Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal Part - 9
Ariviyal Thuligal Part - 9
Ariviyal Thuligal Part - 9
Ebook180 pages1 hour

Ariviyal Thuligal Part - 9

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம். ஆகவே, அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

இந்த நூல் ஒன்பதாம் பாகம் – 209 முதல் 234 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.

விண்வெளியில் நடந்து சந்திரனையும் பூமியையும் பார்த்த ஒரே வீரர்! இதுபோன்ற பல்வேறு தொகுப்புகளே இந்நூல்

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580151008328
Ariviyal Thuligal Part - 9

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal Part - 9

Related ebooks

Reviews for Ariviyal Thuligal Part - 9

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal Part - 9 - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் பாகம் – 9

    Ariviyal Thuligal Part – 9

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    209. விண்வெளியில் நடந்து சந்திரனையும் பூமியையும் பார்த்த ஒரே வீர்ர்!

    210. இந்த ஆண்டு (2015) ஒரு லீப் விநாடி ஜூன் 30ஆம் தேதி சேர்வது ஏன்?!

    211. இரு சிறப்புக் காட்சிகள் தரும் சுவையான  உண்மைகள்!

    212. எதிர்காலத்தில் நடப்பதை அறிய முடியுமா என்பது பற்றிய அறிவியல் முயற்சி!

    213. பசிப்பிணி போக்கி நூறு கோடிப் பேரைக் காத்தவர்!

    214. அலெக்ஸாண்டர் பற்றிய அறிவியல் அலசல்!

    215. கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!

    216. நடந்து வந்து விஞ்ஞானியிடம் கெஞ்சிய பிரேதம்! - 1

    217. நடந்து வந்து விஞ்ஞானியிடம் கெஞ்சிய பிரேதம்! - 2

    218. நூறு ஆண்டுகள் வாழ நூறு ஆண்டுகள் வாழ்ந்தோர் கூறும் ஆலோசனை!

    219. ஐன்ஸ்டீன் வாழ்க்கை தரும் 10 பாடங்கள்!

    220. முட்டாள்கள் தினக் கண்டுபிடிப்புகள்!

    221. உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! - 1

    222. உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! - 2

    223. விண்ணகத்தில் விண்வெளிக் கொண்டாட்டங்கள்!

    224. ஒரு விண்வெளி வீரரின் சுவையான சரிதை!

    225. விண்வெளி ஆர்வத்தை ஊட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ்!

    226. செவ்வாய் கிரகத்தில் ஓய்வெடுக்கத் துடிக்கும் இலான் மஸ்க்!

    227. இதோ பாரு இன்பலோகம், இரண்டாயிரத்து இருபத்தைந்தில்!

    228. வெற்றி பெற நீங்கள் ஒரு ‘ஐடியா மெஷின்’ ஆகலாமே! - 1

    229. வெற்றி பெற நீங்கள் ஒரு ‘ஐடியா மெஷின்’ ஆகலாமே! - 2

    230. அமெரிக்காவிற்கு வந்த நாஜி விஞ்ஞானிகள் – ஆபரேஷன் பேப்பர் க்ளிப்! - 1

    231. அமெரிக்காவிற்கு வந்த நாஜி விஞ்ஞானிகள் – ஆபரேஷன் பேப்பர் க்ளிப்! - 2

    232. மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!

    233. இளமைப் பொலிவுடன் இருக்கலாம்! மூப்பைத் தடுக்கலாம்!!

    234. விண்வெளி வீரர்களின் சுவையான நூல்கள்!

    விண்வெளிப் பயணம் மற்றும் கிரகங்கள் பற்றிய ஒரு க்விஸ்!

    முடிவுரை

    என்னுரை

    இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

    ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

    இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

    எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

    அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

    4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

    இந்த நூல் ஒன்பதாம் பாகம் – 209 முதல் 234 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் பிப்ரவரி 2015 முதல் ஜூலை 2015 முடிய வாரா வாரம் வெளியானவை. கூடவே ஒரு க்விஸ்- கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

    அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

    நன்றி

    பங்களூர்

    18-3-2022

    ச.நாகராஜன்

    209. விண்வெளியில் நடந்து சந்திரனையும் பூமியையும் பார்த்த ஒரே வீர்ர்!

