Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakkulle Nee Irukka
Enakkulle Nee Irukka
Enakkulle Nee Irukka
Ebook144 pages48 minutes

Enakkulle Nee Irukka

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465438
Enakkulle Nee Irukka

Read more from Devibala

Related to Enakkulle Nee Irukka

Related ebooks

Reviews for Enakkulle Nee Irukka

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakkulle Nee Irukka - Devibala

    14

    1

    சிதாரா குளித்து உடைமாற்றிக் கொள்ளும் நேரம் தடாலென ஒரு ஓசை கேட்டது!

    சிதாரா மிரண்டு போய் உள்ளே ஓடி வந்தாள். சமையல் கட்டில் யாரும் இல்லை. பாத்ரூம் பக்கம் ஏதோ ஒரு ஒசை கேட்க, சிதாரா அங்கு ஓடிவர, ஒரு நொடி ஆடிப் போனாள்.

    அம்மா அங்கு விழுந்து கிடந்தாள்!

    தலை சுவரில் மோதி, ரத்தம் கொப்பளிக்க, கண்களை செருகி அம்மா மயக்கத்துக்கு போய்க் கொண்டிருந்தாள்!

    சிதாரா ஒரு நொடி ஸ்தம்பித்தாள்!

    அம்மா முகத்தில் தண்ணீர் தெளித்தாள். ரத்தத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் தெரியவில்லை.

    வேகமாக வெளியே வந்து பக்கத்து ப்ளாட் கதவைத் தட்டினாள்.

    அந்தம்மா வந்து திறந்தாள். சிதாரா பதறியபடி விவரம் சொல்ல, சில நொடிகளில் அந்தம்மா, அவள் கணவர், மகன் மூன்று பேரும் வந்து விட்டார்கள்.

    ஜெய்! உடனே நம்ம காரை வெளில எடு! ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம்.

    சரிப்பா!

    அடுத்த சில நிமிடங்களில் அம்மா காரில் கிடத்தப்பட, சிதாரா, பக்கத்து வீட்டுக்காரர் ஏறிக் கொள்ள, அவர் மகன் ஜெய் காரை எடுக்க, நகரில் மையத்தில் இருந்த மருத்துவமனைக்குள் கார் நுழைந்தது. உடனே ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டது. அம்மாவை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு போனார்கள்!

    கதவு மூடப்பட்டது!

    சிதாரா முகம் வெளிறிக் கிடந்தது!

    உடன் பக்கத்து வீட்டு அப்பாவும், பிள்ளையும் நின்றார்கள்!

    பயப்படாதேமா! எந்தப் பிரச்னையும் இருக்காது!

    இருபது நிமிடங்கள் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.

    விழுந்ததுல தலை சுவத்துல மோதி ரத்தம் கொஞ்சம் சேதமாயிருக்கு. இன்னும் நினைவு திரும்பலை. இவங்களுக்கு ஹெல்த்ல பிரச்னை ஏதாவது உண்டா?

    எல்லா பிரச்னையும் உண்டு டாக்டர்! அவங்க ஹார்ட் பேஷன்ட்! சர்க்கரை, கொலஸ்ட்ரால் எல்லாம் உண்டு!

    மெடிக்கல் ரிப்போர்டுகள் இருக்கா?

    சிதாரா புறப்படும் அவசரத்தில்கூட எதையும் விடாமல் ஜாக்ரதையாக எடுத்து வந்திருந்தாள்.

    டாக்டர் சகலத்தையும் பார்த்தார்!

    ஆபத்தா டாக்டர்?

    உயிருக்கு ஆபத்து இல்லைம்மா. ஆனா ஹார்ட் பேஷன்டுங்கற காரணத்தால ஜாக்ரதையா இருக்கணும். நினைவு திரும்பட்டும். அப்புறமா எல்லா டெஸ்டுகளையும் எடுத்துடலாம். காத்திருங்க!

    சரி டாக்டர்!

    கொஞ்ச நேரத்தில் ஒரு சிஸ்டர் வந்தாள்!

    பத்தாயிரம் கட்டுங்க முதல்ல!

    அங்கிள்! நான் போய் ஏடிஎம்ல பணம் எடுத்துட்டு வந்துர்றேன்!

    சிதாரா! நீ இரு! பணத்தை நான் எடுத்துட்டு வர்றேன். அப்புறமா கணக்கு பாத்துக்கலாம்!

    அவர் புறப்பட்டுப் போனார்!

    அவர் மகன் ஜெய் தான் உடனிருந்தான்.

    தைரியமா இரு சிதாரா! உங்கம்மாவுக்கு எந்த பிரச்னையும் இருக்காது!

    சிதாரா ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்தாள்!

    அவளுக்கு உறவு என்று சொல்ல இந்த உலகத்தில் உள்ளது இந்த அம்மா ரேணுகா மட்டும்தான்!

