Ragasiya Kathavondru
1/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsEn Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsTheeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsKaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Uppu Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsPaartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5
Related to Ragasiya Kathavondru
Related ebooks
Netru Mudhal Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Senbaga Poovum, Saaralum... Rating: 2 out of 5 stars2/5Imaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Sirungaara Naatham Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Koyil Rating: 4 out of 5 stars4/5Aayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsShenbaga Poove Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Mandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratingsKarpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Peiyena Peiyum - Kaadhal! Rating: 2 out of 5 stars2/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsUllam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Un Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsManakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5Paalaivanathil Pannir! Rating: 4 out of 5 stars4/5Paattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Nesam Narumanamai Rating: 4 out of 5 stars4/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Swasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Parvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsManakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Nizhalil Oru Nilavu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ragasiya Kathavondru
1 rating0 reviews
Book preview
Ragasiya Kathavondru - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
ரகசியக் கதவொன்று
Ragasiya Kathavondru
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jeyathilagar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
ரகசியக் கதவொன்று…
1
கரும்பச்சைக் குகை போல வளைந்து போனது அந்த சாலை.
வலதுபுறம் முரட்டு அரணாய் நின்ற மலையில் முளைத்த செடி, கொடிகள் படமெடுத்த பாம்பு போல எம்பி நிற்க, மறுபக்க மரங்களும் சிநேகத்துடன் வளைந்து எதிர்பக்க செடிகளைத் தொடும் முயற்சியில் ஒரு குகை போலவே உருவாகியிருந்த, அந்த மலைப் பாதை இருண்டிருந்தது.
ரகசியமாய் வளைந்து வளைந்து மேலேறியது சாலை. அதில் தன் பழைய டப்பா வாகனத்தை அலட்சியமாய் விரட்டிக் கொண்டிருந்தவனை ஒரக்கண்ணால் நோட்ட மிட்டாள் வர்ஷி!
பாதையின் இருளைப் போலவே அவன் முகத்து மூர்க்கமும் அவளை மிரட்டியது. அவன் ‘கியர்’ மாற்றிய வேகத்தில் இவளுக்குள் ‘விருக்’கென இழுத்தது!
எதிரே ஒரு ‘மாருதி’ வர, இந்த சிறு வேன் இடதுபுறமாய் ஒதுங்கி நின்ற போது இவளுக்கு ‘மரணபயம்’ பரிச்சயமானது! புதர்களோடு மரங்கள் செழித்த பள்ளத்தில் உருண்டால், வனத்திற்கு உரமாக வேண்டியதுதான்! இந்த அத்துவானக் காட்டில் யார் இறங்கி தங்கள் சடலங்களைத் தேடி எடுப்பார்கள்?
தன்னையே திட்டி, சபித்துக் கொண்டாள் அவள்!
மும்பையில் ‘விடுமுறைக் களங்’களை உருவாக்கும் ஒரு நிறுவனத்தில் முதலாளியின் வலதுகரமாய் தான் வலம் வந்தது வேறு.
மித்தல் சகோதரர்கள் ஆரம்பித்த அந்நிறுவனம் பதினைந்து வருடங்களில் கொடிநாட்டி விட்டது. பரிச்சயமோ, ஆள் புழக்கமோ அதிகமிராத இயற்கை அழகுள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து அதை விடுமுறைக்கு ஏற்ற ‘ரிஸாட்’டாக உருவாக்க முனைந்தவர்கள், அதை நல்லபடி விவரம் அறிந்தவர்கள் துணையோடு செய்ய, அந்த விடுமுறைக் களங்கள் விரைவில் பயணிகளை ஈர்த்து பணத்தைக் குவித்தன!
‘நிலப்பரப்பு நிர்வாகம்’ கற்ற வர்ஷி வேலைக்கு விண்ணப்பிக்க, அவளை ஆவலாய் சேர்த்துக் கொண்டார்கள்.
மும்பை அருகிலும் கர்நாடகத்திலும் சிறு தீவுகளைத் தேர்ந்தெடுத்து, அரசின் அனுமதியுடன் அதை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற விதத்தில் அமைத்ததில் ஆரம்பித்தது, அவர்களின் வெற்றி.
பொன்னிற மணல், நீலக் கடல், பசும் தென்னைகளோடு கிடந்த அந்த ஆளண்டா தீவுகள், மிக வசதியான குடில்கள், உணவகங்கள், நீச்சல் குளம், விளையாட்டு அரங்குகளுடன் பயணிகளை வரவேற்றன.