    சந்திரப் பரப்பில் நாங்கள் மேற்கொண்ட முதல் சோதனை முடிந்தது. நிஜமாகவே நாங்கள் சந்திரனின் முகத்தைக் கொஞ்சம் மாற்றி விட்டோம்

    - விண்வெளி வீர்ர் ஒர்டன் தனது சுயசரிதையில் கூறியுள்ளது

    1971ஆம் ஆண்டு விண்ணில் அபல்லோ 15 விண்கலத்தில் பறந்த அமெரிக்க விண்வெளி வீர்ர் அல் ஓர்டன் (Al Worden) வாழ்ந்து கொண்டிருக்கும், சந்திரப் பயணம் மேற்கொண்ட, மிகச் சில விண்வெளி வீர்ர்களில் ஒருவர். சந்திரனில் கால் பதிக்காமல் பைலட்டாக கலத்திலேயே இருந்த இவர் அசகாயசூரத்தனமாக விண்வெளியில் நடந்தார். அந்த வகையில் விண்வெளியில் நடந்து சந்திரனையும் பூமியையும் முதல் முதலாகப் பார்த்த ஒரே மனிதர் என்ற புகழைப் பெற்றார். மூன்று நாட்கள் சந்திரனை அவர் சுற்றி வர, அவரது இரு சகாக்கள் சந்திரனின் ஒரு பகுதியை ஆராய்ந்தனர்.

    இதுவரை சந்திரப்பயணம் மேற்கொண்ட 24 வீர்ர்களில் ஒருவரான அவருக்கு இப்போது வயது 82. இந்த வயதிலும் கூட ஆங்காங்கே சொற்பொழிவாற்றி அறிவியல் வளர, குறிப்பாக விண்வெளியியல் வளர அரும்பணி ஆற்றி வருகிறார்.

    சமீபத்தில் அயர்லாந்து மேற்கு கடற்கரையில் லைம்ரிக் பல்கலைக்கழகத்தில் அவர் கௌரவிக்கப்பட்டார். அப்போது (2014, செப்டம்பர் 17ஆம் தேதி) தனது அனுபவங்களை அவர் அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். ‘இப்படி அனைவருடனும் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கால்களைத் தரையில் ஆழமாகப் பதிக்க இது உதவுகிறது’ என்கிறார் விண்வெளியில் நடந்த இந்த வீர்ர்! 44 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ஐந்து லட்சம் மைல்கள் விண் பயணம் மேற்கொண்டுள்ள இவரது உற்சாகம் இவரைப் பார்த்த அனைவருக்கும் இன்றும் ஏற்படுகிறது.

    கின்னஸ் உலக ரிகார்டின் படி உலகில் மிகவும் அதிகமாக தனித்து விடப்பட்ட ஒரே மனிதர் இவரே என்ற புகழையும் இவர் பெற்றுள்ளார். சந்திரப் பயணத்தில் அவரது இரு சகாக்களான ஸ்காட் மற்றும் இர்வினை விட்டு சுமார் 2235 மைல்கள் தள்ளித் தனியே இவர் இருந்தார். ஸ்காட்டும் இர்வினும் சந்திரப் பரப்பிலிருந்து சுமார் 171 பவுண்டு பொருள்களை எடுத்துக் கொண்டு கலத்திற்கு வர, ஓர்டன் மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்தார்.

