Vaarisu
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Vizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Kathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Su(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Madiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Vaarisu
Related ebooks
தொட்டில் வரை காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsJeevanaadi Rating: 0 out of 5 stars0 ratingsThaan Than Sugam Rating: 0 out of 5 stars0 ratingsAva(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsPor Megangal Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணகி - '96' Rating: 0 out of 5 stars0 ratingsAmma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsEngum Nee Nirainthaai Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaalangal Rating: 0 out of 5 stars0 ratingsPaneer Nathi Rating: 4 out of 5 stars4/5சீதைக்கு ராமன் சித்தப்பா Rating: 0 out of 5 stars0 ratingsChippikkul Muthu! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Naal Rating: 4 out of 5 stars4/5Maakolam Rating: 0 out of 5 stars0 ratingsNavarasa Nayagi Rating: 0 out of 5 stars0 ratingsParasuraman Rating: 5 out of 5 stars5/5Avasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Maatram Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Mudiyumaa Rating: 0 out of 5 stars0 ratingsPaniththirai Rating: 0 out of 5 stars0 ratingsEppavum Naan Raja Rating: 0 out of 5 stars0 ratingsAzhagana Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsபல்லக்கில் ஏறு... Rating: 0 out of 5 stars0 ratingsIlamjolai Vennilaa Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Rating: 0 out of 5 stars0 ratingsKaasalavu Nesam! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vaarisu
0 ratings0 reviews
Book preview
Vaarisu - Devibala
1
அந்த பிரபலமான பத்திரிகை பல லட்சங்கள் சர்க்குலேஷன் போகும் பத்திரிகை கடந்த எட்டு வாரங்களாக ‘வாரிசு’ என்ற தலைப்பில் எழுதும் ஒரு பகுதி மிகவும் ரசிக்கும்படியான ஒரு தொடராக வந்து கொண்டிருந்தது. அரசியலில் வாரிசு... சினிமாவில் வாரிசு... பிஸினஸில் வாரிசு... விளையாட்டில் வாரிசு... இலக்கியத்தில் வாரிசு என தேடிப் பிடித்து பிரபலங்களை பேட்டி எடுத்து புகைப்படங்களுடன் ‘கவர் ஸ்டோரியாக’ வெளியாகிக் கொண்டிருந்தது.
அதற்கு ஏராளமான விளம்பரம்.
போஸ்டர்கள் மீடியாவின் பெரிய வெளிச்சம் என சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது.
யார் முதலில் - அவரது வாரிசு அல்லது வாரிசுகள் யார் என தேர்ந்தெடுக்க, இரண்டு பேரையும் பேட்டி எடுத்து, சர்ச்சைக்குரிய கேள்விகளைக் கேட்க, முடிந்தால் சண்டை மூட்டிவிட்டு அந்தப் பகுதி சுவாரசியமாக இருந்தது.
மக்களிடையே அது பெரிய வரவேற்பை பெற்றதால், பிரபலமான தொலைகாட்சி ஒன்றை அதை அப்படியே ஒளிபரப்ப முடிவு செய்தது.
பத்திரிகையில் வந்தவர்களை சின்னத் திரையில் கொண்டு வர முடிவு செய்தது.
எடுத்துக்காட்டாக சினிமாத் துறையில் அப்பாவும்-பிள்ளையும் பிரபலமாக இருந்தால்,
அப்பாவை பிள்ளை மிஞ்சி விட்டாரா?
அவருக்குள்ள நட்சத்திர அந்தஸ்த்து இவருக்கு உண்டா?
சாதனையாளர்கள் இருவரில் யார்- என்பது போன்ற அலசலும் உண்டு.
இனி நம் கதைக்கு வரலாம்.
அந்த வகையில் தொழில் துறையில் அரிய இந்திய அளவில் கடந்த பத்து வருடங்களாக மிகவும் பிரபலமானவர் ‘வீனஸ்’ க்ரூப் கம்பெனியின் உரிமையாளர் ராஜன்!
கடுமையான உழைப்பாளி.
படிப்படியாக முன்னுக்கு வந்தவர்!
உலக அளவில் வர்த்தகத்தில் இன்று கொடி கட்டிப் பறப்பவர்.
அவரை மிஞ்ச யாருமில்லை. போட்டியாளர்கள் அவரை நெருங்க முடியலிங்க!
எதிரிகளும் ஏராளம்!
