடவை அவள் உடலைத் தழுவி இருந்தது. கருப்பு பார்டரில் போட்ட சரிகை எழிலை எடுத்துக் காட்டியது. அதுவும் முதல் நாளே பத்து கடைகள் ஏறி இறங்கி அவர் வாங்கி வந்த புடவைதான்.

    வாங்க, என்னங்க இங்கேயே தங்கிட்டீங்க. உள்ளார வர வேண்டியது தானே? என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் சோபாவில் உட்கார வைத்தாள்.

    நெருக்கமாக உட்கார்ந்து தோளைத் தழுவினாள். தலையலங்காரம் கலையாமல் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தன் மேல் பீய்ச்சிக் கொண்டிருந்த பெர்ப்யூம் வாசனையும், தலையில் சூட்டிக் கொண்டிருந்த மல்லிகை மணமும் அவரைக் கிறங்க வைத்தது. பூவையும், அல்வா பொட்டலத்தையும் அவளிடம் கொடுத்தார்.

    நிதானமாக எக்ஸிக்யூடிவ் பேக்கைத் திறந்தார். நெக்லஸ் பெட்டியை எடுத்து அவள் கையில் கொடுத்தார். ஆதவனைக் கண்ட தாமரையாக முகம் மலர்ந்தது.

    என்னங்க இது?

    திறந்துதான் பாரேன். நேத்துப் புடவை வாங்கறப்ப என்ன சொன்னே? இதுக்கு மேட்சிங்கா நெக்லஸ் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னீல்ல?

    பெட்டியைத் திறக்காமலேயே அவள் முகத்தோடு முகம் வைத்து இழைத்தாள். என் ராஜா, என் கண்ணாளன் என்றெல்லாம் வார்த்தைகள் வந்து விழுந்தன.

    தொறந்து பாருடா.

    அவள் பெட்டியைத் திறந்தாள். அழுத்தமான ரூபியில் ஆங்காங்கே வைரங்கள் மின்னின.

    வாவ்... பெண்டாஸ்டிக்... ரொம்ப விலை இருக்கும் போல இருக்கே?

    அவர் அவளோடு தோளோடு சேர்த்துக் கையைப் போட்டு வளைத்துக் கொண்டார்.

    உனக்கு அன்பளிப்பாத் தர விலையைப் பார்க்க முடியுமா?

    நீங்களே போட்டு விடுங்க.

    அவர் நெக்லஸைப் போட்டு விட்ட பொழுது மனக் கண்களில் மனைவி நிழலாட... ச்...ச்... வேண்டாத நினைவு... மனசாட்சி இல்லாமல் நினைவுகளை வீசி எறியக் குப்பைத் தொட்டிகளைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. ஒன்றை அடைய இன்னொன்றைத் துறப்பது அவரைப் பொறுத்த வரை நடைமுறை சாத்தியம்தான். தன்னுடைய ஆண்மையை வதனாவின் காலடியில் சமர்ப்பிக்கத் துணிந்த பின்பு மனசாட்சியாவது இன்னொன்றாவது...

    இருங்க ப்ரெஷ் ஆப்பிள் ஜூஸ் கொண்டு வரேன். மானாகத் துள்ளி ஓடினாள்.

    சினிமாவின் துணை நடிகையான அவள் க்ரூப் டான்ஸ்க்காக ஒத்திகை பார்த்துப் பார்த்து உடம்பு வில்லாக வளைந்தது. அதிக சதை போடாமல் உடம்பை சிக்கென்று வைத்துக் கொண்டிருந்தாள். கண்களை மயக்க உடம்புதானே மூலதனம்? மயங்கியவர் கனகசபை. வதனா தட்டில் சமோஸா, அல்வா, பூரி என்று வைத்து ஆப்பிள் ஜூஸோடு வந்தாள். களைப்பா வந்திருப்பீங்க, சாப்பிடுங்க.

