Tajmahal Nizhal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5
Related to Tajmahal Nizhal
Related ebooks
Vivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsPoo! Puyal! Rating: 5 out of 5 stars5/5Ippadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsThadaiyai Udai Rating: 0 out of 5 stars0 ratingsOne + One = Zero Rating: 2 out of 5 stars2/5Karuppu Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsEthayum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Aintham Pirai Rating: 0 out of 5 stars0 ratingsThee Nila Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Innaley Rating: 0 out of 5 stars0 ratingsNooru Degree Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsIruttai Thedi Rating: 5 out of 5 stars5/5Arupathainthavathu kalai! Rating: 0 out of 5 stars0 ratingsMiss Bharatha Maathaa Rating: 5 out of 5 stars5/5Sivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAvenue Marangal Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNithyavin Nimishangal Rating: 5 out of 5 stars5/5Thisai Thedum Paravai! Rating: 0 out of 5 stars0 ratingsMagaa Sathi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Yaarum Thottathillai Rating: 5 out of 5 stars5/5Oru Maranathin Maranam Rating: 5 out of 5 stars5/5Ellam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsKatrathu Diamond Kalavu Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Tajmahal Nizhal
0 ratings0 reviews
Book preview
Tajmahal Nizhal - Rajeshkumar
ராஜேஷ்குமார்
1
‘இறைவன் இருக்கிறான்’ என்று சொல்பவனை நம்புங்கள். ‘இறைவன் இல்லை’ என்று சொல்பவனைக் கூட நம்புங்கள். ஆனால் ‘நான் தான் இறைவன்’ என்று சொல்பவனை மட்டும் நம்பாதீர்கள்.
"விஷ்ணு..!" ரூபலா குரல் கொடுத்துக் கொண்டே சோபாவில் வந்து உட்கார்ந்தாள். விஷ்ணு செல்போனை உசுப்பி இன் பாக்ஸில் இருந்த ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.ஸையும் பார்த்து தேவையானவற்றை வைத்துக் கொண்டு மற்றதை டெலிட் செய்து கொண்டிருந்தான்.
விஷ்ணு...!
ரூபலா இரண்டாவது தடவை குரல் கொடுத்ததும்தான் தலை நிமிர்ந்தான். பொய்யாய் முறைத்தான்.
டிஸ்டர்ப் பண்ணாதீங்க மேடம்...
செல்போன்ல அப்படி என்னத்தைப் பார்த்துட்டு இருக்கே...? ஏதாவது டிபார்ட்மெண்ட் சம்பந்தப் பட்ட மெஸேஜ்ஜஸா..?
மேடம்...! இது என்னோட பர்சனல் செல்போன். மெஸேஜ் இன்பாக்ஸ் ரொம்பி வழியுது. ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை சுத்தம் பண்ணவேண்டியிருக்கு...
உன்னோட செல்ஃபோன் நெம்பரை ஏன் எல்லார்க்கும் தர்றே...? கண்டவங்களுக்கு எல்லாம் செல்ஃபோன் நெம்பரைக் கொடுத்தா இப்படித் தான்... எல்லா வேலையையும் விட்டுட்டு இப்படி இன்பாக்ஸை சுத்தம் பண்ணிட்டு இருக்கணும்...
மேடம்..! நீங்க ‘கண்டவங்க’ன்னு சொன்னதை நான் ஆட்சேபிக்கிறேன். அவங்க ஒண்ணும் கண்டவங்க கிடையாது...
பின்னே யாராம்...?
என்னோட ரசிகைகள்..! எப்படியோ என்னோட செல் நெம்பரைத் தெரிஞ்சுக்கிட்டு ‘எஸ்.எம்.எஸ்’களை அனுப்பி என்னைக் குளிப்பாட்டறாங்க... அந்தக் குளியலில் மூச்சுத் திணறிட்டு இருக்கேன் தெரியுமா...? போற போக்கைப் பார்த்தா டிபார்ட்மெண்ட்ல எனக்கு பிரமோஷன் கொடுத்து, பாஸை எனக்கு அஸிஸ்டண்டா போட்டுடுவாங்க போலிருக்கு மேடம்!
