Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indre Kaathali
Indre Kaathali
Indre Kaathali
Ebook85 pages28 minutes

Indre Kaathali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Indre Kaathali

Read more from Rajeshkumar

Related to Indre Kaathali

Related ebooks

Related categories

Reviews for Indre Kaathali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indre Kaathali - Rajeshkumar

    19

    1

    பரிதி ஃபைல்களில் கையெழுத்திட்டுவிட்டு - சோம்பல் முறிப்பதற்காக கைகளை உயர்த்தியபோது - மேஜையின் மேலிருந்த ஊதா வண்ண டெலிபோன் சிணுங்கியது.

    ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...

    ஆபீஸ் ரிசப்ஷனிலிருந்து ஜெயந்தி பேசினாள்.

    குட்மார்னிங் ஸார்...

    சொல்லு...

    உங்களைப் பார்க்க உங்க ஃபேமிலி டாக்டர் ராவ் வந்திருக்கார் ஸார்...

    எப்போ வந்தார்?

    இப்பத்தான் ஸார்...

    உள்ளே அனுப்பு... டாக்டர். கிட்டே பேசிட்டிருக்கும் போது வெளியிலிருந்து எனக்கு ஏதாவது போன் கால் வந்தா நோட் பண்ணிக்க. எனக்கு எல்லன் கொடுத்துடாதே...

    எஸ்... ஸார்...

    டாக்டரை உள்ளே அனுப்பு. அப்படியே, கேடரிங் செக்சனுக்கு பேசி என்னோட ரூமுக்கு ரெண்டு காஃபி கொண்டு வர சொல்லிடு

    ரிஸீவரை வைத்தான் பரிதி. இருபத்தேழு வயது. சராசரி உயரம். மாநிறத்துக்கும் ஒருபடி தூக்கலான நிறம். ஒரு கம்பெனியின் ஜி.எம்.முக்கே உரித்த தோரணை. இப்போதைக்கு பரிதியைப் பற்றி இவ்வளவு போதும். பின்னால் வரும் பக்கங்களில் அவனைப் பற்றி நிறையவே தெரிந்து கொள்வீர்கள்.

    டொக்... டொக்...

    ப்ளீஸ்... கம்... இன்...

    கதவைத் தள்ளிக் கொண்டு - டாக்டர் ராவ் உள்ளே வந்தார். ஐம்பது வயது ராவ் பூர்ண வழுக்கையோடு ஷஃபாரியில் இருந்தார்.

    குட் மார்னிங் டாக்டர்...

    வெரி குட்மார்னிங் பரிதி

    பீ... ஸீட்டட்... டாக்டர்...

    டாக்டர் ராவ் உட்கார்ந்து கொண்டே சொன்னார்.

    ஸாரி... உன்னோட ஆபீஸ் வேலையில் நீ பிஸியா இருக்கிற இந்த நேரத்துல உன்னை தொந்தரவு படுத்தறேன்...

    நோ... ப்ராப்ளம் டாக்டர்...

    உன்கிட்ட. ஒரு பத்து நிமிஷம் பேசணும்... உனக்கு ஏதும் அவசர வேலை இல்லையே...?

    பரிதி புன்னகைத்தான். பத்து நிமிஷம் இல்லை. நீங்க எவ்வளவு நிமிஷம் வேணுமின்னாலும் பேசலாம். எனிதிங்க் இம்பார்ட்மென்ட் டாக்டர்...?

    ‘எஸ்...

    என்ன விஷயம்...?

    உன் கல்யாணத்தைப் பத்தி பேசணும்.

    அம்மா... அனுப்பி வெச்சாங்களா டாக்டர்?

    இல்லை... நானாத்தான் வந்தேன்... வாட் ஈஸ் ராங் வித் யூ? ஏன் கல்யாணப் பேச்சை எடுத்தா ஒதுங்கி ஒதுங்கிப் போறியாம்...?

    எனக்கு. கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை டாக்டர்.

    அதுதான் ஏன்னு கேட்கிறேன்... நீ யாரையாவது லவ் பண்ணி அதுல கசப்பான அனுபவம் ஏதாவது கிடைச்சதா?

    அப்படியெல்லாம் இல்லை டாக்டர்.

    பின்னே என்னதான் காரணம்... நீ கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லி தட்டிக் கழிக்கறதுனால உங்கம்மாவுக்கு எவ்வளவு வருத்தம் தெரியுமா...?

    டாக்டர்... வந்து...

    இதோ பார்... பரிதி... நீ எந்த காரணத்தையாவது சொல்லி - கல்யாணத்தை தள்ளிப் போடறது கொஞ்சம் கூட சரியில்லை...

    சரி டாக்டர்... நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா ரெண்டு வருஷம் போகட்டும்...

    எதுக்கு ரெண்டு வருஷம்...?

    பிசினஸை கொஞ்சம் டெவலப் பண்ண வேண்டியிருக்கு.

    கல்யாணத்தை பண்ணிகிட்டு பிசினஸை டெவலப் பண்ணு. யார் வேண்டாம்ன்னு சொன்னது...?

    அது – சாத்தியமில்லை டாக்டர்... கல்யாணம் முடிந்ததும் ஹனிமூன் ட்ரிப் அடிக்க வேண்டியிருக்கும்... புதுப் பெண்டாட்டியோட தேவைகளை அலட்சியம் பண்ண முடியாது... ஆபீஸ் வேலைகளை தள்ளி வெச்சுட்டு அவளை கவனிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கும்...

    பரிதி! நீ சொல்றது எனக்கு சரியா படலை. ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்குப் பின்னாலும் அவனுடைய மனைவி இருக்கிறாள் என்பது - பொதுவா சொல்லப்படுகிற வாக்கியம்...

    டாக்டர்...!

    பரிதி... கல்யாணம்ங்கிறது பண்ணிக்கிற நபர்க்கு மட்டும் மகிழ்ச்சியைத் தர்றதில்லை... அவனை பெத்தவங்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்... உன்னோட கல்யாணத்தை பார்க்கணும்ன்னு உங்கம்மா எவ்வளவு ஆசைப்பட்டுகிட்டு இருக்காங்க தெரியுமா...? உங்கப்பா உயிரோடு இருந்திருந்தா இத்தனை நாள் உன்னை விட்டு வெச்சிருக்கமாட்டார். எப்பவோ உன்னோட கல்யாணத்தை முடிச்சிருப்பார்...

    டாக்டர்! அம்மாவை ஒரு ரெண்டு வருஷம் பொறுத்துக்கச் சொல்லுங்க...

    ஸாரி பரிதி... உன்னோட அம்மா ரெண்டு வருஷம் வரைக்கும் உயிரோடு இருக்கப் போறதில்லை...

    Enjoying the preview?
    Page 1 of 1