சின்னக்கிளி
By R.Sumathi
()
About this ebook
திலகவதி அதிர்ச்சி நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
அந்தப் பெண் அவன் நெஞ்சில் பலமாய் அமர்ந்து கொண்டு முகத்தில் பத்ரகாளியின் கோபத்தை சுமந்து கொண்டு விரல்களை இரும்பாக்கி நெரித்தாள். கூடவே சத்தமாக கத்தினாள்.
"வெறி புடிச்ச நாயே... ஒழிடா. பொம்பளைங்க வாழ்க்கையை கெடுக்கிறதுக்குன்னே அலையறீங்களாடா... பன்னிப் பயலே..."
கொலைவெறி அவளின் கண்களில் மின்ன அவனை நெரித்து கொண்டிருந்தவள் சட்டென அவனை விட்டாள். அவனை இப்படியும் அப்படியுமாகப் புரட்டினாள். மூக்கில் கை வைத்து பார்த்தாள். அவளின் முகத்தில் கொலைவெறி மறைந்து ஏதோ ஒரு அதிர்ச்சி உண்டாகியது.
அதிர்ச்சியில் உறைந்தபடி நின்றிருந்த திலகவதியிடம் எழுந்து வந்தாள். சுடிதாரின் மேல் தாவணியை எடுத்து முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை அழுத்தமாய் துடைத்தாள். திலகவதியைப் பார்த்து சிரித்தாள். சொன்னாள்.
"அவன் செத்துட்டான்."
பக்கென அடிவயிற்றில் பற்றிக் கொண்டதைப் போல் அதிர்ந்தாள் திலகவதி.
'செத்துட்டானா? ஐய்யோ... கொலையா?' அவள் நடுங்கினாள்.
ஆனால் அதே சமயம் இந்தப் பெண் மட்டும் வராமல் இருந்திருந்தால் தன்னுடைய கற்பு இந்த மிருகத்திடம் போயிருக்கும் என்று நினைத்தபோது மனம் அந்தப் பெண்ணை நன்றியுடன் நினைத்தது. மறுகணம் பயந்து பொங்கியதுஆள் அரவமற்ற பிரதேசம், கொலை செய்யப்பட்ட மனிதன். முன் பின் தெரியாத ஒருத்தி. கெட்டுப்போன கார்.
நான் வீடு போய் சேருவேனா?
"கொலை பண்ணிட்டீங்களா?" அவள் குரல் வெளியே வராமல் நடுக்கத்துடன் கேட்டாள்.
அவள் தலையசைத்தாள். லேசாக முகத்தில் தெரிந்த அதிர்ச்சியையும் பயத்தையும் சட்டென மறைத்தாள்.
"ஆமா. கொலை பண்ணிட்டேன். சரி... நடந்தது நடந்துட்டுது. யாராவது இந்தப் பக்கம் வர்றதுக்குள்ளே இந்த நாயை மறைக்கணும். உன் கார்ல எடுத்துட்டுப் போலாமா?"
"என் கார் கெட்டுப் போனதாலதான் நான் இங்க மாட்டிக்க வேண்டியதாகிப் போச்சு."
"கார் கெட்டுப்போயிடுச்சா? நான் பார்க்கிறேன். முதல்ல இவனை மறைப்போம். ஒரு கை கொடு." என்றாள்.
திலகவதி நடுக்கத்துடன் குனிந்தாள். அவன் முகத்தை அந்த அரைகுறை வெளிச்சத்தில் பார்த்ததும் அடி வயிற்றைக் கலக்குவதைப் போலிருந்தது. பெரிய விழிகள் இரண்டும் பிதுங்கி வழிந்தது. வாய் திறந்திருந்தது. பெரிய பெரிய பற்கள் கோரமாய்த் துருத்திக் கொண்டு தெரிந்தன.
கைகளை மெதுவாய் அவன் தோளின் மீது வைத்து தூக்கினாள். கைகள் வெடவெடவென நடுங்கின. தூக்க முடியவில்லை. அந்தப் பெண் இவளுக்குக் கட்டளை இட்டாள்.