டேய்..!
ஸா... ஸாரி... மேடம்...ஏதோ உளறிட்டேன் போலிருக்கு...!
டேய்..! தயிர்வடையும் காராபூந்தியும் பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிருக்கேன். உனக்கும் ரெண்டு தரலாம்ன்னு போன நிமிஷம் வரைக்கும் நினைச்சுட்டு இருந்தேன். அது இப்போ கான்ஸல்...
அய்யோ மேடம்...! இந்த மேட்டரை மொதலிலேயே சொல்லக்கூடாதா...? தயிர்வடையும் காராபூந்தியும் என்னோட பால்ய காலத்து சிநேகிதர் கள் மேடம்! வாரத்துல ரெண்டு தடவையாவது ஏதாவது ஒரு ஹோட்டல்ல அவங்க ரெண்டு பேரையும் பார்த்துடுவேன். இன்னிக்கு அவங்க நம்ம வீட்லயே இருக்கும்போது நான் மிஸ் பண்ணலாமா...?
என்னடா சொன்னே...? பாஸை உனக்கு அஸிஸ்டண்டா போட்டுடுவாங்களா...?
அய்யோ ... மேடம்..! வடநாட்டுல லாலு பிரசாத் யாதவ் பேசறதையும் தமிழ்நாட்டுல சுப்ரமண்ய சுவாமி பேசறதையும் யாரும் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க... அவங்கமாதிரிதான் இந்த விஷ்ணுவும்...! ஏதோ தத்து பித்துன்னு உளறிட்டேன். அதுக்காக தயிர்வடையில் கையை வெச்சுடாதீங்க... எனக்குண்டான 33 சதவீத தயிர் வடை கிடைச்சேயாகணும். இல்லேன்னா என்னோட போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடிக்கும்... பின்விளைவுகள் ரொம்பவும் மோசமாய் இருக்கும்.
விஷ்ணு வலது கையை தலைக்குமேல் உயர்த்தி கோஷம் போட்டுக் கொண்டு இருக்கும்போதே கம்ப்யூட்டர் அறைக் கதவைத் திறந்து கொண்டு விவேக் வெளிப்பட்டான். நிதானமான குரலில் கேட்டான்:
விஷ்ணு..! எதுக்காக இந்தப் புலம்பல்..!
என்னது...! இது புலம்பலா...? இது என்னோட வீராவேசமான கோஷம் பாஸ்! இது புலியோட உறுமல். பூனையின் முனகல் அல்ல.
ரூபி...! இவனுக்கு என்னாச்சு..?
நான் சொல்றேன்... பாஸ்...! நான் சொல்றேன்... மேடத்துகிட்டே எதையும் கேட்காதீங்க... உங்களோடு என்னை கம்பேர் பண்ணி ஒரு கவிதை எழுதி படிச்சுக்காட்டினேன். அந்தக் கவிதை மேடத்துக்குப் பிடிக்கலை... சரியான பொறாமை பாஸ்!
ரூபலா டீபாயின் மேல் இருந்த செய்தித்தாளைச் சுருட்டிக்கொண்டு அவனை அடிக்க எழுந்தாள். நீ என்ன சொன்னேன்னு உன்னோட பாஸ்கிட்டே சொல்லு... கவிதை அது இதுன்னு கதை விடாதே!
ரூபி...! அவனை மிரட்டாதே... அவன் எழுதின கவிதையை சொல்லட்டும்...!
தொண்டையைக் கனைத்துக் கொண்ட விஷ்ணு சோபாவுக்குப் பின்னால் போய் நின்று கொண்டு கவிதையை சொல்ல ஆரம்பித்தான்.
பாஸ்...!
