Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal Part - 16
Ariviyal Thuligal Part - 16
Ariviyal Thuligal Part - 16
Ebook167 pages1 hour

Ariviyal Thuligal Part - 16

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாக்யா வார இதழில் எட்டு வருடங்களுக்கும் மேலாக வெளியாகிய அறிவியல் துளிகள் தொடர் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிடப்படுகிறது.

இந்த நூல் - பதினாறாம் – 392 முதல் 416 முடிய உள்ள 25 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்த பதினாறாம் பாகத்தில் விண்வெளி ஆயுதங்கள், ஹாலிவுட் திரைப்படமான ஆபரேஷன் ஃபைனல், தங்க புத்தர், ஒபிஸிடி கோட், மரணம் அடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வு, புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வு உள்ளிட்டவை பற்றிய பல சுவையான செய்திகளைப் படித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580151008518
Ariviyal Thuligal Part - 16

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal Part - 16

Related ebooks

Reviews for Ariviyal Thuligal Part - 16

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal Part - 16 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் பாகம் – 16

    Ariviyal Thuligal Part – 16

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    392. ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர்!

    393. 2022இல் விண்வெளியில் இந்திய வீரர்!

    394. விண்வெளி ஆயுதங்கள் - 1

    395. விண்வெளி ஆயுதங்கள் – 2

    396. அறிவியல் வியக்கும் இசை!

    397. ஆபரேஷன் ஃபைனல் - ஹாலிவுட் திரைப்படம்! – 1

    398. ஆபரேஷன் ஃபைனல் - ஹாலிவுட் திரைப்படம்! – 2

    399. தங்க புத்தர்!

    400. அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை?

    401. இன்றைய உலகின் மெமரி மன்னன் யார்?

    402. மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்!

    403. ஒபிஸிடி கோட் – 1

    404. ஒபிஸிடி கோட் - 2

    405. அமேஸிங் க்ரெஸ்கின்!

    406. மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

    407. மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

    408. புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

    409. புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

    410. ஒவ்வொருவருக்கும் இரு உடல்கள் உண்டா?

    411. உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?

    412. ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!

    413. வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள் தயார், தயார்!

    414. நமது மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!

    415. சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்!

    416. இனி விண்வெளியில் மனிதன் வாழமுடியும்!

    முடிவுரை

    என்னுரை

    இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

    ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

    இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

    எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

    அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

    4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

    இந்த நூல் - பதினாறாம் பாகம் – எட்டாம் ஆண்டில் 27ஆம் வாரம் முதல் வெளியான 392 முதல் 416 முடிய உள்ள 25 அத்தியாயங்களின் தொகுப்பாகும்..

    ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

    அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

    நன்றி

    பங்களூர்

    14-5-2022

    ச.நாகராஜன்

    392. ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர்!

    வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டு பிடிக்க முயன்று அதைப் பற்றிய உளவியல் ஆய்வில் ஈடுபட்டு பிரபலமான புத்தகத்தை எழுதியவர் விஞ்ஞானி விக்டர் ஃப்ராங்க். (Viktor Emil Frankl பிறப்பு 26-3-1905 மறைவு 2-9-1997) ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூதர் இவர்

    ஆனால் அநியாயமாக ஹிட்லரின் சித்திரவதை முகாமிற்கு அனுப்பப்பட்ட லட்சக்கணக்கானோருள் இவரும் ஒருவர்.

    இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது போலந்தை திடீரென்று ஆக்கிரமித்த ஹிட்லர் அங்கு சித்திரவதை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தான். இந்த முகாம் அஸ்விட்ஸ் சித்திரவதை முகாம் (Auschwitx Concentration Camp) என அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் முகாம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு 45 துணை முகாம்கள் இருந்தன.

    இந்த முகாம்களுக்கு சுமார் 13 லட்சம் பேர்கள் அனுப்பப்பட்டனர். அதில் 11 லட்சம் பேர்கள் கொல்லப்பட்டனர். 1940இல் மே மாதம் கைதிகள் இங்கு கொண்டு வருவது ஆரம்பிக்கப்பட்டது. ஏராளமான புகைவண்டிகள் இவர்களை ஏற்றி வந்தன. இவர்களில் 90 சதவிகிதம் பேர் யூதர்கள். செப்டம்பர் 1941இல் ஆரம்பித்து கூட்டம் கூட்டமாக கைதிகள் விஷவாயு சேம்பருக்குள் அனுப்பப்பட்டு கொல்லப்பட்டனர்.

    செங்கல்லினால் ஆன கட்டிடம் ஒன்றில் அவர்களை அடைத்து காற்றுப் புகாதபடி ஜன்னலை மூடி விட்டு, சயனைடை அடிப்படையாகக் கொண்ட ஜிக்லான் பி (Zyklon B) என்ற விஷ வாயுவை நிரப்பி இவர்கள் கொல்லப்பட்டனர். இது தவிர, பல்லாயிரம் பேர்கள் உணவின்றி வாடி இறந்தனர். பலர் முகாம்களின் மோசமான நிலையால் வியாதிகளால் பீடிக்கப்பட்டு இறந்தனர். இங்கிருந்து 802 கைதிகள் தப்ப முயன்றனர். ஆனால் வெற்றிகரமாகத் தப்பியவர்கள் 144 பேர்களே.