"நீ காலைப்பிடி. உன்னால் முடியாது" என்று தோள் பக்கத்திற்கு அவள் வந்தாள். பலத்தையெல்லாம் திரட்டி பத்து எருமை கனம் இருந்த அவனைத் தூக்கினாள். உடைகள் நனையும்படி வியர்த்துவிட்ட திலகவதி காலைப் பிடித்துத் தூக்கினாள்.
"அந்த செடிகிட்ட கொண்டுபோ" என்றாள் அவள்.
இருவரும் புதர்போல் மண்டிக் கிடந்த ஏதோ ஒரு செடி இருந்த இடத்திற்கு அவனைத் தூக்க முடியாமல் தூக்கிச் சென்றனர். செடிகளின் மறைவில் அவனைக் கிடத்திவிட்டு நிமிர்ந்த போது இருவரும் குளித்ததைப் போல் நனைந்திருந்தனர். அவனை அங்கே போட்டுவிட்டு கார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்."எனக்காக, ஒரு கொலையை செஞ்சிருக்கீங்களே..." என கண்கலங்க திலகவதி ஆரம்பிக்க அவள் இடைமறித்தாள்.
"இப்ப அதுவா முக்கியம்? உடனே பிணத்தை நாம மறைக்கணும். காரை நான் சரி பண்றேன்." சொல்லிக் கொண்டே அவள் காரின் முன் பக்கத்தைத் திறந்து குனிந்து அவசர அவசரமாகவும், சுறுசுறுப்பாகவும் ஏதேதோ செய்தாள். சில துளி வியர்வைகளை செலவழித்து நிமிர்ந்தாள்.
"சரியாயிட்டுன்னு நினைக்கிறேன்" என்றபடி காரின் கதவைத் திறந்து ஏறி அமர்ந்து இயக்கினாள். கார் இயங்கத் தொடங்கியது. திலகவதியின் அருகே வந்தாள். அவள் சிலைபோல் நிற்க அவளின் தோளில் கை வைத்து அழுத்தினாள்.
"யேய்... என்ன சிலையாட்டம் நின்னுட்டே வா... அவனைத் தூக்கி காருக்குள்ளப் போட்டுட்டு போய் கொஞ்ச தூரத்துல ஒரு ஏரி இருக்கு அதுல போட்டுடுவோம்."
திலகவதி அவள் சொன்னதற்கெல்லாம் கட்டுப்படுபவளைப் போல் இயங்கினாள். இருவரும் மறுபடியும் சிரமப்பட்டு அந்த பிணத்தை தூக்கி வந்து காரின் பின் சீட்டில் கிடத்தினர்.
"நீ காரை எடு. நான் என் வண்டியில் முன்னால போறேன். நீ பின்னால வா" என்றாள்.
திலகவதி பிழியும் இதயத்துடன் தலையாட்டினாள். காருக்குள் ஏறி அமர்ந்து இயக்கினாள். கைகள் நடுங்கியது. ஓட்டுவதற்கே சிரமமாக இருந்தது. அந்தப் பெண் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தான் வந்த பாதையிலேயே சென்றாள். திலகவதி பின் தொடர்ந்து மெதுவாகச் சென்றாள்
Read more from R.Sumathi
ஒருவா் மனதில் ஒருவரடி! Rating: 0 out of 5 stars0 ratingsகுங்குமக் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் மின்னல் Rating: 0 out of 5 stars0 ratingsபார்த்தால்... காதல் வரும்! Rating: 0 out of 5 stars0 ratingsதாய்ப் பறவை Rating: 0 out of 5 stars0 ratingsஉன் அருகில்... உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பு மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஎப்படி சொல்வேனடி! Rating: 0 out of 5 stars0 ratingsஇணையான இளமானே Rating: 0 out of 5 stars0 ratingsபேசும் உள்ளம் பேசாத கண்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லைக் கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsஊஞ்சலாடும் நெஞ்சம் Rating: 0 out of 5 stars0 ratingsநிலவே முகம் காட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாளனே... Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருப்பேன் கண்ணா Rating: 0 out of 5 stars0 ratingsஉன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsநீங்காத எண்ணம் ஒன்று Rating: 0 out of 5 stars0 ratingsகூடு மறந்த குயில்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் சுவடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsஎன் உயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsஉறவுகள் சிறுகதை Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணோரம் மின்சாரம் Rating: 0 out of 5 stars0 ratingsநெஞ்சுக்கு நீ அழகு..! Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் வருவாளா? Rating: 0 out of 5 stars0 ratingsமனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsதீயைச் சுடும் தென்றல்! Rating: 0 out of 5 stars0 ratingsஓரிடம் நீ தருவாய் Rating: 0 out of 5 stars0 ratingsபோய் வா... நதியலையே..! Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த நெஞ்சம் என்னிடம்... Rating: 0 out of 5 stars0 ratings
