Parakkum Thattu Unmaiya?
()
About this ebook
நமது புராண காலங்கள் தொட்டு இன்றுவரை மனிதர்களால் ‘பறக்கும் தட்டு’ என்னும் வார்த்தை தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அது என்ன பறக்கும் தட்டு? அது எங்கிருந்து வருகிறது? அதனை இயக்குபவர்கள் யார்? அது ஏன் பூமிக்கு வருகிறது? பூமியில் எங்கு வந்தது? அதனைப் பார்த்தவர்கள் யார்? அதுபற்றி அறிஞர்கள் விரிவாக ஆய்வு நடத்தி வருவது உண்மைதானா? குறிப்பாக அமெரிக்காவில் ‘ஏரியா 51’ என்னும் இரகசிய இடத்தில் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து ஆய்வுகள் நடைபெற்று வருவது நிஜமா?
இந்து மதப் புராணங்களில் கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம் என்பது பறக்கும் தட்டு தானா? இவ்வாறு நமக்கு எழும் அநேக சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக அமைந்துள்ளது ‘பறக்கும் தட்டு உண்மையா?' என்னும் இந்நூல்.
Read more from Kundril Kumar
Illuminati Rating: 0 out of 5 stars0 ratingsAachi Manorama Rating: 0 out of 5 stars0 ratingsMaamannan Rajarajan Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Punitha Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsChennapatina Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsUlavuthurai Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsMaaveeran Alexander Rating: 1 out of 5 stars1/5Valamana Vazhvirku Sufi Thathuvam Rating: 0 out of 5 stars0 ratingsAthira Vaikkum Marmangal Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Madhangal Rating: 0 out of 5 stars0 ratingsDhyanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Parakkum Thattu Unmaiya?
Related ebooks
Ariviyal Thuligal Part - 12 Rating: 0 out of 5 stars0 ratingsUlagangalin Porattam Rating: 1 out of 5 stars1/5Ariviyal Thuligal Part - 8 Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Thuligal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratingsAthira Vaikkum Marmangal Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Athisayangalum Marmangalum Rating: 0 out of 5 stars0 ratingsVingyaana Vaayilgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsவிண்வெளிப் பயணங்களின் வரலாறு Rating: 0 out of 5 stars0 ratingsAthisayangal! Ulaga Athisayangal! Rating: 0 out of 5 stars0 ratingsArivukkum Appaal! Rating: 0 out of 5 stars0 ratingsMaayalogam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsHindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thadai Seiyapatta Paguthi! Rating: 0 out of 5 stars0 ratingsIru Ariviyal Nanbargal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Cinemavin Oli Oviyargal Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Thuligal Part - 15 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Ilakkiyathil Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsMarine Drive Rating: 3 out of 5 stars3/5Iraiyuthir Kaadu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Niram Ootha Rating: 5 out of 5 stars5/5Ariviyal Thuligal Part - 13 Rating: 0 out of 5 stars0 ratingsSivamayam Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaayalogam - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsHitech Dhadhakkal Rating: 0 out of 5 stars0 ratingsSayathirai Rating: 0 out of 5 stars0 ratingsVadakku Veethi Rating: 5 out of 5 stars5/5Brahmaastram Oru Anu Aayuthamaa? Rating: 0 out of 5 stars0 ratingsJothidam Unmaiya? Rating: 0 out of 5 stars0 ratingsTamizhil Ariviyal Padaipilakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsபிரபஞ்சத்தின் மர்மங்கள்..: வானியல் ஆய்வுத் தொகுப்புகள் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Parakkum Thattu Unmaiya?
0 ratings0 reviews
Book preview
Parakkum Thattu Unmaiya? - Kundril Kumar
https://www.pustaka.co.in
பறக்கும் தட்டு உண்மையா?
Parakkum Thattu Unmaiya?
Author:
குன்றில் குமார்
Kundril Kumar
For more books
https://www.pustaka.co.in/home/author/kundril-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
1 பறக்கும் தட்டு உண்மையா?
2 அதிர வைத்த ஆப்கன்
3. பறக்கும் தட்டும் குள்ளர்களும்
4. ஏலியனுடன் அமெரிக்க அதிபர்
5. உலகப்போரும் ஏலியன்ஸும்
6. விசித்திரமான காட்சிகள்
7 ஏரியா 51
8. ஏலியன்கள் உண்மையா?
9. பாரதத்தில் ஏலியன்கள்
10. ஏலியனோடு பேச முடியுமா?
என்னுரை
நமது புராண காலங்கள் தொட்டு இன்றுவரை மனிதர்களால் ‘பறக்கும் தட்டு’ என்னும் வார்த்தை தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அது என்ன பறக்கும் தட்டு?
அது எங்கிருந்து வருகிறது?
அதனை இயக்குபவர்கள் யார்?