வலைதளத்தில் அதற்கான விளம்பரங்களையும் வர்ஷி நேர்த்தியாய் வடிவமைக்க, அங்கு வந்து தங்கிய பலர் தங்கள் அனுபவத்தை, ‘ஆஹா, ஒஹோ… பேஷ், பேஷ்...’ என்று விவரித்து பதிவு செய்ய, கூட்டம் முண்டியது. குற்றாலத்தில் ஒவ்வொரு அருவியாய் போய் தலையை நீட்டி விட்டு, பஜ்ஜியும் பழங்களும் சாப்பிடும் வர்க்கமில்ல இது.
‘பணம் ஒரு பொருட்டே இல்லை. எனக்கு என் பணத்திற்கேற்ற அபூர்வ அனுபவம்தான் தேவை’ எனும் மேல் தட்டு மக்களுக்கான விடுமுறைக் களம்.
‘மீன் பிடிக்கலாம், படகு ஒட்டலாம், மலை ஏறலாம்’ என்று இவர்கள் விரித்த ஆசை வலையில் ஆர்வமாய் வந்து சேர்ந்த கொழுத்த மீன்கள்.
மூத்தவர் மித்தல் அலுவலகத்திற்கு வருவது இரண்டு மணி நேரங்கள்தான். அதற்குள் வேண்டிய திட்டங்களை, திருத்தங்களைத் தந்து விடுவார். மற்ற பொறுப்பெல்லாம் இளைய மித்தலிடம் தான்.
‘அண்ணா மூன்றாவது ரிஸார்ட்டை நாம் சீக்கிரம் ஆரம்பிக்கணும்றார், வர்ஷி. நீ தென்னிந்தியாவில் ஒரு இடத்தைத் தேர்வு செய்யலாம்னது அவருக்குப் பிடிச்சிருந்தது. ஆனா நீ இன்னும் எந்த இடத்தையும் புள்ளி குத்தலையே?" - இளைய, முகேஷ் மித்தல் ஆதங்கப்பட்டான்.
‘நாலைந்து இடங்கள் எடுத்து வச்சிருக்கேன். ஒரு தரம் போய் பார்த்தால்தான் முடிவெடுக்க முடியும் முகேஷ்.’
‘பாஸ்’, ‘ஸர்’ எனும் பதங்கள் அங்கே ஏற்கப்படாதவை. ஆக இயல்பாய் பெயர் சொல்லியே அழைத்து, பேச, வேலை செய்வதும் சுலபமாகி இருந்தது.
‘ஒருவேளை தமிழ்நாட்டில் அழகு இடங்கள் இல்லையோன்றது அண்ணாவின் சந்தேகம்! தமிழ் பெண்ணான நீ வீம்பிற்கு ‘எங்க பக்கம் போகலாம்’னு சொல்லிட்டாலும், வட இந்தியா அளவிற்கு அம்சமான ஊர்களைக் கண்டெடுக்க முடியாமல் நீ திணறுவதாய் நினைக்கறார்.’
முகேஷ் மித்தலின் கிண்டல் புரிந்தாலும் வர்ஷிக்கு கோபம் கொப்பளித்தது!
‘தெற்கு, அழகில் சளைத்ததேயில்லை – ‘சட்’டுனு போய், நேரில் பார்த்து விட்டு வர, யாரும் நம் அலுவலகத்தில் தயாரில்லை. அமைதியான கிராமப்புற, மலைப்பாங்கான இடங்களைப் பற்றி நாம் இங்கிருந்தபடி விசாரிப்பதும் சரியில்லை. ராஜசேகரன் என்பவர் மட்டுந்தான் தன் நிலத்தைப் பற்றி பிரமாதமாய் நமக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பினார்.’
‘அந்த ஊர் பேர்... தேன் முகட்-இல்லையா?"
‘அமிர்த மலையாம் - தேனிங்கற ஊர் பக்கம் இருக்கும் மலைப்பகுதி. அதன் உச்சிப் பகுதியின் பேர் ‘தேன் முகடு’ - அதில் படிக்காத பாமர மலைவாழ் மக்கள்… தேன் சேகரித்து, விற்று வாழ்றாங்க. பாதை கூட சரிவரப் போடப்படாத பகுதி. வெள்ளைக்காரங்க வந்து பார்த்தால் அந்த பூலோக சொர்க்கத்திலேயே தங்கிடுவாங்கன்னு தடயுடலாய் எழுதியிருக்கார்.’
