Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagai Pookkuthey...
Azhagai Pookkuthey...
Azhagai Pookkuthey...
Ebook107 pages28 minutes

Azhagai Pookkuthey...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல மாடல் அழகி தியாவிற்கு கொலை மிரட்டல் வருகிறது. அவளுக்கு ஒரு பிரத்யேக பாதுகாவலன் அவசியம் என குடும்பத்தினர் தீர்மானம் செய்கின்றனர். அத்வித் அவளுடைய பாதுகாவலனாக நியமிக்கபடுகிறான். அத்வித்தை தரக்குறைவாக நடத்துகிறாள் தியா. ஆனால் கடமையை கண்ணாக நினைக்கும் அத்வித் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிறான். தியாவிற்கு அவன் ஒரு சவாலாக இருக்கிறான். இறுதிவரை அவன் சவாலாக இருக்கிறானா? இல்லை.....? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906577
Azhagai Pookkuthey...

Read more from Lakshmi Sudha

Related to Azhagai Pookkuthey...

Related ebooks

Reviews for Azhagai Pookkuthey...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagai Pookkuthey... - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    அழகாய்ப் பூக்குதே...

    Azhagai Pookkuthey…

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முன்னுரை

    விளம்பர மாடலாக இருக்கும் தியாவிற்கும், அவள் அப்பாவிற்கும் சேர்த்து ஒரு மிரட்டல் கடிதம் வருகிறது. அவளது நலவிரும்பியான முரளி நியூயார்க் செல்லவிருந்ததால், அத்வித்தை தியாவிற்கு பாதுகாவலனாக வைக்கிறான். அது என்ன மிரட்டல், அதற்கு என்ன காரணம், தியாவுக்கு என்ன பிரச்சனை போன்ற கேள்விகளுக்கு பதில் இந்த நாவலில் நீங்கள் படிக்கும் போது கிடைக்கும்!

    1

    தொலைவில்

    புள்ளியாக

    ஒரு

    வெளிச்சம்!

    என்

    கால்கள்

    அதை

    நோக்கிப்

    பயணிக்கின்றன

    ஒரு

    அழகான

    சின்னக்

    குடில்!

    அதனுள்

    நீ

    அழகிற்குச்

    சவால்

    விட்டபடி

    படுத்து

    உறங்கிக் கொண்டு

    இருக்கிறாய்!

    தியா... பிடிவாதம் பிடிக்காமல் நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பார்! -கெஞ்சலாக ஒலித்தது பிரகாஷின் குரல்.

    அப்பா... இது முட்டாள்தனமான யோசனை. லீவ் இட்.

    இல்லை, தியா! முரளி சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.

    டைனிங் டேபிளில் இருந்த மாம்பழ ஜூஸ் நிறைந்த கோப்பையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்கும் மகளைச் சற்றே கவலையோடு பார்த்தார் பிரகாஷ்.

    அம்மா இல்லாததால் நான் இவளுக்கு அதிகப்படியாகச் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டேனோ! சில நேரம் இவள் ரொம்பவே பிடிவாதம் பிடிக்கிறாள்.

    ஒரே பெண். என்னுடைய சொத்தே இன்னும் பத்துத் தலைமுறைக்கு வரும். ஆனாலும் இவள் பிடிவாதமாக ‘மாடலிங் கம்பெனி’ வைத்து நடத்துகிறாள்.

    நல்ல காலம், பெண்களுக்கான ‘மாடலிங் கம்பெனி’ அது. இவளே மாடல் போல்தான் இருக்கிறாள்.

    கையில்லாத டாப்ஸ், அங்கங்கே காலில் வெட்டி விடப்பட்ட ஷார்ட்ஸ், மஞ்சளும் சிவப்பும் கலந்த வர்ணத்தில் பாய்-கட் போல் ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி.

    கடவுளே! சந்தியா உயிரோடு இருந்தால் இந்த மாதிரி எல்லாம் இவள் உடை உடுத்த அவள் அனுமதிப்பாளா? இவள் இஷ்டத்திற்கு நான் இவளை விட்டுவிட்டேன் போல!

    தப்பெல்லாம் என் மேலேதான். ஒரே பெண். அதுவும் தாயில்லாத பெண் என்று நான்தான் பாசத்தை அதிகமாக இவள் மேல் கொட்டி விட்டேன்.

