Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal!
Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal!
Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal!
Ebook132 pages48 minutes

Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்று இருக்கும் நிலையிலிருந்து இன்னும் மேல்நிலைக்கு முன்னேற விரும்புவதோடு தனது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோரையும் ஒவ்வொருவரும் முன்னேற்ற வேண்டும். இந்த நவீன யுகத்தின் வேகமான வாழ்க்கையில் சீக்கிரமாகவும் இதைச் செய்து சாதிக்க வேண்டும். இவற்றிற்குச் சில அரிய பண்புகள் தேவை. இவற்றை வாழ்ந்து காட்டி சாதனைகள் படைத்தவர்கள் பலர்.

இன்னல்களைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை; இருக்கின்ற சூழ்நிலையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்கவில்லை; சமுதாயத்தைக் குறை கூறவில்லை. தங்களது இலட்சியத்தை வகுத்துக் கொண்டு முன்னேறினார்கள். மற்றவர்கள் அதிசயித்த போது அவர்களையும் முன்னேற்றினார்கள். முன்னேற உத்வேக உணர்வை ஊட்டினார்கள்.

ஹோவர்ட் கெல்லி, ரொனால்டோ, ஹெலன் கெல்லர், தசரத் மஞ்சி, துளஸி கௌடா, நெப்போலியன் உள்ளிட்ட சாதனையாளர்கள் பலரை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. உண்மைச் சம்பவங்கள், அழகிய கதைகள் ஆகியவற்றுடன் ஜீனியஸ் ஆக வழி, மூளை ஆற்றலைக் கூட்ட வழிகள் உள்ளிட்ட நல்ல பல கருத்துக்களையும் இந்த நூல் 31 அத்தியாயங்களில் தருகிறது.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580151009028
Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal!

Read more from S. Nagarajan

Related to Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal!

Related ebooks

Reviews for Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முன்னேறவும், முன்னேற்றவும் சில கதைகள், சம்பவங்கள், கருத்துக்கள்!

    Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. ஒரு டம்ளர் பால்!

    2. ரொனால்டோவின் நன்றி!

    3. கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி!

    4. உலகையே அதிர வைத்த ஒரு விவசாயி!

    5. கருகிய காலன் கரிகாலன் தான்; ஆனால் ஓடி உலக சாதனை படைத்தான் அவன்!

    6. ஹெலன் கெல்லர் : ஒரு அபூர்வமான பெண்மணி!

    7. தசரத் மஞ்சி - மலையை நகர்த்திய மா மனிதன்!

    8. விருக்ஷ தேவி துளஸி கௌடாவிற்கு பத்ம ஸ்ரீ பட்டம்!

    9. ஒரு புதிய பென்சில்!

    10. இரண்டு கூழாங்கற்கள்!

    11. ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுயசரிதை!

    12. உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?

    13. ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

    14. நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை!

    15. நெப்போலியனின் வயது!

    16. இறைவனிடம் அன்பு!

    17. முடா! முரா! முரி!

    18. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி?

    19. இருந்தும் இறந்தவர் யார், யார்? - 1

    20. இருந்தும் இறந்தவர் யார், யார்? - 2

    21. முதுகுச் சுமையில் யார்?

    22. சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

    23. அருமையாக இந்த நாள் கழிந்ததா?!

    24. தங்கம் அல்ல, மனிதர்களே தேவை!

    25. மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!

    26. மேதை ஆக ஏழு படிகள்!

    27. கெடுதலிலும் நல்லதையே பார் : இறைவனின் திட்டம் என்ன என்று தெரியாது!

    28. வெற்றி பெற்ற மேதைகள் கடைப்பிடிக்கும் 10 விஷயங்கள்!

    29. எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!

    30. வால்டேர் வளர்த்த கழுகு!

    31. சின்னச் சின்ன டிப்ஸ்! பெரிய பலன்கள்!!

    என்னுரை

    இன்று இருக்கும் நிலையிலிருந்து இன்னும் மேல் நிலைக்கு முன்னேற விரும்பாதார் தான் யார்? தனது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோரை முன்னேற்ற விரும்பாதார் தான் யார்?

