Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Udai Thevathai
Karuppu Udai Thevathai
Karuppu Udai Thevathai
Ebook51 pages23 minutes

Karuppu Udai Thevathai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Karuppu Udai Thevathai

Read more from Rajeshkumar

Related to Karuppu Udai Thevathai

Related ebooks

Related categories

Reviews for Karuppu Udai Thevathai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Udai Thevathai - Rajeshkumar

    5

    1

    "சுரபி!"

    அம்மா அழைக்கிற குரல் கேட்டு டிரஸ்ஸிங் டேபிளுக்கு முன் நின்று நெற்றியின் மையத்துக்கு ஸ்டிக்கர் பொட்டை நகர்த்திக் கொண்டிருந்த நான் திரும்பினேன்.

    என்னம்மா?

    அம்மாவின் கையில் டிபன் பாக்ஸ்.

    எவ்வளவு சப்பாத்தி வைக்கட்டும்?

    ரெண்டு...

    என்னது, ரெண்டா? ஏன்டி உன்னோட வயிறு என்ன குருவியோட வயிறா? காலையில மூணு மணி நேரம், மத்தியானம் ரெண்டு மணி நேரம். கரடியா கத்திப் பாடம் சொல்லித் தரப் போற உனக்கு ரெண்டு சப்பாத்தி எந்த மூலைக்கு? இன்னும் ரெண்டு சேர்த்து வைக்கிறேன்.

    சரி... வை! அதை நாய்க்குப் போட்டுடறேன்...

    அம்மா என்னை உஷ்ணமாக முறைத்தாள்.

    ஏன்டி... இப்படிப் படுத்தறே? போன மாசம் கூட பார்க்கிறதுக்குக் கொஞ்சம் புசுபுசுன்னு இருந்தே, இப்பக் காய்ஞ்சு போன கருவேப்பிலைக் கொத்து மாதிரி இருக்கே. என்னோட வயிறு எரியுதுடி!

    கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டேன்,

    இதோ பாரும்மா...! நீ கவலைப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லை. காலேஜ்ல இப்ப அதிகப்படி வேலை... சாயந்தரம் வரும்போது கொஞ்சம் டயர்டா இருப்பேன். அவ்வளவுதான்!

    உன்னோட அப்பா மட்டும் உயிரோட இருந்திருந்தா... உன்னை இப்படி?

    அம்மா...! தயவு பண்ணி உன்னோட ஒட்டடையும் தூசியும் மண்டின ஃப்ளாஷ்-பேக்கை ஓப்பன் பண்ணிடாதே. பஸ்ஸுக்கு நேரமாச்சு. அந்தப் பஸ்ஸைக் கோட்டை விட்டா அரை மணி நேரம் பஸ் ஸ்டாண்ட்ல தவம் இருக்க வேண்டியதுதான். டிபன் பாக்ஸைக் கொடு...

    அம்மா கொடுத்தாள். வாங்கி வயர் பையில் வைத்துக் கொண்டேன். மேஜை மேலிருந்த வாட்டர் கேனை எடுத்து அதே பையில் செருகிக் கொண்டேன்.

    வாசலுக்கு வந்தபோது அம்மா பின்னாலேயே வந்து. தயக்கக் குரலில் கூப்பிட்டாள்.

    சுரபி…

    எரிச்சலாக நிமிர்ந்தேன்.

    என்னம்மா?

    அந்தத் தரகர் வந்தா... என்ன சொல்றது?

    எந்தத் தரகர்?

    என்னடி இப்படிக் கேட்கிறே? பெங்களூர்ல ஒரு ஐ.டி. மாப்பிள்ளை இருக்கிறதாச் சொல்லிட்டுப் போனாரே. அந்தத் தரகர்தான்!

    நான் வாசற்படி விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அம்மா வேக வேகமாகப் பின்னால் வந்து என் தோளில் கையை வைத்தாள்.

    பேசாமப் போனா என்ன அர்த்தம்?

    எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு அர்த்தம்...

    உனக்கு இப்போ என்ன வயசு தெரியுமா?

    தெரியுமே! இருபத்தஞ்சே முக்கால்.

    சுரபி! இந்த வருஷம்தான் உனக்குக் குரு பார்வை இருக்காம். இப்பவே கல்யாணத்தை நடத்திடறது நல்லதாம்...

    அப்படின்னு யார் சொன்னது...? அந்தக் குருவா?

    இந்தக் கிண்டல்தானே வேண்டாம்ங்கிறது? அந்தத் தரகர் வந்தா என்ன சொல்றது?

    "அவர் முன்னைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1