Related to சின்னக்கிளி
Related ebooks
Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Anandha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Iranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratingsSoozhnilaik Kaithigal Rating: 0 out of 5 stars0 ratingsIndru Naan... Naalai Nee... Rating: 0 out of 5 stars0 ratingsRasathee Rating: 0 out of 5 stars0 ratingsPriyangaludan Mukilan Rating: 5 out of 5 stars5/5Paisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Thodathoda Malarnthathenna...! Rating: 0 out of 5 stars0 ratingsUrave.. Unai Thedi.. Rating: 5 out of 5 stars5/5Puthu Vidiyal Thedum Pullinangal Rating: 0 out of 5 stars0 ratings27 Adi + Azhagi Rating: 0 out of 5 stars0 ratingsSigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyil Kidantha Oru Panimalar Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Kuttram Muttrum Kuttram Rating: 0 out of 5 stars0 ratingsKanneerai Thodatheergal Rating: 0 out of 5 stars0 ratingsஇனியெல்லாம் சுகமே..! Rating: 0 out of 5 stars0 ratingsPatchai Malai Marmam Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Thendral... Rating: 0 out of 5 stars0 ratingsரத்தம் சிந்தும் ரோஜாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsRattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Roja Iru Raja Rating: 0 out of 5 stars0 ratingsAnjuvatharkku Manju Rating: 5 out of 5 stars5/5Julie Kodutha Vilai Rating: 0 out of 5 stars0 ratingsKettathu Yaarale Rating: 5 out of 5 stars5/5Oru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsOliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsஉறவுகள் சிறுகதை Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for சின்னக்கிளி
0 ratings0 reviews
Book preview
சின்னக்கிளி - R.Sumathi
1
திலகவதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படி நடக்கும் என்று.
மிகவும் மோசமான அடர்ந்த மரங்கள் அடங்கிய மனித நடமாட்டம் அற்ற அந்த சாலையில் தன்னுடைய கார் காலை வாரி விடும் என்று நினைக்கவில்லை.
பகலாக இருந்தால் கூடப் பரவாயில்லை. இரவு. யாரோ ஒரு ஓவியன் கைதவறி கருப்பு வண்ணத்தைக் கொட்டியதைப் போல் இருள் அவளுடைய காரை கட்டிப்பிடித்துக் கொண்டது. தூரத்தே ஒரு விளக்குக் கம்பம் எரிந்து கொண்டிருந்தது.
கையைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு பத்து. காருக்குள் சிதறியிருந்த ஒளிவெள்ளத்தில் அழகு வெள்ளமாய் அமர்ந்திருந்த அவளை இப்பொழுதே வர்ணித்தால்தான் உண்டு. இன்னும் சில மணித்துளிகளில் அவள் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ளப் போகிறாள். அப்பொழுது அவளழகை வர்ணிக்க முடியாது.
இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த இளமயிலுக்கு இருபது அல்லது இருபத்தியோரு வயதுதான் இருக்கும். இளமை இஷ்டத்திற்கு செழித்திருந்தது. அடர்ந்த கூந்தலை அழகாக வெட்டி தோளில் புரளவிட்டிருந்தாள். நேர்த்தியாக வெட்டப்பட்ட முன்னுச்சி முடிகள் புருவத்தை அடிக்கடி நலம் விசாரித்தன. விரல்கள் வில்லனாய் மாறி விரைவில் விரட்டின.