    அவர்கள் மூலமாகத் தான் இந்தக் கொடூரமான சித்திரவதை முகாம் பற்றி உலகம் முழுமையாக அறிந்தது.

    உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் சோவியத் படைகள் அஸ்விட்ஸை நெருங்கவே கைதிகளை போலந்தின் மேற்கே அனுப்பி அவர்களின் கடைசி யாத்திரையைத் தொடங்கி வைத்தது நாஜி ஜெர்மனி. எஞ்சி இருந்தோர் 1945 ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

    இப்படி விடுதலையானவர்களில் ஒருவர் தான் விஞ்ஞானி விக்டர் ஃப்ராங்க்.

    முதலில் வியன்னாவில் மன நல மருத்துவராக ஒரு யூத ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார் அவர். போர் மேகம் ஆஸ்திரியாவைச் சூழவே அமெரிக்கா தனது விசாவை வழங்கி அவரை அமெரிக்கா வருமாறு அழைத்தது. ஆனால் தனது வயதான பெற்றோரைக் கருத்தில் கொண்டு வியன்னாவிலேயே வசித்து வந்தார் அவர். திடீரென்று அவரையும் குடும்பத்தினரையும் கைது செய்தது நாஜிப் படை. குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.

    அவர் நான்கு சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார். அவரது திறமையைக் கருத்தில் கொண்ட முகாம் அதிகாரிகள் அவரை கைதிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை சொல்லப் பணித்தனர். அங்கு ஏற்பட்ட அனுபவங்களின் விளைவாக அவர் பல புதிய உண்மைகளைக் கண்டார். அந்த உண்மைகளை இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான உளவியல் புத்தகமான ‘மேன்’ஸ் செர்ச் ஃபார் மீனிங்’ (Man’ s Search for Meaning) என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.

    முக்கியமாக தற்கொலைக்கு முயன்றவர்களை அழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துவதில அவர் வல்லவரானார்.

    சித்திரவதை முகாமில் அவருக்கு அடுத்தாற்போல உட்கார்ந்திருந்த ஒரு கைதி வேடிக்கையாக அவரிடம், இந்த நிலையில் நமது மனைவிமார் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும்? என்று சொல்லிச் சிரித்தார்.

    உடனே ஃப்ராங்க் வானத்தை அண்ணாந்து பார்த்தார். அங்கு மேகக் கூட்டத்தில் அவரது அன்பு மனைவியின் முகம் கள்ளங்கபடமற்றுத் தெரியவே அவரது மனதில் ஒரு புது உத்வேகம் எழும்பியது.

    ‘உங்கள் அன்புக்குரிய மனைவியை அதிகம் நேசியுங்கள்; உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரியும்’ என்கிறார் அவர்.

    சித்திரவதை முகாம்களுக்கு வருவோர் பொதுவாக முதலில் எப்படியாவது யாராவது தம்மைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பர். அடுத்த நிலையில் அது நடக்காது என்று தெரியும் போது உணர்ச்சி பூர்வமான மரணத்தை அடைகின்றனர். எப்படியோ உயிரோடிருந்தால் போதும் என்ற நிலை அது. நாளைக்கு மரணம் என்ற நிலையிலும் ஒரு துண்டு ரொட்டி இன்றைக்கு வேண்டும் என்ற அந்த நிலையைக் கடந்து மூன்றாம் நிலையில் விடுதலை என்ற நிலை ஏற்படும்.

    இந்த மூன்று நிலைகளைக் கொண்ட முகாம் வாழ்வில் ஏற்படும் துன்பம் சொல்லவொண்ணாதது. அந்த துன்பத்தில் தான் தனது ஆராய்ச்சிக்கான விடையைக் கண்டார் ஃப்ராங்க்.

    எவ்வளவு மோசமான நிலையிலும் கூட, சொல்லவொண்ணாத துன்பம் இருந்த போதும் கூட, உங்கள் அணுகு முறையை யாராலும் அடக்க முடியாது; அந்த அணுகுமுறை உங்களுக்குள்ள சுதந்திரம்; அதன் மூலம் வாழ்க்கையை முழுதுமாகப் புரிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.

    வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்பதை விட வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் நம்மை என்ன கேள்வி கேட்கிறது என்பதைச் சிந்தித்தாலேயே போதும் நம்முடைய வாழ்விற்கான அர்த்தம் புரிந்து விடும் என்பது அவரது சித்தாந்தம்.

    சித்திரவதை முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் வெற்றிகரமான உளவியல் நிபுணராக அவர் பல்லாண்டுகள் பணி புரிந்தார். லோகோதெராபி (Logotherapy) என்ற புதிய உளவியல் சிகிச்சை முறையை அவர் கண்டுபிடித்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1