சகல தந்திரங்களையும் கையாண்டு முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் புத்திசாலி!
க்ரூப் கம்பெனி!
எதில் காலை வைத்தாலும் வெற்றிதான். காரணம் அதைப் பற்றிய அலசல்! அதன் வெற்றிப் புள்ளியை தேடிப்பிடித்து அதை கைவசப்படுத்த எந்த லெவலுக்கும் போகும் மனிதர்.
பணத்தால், தந்திரத்தால் அதற்கு என்ன விலை தர முடியுமோ, அதை தந்து விடுவார்!
கடந்த நாலு வருடங்களுக்கும் மேலாக, அவருடன் பிஸினஸில் இறங்கி, அவரே பிரமிக்கும் அளவுக்கு உருவாகிவிட்ட அவரது மகள் ரேகா!
ரேகா படித்துக் கொண்டிருக்கும் போதே அலுவலகம் வரத் தொடங்கி விட்டாள்! அப்பா செல்லம்! அவரது நிழலில் வளர்ந்தவள்! அவரது சுய குணங்களும் அச்சு பிசகாமல் அவளிடம் உண்டு.
ராஜனுக்கு சரியான வாரிசு அவர் மகள் ரேகாதான் என பேசும்படி செய்தவள்!
குழந்தை காலம் தொட்டே, அவளிடம் அதிகபட்ச பாசம் அவருக்கு. ராஜன்-பத்மா தம்பதிக்கு இரண்டும் பெண்கள்.
மூத்தவள் ரேகா!
அடுத்தவள் ரேஷ்மி!
சின்னவள் அமைதியாக-அம்மா பத்மாவைப் போன்றவள். அம்மாவின் நிதானம்-விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சற்றே பயந்த சுபாவம்- துணிச்சல் இயலாமை என அமைதியான பெண்!
ரேகா பள்ளியிலும் சரி, பொறியியல் கல்லூரியிலும் சரி - பேசும்படியான மாணவி!
தடாலடிதான்.
படிப்பு, விளையாட்டு. இசை. நாடகம் என எதை எடுத்தாலும் முதலிடம்!
தன்னைத் தாண்டி இன்னொருவர் பேர் எடுத்து விடக்கூடாது. எடுக்க விடமாட்டாள். எப்படியும் ஜெயித்து விடுவாள்.
அதில் ஒரு மூர்க்கம் உண்டு!
கூடவே படிக்கும் மாணவி ஒருத்தி இவளை தொடர்ந்து மூன்று முறையாக ஜெயித்துக் கொண்டிருக்க, மனசு பொறுக்காத ரேகா, அவளுக்கு குடிக்கும் பானத்தில் எதையோ கலந்து, அவள் மயக்கமாகி, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, ஒரு மாதம் முடங்கி, அந்த இடைவெளியில் ரேகா மேலே வந்து விட்டாள்.
இது யாருக்கும் தெரியாது!
அதன் பிறகு அந்தப் பெண் உடல் பலவீனமாகி ரொம்பவும் கீழே போய் விட்டாள்.
எப்படிம்மா ஜெயிச்சே?
ராஜன் கேட்க,
அப்பா! உங்களுக்கு மட்டும் சொல்றேன்!
உண்மையைச் சொல்ல,
அவர் ஆடிப் போனார்.
சபாஷ்டா! என் வாரிசுதான் நீ!
அப்பா! இதுக்காக என்கிட்ட நீங்க கோவப்படலையா?
எதுக்கும்மா கோபம்? நாம ஒன்றை அடையனும்னா, உச்சில் நிக்கனும்னா, அதுக்காக எதையும் செய்யலாம்! என்ன விலை வேண்டும்னாலும் தரலாம்! தப்பே இல்லை, நியாய, தர்மங்களை பார்த்தோம்னா, நாம மேலே வர முடியாது! உச்சிக்கு வந்தவங்க பல பேர் சரித்திரத்தை நீ புரட்டினா, அதுல பல கதைகள் இருக்கும்!
அவள் பிரமித்தாள்.
அவரும் உச்சிக்கு வர பல குற்றங்களை செய்தவர்தான்,
நம்பிக்கை துரோகம், ஏமாற்று, வஞ்சனை, கொலை வரை போனவர். அது வெளியே வராமல சாதுர்யமாக மறைத்தவர்.
வெளியே வரும் சூழ்நிலை உண்டானால், அதை மறைக்க எந்த விலையையும் தரும் புத்திசாலி!