நீங்கள் புதிதாய் ‘நாசிக்’ பிரஸ்ஸிலிருந்து
அச்சடித்து வந்த
ஆயிரம் ரூபாய் நோட்டு.
நானோ...
செல் டேப்பால் ஒட்டப்பட்டு
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்
கிழிந்து போன
ஐந்து ரூபாய் நோட்டு.
ரூபலா தன் தாடையில் கையை வைத்தாள். டேய்...! ரெண்டு தயிர்வடைக்காக அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியேடா..? உன்னை எப்படிடா நம்பி வீட்டுக்குள்ளே சேர்க்கிறது..?
சொல்லி ரூபலா சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே, விஷ்ணுவின் செல்ஃபோன் ‘என் பேரு மீனாகுமாரி போவோமா கன்னியாகுமாரி’ என்ற பாடலை ரிங் டோனாய் வெளியிட்டது.
விஷ்ணு செல்போனை எடுத்து காதுக்கு ஒற்றினான்.
எஸ்...
பதிலுக்கு மறுமுனையில் ஒரு ஆண்குரல் வெடித்தது.
நாயே...! யாருக்கடி போன் பண்றே...?
விட்றா...!
ஒரு பெண் குரல் மூச்சிரைப்போடு வீறிட்டது.
அந்தப் பேச்சைத் தொடர்ந்து யாரோ ஓடும் சத்தம்... ‘தப் தப்’பென்று கேட்டது.
விஷ்ணு தன் செல்போனிலிருந்து மைக்கை ‘ஆன்’ செய்துவிட்டு கத்தினான். ஹலோ... ஹலோ... பேசறது யாரு..?
பதிலுக்கு மூச்சிரைப்பு சத்தம். இரண்டு பேர் ஓடுகின்ற காலடிச்சத்தம்.
விஷ்ணு! போன்ல யாரு..?
தெரியல்ல பாஸ்...! யாரோ ஒரு பொண்ணு எனக்கு போன் பண்ணிப் பேச முயற்சி செய்யறா... யாரோ அதைத் தடுக்கறாங்க.
உன்னைக் கூப்பிட்டது யார்ன்னு தெரியலையா?
தெரியலை பாஸ்... நெம்பரும் எனக்குப் பரிச்சயம் இல்லாத நெம்பர்.
விவேக் செல்போனை வாங்கி கத்தினான்.
ஹலோ... ஹலோ...
..........
யார் பேசறது...?
பதிலுக்கு மூச்சிரைப்பு சத்தமும், அதன் பின்னணியில் இரண்டு ஆண்குரல் மெலிதாய் பேசுவதும் கேட்டது.
யார்க்கோ போன்ல பேச ட்ரை பண்றாடா.
அவளைப் பேச விடக்கூடாது... போட்டுத் தள்ளு.
என்ன ஓட்டம் ஓடறா...
உயிர்க்குப் பயந்த ஓட்டம்... அப்படித்தான் இருக்கும்.
பத்து விநாடிகளுக்குப்பிறகு செல்போன் மௌனம் காத்தது. தொடர்பு அறுந்து போயிற்று.
விஷ்ணு! அந்த நெம்பர்க்கு மறுபடியும் ட்ரை பண்ணு...!
விஷ்ணு அந்த நெம்பரை டயல் செய்தான்.
‘நாட் ரீச்சபிள்’ என்ற ரிக்கார்டட் வாய்ஸ் கேட்டது.
விஷ்ணு பதட்டமானான் பாஸ்....! அந்தப் பொண்ணுக்கு ஏதோ ஆயிடுச்சு...
அந்த செல்போன் நெம்பர் பி.எஸ்.என்.எல்.தானே?
ஆமா... பாஸ்...
"அவங்களுக்கு போன் பண்ணி அந்தப் பொண்ணோட ‘கால்’ எந்த ஏரியாவிலிருந்து வந்ததுன்னு லொகேட் பண்ணச்