    ரேணுகா ஒரு பட்டதாரி! ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் டீச்சர்! அங்குள்ள வருமானம் தவிர, தனியாக இருபது பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுத்து சம்பாதிக்கிறாள். தவிர ஷேர் மார்க்கெட், இன்ஷ்யூரன்ஸ் போன்ற பல வருமானங்கள் வீட்டில் இருந்தபடியே!

    சிதாரா எம்.காம். முடித்து சி.ஏ. இன்டர் பாஸ் செய்த பெண்! தனியாரில் ஒரு நல்ல பதவி! மாதம் நாற்பதாயிரம் வரை சம்பளம். கடந்த இரண்டு வருஷங்களாக உத்யோகம்! இருபத்தி ஐந்து வயது. வீடு வாடகை வீடுதான்! ஆனால் பேங்க் பேலன்ஸ் ஓரளவு உண்டு!

    கடந்த இரண்டு வருடங்களில் அம்மா ரேணுகாவுக்கு வராத நோய் பாக்கியில்லை. அதனால் பள்ளிக் கூடத்துக்கு அடிக்கடி லீவு! ட்யூஷன்களை, மற்ற ஏஜன்சிகளை சரியாக கவனிக்க முடியவில்லை.

    வருமானம் கணிசமாக அடிபடுவதால் வந்த மன உளைச்சல் ஒருபுறம்! தவிர மருத்துவச் செலவு பல ஆயிரங்களை முழுங்குவதால் சேமிப்பு கரையத் தொடங்கி விட்டது.

    இதனால் மனசுக்குள் பயம் உண்டாகி, புலம்பத் தொடங்கி விட்டாள். இது நோயை அதிகமாக்குகிறது.

    முதல் அட்டாக் வந்து பிழைக்க, சேமிப்பில் மூன்று லட்சம் காலி! ஆடிப் போனாள் அம்மா!

    விடும்மா! போகட்டும்! நீ பிழைச்சிட்டியே! அதுவே போதும். நானும் சம்பாதிக்கத் தொடங்கியாச்சே! நீ என்னை ஆளாக்கி விட்டாச்சு! அதுவே உசத்திதானே?

    போதாதே சிதாரா! உனக்கொரு நல்ல வரனாப் பார்த்து கல்யாணம் நடத்தணுமில்லையா? பாதுகாப்பான ஒருத்தர்கிட்ட உன்னை ஒப்படைக்கற வரைக்கும் நான் உயிரோட இருக்கணுமே!

    அப்படியெல்லாம் சொல்லாதேம்மா!

    பிறகென்ன?

    அடிக்கடி நோய், மருந்துச் செலவு! அம்மாவுக்கு ஒரு பீதி உண்டாகி விட்டது!

    அம்மா! நீ இனி வேலைக்குப் போக வேண்டாம். வாலன்டரி ரிடையர்மென்ட் வாங்கிடு!

    இல்லைம்மா! அதுக்கு மனசு ஒப்பலை!

    அம்மா! உன் லீவெல்லாம் தீர்ந்து இப்ப சம்பளமில்லாத லீவுதான்!

    இருக்கட்டும் கண்ணா! அப்பவும் வேலைனு ஒண்ணு இருக்கே! நான் பூரணமா குணமாயிட்டா, போயிடலாம் இல்லையா?

    பென்ஷனை விடும்மா! எனக்கு நீ எல்லாம் கத்துக் குடுத்திருக்கே! குடும்பத்தை நான் பாத்துக்கறேன்.

    இந்த இரண்டு வருடங்களில் ஏராளமான போராட்டங்கள்!

    இதோ தலை சுற்றி, பாத்ரூமில் விழுந்தாகி விட்டது!

    நர்ஸ் வந்தாள்!

    டாக்டர் கூப்பிடறார் உங்களை!

    அதற்குள் பக்கத்து வீட்டு அங்கிள் பணத்தைக் கட்டி விட்டு வந்தார்!

    மூவரும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தார்கள்.

    ஒக்காருங்க!

    மூவரும் உட்கார,

    "ரத்தம் ஓரளவுக்கு சேதமாயிருக்கு. ப்ளட் பேங்குக்கு தகவல் குடுத்திருக்கோம். இன்னிக்கே ரத்தம் ஏத்திடலாம். பீ.ப்பி நிறைய இருக்கு. ஏற்கெனவே ஒரு அட்டாக் வந்தாச்சு. சக்கரையும் இருக்கு. அவங்க பெட் ரெஸ்ட்ல இருக்கணும். டென்ஷன் படக்கூடாது. ஆஸ்பத்திரியில் நாலஞ்சு நாள் இருக்க வேண்டி

    Enjoying the preview?
    Page 1 of 1