அதே குணத்துடன் வளரும் வாரிசு!
அப்பா! இதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாம்!
எதுக்கு என்னோட நல்ல பக்கம் மட்டும்தான் உங்கம்மாவுக்குத் தெரியும்! மறுபக்கம் தெரியாது! நீயும் அப்படியே இரு!
இப்படியாக வளர்வது, படிக்கும் நாட்களிலேயே பிரபலமாகி, தொழிலதிபர் ராஜனின் வாரிசு என வெளிச்சம் போடப்பட்டு, அப்பா கம்பெனியிலேயே தனது பைனல் இயர் ப்ராஜக்டையும் முடித்தாள்.
அவளது ரிசல்ட் வந்த போது கல்லூரியின் முதல் மாணவியாக தங்க மெடல் வாங்கினாள்.
பல பெரிய நிறுவனங்களிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
அப்பாவின் கம்பெனியே ஒவ்வொரு வருடமும் காம்பஸ் இன்டர்வ்யூ நடத்தி நூற்றுக்கணக்கான திறமைசாலிகளுக்கு வேலை தருகிறது.
ரேகாவுக்கு இன்னொரு கம்பெனி எதற்கு?
படிக்கும் போதே ஓரளவுக்கு வேலைகளை கற்றுக்கொண்டு விட்டாள். முடித்ததும் உள்ளே வந்து விட்டாள்.
நாலே வருடங்கள்.
அப்பாவையே மிஞ்சும் அளவுக்கு நிர்வாகத்தில் சக்கை போடு போடத் தொடங்கி விட்டாள்.
சேர்மன் ராஜன்!
அவருக்கு அடுத்த பதவியில் ரேகா.
ஏற்கனவே இருந்த சீனியர்கள் அத்தனை பேரையும் பின்னுக்கு தள்ளி, முன்னே வந்து விட்டாள்.
அதில் சிலர் நியாயமாக ஒதுங்கிக் கொண்டார்கள்.
சிலருக்கு இவளது அணுகுமுறை பிடிக்கவில்லை
இது நீடிச்சு வராதுங்க! தடாலடி வர்த்தகம் கீழே தள்ளிடும் வேண்டாம்!
எச்சரித்தார்கள்!
ரேகா கேட்கவில்லை.
பழுத்த அனுபவமும் கம்பெனியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்த சீனியர் இரண்டு பேருடன் ரேகாவுக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
ஒருவர் ஞானசேகர்.
எதையும் உழைப்பால், நேர் வழியால் அடைய வேண்டும் என்பதில் திடமாக இருப்பவர்.
அடுத்தவர் கண்ணப்பர்.
தரமான பொருட்களைத்தான் வாங்க வேண்டும். சப்ளை செய்வதும் முதல் தரமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்கெட்டில் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியும் என்றார்.
இரண்டையும் ரேகா உடைத்தாள்.
லாபத்தை பெருக்கி, தரத்தைக் குறைத்தாள். ஏற்கனவே பல வருடங்களாக மெட்டீரியலை சப்ளை செய்தவர்களை ரத்துச் செய்தாள். புதிய பார்ட்டியை கொண்டு வந்தாள். வர்த்தகத்தில் இருந்த நேர்மையை துண்டித்தாள்.
குறுக்கு வழியில் இறங்கினாள்.
இதையெல்லாம் ஞானசேகரும், கண்ணப்பனும் விரும்பவில்லை. சேர்மன் மகள் என்பதால் முதலில் விட்டுப் பிடித்தார்கள். சொல்லிப் பார்த்தார்கள்.
எதுவும் எடுபடவில்லை. அவர்களை எதிர்க்கத் தொடங்கி விட்டாள். அடிக்கடி மோதல் வந்தது.
ராஜன் வரை போய் விட்டது.
ரேகா செய்யும் தவறை- அதனால் எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் நஷ்டங்களை, கம்பெனியின் பின்னடைவை முன்னமே கணித்து புள்ளி விவரங்களுடன் அறிக்கை தர,
ராஜன் பார்த்தான்.
ரேகாவை தனியாக அழைத்துப் பேசினார்.
"ரேகா! அவங்க ரெண்டு பேரும் சாதாரண ஆட்கள் இல்லை. மேதைகள். இந்த கம்பெனியோட ரெண்டு தூண்கள்! இதோட