    முன்னேற வேண்டும்; முன்னேற்றவும் வேண்டும் - இந்த நவீன யுகத்தின் வேகமான வாழ்க்கையில் சீக்கிரமாகவும் இதைச் செய்து சாதிக்க வேண்டும்.

    இவற்றிற்குச் சில அரிய பண்புகள் தேவை. இவற்றை வாழ்ந்து காட்டி சாதனைகள் படைத்தவர்கள் பலர்.

    இன்னல்களைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை; இருக்கின்ற சூழ்நிலையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்கவில்லை; சமுதாயத்தைக் குறை கூறவில்லை. தங்களது இலட்சியத்தை வகுத்துக் கொண்டு முன்னேறினார்கள். மற்றவர்கள் அதிசயித்த போது அவர்களையும் முன்னேற்றினார்கள். முன்னேற உத்வேக உணர்வை ஊட்டினார்கள்.

    இப்படிப்பட்ட சாதனையாளர்கள் சிலரை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. உண்மைச் சம்பவங்கள், அழகிய கதைகள் ஆகியவற்றுடன் நல்ல பல கருத்துக்களையும் இந்த நூல் தருகிறது.

    இந்தக் கட்டுரைகள் ஹெல்த்கேர், பாக்யா ஆகிய இதழ்களிலும் www.tamilandvedas.com ப்ளாக்கிலும் வெளியானவை.

    இவற்றை வெளியிட்டு எனக்கு ஊக்கமளித்த பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு கே. பாக்யராஜ், ஹெல்த்கேர் ஆசிரியர் ஆர்.சி.ராஜா, தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக் வெளியிடும் லண்டன் திரு ச. சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    கட்டுரைகள் வெளியான போது அதைப் பாராட்டிய அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    சான்பிரான்ஸிஸ்கோ

    29-8-2022

    ச. நாகராஜன்

    1. ஒரு டம்ளர் பால்!

    ஒரு ஏழைச் சிறுவன். வீடு வீடாக தேவைப்பட்ட பொருள்களைப் பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதிப்பான். கிடைக்கும் காசை வைத்து பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டுவான்; தனது புத்தகங்களையும் வாங்கிப் படிப்பான்.

    ஒரு நாள் அவன் கையில் ஒரே ஒரு பைசா (டைம் Dime) தான் இருந்தது. ஒரே பசி.

    தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த ஒரு டைமைக் கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று அவன் முடிவு செய்தான்.

    ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டிய போது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை. ஆனால் பசியோ பசி!

    ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.

    அந்த இளம் பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆகவே தண்ணீருக்குப் பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

    மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன், நான் இந்தப் பாலுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

    எனக்கு ஒன்றும் தர வேண்டாம். அன்பிற்கு விலை பேசக் கூடாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள் என்றாள் அவள்.

    அப்படியானால் என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றான் அந்தச் சிறுவன்.

    அந்தச் சிறுவனின் பெயர் ஹோவர்ட் கெல்லி (Howard Kelly).

    அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றான் அவன். கடவுள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை கூடியது; நல்ல உணர்ச்சிகள் கூடியது!

    ஒரு தக்க தருணத்தில் இப்படி ஒரு அன்பைக் காட்டிய பெண்மணி அவனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தாள்.

    வருடங்கள் ஓடின.

    அவன் ஒரு பெரிய டாக்டராக ஆனான்; பெயரும் புகழும் பெற்றான்.

    ஒரு நாள் எந்த இளம் பெண் அவனுக்குப் பாலை வழங்கினாளோ அவளுக்கு கடுமையான நோய் ஒன்று வந்தது.

    அவள் வசித்து வந்த ஊரில் உள்ள டாக்டர்கள் திகைத்தனர்; அதைக் குணப்படுத்த அவர்களால் முடியவில்லை.

    அவர்கள் நகருக்குச் சென்று ஹோவர்ட் கெல்லியைப் பார்க்குமாறு ஆலோசனை கூறினர்.

    அந்தப் பெண்ணும் ஸ்பெஷலிஸ்டான ஹோவர்ட் கெல்லியைப் பார்க்கச் சென்றாள்.

    அந்தப் பெண் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டவுடன் கெல்லியின் கண்கள் பளபளத்தன. நேராக நோயாளி இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

    ஆம், அதே பெண்

    Enjoying the preview?
    Page 1 of 1