குற்றால அருவியின் குளிர்ச்சியைச் சுமந்த விழிகளில் தற்சமயம் குழப்பம் குழுமியிருந்தது. கூடவே விசன ரேகைகள் விழியில் விளைந்திருந்தது. வாலிப உள்ளத்தை வசப்படுத்தும் வாகான மூக்கு, சிரிக்காமல் கூட சிந்தையை அள்ளும் சின்ன இதழ்கள் சிரித்தால் மனம் மயங்கும். சிரிக்கும் நிலையில் அவள் இல்லை. எதிராளியைத் திணற வைக்கும் இளமை கவர்ச்சியாய் கவ்விப்பிடித்த சட்டையுடன் இருந்தது. ஆரஞ்சு வண்ணப் புடவை, மாலை நேர மேகமூட்டத்தைப் போல் இருந்தது. வழவழப்பான வளைந்த இடை உட்கார்ந்திருப்பதால் மடிப்புகளை உருவாக்கியிருந்தது.
‘ச்சை... இது என்ன கஷ்ட காலம். இப்படி நடுவழியில் உயிரை வாங்குதே. என்னைக்குமே இப்படி நடந்ததில்லையே. ஏற்கனவே தாமதம், அண்ணன் வேற நல்லாத் திட்டப் போகுது. எல்லாம் பிரபுவால வந்தது.’
மனதிற்குள் நொந்து கொண்டவளாய் காரைவிட்டு வெளியே வந்தாள். கீழே இறங்கியதும் ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்தவள் நெஞ்சில் முதன்முறையாய் அதிர்ச்சியை மெதுவாய் வாங்கினாள். சுற்றிலும் இருள். காரின் முன்பக்க விளக்கொளியினாலும் தூரத்து விளக்கினாலும் சாலை தெரிந்தது. வலது பக்கம் நெல்விளையும் வயல். பம்ப் செட்டிலிருந்து தண்ணீர் இறையும் ஓசை அந்த அமைதியான சூழ்நிலையில் ஒரு பயத்தை பக்க விளைவாய் உண்டு பண்ணியது. இடதுபுறம் திரும்பினாள். இன்னும் அதிர்ந்தாள். பெரிய சவுக்குத் தோப்பு. உயர உயரமான அடர்ந்த மரங்கள் கிராமியத் தோற்றம் கொண்ட அந்தப் பகுதி கிலியை உண்டாக்கியது. சட்டென வியர்த்தது. உடனே இந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேகமாக காரின் முன் பக்கம் வந்தாள். பானெட்டைத் திறந்தாள் அவசர அவசரமாக ஏதேதோ செய்தாள். பின் மூடினாள். உள்ளே வந்து அமர்ந்து இயக்கினாள். சத்தம்தான் வந்தததே தவிர கார் கிளம்பவில்லை.
‘ச்சை... இப்படி ஆகிவிட்டதே எல்லாம் பிரபுவால வந்தது’ அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் மனதில் அவன் முகம் வந்து நின்றதும் அந்தக் கோபமும் மறைந்து போனது. அந்த சூழ்நிலையும் மறந்து போனது.
பிரபு அவளின் காதலன். அவளுடைய அண்ணன் சிவஜோதிக்கு நண்பன். வியாபாரத்தில் இருவரும் பங்குதாரர்கள். அண்ணனின் நண்பனாய் வந்தவன் அவளுக்கும் நண்பனாகி இறுதியில் காதலனாய் மாறிவிட்டான். அதிலும் இந்த ஆறு மாதமாய் அவளும் அவனும் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அவனைக் காணாமல் அவளால் ஒரு நாளைக்குக் கூட இருக்க முடிவதில்லை. இப்பொழுது கூட அவனை அவன் வீட்டில் சென்று பார்த்துவிட்டு வருகிறாள். இன்று ஞாயிற்றுக் கிழமை அதனால் கம்பெனி விடுமுறை. அவன் வீட்டில் இருப்பான் என்று கிளம்பினாள். அவனோடு பேசிக் கொண்டும், அரட்டையடித்துக் கொண்டும், சின்னச் சின்ன காதல் விளையாட்டுக்கள் விளையாடிக் கொண்டும் இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை.
பயத்தை தரும் அந்த சூழ்நிலையிலேயும் காதலனை பண்ணியபோது அவளுக்குள் ஒரு புது கிளர்ச்சி உருவானது.
‘அண்ணனிடம் காதலை கூடிய சீக்கிரத்தில் வெளிப்படுத்திவிட வேண்டும். அண்ணன் என்ன சொல்லுவான்? கண்டிப்பாய் மறுக்க மாட்டான். காரணம் பிரபு அவனுடைய நண்பன். தொழில்