Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yetho Ninaivugal Kanavugal…
Yetho Ninaivugal Kanavugal…
Yetho Ninaivugal Kanavugal…
Ebook162 pages56 minutes

Yetho Ninaivugal Kanavugal…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறான் வாஸினி. தருனும், வாஸினியும் இணைந்து 'கங்கை டால்பின்' என்ற ப்ராஜெக்ட்டிற்காக பணியாற்றுகிறார்கள். அபிஷெக்கை அவன் ப்ராஜெக்ட்டிற்காக உதவி கேட்கலாமா, வேண்டாமா என ரொம்ப யோசிக்கிறாள். அதற்கு காரணம் என்ன? கங்கை ஆறு, டால்பின்ஸ் பற்றியும் இந்த கதையில் பல சுவாராசிய விஷயங்கள் உள்ளன படித்து ரசியுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906601
Yetho Ninaivugal Kanavugal…

Read more from Lakshmi Sudha

Related to Yetho Ninaivugal Kanavugal…

Related ebooks

Reviews for Yetho Ninaivugal Kanavugal…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yetho Ninaivugal Kanavugal… - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    ஏதோ நினைவுகள்! கனவுகள்...!

    Yetho Ninaivugal! Kanavugal…!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    முன்னுரை

    வாங்க... பேசலாம்.

    டெல்லியில் நடந்த ‘Gang Rape’ பற்றி ஊடகங்கள் பேசி அடங்கிவிட்டன. நடந்த சம்பவத்துக்குக் காரணம் என்ன?

    இந்தக் கொடிய சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு என்ன வகையான தண்டனை கொடுக்கலாம் என்று பல பேர் பலவிதமான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்... என் மனதில் தோன்றிய எண்ணம்... இதுதான்.

    பெண்களை இழிவுபடுத்தி அதில் இன்பம் காண்பவர்கள் பலர். அதற்குக் காரணம்... பணம், பவர், சீஃப் பப்ளிஸிடி எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    இரட்டை வசனம், ஆபாச ஜோக்ஸ், பெண்களின் ஆடைகளை மட்டுமே ஃபோக்கஸ் செய்து படம் என்ற பெயரில் வெளியிடும் தயாரிப்பாளர்கள் சிலர்... பெண்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் சிலர்... பெண்களை இழிவு செய்யும் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகங்கள் பல... என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

    இந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு ஒன்று உண்டு. மற்றவர்களைத் துன்பப்படுத்தாமல் இருப்பது அதில் அடக்கம்.

    அதை நாம் நினைவில் வைத்துக்கொண்டு கடைப்பிடித்து நம் குழந்தைகளும் கடைப்பிடிக்க உதவி செய்யலாமே...

    என் நாவல்களைப் படித்துத் தொடர்ந்து கருத்துக்களை வெளியிடும் எல்லா வாசகர்களுக்கும் என் நன்றி!

    நட்புடன்,

    லட்சுமி சுதா

    ***

    1

    விழியோரம்

    என்னும்

    கண்ணீர்

    உன்

    நினைவாலே

    ...

    நான் இங்கே

    தனியே

    தன்னந்தனியே

    ...

    காத்து

    கொண்டு

    இருக்கிறேன்

    உன்

    நினைவுகளை

    சுமந்தபடி,

    பெண்ணே!

    சென்னைக் கடற்கரைச் சாலையில் அமைந்திருந்த அந்த பீச் ரிஸார்ட் பார்க்க ரம்மியமாக இருந்தது. கடல் அலைகளின் ஆரவாரம், அங்கிருந்தவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

    காரணம், பீச் ரிஸார்ட்டில் இருந்த நிறையக் கேளிக்கைகளே...

    அந்தக் கேளிக்கைகள் எல்லாம் எனக்குப் பொருட்டே இல்லை என்பது போல் தோட்டத்தை ஒட்டியிருந்த நீச்சல் குளத்தின் அருகே இருந்த புல்வெளியில் அமர்ந்திருந்தாள் வாஸினி.