    நாற்பத்தி இரண்டு வயசான அவர் மனத்தில் காதல் உணர்வு வெள்ளமாகப் பெருகியது. அல்வாவை எடுத்து அவள் வாயில் ஊட்ட, அவள் இவர் வாயில் ஊட்ட... ஆறு மணிக்குக் கேக் வெட்டலாம்.

    யாரையாவது கூப்பிட்டிருக்கியா என்று கேட்டார்.

    ரெண்டு மூணு ஃப்ரண்ட்ஸ் வருவாங்க என்றவளை இடைமறித்தார்.

    எதுக்கு நான் வரப்ப அவங்களைக் கூப்பிட்டுகிட்டு... உனக்கும் எனக்கும் நடுவுல யாரும் வரக்கூடாது கண்ணம்மா.

    அவள் மோகனமாகச் சிரித்தாள்.

    என் பர்த்டேனு தெரிஞ்சவங்க. இன்விடேஷன் இல்லாமலே ஆஜராரவங்க. சர்ட்டன் திங்ஸ், கான்ட் அவாய்ட் கனகு என்றாள்.

    என் சொன்னே?

    சில பேர்களைத் தவிர்க்க முடியாதுனு சொன்னேன்.

    அது இல்ல... எம் பேரை எப்படிக் கூப்பிட்டே?

    அவள் முகம் ரெட் ரோஜாவாகச் சிவந்தது.

    ஏன் கேட்கிறீங்க?

    எனக்குப் பிடிச்சது... அதுதான் எப்படி கூப்பிட்டேனுட்டு இன்னொரு வாட்டி கேட்கணும்.

    அவள் மெல்லப் புன்சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள். பூவை மொய்க்கும் வண்டாக அவரின் கண்கள் அவள் முகத்தையே மொய்த்தது. அவளின் கரம் அவர் கரத்தை வருடியது. கண்ணிமைகள் தாழ்ந்திருந்தன. நீல விழிகள் என்று இமைகள் நீண்டிருந்தன. செப்பு இதழ்களுக்குப் பொருந்தும் வண்ணமாக உதட்டுப் பூச்சு... சின்ன நுங்கு முகவாய்... செப்பு வாய் திறந்தால் முல்லைப் பற்கள் கோர்த்து வைத்த முத்துச் சரமாக மின்னும்.

    இது எத்தனாவது பிறந்தநாள் வதனா?

    முகம் மந்தஹாஸமாக மலர்ந்தது. பெண்கள் கிட்ட வயசைக் கேட்கக் கூடாதுனு தெரியாதா?

    எங்கிட்ட சொல்லலாம்... சும்மா சொல்லு. யார்கிட்டயும் நான் சொல்லமாட்டேன் என்றவர் கை நீட்டி தோளில் போட்டு வளைத்துக் கொண்டார்.

    யார்கிட்டயும் சொல்லமாட்டீங்களே?

    கண்டிப்பாய் சொல்லமாட்டேன் டியர்.

    பிராமிஸ்.

    இதென்னடா ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி? பிராமிஸ் என்று அவளுடைய கரத்தை விரித்துத் தன் கையை வைத்தாள். மெத்து மெத்தென்று இப்படி ஒரு ஸ்பாஞ்ச் கையா? கையை எடுக்க மனமின்றி அப்படியே வைத்திருந்தார். காதலுக்கு வயசில்லை என்று அவர் மனம் கூச்சல் போட்டது.

    'இதற்குப் பெயர் காதலா?' என்று கேட்ட அறிவை ஒரு தட்டு தட்டி அடக்கினார். அறிவைப் பேச விட்டால் ஆபத்து. அது உண்மையைத்தான் சொல்லும்.

    எனக்கு உண்மையில் இருபத்தஞ்சு. ஆனா சினிமாவுக்கு வயசு எப்பவும் பதினெட்டு என்று கூறியவள் அண்ணாந்து வெள்ளிச் சதங்கைகளாகக் குலுங்கினாள்.

    நான்கு நாட்களுக்கு முன்பு

    கனகசபை அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தார். அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1