மேலும் தள்ளிப் போட வேணாம்னு பார்த்தால், கொஞ்சம் தமிழ் தெரிஞ்ச நம்மாள் வேலையை விட்டுட்டான்...
நான் வேணும்னா போயிட்டு வந்துடவா முகேஷ்?
என்று முந்திரிக் கொட்டையாய் கேட்டது இவளேதான்.
பொது ஜன புழக்கமில்லாத மலைப்பகுதிக்கு பெண்ணான நீ தனியே போவது…?
இவளுக்குச் சிலிர்த்து கொண்டது!
மும்பையின் உள்ளூர் ரயில்களில் 33 சதவிகிதமேனும் தொற்றிக் கொண்டு விரைவது பெண்கள்தான். வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள் இரவு, மறுநாள் சமையலுக்கான காய்கறிகளை வாங்கிக் கொண்டு போவதும், மறுநாள் பறித்த புதுமலர் போல ‘பளிச்சென்று வேலைக்குக் கிளம்புவதும் எத்தனை உற்சாகமான காட்சி?
தவிர இப்போது விமான கட்டணங்கள் அதிகமில்லை. கைக்குள் ஒரு ‘ஸெல்லோடு ‘உள்ளங்கையில் உலகம்’ என்று அனைவரும் இருக்கும் இந்த நாளில் ஆண், பெண் என்று ஏன் பிரித்து பேசுவது?
யோசித்த அத்தனையையும் இவள் கொட்டி தீர்த்த பின்பும் முகேஷ் மித்தல் உடனே தலையாட்டிவிடவில்லை.
உங்கப்பா சம்மதிப்பாரா?
என்று நழுவி கொண்டான்.
என்னை வேலைக்கு அனுப்பினதே அவர்தானே?
அரசு மின்துறையில் அதிகாரியாய் இருந்த அப்பா இவளை எதிலும் ஊக்குவித்தவர்.
‘பெண்ணை ஒரு பொருள் போல நடத்துவதால்தான் எல்லா துன்பங்களும்!’ - இது என் அபிப்ராயம் மட்டுமல்லடா வர்ஷி. பெர்னாட் ஷா சொன்னதும் கூட! உனக்கு உகந்ததைப் படி; செய் - வாழ்வை ரசித்து வாழணும்டா’ என்றவராச்சுதே?!
தவிர எனக்குத் தமிழ் தெரியும் முகேஷ். அங்கே என்னால் சுலபமாய் சமாளிக்க முடியும்
- சற்று அலட்சியம் கலந்தே அறிவித்தாள்.
அதெல்லாம் சரி. அம்மா இல்லாத பெண்ணை பெயர் தெரியாத ஊருக்கு அனுப்ப உங்க அப்பா கண்டிப்பாய் யோசிப்பார். மிஸ்டர். ராஜசேகர் தன் மலைகிராமத்தை வந்து பார்க்கச் சொல்லி அனுப்பிய ஈ-மெயில்களில் குறிப்பிட்டிருந்த ‘பேசி’ எண்ணை உன்னால் தொடர்பு கொள்ளவே முடியலைன்னு நீ சலிச்சுக்கலை? ‘உள்ளங்கை உலகத்தில் இன்னும் பல கிராமங்கள் அடங்கவில்லை வர்ஷி! தொடர்பு வசதிகள் இதற்கு மேலும் நுணுக்கமாகணும். ஒருவேளை எனக்கு ரெண்டு, மூணு நாள் ஒதுக்க முடியும்னு யாரேனும் நம் ஆண் ஊழியர் சொன்னால், நீ அவர்களோடு உன் ஆசைக்கு போய் வருவதில் எனக்கு ஆட்சேபணையில்லை,
- என்று முகேஷ் சொன்னது இவளது கோபத் தீயில் விறகு சேர்த்தால், அப்பா அதில் தாராளமாய் எண்ணை விட்டார்!
அதென்னம்மா ‘அமிர்த மலை’, ‘தேன்முகடு?
நான் தெற்கே வளர்ந்தவன்தான் - எங்காதில் படாத பேரால்ல இருக்குது? உங்காதுல யாரோ பூ சுத்தறான் போல…"
அப்பா! இன்டர்-நெட் மூலம் அதெல்லாம் சரி பார்க்காமலா நான் பேசுவேன்? ஏறக்குறைய பழங்குடி மக்கள் வசிக்கிற மலை கிராமங்களப்பா. சாலை, தொடர்பு வசதிகள் கம்மி...
"அதான் நீ போக வேண்டாங்கறேன். நீ இப்படி பேசும் போதுதான் எனக்கு