    நிலவொளியில் நீச்சல் குளத்தின் தண்ணீர் தகதகவென மின்னியது. பூங்காவின் அருகே விளக்குகள் இருந்தன.

    அந்த வண்ண விளக்குகளின் ஒளியில் பூக்களும், புல்வெளியும் மேலும் அழகாக ஒளிர்ந்தன.

    ரம்யாவை இன்னும் காணவில்லையே? என்ன ஆச்சு... அவளுக்கு? அவளின் கைபேசியும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லையே என்று யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் வாஸினி.

    ஏதோ காலடிச் சப்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள் வாஸினி.

    ஒரு சிறுமி வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள்.

    கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தச் சிறுமி வேகமாக நீச்சல் குளத்தினுள் குதித்தாள். அந்த நீச்சல் குளம் ஆழம் அதிகம் இல்லை. அது குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்டது என்று வாஸினிக்குத் தெரியும்.

    அதனால் அவள் அமைதியாக இருந்தாள். ஆனால் அந்தச் சிறுமி கை காலை ஏதோ ஆபத்து போல் அசைத்தபடி இருக்க... ஏனோ அவள் மனம் பதறியது.

    அந்தச் சிறுமி கையைத் தண்ணீருக்கு மேலே ‘வா... வா’ என்பது போல் அசைக்க... என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ந்து போனாள் வாஸினி.

    ‘கடவுளே! இது என்ன சோதனை? இந்தப் பெண்ணிற்கு நீச்சல் தெரியாது போல... தண்ணீரில் தத்தளிக்கிறாளே...! என்ன செய்வது இப்பொழுது?’ என்று மூளை மரத்துப் போய் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

    அவள் நெற்றியில் வியர்வைப் பூக்கள்.

    அப்பொழுது நீச்சல் குளத்தை நோக்கி ஓடி வந்த ஒருவன் சட்டென அதில் குதித்தான். 

    வாஸினியின் மனதில் நிம்மதி பூத்தது.

    அவள் கைபேசி சிணுங்கியது.

    சொல்லு ரம்யா! எங்க இருக்கே?

    நான் இப்பதான்டி ஸ்கூட்டியை நிறுத்திட்டு வர்றேன். நீ எங்க இருக்கே?

    நான் இங்கதான் நீச்சல் குளம் கிட்ட இருக்கேன்... என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த இளைஞன் அந்தச் சிறுமியைக் கைகளில் தூக்கியபடியே குளத்திலிருந்து எழுந்து வந்தான்.

    படிக்கட்டில் ஏறி வரும்பொழுது அவன் விழிகள் சீற்றத்துடன் வாஸினியின் முகம் மேல் படிந்தன.

    இவன் யார்? ஏன் என்னை இப்படி முறைக்கிறான் என்று புரியாமல் விழித்தாள் வாஸினி.

    அழாதே சஞ்சு... பயப்படாதே! என்று சிறுமியைத் தோளில் சாய்த்தபடியே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.

    குழந்தையின் அழுகைச் சப்தம் குறையத் தொடங்கியது.

    வாஸினியின் மனம் அமைதியானது. ‘அப்பாடா! அந்தச் சிறுமிக்கு எதுவும் ஆகவில்லை...’ என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது, அவளை அறியாமலேயே!

    அந்த இளைஞன் அவளை நோக்கி வந்தான். அவன் முகம் கோபத்தால் இறுகிப் போய் இருந்தது.

    "சே... ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். அதைப் பற்றித் துளிகூடக் கவலைப்படாமல் இங்கே சாவகாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறியே...

    நீயெல்லாம் ஒரு பெண்ணா...? சே... சே... வெறுப்பாக இருக்கிறது. உன் போன்ற பெண்ணைப் பார்ப்பதற்கு... என்று அமிலம் போல் வார்த்தைகளைச் சிதற விட்டான் அவன்.

