Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

India Vingyaanigal
India Vingyaanigal
India Vingyaanigal
Ebook224 pages1 hour

India Vingyaanigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580103701833
India Vingyaanigal

Read more from Sivan

Related to India Vingyaanigal

Related ebooks

Reviews for India Vingyaanigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    India Vingyaanigal - Sivan

    http://www.pustaka.co.in

    இந்திய விஞ்ஞானிகள்

    India Vingyaanigal

    Author:

    சிவன்

    Sivan

    For other books
    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இந்திய

    விஞ்ஞானிகள்

    சிவன்

    முன்னுரை

    நமது நாடு எல்லாச் செல்வங்களும் நிரம்பியது. புராதனமான நமது பாராம்பரிய வேர்கள் இந்த மண்ணின் ஆழம் வரை ஊடுருவிப் படர்ந்திருக்கிறது. ஞானம், ஆன்மீகம். இதிகாசம், இலக்கியம், மருத்துவம், வானவியல், ஜோதிடம், வாணிபம், பொதுவான போர்முறை, வாழ்க்கை தர்மம், நெறிமுறைகள் போன்ற எல்லாவற்றிலும் நம் நாடு, உலகின் பிற நாடுகளைவிட முன்னணியிலேயே இருந்திருக்கிறது. அற்புதம் என்னவெனில், இன்றும் அதன் தீவிரம் குறையவில்லை என்பதுதான். ஆனால், இவற்றை அடையாளம் கண்டு கொள்ளவோ, உற்சாகமூட்டி வளர்க்கவோ நம்மில் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈகோ, பிறரை அங்கீகரிக்க ம்றுக்கிறது. இந்த மறுப்புகள் உண்மையான திறமைசாலிகளில், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் குறைந்தவர்களை சுலபமாகவே திசை திருப்பி விடவும் செய்கிறது.

    நீண்ட நெடிய வரலாறுள்ள நமது வாழ்க்கை முறை நம்மிடையே எத்தனையோ மகான்களைத் தோற்றுவித்திருக்கிறது. பிறக்கும்போது வெகு சாதாரணமாக சராசரிக் குழந்தையாகப் பிறந்தவர்கள் தாங்களாகவே தேடியெடுத்த குானம், ஒருமுகச் சிந்தனை, இடையறாத கடின உழைப்பு விடாமுயற்சி போன்றவற்றின் உதவியாலேயே மகான்களாக மாறியிருக்கின்றனர். உலகத்தை உய்விக்கவும் உதவியிருக்கின்றனர். இவை எந்தக் காலத்திலும் சாத்தியமே.

    நமது நவீனச் சுற்றுப்புறச் சூழல் நம்மிடையே தோன்றும் மகான்களை, விஞ்ஞானிகளைத் திசை திருப்பி விடுவதாக எண்ணுகிறேன். குழந்தைகள் சந்தோஷமாகவும், செளகரியமாகவும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பொருளா தாரத்துடன் போராட மட்டுமே அவர்களைத் தயார்ப்படுத்துகிறோம் என்றுதான் தோன்றுகிறது. மனித குலத்துக்குப் பயன்படக் கூடியவனளாக வளர விரும்பும் குழந்தைகளுக்கும், வாழ்க்கை குறித்துத் தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கும் இந்தப் புத்தகம் உற்சாகத்தை வழங்கும் என்று நம்புகிறேன். இந்திய விஞ்ஞானிகள் என்கிற இந்தப் புத்தகம், ஓர் எழுத்தாளன் - மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் எனக்குப் பெருமிதத்தையும் நிறைவையுமே அளிக்கிறது. இப்படியொரு யோசனையைத் தெரிவித்ததும் சற்றும் தயங்காமல், அதிகமாக யோசிக்காமல் ஒப்புக் கொண்டு, சற்று அதிகச் செலவுடன் அழகான புத்தகமாக்கியுள்ள பதிப்பாளரும் நண்பருமான இரா. நல்லதம்பி அவர்களுக்கும், விஞ்ஞானத்தின்பால் ஆர்வம் கொண்டு இதை வாசிக்கும் வாசகர்களுக்கும், இந்தப் புத்தகக் கட்டுமானத்தில் உதவிய ஏனையவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தோழமையுடன்,

