Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irakka Piranthaval Sindhu
Irakka Piranthaval Sindhu
Irakka Piranthaval Sindhu
Ebook83 pages28 minutes

Irakka Piranthaval Sindhu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466374
Irakka Piranthaval Sindhu

Read more from Rajeshkumar

Related to Irakka Piranthaval Sindhu

Related ebooks

Related categories

Reviews for Irakka Piranthaval Sindhu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irakka Piranthaval Sindhu - Rajeshkumar

    16

    1

    ரெஸ்டாரெண்டுக்கு வெளியே ஐப்பசி மாத மழையின் அட்டகாசம். ராத்திரி நேரம். எட்டு மணி. மின்சாரம் தற்காலிகமாய் இறந்து போயிருந்ததில், காந்திபுரம் ஏரியா முழுவதும் கனமான இருட்டு.

    ரெஸ்டாரெண்டின் உள்ளே,

    மெழுகுவர்த்திகள் தலையில் தீப்பிழம்புகளோடு நடனமாடிக் கொண்டிருக்க - கார்னர் டேபிளில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்திருந்தார்கள் பிரகாஷும், சிந்துவும். எதிரே மேஜையின் மேல் - பீங்கான் கோப்பைகளில் காப்பி ‘ஆவி’யை விட்டுக் கொண்டிருந்தது. ரெஸ்டாரெண்டின் பெரும்பாலான மேஜைகளில் ஆட்கள் தவறியிருந்தார்கள். இருந்த சொற்ப பேரும் முள் கரண்டிகளால் எதையோ கிளறி - வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தார்கள். சிந்து மெல்லிய குரலில் கேட்டாள்.

    என்ன பிரகாஷ்... ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க?

    பேசறதுக்கு என்ன இருக்கு...? பிரகாஷ் ‘உச்’ கொட்டினான்.

    எம் மேல உங்களுக்கு கோபம்?

    ஆமா... ஆமா... ஆமா...

    நான் எங்கே போயிடப் போறேன் ஊட்டிக்குத்தானே? இங்கிருந்து மூணு மணி நேர பயணம்தான். அரசு நூத்துக் கணக்குல பஸ் விட்டுருக்காங்க. நானோ நீங்களோ நினைச்ச நேரம் சந்திச்சுக்கலாம்.

    சிந்து ...

    இந்த ட்ரான்ஸ்பர் உனக்கு தேவைதானா?

    சிந்து சிரித்தாள்.

    வெறும் ட்ரான்ஸ்பரா இருந்தா நான் கூட வேண்டாம்னு சொல்லியிருப்பேன். பிரமோஷன் பேர்ல வர்ற ட்ரான்ஸ்பர் இது... ஒரு ஆறு மாசம் ஊட்டியில் இருந்தா போதும். மறுபடியும் இங்கேயே வந்துடுவேன்...

    ஆறு மாசந்தான். ஈஸியா சொல்லிட்டே...? என்னாலே உன்னைப் பார்க்காமே ஒருநாள் கூட இருக்க முடியாதே.

    இந்த டயலாக்கெல்லாம் என்கிட்டே வேண்டாம் பிரகாஷ். உங்களுக்கும் - எனக்கும் மத்தியில் வளர்ந்திருக்கிற காதல் கண்மூடித்தனமானது இல்லை. நானென்ன உங்களை விட்டுட்டு அயல்நாட்டுக்கா போகப் போறேன். இங்கிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற ஊட்டிக்குத்தானே போகப் போறேன்... மூக்கை உறிஞ்சாம கண்ணைக் கசக்காமே... மொதல்ல... காப்பியைக் குடிங்க... சொல்லிக் கொண்டே கப்பை எடுத்து நீட்டினாள் சிந்து.

    கல்லு மனசு...

    யாரைத் திட்டறீங்க...?

    உன்னைத்தான்...

    "சரி... எம் மனசு கல்லாவே இருக்கட்டும்... காப்பியை சாப்டுட்டு புறப்படுங்க...

    புறப்படறதா...? எப்படி புறப்பட முடியும்? மழைதான் கொட்டு கொட்டுன்னு கொட்டுதோ

    பிளாட்பார ஓரமாவே நடந்து போனா பக்கத்துலதான் ஆட்டோ ஸ்டாண்ட். வழி பூராவும் ஷன்ஷேட் இருக்கு. நனையாமே நடந்து போயிடலாம்...

    அப்படியென்ன அவசரமா போகணும்... மழை நிக்கட்டும்; போலாம்... பிரகாஷ் சொல்லிக் கொண்டிருந்த அதே விநாடி -

    ரெஸ்டாரெண்டின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு ஹெல்மெட்டும் ஜெர்கின் கோட்டுமாய் அந்த இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். இளைஞர்கள் மழையில் தொப்பலாய் நனைந்திருந்தார்கள்.

    ராகுல்

    ம்...

    ரெஸ்டாரெண்ட்ல கூட்டமே இல்லையே...?

    அந்த ராகுல் பார்வையை சுற்றும் முற்றும் போட்டுவிட்டு கடைசியாய் சிந்துவின் மேல் பார்வையை நிப்பாட்டினான்.

    கூட்டம், இல்லேன்னா என்ன...? ஒரு குயில் இருக்கே.... சிவப்புக் குயில்...

    ஜோதிகா மாதிரி இருக்கா இல்லை...?

    எவனோ பட்டா போட்டுட்டான் போலிருக்கு... பேசிக்கொண்டே வந்தவர்கள் பிரகாஷுக்கு பக்கத்தில் இருந்த காலி மேஜையை ஆக்ரமித்தார்கள். பேரர் பவ்யமாய் நெருங்கி நிற்க,

    ராகுல் அடுத்தவனைக் கேட்டான்.

    சிவா... என்ன சாப்பிட்றே...?

    சில்லி சிக்கனும் சப்பாத்தியும் சொல்லு...

    பேரர் குறுக்கிட்டுச் சொன்னார்.

    ஸார்... இது வெஜிடேரியன் ஹோட்டல்... நான் வெஜிடேரியன் கிடையாது

    என்னது நான் வெஜிடேரியன் கிடையாதா?

    ஆமா... ஸார் இது ப்யூர்லி வெஜிடேரியன்.

    என்னடா சிவா பண்றது...?

    இந்த மழையில... வேற ஹோட்டலுக்கு அலைய முடியாது... இங்கேயே எதையாவது சொல்லு. பசிக்கிற வயித்துக்கு எதையாவது காட்டி வெப்போம்."

    ராகுல் பேரரிடம் திரும்பினான்.

    ரெண்டு பிளேட் சப்பாத்தி, வெஜிடபிள் குருமா....

    பேரர் தலையாட்டி நகர்ந்து போக - சிவா பக்கவாட்டில் பார்வையைத் திருப்பி - சிந்துவைப் பார்த்துக் கொண்டே - மழைத்தண்ணீர் படிந்திருந்த தன் தலையை உலுக்கினான்.

    மழைநீர் சிதறி - சிந்துவின் மேல் பட - அவள் விருட்டென்று திரும்பி முறைத்தாள்.

    சிவா இளித்தான் பற்களைக் காட்டி, ஸாரி... வெரி... வெரி... ஸாரி பாப்பா... என்றான்.

    பிரகாஷ் எழுந்தான் கோபமாய்.

    "மிஸ்டர் டீஸன்சியா

    Enjoying the preview?
    Page 1 of 1