    வாஸினி என்னவென்று புரியாமல் திகைத்தாள். அவன் சொன்னது புரிந்த பின்பு, பதில் பேசுவதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் ஏனோ தொண்டைக்குள் வார்த்தைகள் முள் போல் சிக்கிக்கொண்டன.

    அவன் கோபத்துடன் அவளை முறைத்துவிட்டு, அங்கிருந்து வேகமாக அகன்றான்.

    வாஸினி அதிர்ச்சியிலிருந்து மெள்ள மீண்டு வந்தாள்.

    ஏய்... என்னடி! இப்படிப் பேய் அறைந்த மாதிரி உட்கார்ந்திருக்க? என்று ரம்யா, அவள் தோள் மேல் கை பதிக்க... திடுக்கிட்டுத் திரும்பினாள் வாஸினி.

    ம்... ஒன்றும் இல்லை! முனகினாள் வாஸினி.

    ஏய்! முகமெல்லாம் வேர்த்திருக்கு. என்ன இது? என்று பதறினாள் ரம்யா.

    நத்திங்... போகலாமா? என்றாள் வாஸினி.   

    தோழியைப் பற்றி ரம்யாவுக்குத் தெரியும். அவள் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைப்பது ரொம்பக் கடினம் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

    கடந்த ஆறு மாத காலமாகத்தான் அவளுக்கு வாஸினியைத் தெரியும். ஆனால் அந்தக் குறுகிய காலத்திற்குள் வாஸினியைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

    சில நேரம் வாஸினி ஏதோ ஒரு உலகில் இருப்பது அவளுக்குத் தெரியும். வாஸினியின் முகத்தில் அந்நேரம் சோகம் அப்பட்டமாகத் தெரியும்.

    அப்பொழுது வாஸினியிடம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் வராது என்பது அவளுக்குத் தெரியும்.

    வாஸினியின் முகத்தில் இப்பொழுதும் சோகம் அப்பியிருப்பதை அவள் கவனித்தாள். இதைப் பற்றிக் கேட்டால் அவளிடமிருந்து பதில் வராது என்று அவளுக்குத் தெரியும். அதனால் அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று முடிவு செய்தாள்..

    ஸாரி வாஸினி! ரொம்ப லேட்டாயிடுச்சா? என்றாள் பேச்சை மாற்றும் விதமாக.

    ம்... பரவாயில்லை...

    ராகினி கோபித்துக் கொள்ளப் போகிறாள். ரிசப்ஷனுக்கு ஈவினிங் நாலு மணிக்கே வரச் சொன்னாள். ஆனால் நான் சாவகாசமாக ஆறு மணி அளவில் வர்றேன்... கத்தப் போறா அவ. வா... சீக்கிரம்...

    ம்... ஆமாம். ராகினி சொல்றதும் கரெக்ட்தான். இன்னிக்கு அவளோட டைம் ஸ்பெண்ட் செய்தால்தான்... இனிமேல் அவளை எப்ப பார்க்கப் போகிறோமோ? அடுத்த வருஷம் வருவான்னு நினைக்கிறேன்...

    ஆமாம் வாஸினி மேடம் நாளைக்கு யூ.எஸ்.க்குக் கிளம்பறார்.

    ம்... இப்ப அங்க நல்ல பனி வேற... இவ எப்படித் தாக்குப் பிடிக்கப் போறாளோ? என்றாள், கவலை தோய்ந்த குரலில் வாஸினி.

    ஏய்... அதெல்லாம் ராஜேஷ் கவனிச்சுப்பார்! என்று குறும்பாகக் கண் அடித்தாள் ரம்யா.

    வாஸினியின் முகம் சிவந்தது.

    ம்... உன் முகத்தின் இந்தச் சிவப்பைப் பார்க்கவே அடிக்கடி இந்த மாதிரிப் பேசலாம்னு தோணுது வாஸினி!

    "எப்படி ரம்யா... இப்படி வாய் ஓயாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1