Janani... Jagam Nee...
4.5/5
()
About this ebook
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.
15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.
Read more from Muthulakshmi Raghavan
Puram Solla Virumbu Rating: 4 out of 5 stars4/5En Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5Nee Engey... Rating: 5 out of 5 stars5/5January Maatham Kanavugal Pookkum Rating: 4 out of 5 stars4/5Uzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5Kothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Kandalum Pothum Kangal Rating: 5 out of 5 stars5/5Sollathan Ninaikkirean Rating: 3 out of 5 stars3/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Malai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratingsNilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsManam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Markazhi Paniyil..! Rating: 0 out of 5 stars0 ratingsMellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsThanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Mounamana Neram... Rating: 4 out of 5 stars4/5Nenjathiley Nee Netru Vandhai Rating: 4 out of 5 stars4/5Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Kuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Mugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsNila Veliyil Rating: 4 out of 5 stars4/5Poove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Kalvanai Kaadhali Rating: 4 out of 5 stars4/5Sollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Neethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratingsMannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Nee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratingsNizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratings
Related to Janani... Jagam Nee...
Related ebooks
Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Puthithaga Oru Bhoopalam Rating: 4 out of 5 stars4/5Unmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsUyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsThanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Kanavugal Manathiley Malaruthey... Rating: 5 out of 5 stars5/5Manjal Veyil Maalai Neram... Rating: 4 out of 5 stars4/5Kanni Rasi Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Kaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Azhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Poi Solla Koodathu Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Poongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsUyire Unaithedi Rating: 4 out of 5 stars4/5Idhayathin Saalaram Rating: 3 out of 5 stars3/5Kaadhalagi Kasinthurugi... Rating: 0 out of 5 stars0 ratingsAgni Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsKothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Nathi Engey Pogirathu...? Rating: 4 out of 5 stars4/5Agal Vilakku... Rating: 1 out of 5 stars1/5Kaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Nilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsKaanalvari Kavithai Rating: 4 out of 5 stars4/5Kandalum Pothum Kangal Rating: 5 out of 5 stars5/5Inithaga Oru Vidiyal Rating: 4 out of 5 stars4/5Kuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Nila Veliyil Rating: 4 out of 5 stars4/5Thennam Paalai... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Janani... Jagam Nee...
3 ratings0 reviews
Book preview
Janani... Jagam Nee... - Muthulakshmi Raghavan
https://www.pustaka.co.in
ஜனனி... ஜெகம் நீ...
Janani... Jagam Nee...
Author:
முத்துலட்சுமி ராகவன்
Muthulakshmi Ragavan
For more books
https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
வெயிலும் இல்லாத.. குளிரும் இல்லாத இதமான வெப்பநிலை கோயம்புத்தூரின் சிறப்பம்சங்களில் ஒன்று என்ற நினைவுடன் மருதமலையிருக்கும் திசையை திரும்பிப் பார்த்தாள் ஹரிணி.
பசுமையான செடி கொடிகளுடன் காணப்பட்ட மலையுச்சியில் தெரிந்த கோவிலைக் கண்டதும் அவள் கைகள் தானாக கன்னத்தில் போட்டுக் கொண்டன.
'இன்னைக்கு சாயங்காலம் முருகனை சேவிக்கப் போகணும்' அவள் மனதில் நினைவு ஓடியது. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. அவளைப் பெற்றவர்கள் அவளை வளர்த்த விதம் அப்படி.
அம்மாவை கும்பிட்டுக்க...
அவர்கள் குடியிருந்த ஜிசிடி ஹவுஸிங் யூனிட்டில் இருக்கும் விணு துர்க்கையம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று அம்பாளைக் காட்டி வணங்கச் சொல்வார்கள்.
ஹரிணியும் அப்படியேதான் வணங்குவாள்.
அம்மா.. பக்கத்து டேபிள்ள இருக்கிற பிரேமா என் ஸ்கேலை திருடிட்டாம்மா.. நீதான் அவளைக் கேட்டுக் கொடுக்கணும்..
என்று மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது செய்ய ஆரம்பித்த பிரார்த்தனை.
அம்மா.. இந்த முறையாவது கிளாஸ் பர்ஸ்ட்டா நான்தான் வரணும்..
என்று வளர ஆரம்பித்தது.
நாளடைவில் அவளது தினப்படி செயல்களை அம்மனிடம் ஒப்பிக்காமல் அவள் தூங்கப் போவதில்லை என்று ஆனது.
ஹரிணிக்கு விஷ்ணு துர்க்கையம்மனே எங்கும் நிறைந்தவளாக மனம் நிறைந்தாள்.