    சிவன்

    சென்னை - 78

    இந்திய விஞ்ஞானிகள்

    பொருளடக்கம்

    1. சுஸ்ருதன்

    2.சரகன்

    3.கணாதன்

    4.பதஞ்சலி

    5.ஆர்யபட்டர்

    6.வராஹமிகிரர்

    7.பிரம்ம குப்தன்

    8.நாகார்ஜுன்ன்

    9.பாஸ்கரன்

    10.ஜஹாங்கீர்

    11.ஸவாய் ஜய்சிங்

    12.சர்.சி.வி. ராமன்

    13. எஸ்கே மித்ரா

    14.எம்என் ஸாகா

    15.எஸ்.என். போஸ்

    16.கே.எஸ். கிருஷ்ணன்

    17.ஹெச்.ஜே. பாபா

    18.விக்ரம்.ஏ. சாராபாய்

    19.ராஜா ராமண்ணா

    20.எம்.ஜி.கே. மேனோன்

    21.ஜே.வி. ஹார்லிக்கர்

    22.ஜே.சி. போஸ்

    23.பீர்பல் ஸாஹ்னி

    24.ஜே.பி.எஸ். ஹால்டெயின்

    25.ஸலிம் அலி

    26.பி. மஹேஸ்வரி

    27.பி.பி. பால்

    28.எம்.எஸ். சுவாமிநாதன்

    29.ஏ.எஸ். பைந்தல்

    30.பி.சி. ரே

    31.டி.என். வாடியா

    32.எஸ். ராமானுஜன்

    33.பிசி மஹலானோபிஸ்

    34.எஸ்.எஸ். படிநாகர்

    35.டி.ஆர். சேஷாத்ரி

    36.டி.ஆர். கப்ரேக்கர்

    37.சி.அர். ராவ்

    38.ஜி.என். ராமச்சந்திரன்

    39.தேவேந்திர லால்

    40.சி.என்.ஆர். ராவ்

    41.ஆர்.சி. போஸ்

    42.எஸ். சந்திரசேகர்

    43.ஹெச்.ஜி. குரானா

    44.கே.கே. பாண்டே

    45.கோவிந்த்ஜி

    46.ஏ.எம். சக்ரபர்த்தி

    47.சி.கே.என். படேல்

    48.அப்துல் கலாம்

    1. சுஸ்ருதன்

    கிறிஸ்து பிறப்பதற்கு முன் ஆறாம் நூற்றாண்டில், விசுவாமித்திர மகரிஷியின் பிந்தைய தலைமுறையில் பிறந்தவர் சுஸ்ருதன் வாரணாசி நகரில் தெய்வதாஸ் தன்வந்திரி என்பவரிடம் அறுவைச் சிகிச்சை மற்றும் வைத்திய முறைகளைக் கற்றுக் கொண்டார். அறுவைச் சிகிச்சையில் மட்டுமின்றி வைத்தியத் துறையின் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த நிபுணராக விளங்கினார் சுஸ்ருதன்.

    சிறுநீரகக் குழாயில் ஏற்படும் ‘கல் அடைப்பை’ நீக்குதல், உடலின் எந்தப் பகுதியிலுள்ள எலும்பு உடைந்தாலும், அதன் சரியான இடத்தைக் கண்டறிந்து அதை இணைத்துச் சீராக்குதல், திரை விழுந்து பார்வைக் குறைவு ஏற்பட்ட விழிகளை அறுவைச் சிகிச்சை மூலம் குணமாக்குதல் போன்றவற்றில் இந்திய மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தவர் இவர்.