அது ஏன் பூமிக்கு வருகிறது?
பூமியில் எங்கு வந்தது?
அதனைப் பார்த்தவர்கள் யார்?
அதுபற்றி அறிஞர்கள் விரிவாக ஆய்வு நடத்தி வருவது உண்மைதானா?
குறிப்பாக அமெரிக்காவில் ‘ஏரியா 51’ என்னும் இரகசிய இடத்தில் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து ஆய்வுகள் நடைபெற்று வருவது நிஜமா?
ரோஸ்வெல், பெல்ஜியம், டெஹ்ரான் போன்ற இடங்களில் பறக்கும் தட்டைப் பெருவாரியான மக்கள் பார்த்த நிகழ்வு உண்மைதானா?
அர்ஜென்டினா மலைப்பகுதியில் வேற்றுக்கிரகவாசிகள் சிலர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறதே! நிஜந்தானா?
இந்து மதப் புராணங்களில் கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம் என்பது பறக்கும் தட்டு தானா?
இவ்வாறு நமக்கு எழும் அநேக சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக அமைந்துள்ளது ‘பறக்கும் தட்டு உண்மையா? என்னும் இந்நூல்.
குன்றில்குமார்
1 பறக்கும் தட்டு உண்மையா?
பறக்கும் தட்டு என்பது இன்று, நேற்றல்ல, பலகாலமாக நம்மவர்களால் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம்தான். ஆகாயத்தில் விநோதமான பொருளைப் பார்த்ததாக உலகின் பல நாடுகளிலும் இந்தக் கதை பேசப்பட்டுத்தான் வருகின்றது.
நம் இந்தியாவின் பல பகுதிகளிலும் அவ்வப்போது இது போன்ற புதியதான பொருட்கள் வானில் பறந்து சென்றதாகப் பலரும் சொல்கின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும், அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் மேலை நாடுகளிலும் இவ்வாறு மர்மப் பொருளை ஆகாயத்தில் பார்த்ததாகப் பலரும் கூறத்தான் செய்கின்றனர்.
இந்த மர்மப் பொருள் வேற்றுக்கிரகவாசிகளால் இயக்கப் படுவதுதான் என்றே பலரும் கூறுகின்றனர். அதை அழுத்தமாக நம்பவும் செய்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மை?
பார்க்கலாம்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் கன்கெர் மாவட்டத்தில் சரமா பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் நம் பழைய வரலாற்றைக் கூறுவதாக உள்ளன. அந்த ஓவியங்களில் பறக்கும் தட்டுகளும் வரையப்பட்டுள்ளன என்பதுதான் ஆச்சரியம்.
மட்டுமல்லாமல் அந்த மர்மமான பறக்கும் தட்டுக்கு அருகே தற்போது விண்வெளிக்குச் செல்லும் வீரர்களைப் போன்ற உடை அணிந்த வீரர்களின் படமும் வரையப்பட்டுள்ளது.
அத்துடன் பறக்கும் தட்டுக்கு மேற்புறத்தில் மின்விசிறி போன்ற ஆன்டெனா காணப்படுகிறது. அந்தப் பறக்கும் தட்டு மூன்று கால்களைக் கொண்டதாகவும் காட்சியளிக்கிறது.
இந்த ஓவியம் நமக்கு ஒன்றைத் தெளிவாக உணர்த்துகிறது. அதாவது பறக்கும் தட்டு ஒன்று தரையில் இறங்கி நின்றதை அந்த ஓவியர் பார்க்க நேர்ந்திருக்கிறது. அவர் வரைந்த ஓவியம் இப்படித் தான் நமக்குப் புரியவைக்கிறது.
இந்த வியப்பிற்குரிய தகவலை வருங்காலத் தலைமுறைகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவ்வாறு அந்த ஓவியர் ஓவியத்தினை வரைந்துள்ளார்.
நம் தமிழ் இலக்கியங்களும் மறைமுகமாக வேற்று கிரகத்தைப் பற்றிச் சொல்லத்தான் செய்திருக்கின்றன.
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்
ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலில் நின்ற பத்தினி ஒருத்தியிடம் தேவ அரசனுக்கு வேண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது." என்று இந்தப் பாடல் கூறுகிறது.
இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததாக சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
விண்ணிற்குச் சென்றார்கள் என்றால், எங்கே சென்றார்கள்? வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? அவ்வாறு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட விமானம் பறக்கும் தட்டா?
இவ்வாறு கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.
அதேபோலத்தான் இராமாயணத்திலும் கம்பர் வாலியின் இறப்பைப் பற்றிக் கூறும்போது வானுலகம் என்ற வார்த்தையைப் பிரயோகப்படுத்தி இருக்கிறார்.
தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்
இறந்த பிறகு வாலி வானுலகத்திற்கு அப்பால் உள்ள உலகிற்குச் செல்கிறான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
வானுலகத்திற்கு அப்பால் உள்ள உலகம் என்றால் அது எந்த உலகம்?
பழங்காலத்திலேயே இப்படி நேரடியாகவும், மறைமுகமாக வும் வேற்று உலகைப் பற்றிய பதிவுகள் நிறையவே காணப் படுகின்றன.
அது இன்றைய காலக்கட்டத்திலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
சீனப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஷென் குவோ என்பவர் 1088ஆம் ஆண்டு ‘ட்ரீம் பூல்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.
சீனாவில் உள்ள ஒரு கிராமம் யாங்க்சௌ. அங்குள்ள விவசாயிகளான அன்ஹ‘§ப் மற்றும் ஜியாங்க் என்பவர்கள் கழனியில் பணி செய்து கொண்டிருந்தபோது வானில் இருந்து தட்டு போன்ற வட்டமான வடிவில் ஒரு வித்தியாசமான பொருள் ஒன்று பறந்து வந்ததைக் கண்டார்கள்.
சட்டென்று தரையிறங்கிய அந்தப் பொருளின் கதவு திறக்கப் பட்டது. அப்போது அதனுள்ளிருந்து கண்களைக் கூசச் செய்யும் ஒளி பாய்ந்து வீசுவதை அவர்கள் பார்த்து அதிர்ந்து போயினர்.
அந்த ஒளியானது சுமார் 16 கி.மீ. தூரம் வரை வெளிச்சத்தைப் பாய்ச்சியதாக அவர்கள் தெரிவித்தனர் என்று அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1878ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத் தைச் சேர்ந்த விவசாயி ஜான் மார்ட்டின். இவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பெரிய கரிய நிறத்தில் வட்ட வடிவமான பறக்கும் பொருள் ஒன்றைக் கண்டதாகவும், அது பலூன் வடிவை ஒத்திருந்ததாகவும் கூறினார்.
அமெரிக்காவில் இருந்து வெளிவந்த டென்னிசன் என்னும் தினசரிப் பத்திரிகையில் ‘ஏஸ்ட்ரேன்ஞ் பினோமினா’ (புதிய பெயர் தெரியாத உருவம்) என்னும் தலைப்பில் மிகப் பெரிய அளவில் இதனை செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதேபோல 1904ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று பிரகாசமான முட்டை மற்றும் வட்ட வடிவில் பொருள்கள் வரிசையாகவும் வேகமாகவும் பறந்து சென்றதைப் பார்த்ததாகக் கப்பல் மாலுமி ஒருவர் தெரிவித்தார்.
சற்று நேரத்தில் அந்த பொருட்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொண்டதையும் பார்த்ததாகக் கூறினார்.
1954ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாளன்று விமானிகள் சங்கத்தைச் (Pilots Association) சேர்ந்த 25 உறுப்பினர்களைக் கொண்ட விமானிகள் குழு ஒன்று காலை சுமார் பத்தரை மணி அளவில் வானில் ஒரு மர்மப் பொருள் பறந்து செல்வதைப் பார்த்தனர்.
நூறு அடி நீளத்தில் சிகார் வடிவத்தில் இருந்த மர்மப் பொருள் என்னவென்று கூர்ந்து கவனிப்பதற்குள் வேகவேகமாகச் சென்று மறைந்து விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
விமானிகள் என்பதால் உலகில் ஆகாய மார்க்கமாக இயங்கும் அனைத்து வகையான வாகனங்களையும் நிச்சயமாக அறிந்தவர் களாக அவர்கள் இருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களே ஏதோ ஒருவித மர்மப் பொருள் என்று ஆச்சரியத்துடன் குறிப்பிட்டால் அதற்கு என்ன பொருள்?
இதேபோல கிழக்கு கொல்கத்தாவிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இது நடந்தது 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் நாள்.
அதிகாலை நான்கு முதல் ஆறு மணிக்குள் அடிவானில் மர்மமான பொருள் ஒன்று மிகப் பிரகாசத்துடன் வேகமாகப் பறந்து வந்தது. அந்த ஓளியில் கண்களைப் பறிக்கும் பலவித வண்ணங்கள் தெரிந்தன.
ஆரம்பத்தில் கோளமாக இருந்த அந்தப் பொருள், பின்னர் முக்கோணமாகவும், நேர்கோடாகவும் மாறியது.
இந்த அற்புதக் காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்த்து வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.
யாரோ ஒருவர் இந்தக் காட்சியைத் தனது சிறிய கேமராவில் பதிவு செய்துவிட்டார். பின்னர் அது அங்குள்ள லோக்கல் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை நன்கு ஆராய்ந்து பார்த்த கொல்கத்தாவின் பிர்லா கோளரங்க வானியல் நிபுணர்கள், இது வீனஸ் (வெள்ளி) கிரகத்திற்கு உரியது என்று தெரிவித்தனர்.
அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம்?
வெள்ளி கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த பறக்கும் தட்டு என்றுதானே பொருள்? வெள்ளி கிரகத்தில் மனித உயிர்கள் இருப்பதாகப் பொருள் கொள்வது சரியாக இருக்கும் அல்லவா?
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதி. அங்கு 1960ஆம் ஆண்டு பறக்கும் தட்டு ஒன்று தரையில் இறங்கியதை பால் ட்ரென்ட் என்பவரும் அவரது மனைவியும் பார்த்தனர். அவரும் உடனடியாக அதனைப் படம் பிடித்தார்.
மறுநாள் பத்திரிகைகளிலும் புகைப்படத்துடன் இச்செய்தி வெளியானது.
1973ஆம் ஆண்டு மீண்டும் அதே அமெரிக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணியாளர்கள் இருவர் இரவில் பணிமுடிந்து வீடு திரும்பும்போது வழியில் பறக்கும் தட்டு ஒன்றைப் பார்த்தனர்.
மிகுந்த ஆவலுடன் அதனருகே நெருங்கிச் சென்று பார்க்க முயன்றபோது அதனுள்ளிருந்து சில உருவங்கள் வெளிப்பட்டன. மிரட்சியோடு அவற்றைப் பார்த்தபோது இவர்கள் இருவரையும் நெருங்கி ஏதோ செய்தன. இவர்களும் சட்டென்று அரை மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பின்னர் அந்தப் பறக்கும் தட்டுக்குள் இவர்களைக் கொண்டு சென்று சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த உயிரினங் களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்கான வலு அவர்களிடம் இல்லாமல் போயிற்று.
சிறிது நேரத்திற்குப் பின் இவர்கள் இருவரையும் வெளியே தள்ளிவிட்டு பறக்கும் தட்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பறந்து சென்றுவிட்டது என்று பின்னர் அவர்கள் தெரிவித்தனர்.
இது உண்மையா, பொய்யா என்பதைக் காட்டிலும் அப்போது பலரும் இதனை உண்மை என்றே நம்பினார்கள்.
அப்புறம் 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் தேதி நம் சென்னையில் முகப்பேர் என்னும் இடத்திலும் இதேபோன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
அன்றிரவு சுமார் எட்டரை மணியளவில் மிகப் பிரகாசமான ஆரஞ்சு ஒளி ஐந்து கற்றைகளாக வெளிப்பட்ட மர்மப் பொருள், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பறந்து சென்றதை அங்குள்ள மக்கள் பலரும் பார்த்துள்ளனர். அந்த செய்தி 23ஆம் தேதி பத்திரிகைகளிலும் வெளியானது.
இதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 4ஆம் நாளன்று சட்டீஸ்கர் மாநிலம் லகான்கர் என்னும் இடத்தில் மர்மப் பொருள் ஒன்று வானில் பறந்து சென்றது. இதனை அங்குள்ள இராணுவ வீரர்கள் பலரும் பார்த்து வியந்துள்ளனர்.
அதே ஆண்டில் அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியில் ஏழு மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட மர்மப் பொருட்கள் பறந்ததைப் பார்த்ததாக லடாக் பகுதியில் உள்ள முகாமில் இருந்த இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் நாளன்று சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை லக்னோவில் உள்ள ராஜாஜிபுரம் பகுதியில் மக்கள் பார்த்து ரசித்தபோது கூடவே ஒரு மர்மப் பொருள் பறந்து சென்றதையும் பார்த்து அதிர்ந்துள்ளனர்.
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விமானத்தை இயக்கி வந்த விமானி ஒருவர் சுமார் 26 ஆயிரம் அடி உயரத்தில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் மர்மப்பொருள் ஒன்று பறந்து செல்வதைப் பார்த்ததாகக் கூறினார்.
அதே அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஒரு நகத்தைப் போன்ற வடிவில் மர்மப் பொருள் ஒன்றை கேரள மாநிலம் கொச்சி நகரவாசிகள் கண்டுள்ளனர்.
இது செய்தியாக மட்டுமல்லாமல் புகைப்படத்துடன் மறுநாள் அங்குள்ள மலையாள தினசரிகளில் வெளியானது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஷியாம்நகர் என்ற பகுதியில் தனது வீட்டின் கூரையைத் தொட்டுச் செல்லும் உயரத்தில் பறக்கும் தட்டு ஒன்று பறந்து சென்றதைப் பார்த்ததாக பள்ளி மாணவன் ஒருவன் கூறினான்.
2015ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தை அவன் தனது