தினமும் விஷ்ணு துர்க்கையம்மனிடம் மனம் விட்டுப் பேசுவாள் ஹரிணி... கல்லூரியில் பில்ட்-அப் கொடுக்கும் ப்ரீதியிலிருந்து.. கடலை போட தொடுத்து வரும்.. ரமேஷ் வரை... விஷ்ணு துர்க்கையம்மனிடம் சொல்லாத செய்திகளே அவளிடம் இருந்ததில்லை.
'அவ என்ன பெரிய இவளா? என்னைக் கண்டாலே இங்கிலீஷில் பீட்டர் விடுறாம்மா. சும்மா சும்மா.. லண்டன் பாரிஸ்ன்னு பீலா விடறாம்மா.. அவளிடம் பணமிருந்தா அவள் மட்டுக்கு.. எனக்கென்ன வந்தது..? நான் எதில குறைஞ்சு போனேன்? பார்த்துக்கிட்டே இரு. ஒரு நாள் இல்லைன்னா ஒருநாள் அவளை நல்லா நாலு வார்த்தை கேட்டு விடப் போறேன்...'
நெற்றியில் குங்குமத் தீற்றுடன்... தலைக்குக் குளித்த முடியைத் தளர்வாகப் பின்னலிட்டு... கைகூப்பி.. கண் மூடி.. பக்திப் பரவசமாக முணுமுணுப்பாய் வேண்டிக் கொள்ளும் ஹரிணியைப் பார்க்கிறவர்கள். அவள் என்னவோ அம்பாள் பாசுரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைப்பார்கள்.
அவள் மனதில் இப்படிப்பட்ட ஒப்பித்தல்கள் இருக்கிறது என்று யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
'ஸ்கூட்டி ரிப்பேர்ம்மா.. பஸ் ஸ்டாண்டுக்குப் போனா.. இந்த ரமேஷ் வந்து தள்ளி நின்னுக்கிட்டு போஸ் கொடுக்கிறான். போதாக்குறைக்கு அவனோட ஒன்றரைக் கண்ணை மறைக்க கூலிங் கிளாஸை வேற எடுத்து ஸ்டைலா மாட்டிக்கிறான். பத்திக்கிட்டு வருது. அவன என்னதான் செய்யலாம்...?'
அம்மனிடம் அவள் இப்படிப்பட்ட ஆலோசனையைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாதவராக அவள் முன்னால் தீபாராதனைத் தட்டை நீட்டும் பாலசுப்பிரமணிய குருக்கள்.
ஆயிரம்தான் சொல்லுங்க. நம்ம குவார்டர்ஸியே ஹரிணிக்கு இருக்கிற பக்தி யாருக்கும் இருந்ததில்ல. என்னமா மனசுக்குள்ள அபிராமி அந்தாதியை சொல்றா
என்று மகிழ்ந்து போவார்.
ஹரிணிக்கு எந்த அந்தாதியும் தெரியாது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம்.. மனம் விட்டுப் பேசும் இறை வழிபாடு மட்டும்தான்.. அவளுக்கும் தெய்வங்களுக்கும் இடையே நடக்கும் மானசீக உரையாடல்களுக்கு இடைதரகர்கள் கிடையாது. நேரடி பேச்சு வார்த்தைதான்.
'முருகா..! யாமிருக்க பயமேன்னு வழி நெடுக உன் வேலிருக்கு.. உன்னை நம்பித்தான் கும்பிட்டுப் போறேன். நீ சொன்ன சொல்லைக் காப்பாத்து..' என்று மருதமலை முருகனிடமே நியாயம் கேட்பவள் அவள்.
ஒரு புள்ளி மானைப் போலத் துள்ளித் திரியும் அவளின் மீது வாத்சல்யம் காட்டாத ஆளே அந்த ஜிசிடி குவார்டர்ஸில் கிடையாது.
இந்தா ஹரிணி... மல்லிகைப் பூவை தொடுத்து வைச்சிருக்கேன். நாளைக்கு காலேஜ் போகிறச்சே தலைக்கு வச்சுட்டுப் போ..
என்று கோமளம் மாமி பூவைக் கொடுப்பாள்.
எக்ஸிபிஸன் போயிருந்தேன் ஹரிணி.. இந்த ஹேண்ட் பேகில ஹேண்ட் வொர்க் அழகா இருந்தது. உடனே எனக்கொன்னும்.. உனக்கொன்னுமா ரெண்டு பேக் வாங்கிட்டேன்.. வைச்சுக்க..
எதிர் பிளாட்டில் குடியிருக்கும் கேத்தரின் புதிய ஹேண்ட் பேக்கை நீட்டுவாள்.
ஆடி சேல் போட்டிருக்காங்கன்னு எங்க வீட்டில கூப்பிட்டுக்கிட்டுப் போனாரா...? போன இடத்தில எங்க சுகந்திக்கு சுடிதார் வாங்கினோம். கூடவே ஹரிணிக்கும் ஒண்ணை எடுத்துட்டு வந்தேன். பிடி ஹரிணி
பக்கத்து வீட்டு ருக்மணி புதிய துணி வகையை ஹரிணியின் கையில் திணிப்பாள்.
