Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal - Part 4
Ariviyal Thuligal - Part 4
Ariviyal Thuligal - Part 4
Ebook173 pages1 hour

Ariviyal Thuligal - Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாக்யா வார இதழில் வெளி வந்த அறிவியல் துளிகள் தொடர் வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அறிவியல் பொக்கிஷம். இந்தத் தொடர் பதினெட்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

நான்காம் பாகத்தில் இசை பற்றிய அபூர்வமான செய்திகளையும் அது தரும் நோயற்ற வாழ்வு பற்றியும் காணலாம். இளமையோடு நூறு வயது எப்படி வாழ்வது என்பது பற்றியும் மனிதன் மரணமே அடையாமல் இருக்க நடக்கும் ஆராய்ச்சி பற்றியும் சுவையான செய்திகளைக் காணலாம். முத்தமிடும் போது உடல் மற்றும் உளத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கட்டுரையையும் இனிய தம்பதிகளின் சந்தோஷத்திற்கான காரணங்களையும் இந்த நூலில் படிக்கலாம்.

நூலில் உள்ள இன்னும் சில தலைப்புகள்: செவ்வாயில் க்யூரியாஸிடி! ஒரு பிரம்மாண்ட விஞ்ஞான ஆய்வுப் பயணம்!! கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவும் அறிவியல் துறை! மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள்! புத்த பிக்ஷுணிகளின் குங்பூ; செர்ன் விஞ்ஞானிகளின் திகைப்பு! ‘கடவுளின் சூதாட்டம்’ பற்றிய மேதைகளின் கருத்துப் போர்! 1,75,000 பட்டாம்பூச்சிகளை ஆராய்ந்தவர்!

Languageதமிழ்
Release dateApr 1, 2023
ISBN6580151009706
Ariviyal Thuligal - Part 4

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal - Part 4

Related ebooks

Reviews for Ariviyal Thuligal - Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal - Part 4 - S. Nagarajan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் - பாகம் 4

    Ariviyal Thuligal - Part 4

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    79. மனதைக் கட்டுப்படுத்தி அபாயகரமாகச் செயல்பட வைக்கும் ஒரு போதை மருந்து!

    80. இறப்பே இன்றி உயிர் வாழ வகை செய்யும் அவதார் ஆராய்ச்சி!

    81. இசை தரும் நோயற்ற வாழ்வு! - 1

    82. இசை தரும் நோயற்ற வாழ்வு! - 2

    83. இசை தரும் நோயற்ற வாழ்வு! - 3

    84. இசை தரும் நோயற்ற வாழ்வு! - 4

    85. இசை தரும் நோயற்ற வாழ்வு! - 5

    86. இசை தரும் நோயற்ற வாழ்வு! - 6

    87. இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி! - 1

    88. இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி! - 2

    89. இதழோடு இதழ் சேர்ந்தால் என்னென்ன ஜாலங்கள்!

    90. இனிய தம்பதிகளின் சந்தோஷத்திற்கு அறிவியல் தரும் காரணங்கள்!

    91. செவ்வாயில் க்யூரியாஸிடி! ஒரு பிரம்மாண்ட விஞ்ஞான ஆய்வுப் பயணம்!! - 1

    92. செவ்வாயில் க்யூரியாஸிடி! ஒரு பிரம்மாண்ட விஞ்ஞான ஆய்வுப் பயணம்!! - 2

    93. கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவும் அறிவியல் துறை! - 1

    94. கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவும் அறிவியல் துறை! - 2

    95. மனித குலத்தையே மாற்றப்போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள்! - 1

    96. மனித குலத்தையே மாற்றப்போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள்! - 2

    97. மனித குலத்தையே மாற்றப்போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள்! - 3

    98. புத்த பிக்ஷுணிகளின் குங்பூ; செர்ன் விஞ்ஞானிகளின் திகைப்பு!

    99. மின்சாரப் போர்!

    100. சோதனைக்கூடத்தில் மிருகங்கள்!

    101. ‘கடவுளின் சூதாட்டம்’ பற்றிய மேதைகளின் கருத்துப் போர்!

    102. 1,75,000 பட்டாம்பூச்சிகளை ஆராய்ந்தவர்!

    103. உருக்கப்பட்ட நோபல் பரிசு தங்க மெடல்கள்!

    104. அதிசய ரஷிய விஞ்ஞானி மென்டிலீவ்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    அறிவியலில் ஆர்வம் காட்டும் அன்பர்கள் தொடர்ந்து அறிவியல் துளிகள் தொடருக்குக் கொடுத்த ஆதரவிற்கு எனது உளமார்ந்த நன்றி.