    அறுவைச் சிகிச்சைக்கு முன்பு திராட்சை ரசம் என்னும் மதுவை நோயாளிக்குப் புகட்டி, நோயாளி அறுவைச் சிகிச்சையின்போது வேதனையை உணராமலிருக்கும் முறையை சுஸ்ருதன்தான் முதலில் கையாண்டார். எனவே இன்றைய ‘அனஸ்தீஷியா’ என்ற மயக்க மருந்து கொடுக்கும் முறையின் முன்னோடியாகப் போற்றப்படுகிறார். மேலும் மகப்பேறு என்பது இய்ற்கையான முறையில் நடைபெற முடியாத சந்தர்ப்பங்களில் அறுவைச் சிகிச்சையின் மூலம் அதை வெற்றிகரமாக நடத்த

    முடியும் என்பதையும் உலகுக்கு அறிவித்த முதல் மருத்துவ மேதை இவர்.

    இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நோயாளி ஒருவருக்கு மூக்குப் பகுதியில் சுஸ்ருதன் செய்த அறுவைச் சிகிச்சை, இன்றைய 'பிளாஸ்டிக் சர்ஜரி’ முறை யிலிருந்து அதிக வேறுபாடில்லாதது. எனவே பிளாஸ்டிகசர்ஜரியின் முன்னோடி என்றும் மருத்துவ உலகில் கெளரவிக்கப்படுகிறார் சுஸ்ருதன்.

    ஒரு நாள் நள்ளிரவு வேளையில் மிகவும் மோசமான காயங்களுடன், ரத்தம் வழிந்தபடி நோயாளி ஒருவர் சுஸ்ருதனை எழுப்பினார். கண்விழித்தவர், விநாடிக்குள் விஷயத்தைக் கேட்டறிந்தார். பிறகு ஒரு கோப்பை மதுவை அவருக்குப் புகட்டிப் படுக்க வைத்தார். வெளியே வந்தவர் ஓர் இலையைப் பறித்து வந்து நோயாளியின் மூக்கு அளவை அறிந்து கொண்டார். பித்தளையாலான கத்தி மற்றும் கிடுக்கியின் உதவியால் நோயாளியின் கன்னப் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை அறுத்தெடுத்து, அந்த இடத்தில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டார். பின்னர் இரண்டு சிறிய வெண்கலக் குழாய்களை நோயாளியின் மூக்குப் பகுதியில் பொருத்தி, கன்னப் பகுதிச் சதையால் மூடி அங்கும் ஒரு கட்டுப் போட்டார்.

    அந்த நோயாளி தினந்தோறும் அருந்த வேண்டிய மருந்துகளின் பட்டியல் ஒன்றையும் எழுதிக் கொடுத்தார். மறுநாள் மாலையில் அந்த நோயாளி சுஸ்ருதனின் மருத்துவ மனையிலிருந்து நடந்து வெளியேறினார். இந்தச் சம்பவம்தான் அவரை 'பிளாஸ்டிக் சர்ஜரி’யின் பிதாமகன் என்று பாராட்டக் காரணமாக அமைந்தது.

    அறுவைச் சிகிச்சைக்கான கருவிகளாக சுஸ்ருதன் நூற்றியொரு கருவிகளைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார். ‘ஸதாம்ச’க் கருவியைத்தான், இன்றைய மருத்துவர்களின் ‘ஸ்பிரிங்ஃபோர் ஸெப்ஸ்ஸு' டிஸக்ஷன் மற்றும் டிரஸ்ஸிங் ஃபோர் ஸெப்ஸுக்கும் பதிலாக அவர் பயன்படுத்தியிருக்கிறார். பறவைகள் மற்றும் மிருகங்க்ளின் உருவ அடிப்படையில்தான் அவர் மருத்துவக் கருவிகளுக்குப் பெயர் வழங்கியிருந்தார். முதலை, அன்னப்பறவை, கிளி, மயில் போன்றவற்றின் பெயருடன் கருவிகள் வழங்கப்பட்டன.

    முதலில் தெளிவான ஏட்டுக்கல்வியையும் பின்னர் அனுபவரீதியான வைத்தியத்தையும் ஒரு வைத்தியர் கற்றுத் தீர வேண்டும் என்பதை சுஸ்ருதன் தம் மாணவர்களிடம் வலியுறுத்துவாராம்.

    அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இறந்து போன உடல்களை அறுத்து, அறுவைச் சிகிச்சையைப் பயில வேண்டும் என்பதும் அவருடைய பாடத்திட்டங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. மனித உடலை நோய்க்கு உள்ளாக்கும் கிருமிகளை , வகைப்படுத்தியிருந்த சுஸ்ருதன், மிருகங்களிடமும் இத்தகைய வகைப்படுத்தலை மேற்கொண்டாராம்.

    ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான மருத்துவ சிகிச்சை முறை சுஸ்ருதனின் காலத்துக்குப் பிறகே தொடங்குகிறது. இந்தியா உலகுக்கு வழங்கிய கொடைகளில் சுஸ்ருதனின் மருத்துவத்திறன் நவீன உலகத்திலும் வியந்து போற்றப்படுகிறது. இந்தியர்களான நாம் பெருமைப்படத்தக்க விஞ்ஞானியாக நமது வரலாற்றில் சுஸ்ருதனே முதலிடம் பெறுகிறார்.

    2.சரகன்

    மற்றொரு மருத்துவமேதையான ஆத்ரேயன் என்பவரது மேற்பார்வையில், அக்னிவேசன் என்ற மருத்துவ நிபுணர் கி.மு. 8-10ம் நூற்றாண்டுகளில் 'மருத்துவக் கலைக் களஞ்சியம்’ என்ற மகத்தான ஒரு நூலை உருவாக்கினார். ஆனால், சரகன் அந்த நூலை முற்றிலுமாகப் படித்து ஆராய்ந்து அங்கீகாரம் அளித்த பிறகே அந்த நூல் புகழ்பெற்றது; மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டது. அந்த நூல் இப்போது 'சரக சம்ஹிதை’ என்ற பெயரில் அறியப்படுகிறது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நூலே மருத்துவத் துறையின் அடிப்படையான நூலாக விளங்கியது. இது உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    இத்தகு பெருமைக்குரிய சரகனின் வாழ்க்கை வரலாறு பற்றிய விவரம் எதுவும் நமக்கு ஆதாரபூர்வமாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் கஷ்டத்தில் உழலும் மக்களுக்கு ஆறுதலளித்து வந்த ஒரு துறவியின் மகன்தான் சரகன் என்பது மட்டும் தெரிகிறது.

    ஒரு நோயாளியின் நோய்த்தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள, குறிப்பிட்ட நோயாளி வசிக்கும் சுற்றுப்புறச் சூழலை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நோயாளிக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்

    வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்பது சரகனின் கருத்து. சகதியில் மிதித்த பிறகு கால்களைக் கழுவுவதைவிட சகதியில் மிதிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கியகரமானது என்பதும் சரகனின் ஆலோசனை. பிசியாலஜி, (உடலியல்), ஈஸ்யாலஜி, எம்பிரியாலஜி (உயிரணு இயல்) போன்ற துறைகளிலும் இவர் இப்படிப்பட்ட கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

    உடம்புக்குள் செல்லும் உணவுப் பொருளின் சத்துக்களின் அளவையொட்டித்தான் உடலில் ஏற்படும் எடை மற்றும் தோற்ற மாற்றங்கள், ஜீரணம் ஆகியவை நடைபெறுகின்றன என்பதை அடிப்படையாக வைத்து, நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கும்போது, மேற்கூறியவற்றை அந்த நோயாளிக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முதன் முதலாக அறிவுறுத்தியவர் சரகன்தான்.

    அவரது அபிப்பிராயப்படி, ‘ஓர் உடலின் இயக்கத்தை பித்தம், கபம், வாயு போன்றவைதான் கட்டுப்படுத்துகின்றன. ரத்தம், சதை, எலும்பு மஜ்ஜை ஆகியவை உட்கொண்ட உணவின் மீது செயல்படும் போதுதான் மேற்குறிப்பிட்டவற்றின் மூலம் தொல்லைகள் ஏற்பட்டு அது நோயாக மாறுகிறது.

    ஒரே அளவு உணவு, வெவ்வேறு உடல்களில் வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே

    Enjoying the preview?
    Page 1 of 1