இவர்களுக்கெல்லாம் பதிலுக்கு ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து விடுவாள் சாந்தி. அது முக்கியமல்ல. அத்தனை பேரின் இதயத்திலும் சாந்தியின் மகள் ஹரிணிக்கென்று தனித்த ஒரு இடமிருந்தது. அது மட்டும்தான் இங்கு முக்கியம்.
சாந்தியைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட அன்பழகன் கூட.. வீட்டுக்குத் திரும்பும்போது.. 'சாந்தி..' என்று மனைவியை அழைப்பதில்லை.
ஹரிணிக் கண்ணு...
என்று மகளை அழைத்தபடிதான் வீட்டுக்குள் வருவார்.
'ஹரிணிக் கண்ணு' என்பது.. 'ஹரிணி செல்லம்.'
'ஹரிணி குட்டி...' 'ஹரிணிம்மா..' என்று நாளுக்கொரு விதமாக மாறுமே யொழிய.. 'ஹரிணி' என்ற அடிப்படை அழைப்பு என்றுமே மாறியதில்லை.
அவர்கள் வாழ்ந்த அந்த இனிமையான வாழ்வில் அந்த வீட்டின் இளவரசியாக ஹரிணி இருந்தாள்.
அவர்கள் நடுத்தர வர்க்கம்தான். ஆனால் அவர்களிடம் மகளுக்கு கொட்டிக் கொடுக்க.. அள்ள அள்ளக் குறையாத பாசமும்.. அன்பும் இருந்தது. அவர்களும் வாரிக் கொடுக்கும் வள்ளலாக அதை மகளுக்கு வழங்கிக் கொண்டே இருந்தார்கள்.
2
வேணாம் ப்ரீதி.. என் வம்புக்கு வராதே...
எரிச்சலுடன் எச்சரித்தாள் ஹரிணி.
அந்த ப்ரீதி அதை காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. அவளின் விழிகளில் ஆணவமும்.. அகம்பாவமும் நிரம்பியிருந்தன.
உன் வம்புக்கு நான் வரேனா...? எனக்கெல்லாம் நீ இணையான ஆளா?
அதச் சொல்லு.. ஒவ்வொரு செமஸ்டரிலும் கிளாஸ் பர்ஸ்ட் வாங்கற நானும்.. கடைசி ரேங்க் வாங்கற நீயும் எப்படி இணையாயிருக்க முடியும் ப்ரீதி? இது உனக்கும் தெரிஞ்சிருக்கிறதில எனக்கு சந்தோசம்தான்.
ஹரிணியின் அமர்த்தலான பதிலில் அவர்களைச் சுற்றியிருந்த வகுப்புத் தோழிகள் நகைத்தனர். அதைக்கூட ப்ரீதியால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால்.. அந்தக் கல்லூரியின் ஹீரோவாக கருதப்படும் கதிரவனும் அதைக் கேட்டு விட்டு நகைத்ததைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மைன்ட் யுவர் வெர்ட்ஸ் ஹரிணி..
அவள் சீறினாள்.
ஏய்ய்.. சும்மா நிறுத்துடி. நான் பாட்டுக்கு.. நானுண்டு என் படிப்புண்டுன்னு இருக்கறேன்.. நீதானே வலிய வம்புக்கு வந்த...?
ச்சை.. இதைத்தான் மிடில் கிளாஸ் புத்திங்கிறது.
எதைச் சொன்னால் ஹரிணிக்கு கோபம் வருமோ.. அதைச் சொன்னாள் ப்ரீதி. அவள் கோயம்புத்தூரில் கொடிகட்டிப் பறக்கும் மில் ஓனரின் மகள். வேளாண்மை படிப்பில் அவளுக்கு நாட்டம் என்பதால் பொறியியல் கல்லூரியை விட்டு.. கோவை வேளாண்மை கல்லூரியில் அவளைச் சேர்ந்திருந்தார் அவளுடைய அப்பா.
கிளாஸைப் பத்தியெல்லாம் நீ பேசாதே.. முதலில் கிளாஸ் ரூமில் எப்படி பிஹேவ் பண்றதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா கிளாஸ் ரூமுக்கு வா... மிடில் கிளாஸாம். மிடில் கிளாஸ்.. நீ ஹை கிளாஸ்ன்னா காலேஜை உன் வீட்டுக்கு வரவழைச்சுப் படிக்க வேண்டியதுதானே.. உன்னை யாரு இங்கே வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சது?
ஹலோ.. ஐ லவ் அக்ரி.
"எரிச்சலைக் கிளப்பாதே.. படிக்க வந்தா