    பலரின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் நான்காம் பாகத்தை மறுபதிப்பாகக் கொண்டு வர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதுவரை இந்த அறிவியல் துளிகள் தொடரானது பதினெட்டு பாகங்களாக வெளிவந்துள்ள ஒன்றே அறிவியலில் அனைவரும் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கான சிறந்த சான்று.

    மகத்தான ஆதரவைத் தரும் அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றி.

    ச. நாகராஜன்

    பங்களூரு

    1-3-2023

    79. மனதைக் கட்டுப்படுத்தி அபாயகரமாகச் செயல்பட வைக்கும் ஒரு போதை மருந்து!

    சுதந்திரமாகச் செயல்படவிடாது! ஞாபக சக்தியையே அழித்துவிடும்! அபாயகரமாகச் செயல்பட வைக்கும்!

    மாயாஜால மந்திரவாதி கதையில் வருவதுபோல இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். உண்மையில் இப்படிச் செயல்பட வைக்கும் ஒரு போதை மருந்தை உட்கொண்டவர்கள் கொலம்பியாவின் வீதிகளில் போடும் ஆட்டம் விஞ்ஞானிகளையே மலைக்க வைத்துவிட்டது!

    இந்த போதை மருந்தின் பெயர் ஸ்கோபோலமின் (scopolamine). பிசாசின் மூச்சு என்ற செல்லப் பெயருடன் உலவும் இது தென் அமெரிக்காவில் உள்ள ஒரு மரத்திலிருந்து கிடைக்கிறது.

    இதைச் சாப்பிட்டவரைச் சொன்னபடி நடக்க வைக்க முடியும். ஒருவரின் கற்பு பறிபோனது. ஒருவர் வங்கியைக் கொள்ளை அடித்தார். இன்னொருவர் தனது அங்கம் ஒன்றையே தானமாகத் தந்துவிட்டார்.

    இந்த போதை மருந்தை இன்னொருவருக்கு ஏற்றுவது மிகவும் சுலபம். தெருவில் செல்லும் ஒருவர் முகத்தின் மீது ஸ்கோபோலமின் பவுடரை ஊதினால் போதும் அவர் ஒரு குழந்தைபோல சொன்னபடி ஆடுவார்! ஒரு கிராம் ஸ்கோபோலமின், கோகெய்ன் போதையின் ஒரு கிராமுக்குச் சமம். ஆனால் எஃபக்டிலோ ஆந்த்ராக்ஸை விட மோசம்! ஒரு கிராமைவிட அளவை அதிகப்படுத்திக்கொண்டே போனாலோ உயிரையே குடித்துவிடும்!

    ஆப்பிரிக்காவில் சவப்பெட்டியிலிருந்து எழுந்து உயிருடன் இருப்பதுபோல நடமாடும் பிணங்களை ஜோம்பி என்று கூறுவது வழக்கம். இந்த ஸ்கோபோலமின் ஒரு மனிதனை ஜோம்பியாக மாற்றும் வல்லமை படைத்தது என்பது தெரிய வருகிறது. இதை உட்கொண்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை!

    கரோலினா என்ற ஒரு இளம்பெண் தன்னிடம் வழி கேட்ட ஒருவருக்கு அவர் கேட்ட இடம் அருகில் இருந்ததால் உடன் அழைத்துச் சென்றாள். இருவரும் ஜூஸ் குடித்தனர். பின்னர் அவள் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது உடைமைகளை எல்லாம் தானே மூட்டை கட்டிக்கொடுத்து அன்புடன் வழி அனுப்பி வைத்தாள்.

    என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நல்லவேளை இத்தோடு போயிற்றே! என் கற்புக்கு ஒன்றும் ஆகவில்லையே! நான் லக்கிதான் என்று பின்னால் சுய நினைவு மீண்ட பின் கூறினாள் கரோலினா.

    பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் கிளினிகல் பார்மகோலொஜி ஆய்வின்படி ஹியோசின் (hyoscine) என்ற இன்னொரு மருந்தும் நினைவை இழக்க வைக்கும் ஒன்று என்று கூறுகிறது.

    பண்டைய நாட்களில் கொலம்பியாவை ஆண்டவர்களின் ஆசைநாயகிகளுக்கு அவர்கள் இறந்தவுடன் இந்த மருந்து தரப்படுமாம். தங்கள் எஜமானரின் கல்லறைக்குள் நுழையுமாறு அவர்கள் கூறப்பட அவர்களும் ஒரு பேச்சும் பேசாமல் உள்ளே நுழைவார்களாம்!