    இவள் கேட்ட எதையும் நான் மறுத்ததே இல்லை. புதுப் புதுக் கார்... ஹாலிடே ஸ்பெண்ட் செய்ய உலக நாடு முழுவதும் சிநேகிதிகளோடு சுற்றுலா... இவள் பெயரில் மொரிஷியஸில் தீவு... என எல்லாமே அவள் கேட்காமலேயே செய்தது நான்.

    என்ன அப்பா! ஏதோ தீவிரமான யோசனையிலே இருக்கீங்க போல...

    ம்... ஆமாம் தியா! முரளிக்கு வந்த அந்த மிரட்டல் கடிதம் உனக்கும் தெரியுமே! அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

    "ஆமாம்... முரளிக்கும் வேற வேலை இல்லை. உங்களுக்கும் வேற வேலை இல்லை. அந்தக் கடிதமே சும்மா போலி மிரட்டல் கடிதமாகத்தான் இருக்கும்.

    ஆபத்து உங்களுக்குக் கூடிய விரைவில் வரப் போகிறது. உங்களுக்கு மட்டும் இல்லை. உங்களுடைய...!’ என்றுதானே இருந்தது அந்தக் கடிதத்தில்.

    "ஆமாம் தியா! அதனால்தான் முரளி உன்னுடைய பாதுகாப்புக்காக ஒரு காவலனை நியமித்து இருக்கிறார். அவர் பெயர் அத்வித்.

    இந்தத் துறையில் ரொம்பப் பிரபலமானவர் அவர். அரசியல்வாதிகளுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் மட்டுமே அவர் பாதுகாப்புக் கொடுப்பது வழக்கம்.

    "ஆனால் முரளி ஸ்பெஷலாகக் கேட்டுக் கொண்டதால் அவர் உனக்குப் பாதுகாப்பு அளிக்க ஒப்புக்கொண்டார். அது மட்டுமில்லை. அவர் ஏஜென்ஸியில் இருந்து இன்னொரு நல்ல ஆளையும் முரளிக்குக் காவலனாக அனுப்பி உள்ளார்.

    முரளி இப்பொழுது வெளிநாட்டில் உள்ளார். தொழில் துறை விஸ்தரிப்பிற்காக அவர் இந்தப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது மெய்க்காப்பாளனும் அவர் கூடவே பயணிக்கிறார்.

    "அப்பா! இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. அதோடு நேற்று ஃபோனில் பேசும் பொழுது கூட முரளி இதைப் பற்றி என்னிடம் பேசவில்லையே!

    வெளிநாடு போகப் போவதைப் பற்றிச் சொன்னார். ஆனால் இந்தக் காவலனைப் பற்றி மூச்சு விடவில்லையே! என்று படபடத்தாள் தியா.

    அவர் மறந்து போயிருக்கலாம் தியா!

    நாமும் இந்த விஷயத்தை மறந்து விடுவோம்.

    தியா! ப்ளீஸ்... உன்னுடைய... என்று அவர் முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் மகள்.

    அப்பா... போதும். இதைப் பற்றி இனிமேல் பேச வேண்டாம். என்னால் கமல் படத்தில் வரும் பீம்-பாய் போன்ற ஒரு மெய்க்காப்பாளனை, தடியனை, முட்டைக்கோஸ் போல் காது உடையவனை எல்லாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

    நான் பார்க்க அப்படியா இருக்கிறேன்! என்ற புதுக் குரல் கேட்க, சட்டென அறைக் கதவை நோக்கினாள் அவள்.

    அங்கே உயரமாக, வாசற் கதவை அடைக்கும் உயரத்தில் கம்பீரமாக ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.

    அத்வித்! உங்கள் பாதுகாவலன் மேடம்! என்று இடை வரை குனிந்து வணங்கினான் அவன்.

    நீ எப்படி உள்ளே வந்தாய்?

    "வாசல் கதவு வழியாகத்தான். யாரோ வாசல் கதவைச் சரியாகத் தாழ் போடாமல் விட்டிருந்தார்கள்.

    "உங்கள் வீடு ரொம்ப பிரபலமான தெருவில்தான் இருக்கிறது. இருந்தாலும் இப்பொழுது உள்ள நிலைமையில்

    Enjoying the preview?
    Page 1 of 1