Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Atchaya Paathiram
Atchaya Paathiram
Atchaya Paathiram
Ebook87 pages50 minutes

Atchaya Paathiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இத்தொகுப்பின் கதைகள் பல்வேறு திறத்தன; பல்வேறு நிறத்தன. ஆனால் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செய்தியை, சமூகப் பயன்பாட்டுக்கென விட்டுச் செல்கிறது. இதில் உள்ள செய்திகளைப் படைத்த நுட்பத்தால் நூலாசிரியர் அந்தச் சம்பவங்களுக்கு ‘என்றும் சிரஞ்சீவி’ என்ற பட்டத்தை சூட்டுகின்றார்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு தனித்துவம். படிக்கப் படிக்க, உணர்வும் பகுத்தறிவும் வாதிடுவது, ஈடுபாட்டோடு இப்படைப்பு உணர்வார்க்குத் தெரியும்.

Languageதமிழ்
Release dateSep 25, 2023
ISBN6580170110231
Atchaya Paathiram

Read more from Rajamani Palaniappan

Related to Atchaya Paathiram

Related ebooks

Reviews for Atchaya Paathiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Atchaya Paathiram - Rajamani Palaniappan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அட்சய பாத்திரம்

    (சிறுகதைகள்)

    Atchaya Paathiram

    (Sirukathaigal)

    Author:

    ராஜாமணி பழனியப்பன்

    Rajamani Palaniappan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajamani-palaniappan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூலாசிரியர்

    அணிந்துரை

    என்னுரை

    நூறை நோக்கி

    எனது சக்தி

    மருத்துவராவது நிச்சயம்

    கௌரவம்

    டிக்... டிக்... ஆராய்ச்சி.

    வாழ்க்கைச் சக்கரம்

    அட்சய பாத்திரம்

    காலம் கடந்த ஞானம்

    ஐம்பதில் பெருவாழ்வு

    உயில்

    பாதிக் கனவு

    நீ இல்லாமல்...

    சாபம்

    நூலாசிரியர்

    ராஜாமணி பழனியப்பன்

    பிறந்த இடம்: கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

    பிறந்த தேதி: 07.08.1960

    பெற்றோர்: திரு. ஜி.எஸ். பழனியப்பன், திருமதி. ஆர். சரஸ்வதி

    படிப்பு:

    1-6 - D.S. சாரதா நடுநிலைப் பள்ளி, அக்ரஹாரம், கோபி

    7-11 - வைரவிழா உயர்நிலைப் பள்ளி, கோபி

    PUC - கோபி கலை, அறிவியல் கல்லூரி (1975 - 1976)

    B.E. - உற்பத்தியியல், PSG பொறியியல் கல்லூரி, கோவை (1976 - 1981)

    M.E - உற்பத்தியியல், PSG பொறியியல் கல்லூரி, கோவை (1981 - 1983)

    Ph.D. - இயந்திரவியல், IIT Madras (1992)

    வழிகாட்டிப் பேராசிரியர் எம்.எஸ். சண்முகம்.

    சில பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகவும், ரத்தினம் பொறியியல் மற்றும் சுகுணா பொறியியல் கல்லூரி கோவை முதல்வராகவும் பணியாற்றினார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் இவர் வழிகாட்டுதலில் ஏழுபேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    அணிந்துரை

    14-03-2023

    முனைவர். S. கௌரி

    துணைவேந்தர்

    சென்னைப் பல்கலைக்கழகம்

    சென்னை 600005

    முனைவர். ராஜாமணி பழனியப்பனின் கதைகள் கற்பனை உலகில் உருவான படைப்புகள் அல்ல. மனித வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பார்த்தும், கேட்டும் அவற்றின் உட்பொருளை கருவாகக் கொண்டு படைப்பிலக்கியம் செய்துள்ளார். இந்நூலின் கதைக் கரு, உலகில் நடந்த, நடக்கின்ற உண்மைச் சம்பவங்கள். ஆனால் அவற்றை மக்களிடையே கொண்டு செல்லுகையில், அவற்றை நன்கு ஒப்பனை செய்ய வேண்டியுள்ளது. பாலைவனத்தைச் சோலையாக்கும் முயற்சியின் கடுமை போன்றது இந்த ஆற்றல்.

    இத்தொகுப்பின் கதைகள் பல்வேறு திறத்தன; பல்வேறு நிறத்தன. ஆனால் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செய்தியை, சமூகப் பயன்பாட்டுக்கென விட்டுச் செல்கிறது. இதில் உள்ள செய்திகளைப் படைத்த நுட்பத்தால் நூலாசிரியர் அந்தச் சம்பவங்களுக்கு ‘என்றும் சிரஞ்சீவி’ என்ற பட்டத்தை சூட்டுகின்றார்.

    ‘உழைப்பே உடலை வளமாக்கும் கருவி’ என்பதன்றிப் பொருளாதார மேடு பள்ளங்கள் மலிந்து விகாரப்பட்டிருக்கும் கருத்தையும் ‘நூறை நோக்கி’ என்ற முதல் கதை உணர்த்துகிறது. ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வுக் கதை.

    விலங்கு மனத்தோடு உலாவும் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் கிளைத் தலைமை தாங்கும் ஒருவனின் மன அசிங்கங்கள் பேசப்படும் ‘எனது சக்தி’ என்ற கதை மனித மன விகாரங்களைப் படம் பிடிக்கிறது.

    ‘மருத்துவராவது நிச்சயம்’ கதை மனித எண்ணத்தில் உண்டான வலிமையைக் காட்டி, ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதைக் கிரியா ஊக்கியாகத் தருகிறது.

    போலிக் ‘கௌரவம்’ வீட்டில்; கௌரவம் என நினைத்த அது தவிடு பொடியானது ரோட்டில். இது ஒரு கதையின் மையம்.

    கற்றலில் திறமை இல்லை, திறமையில் தான் உயர்வு என்பதை வேலை இல்லாதவர்கள் படித்து உணர வேண்டியது ‘டிக்...டிக்... ஆராய்ச்சி’.

    எத்தனுக்கு எத்தன் உலகில் உலவுவதை எடையிடுவது ‘வாழ்க்கைச் சக்கரம்.’

    ‘அட்சய பாத்திரம்’ நூல் தலைப்பைத் தந்த கதை. எனவே முத்திரைக் கதை.

    நாடோடிக் கூட்டத்தைப் பற்றிக் கதை சொல்லி, கல்லூரி மாணவரிடையே எழுச்சியும் தன்னம்பிக்கையும் மூண்டெழச் செய்வது ‘காலம் கடந்த ஞானம்.’

    குரு, சீடன் பற்றிய கதை ‘ஐம்பதில் பெருவாழ்வு’ - முடிவு முடிவுறாமல் முடிவது இதன் குறிப்புப் பொருள்.

    சொத்துக்குச்

    Enjoying the preview?
    Page 1 of 1