    அவர் சிறுவனாக இருந்தபோது விண்வெளிவீரர் என்ற ஒரு வார்த்தையே தோன்றி இருக்கவில்லை. 1955இல் ராணுவ அறிவியலில் பட்டம் பெற்ற ஓர்டன் அமெரிக்க விமானப்படையில் சேர்ந்தார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1963ஆம் ஆண்டு விமானப் பொறியியலில் மாஸ்டர் டிகிரியைப் பெற்றார். 1966இல் நாஸா விண்வெளிக்குச் செல்லத் தேர்ந்தெடுத்த 19 விண்வெளி வீரர்களில் இவரும் ஒருவர்.

    அவர் அபல்லோ 15 விண்கலத்தில் 1971ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் முதல் மனிதராக விண்வெளியில் 38 நிமிடம் நடந்தார், அந்த நடையில் பூமியையும் சந்திரனையும் ஒரு சேரப் பார்த்தார்.

    ‘இனி எதிர்காலத்தில் பிரம்மாண்டமான அளவில் விண்வெளிப்பயணங்கள் நடக்கப் போகின்றன’ என்கிறார் ஓர்டன். ‘சந்திரப் பயணம் இனி மேற்கொள்வதில் அர்த்தமில்லை’, என்று கூறும் அவர், ‘அங்கு பெரிய டெலஸ்கோப்பைக் கொண்டுள்ள ஆப்ஸர்வேடரி நிலையம் வேண்டுமானால் அமைக்கலாம், அது நமக்கு பெரிய அளவில் உதவும்’ என்கிறார்.

    தனியார் செலுத்தும் விண்கலங்களை வரவேற்கும் ஓர்டன் அது நாஸாவின் செலவைப் பெருமளவில் கட்டுப்படுத்தும் என்கிறார்.

    ‘அயல்கிரகவாசிகளையோ அல்லது உயிரினங்களையோ நாம் நிச்சயம் பார்க்க முடியும். 300 பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) நட்சத்திரங்கள் வானில் நமது மில்கி வேயில் மட்டுமே மின்னும் போது உயிரினத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாதா என்ன’, என்பதே அவரது கேள்வி. தனது சுயசரிதத்தை ‘ஃபாலிங் டு எர்த்’ (Falling to Earth) என்று புத்தகமாக எழுதி அவர் 2011ஆம் ஆண்டு வெளியிட்டார்.

    அவர் ஒரு கவிஞரும் கூட. அபல்லோ லாஸ்ட் என்ற அவரது கவிதை பிரபல இசை அமைப்பாளர் ஒருவரால் இசை அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    இளைய தலைமுறையினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அள்ளித் தரும் ஓர்டன் சந்திரப் பயண வீர்ர்களில் முக்கியமானவர்!

    Orion on parachutes

    அறிவியல் அறிஞர் வாழ்வில்...

    பிரபல விஞ்ஞானி ஐஸக் நியூட்டன் தனது வீட்டை மாற்றி லீசெஸ்டர் என்னும் இடத்தில் ஒரு வீட்டிற்கு குடி வந்தார். அவர் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்த பெண்மணிக்கு தனக்கு அண்டைவீட்டுக்காரராக வந்தவரைப் பற்றி ஒரே புதிராக இருந்தது. ஒரு நாள் அந்தப் பெண்மணியைப் பார்க்க ராயல் சொஸைடி ஆப் லண்டனைச் சேர்ந்த ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பேச்சுவாக்கில் தனது அடுத்த வீட்டில் புதிதாகக் குடி வந்தவரின் விநோதமான நடத்தைகளை அவர் குறிப்பிட ஆரம்பித்தார். "பாருங்கள், நாம் எல்லோரும் சூரியன் வந்தவுடன் ஜன்னல் திரைச் சீலைகளை விலக்கி சூரிய ஒளியைப் பார்த்து மகிழ்கிறோம். ஆனால் இந்த நபர் என்னவென்றால் பாத் டப்பிற்கு அருகில் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்காக களிமண்ணால் ஆன ஒரு குழாயில் சோப் தண்ணீரை வைத்துக் கொண்டு குமிழ் குமிழாக ஊதி மகிழ்கிறார். ஜன்னல்

    Enjoying the preview?
    Page 1 of 1