    இந்த நவீன காலத்திலோ அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ இதைத் தன்னிடம் பிடிபட்டவர்களிடம் உண்மைகளை அறிய உபயோகப்படுத்துகிறதாம்!

    இந்த போதை மருந்து அதை உட்கொண்டவர்களிடம் பல மாயத் தோற்றங்களைக்கூடத் தோற்றுவிக்குமாம்!

    சாதாரணமாக கொலம்பியா முழுவதும் காணப்படும் பொர்ராசெரோ என்ற மரத்தின் மற்றொரு செல்லப்பெயர், குடித்துத் தள்ளாடு என்பதாகும்! கொலம்பியாவின் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அந்த மரத்தின் கீழ் மட்டும் போகக்கூடாது என்று அடிக்கடி எச்சரிப்பார்களாம். மரத்தின் குடைபோன்ற கிளைகள் மற்றும் பச்சை இலைகளும் அதில் மஞ்சளும் வெள்ளையுமாகப் பூத்துக்குலுங்கும் மலர்களும் அனைவரையும் கவர்ந்து ஈர்க்குமாம்.

    கொலம்பியாவின் போதை மருந்து கலாசாரத்திற்கும் அங்கு எப்போதுமே நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களுக்கும், போர்களுக்கும் ஆதி காரணம் இந்த மரமும், இந்த மரத்திலிருந்து இரசாயன ரீதியாகப் பிரித்து எடுக்கப்படும் ஸ்கோபோலமின் போதை மருந்தும்தான் என்பது நிபுணர்களின் முடிவு.

    சரி, திடீரென்று எதற்காக ஸ்கோபோலமின் பற்றிய ஆராய்ச்சி என்று திகைக்க வேண்டாம்!

    சமீபத்தில் அமெரிக்காவில் கொலொரோடோவில் புதிய பேட்மேன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட அன்று ஜேம்ஸ் ஹோம்ஸ் என்ற 24 வயது வாலிபன் கறுப்பு உடையுடன் ஹெல்மெட் அணிந்து விசித்திரமான தோற்றத்துடன் வந்திருந்தான். திடீரென அவன் புகை குண்டுகளை வீசி எறிந்து தியேட்டரைப் புகைமயமாக ஆக்கினான். அடுத்த கணம், துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டான். 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 59 பேர் காயம் அடைந்தனர். சில நிமிடங்களுக்குள்ளாகவே ஏராளமான ஆம்புலன்ஸுகள் அங்கு வந்து குவிந்தன. 200 போலீஸ் அதிகாரிகளும் அங்கு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

    இப்போது பலருக்கும் வரும் சந்தேகம் அந்த வாலிபன் ஸ்கோபோலமின் போன்ற மனத்தை வசியப்படுத்தும் போதை மருந்து கொடுக்கப்பட்டு ஏதேனும் ‘வெளி சக்திகளால்’ ஏவி விடப்பட்டவனா என்பதுதான். இந்தக் கோணத்திலும் விசாரணை நடக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்துவிட்டனர்.

    இந்த அளவுக்கு ஸ்கோபோலமின் பயம் இப்போது உலகை ஆட்டிப் படைக்கிறது. ஒரு சிட்டிகை ஸ்கோபோலமின் பவுடரை முகத்தில் ஊதினால் போதும், நீங்கள் சூத்திரப் பாவைபோல ஆடுவீர்கள் என்று சொன்னால் யாருக்குத்தான் பயம் வராது!

    எப்போதும் எங்கும் எல்லோரும் ஜாக்கிரதையாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அறிவியல் தரும் அறிவுரை!

    அறிவியல் அறிஞர் வாழ்வில்…

    எப்போதுமே தங்கள் ஆராய்ச்சியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளின் சில மறதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

    ஒருமுறை நியூட்டன் முட்டையை வேக விட எத்தனை வினாடிகள் ஆகின்றன என்பதைப் பார்க்க நினைத்தார், இதற்காக மிகவும் விலை உயர்ந்த தன் சோதனைக்கூட கடிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சமையல் அறையில் நுழைந்தார். கையில் முட்டையை வைத்துக்கொண்டு கடிகாரத்தை வேக வைத்தார்!

    கணித விஞ்ஞானியான ஆம்பியர் தனது வழக்கமான லெக்சருக்காகச் சென்று

    Enjoying the preview?
    Page 1 of 1