Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramayana Vazhikatti
Ramayana Vazhikatti
Ramayana Vazhikatti
Ebook137 pages44 minutes

Ramayana Vazhikatti

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதி காவியமான வால்மீகி ராமாயணம் தொன்று தொட்டு பாரத தேசத்தில் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் அற்புதமான காவியமாகும். இதன் சிறப்புக்களையும், முக்கிய ஸ்லோகங்கள் சிலவற்றையும் தொகுத்து இந்த நூல் வழங்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளைக் கொண்டுள்ள இந்த நூலில் முதல் பகுதியில் முக்கியமான அழகிய ஸ்லோகங்கள் 27 அத்தியாயங்களில் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது.

மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள், கழிந்த இரவு மீண்டும் வராது, உற்சாகமே உயிர், சரண்டைந்தோரைக் காக்கும் அதிசய புருஷன் ராமன், அனுமனிடம் சீதை சொன்ன கரடி கதை, ராம ராஜ்யம், மண்டோதரியின் மாண்பு உள்ளிட்டவையோடு இரண்டாம் பகுதியில் வால்மீகி ராமாயணத்தில் உள்ள காண்டங்கள், ஸர்க்கங்கள், ஸ்லோகங்கள் ஆகியவை பற்றிய குறிப்பு தரப்பட்டுள்ளது. ராமாயண காலத்தில் இருந்த முக்கிய இடங்களைக் குறிப்பிடும் பாரத தேசத்தின் வரைபடமும் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் படிக்க வேண்டிய நூல். நண்பர்களுக்கும் பரிசாக அளிக்கலாம்.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580151009458
Ramayana Vazhikatti

Read more from S. Nagarajan

Related to Ramayana Vazhikatti

Related ebooks

Reviews for Ramayana Vazhikatti

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramayana Vazhikatti - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ராமாயண வழிகாட்டி

    Ramayana Vazhikatti

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதல் பகுதி

    1. மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

    2. பொறுமையே அழகு!

    3. கழிந்த இரவு மீண்டும் வராது!

    4. சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!

    5. உற்சாகமே உயிர்!

    6. ராமர் போற்றிய மஹாத்மா!

    7. ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள்!

    8. உற்சாகமே பலம்!

    9. உயிரைக் காப்பாற்றிக் கொள்! ஆனந்தம் உன்னை வந்து அடையும்!!

    10. சரணடைந்தோரைக் காக்கும் விரதம் கொண்ட அதிசய புருஷன் ராமன்!

    11. அனுமனிடம் சீதை சொன்ன கரடி கதை!

    12. சினம் காக்க!

    13. மனமே அனைத்துப் புலன்களின் இயக்கத்திற்கும் காரணம்!

    14. நாள் அல்ல, உயிரை அறுக்கும் வாள்!

    15. ராம ராஜ்யம் - 1

    16. ராம ராஜ்யம் -2

    17. ராம ராஜ்யம் -3

    18. ராம ராஜ்யம் -4

    19. சீதை ராமருக்குச் சொன்ன ஆயுதம் பற்றிய கதை!

    20. பாதுகையின் மஹிமை!

    21. ராமம் ஸத்யபராக்ரமம்!

    22. கோசலையின் ஆசீர்வாதம்!

    23. சீதை சொன்ன காகாஸுரன் கதை!

    24. மண்டோதரியின் மாண்பு!

    25. ராமரின் சாஸ்வதமான அனுஷ்டானம்!

    26. முனிவரின் இரக்கம்! ராமாயண உதயம்!!

    27. ராமாயணம் சௌபாக்யம், பாப நாசனம், வேத சமம்!

    இரண்டாம் பகுதி

    1. காண்ட, ஸர்க்க, ஸ்லோக எண்ணிக்கை விவரம்

    2. ஏழு காண்டங்களில் உள்ள ஸர்க்கங்களின் விவரம்

    3. ராமாயண காலத்தில் பாரத தேசத்தின் வரைபடம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    ஆதி காவியமான வால்மீகி ராமாயணம் தொன்று தொட்டு பாரத தேசத்தில் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் அற்புதமான காவியமாகும்.

    இதன் சிறப்புக்களையும், முக்கிய ஸ்லோகங்கள் சிலவற்றையும் தொகுத்து இந்த நூல் வழங்கப்பட்டுள்ளது.

    அவ்வப்பொழுது இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.comஇல் வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கும், இதைப் படித்து பாராட்டிய அனைத்துப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

    இதை டிஜிடல் புத்தகமாக லண்டன் நிலா பப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்கள் வெளியிட்டார்.

    பலரின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் இதை மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறம், பொருள், இன்பம் ,முக்திப் பேறு என புருஷார்த்தங்களான நான்கையும் தர வல்ல ராமாயணத்தை அனைவரும் கற்போம்; போற்றுவோமாக!

    நன்றி.

    பங்களூர்

    ச.நாகராஜன்

    25-12-2022

    முதல் பகுதி

    1. மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

    வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமாயணத்தில் இல்லாத நன்னெறிகளே இல்லை. வேதத்திற்குச் சமானம் என்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்ட இந்த நூலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை!

    சூக்தி சதகம் என்னும் சுபாஷித தொகுப்பு நூலில் வரும் ஒரு அற்புதமான கவிதை வால்மீகியை ராம ராம என்று கூவும் குயில் என்று வர்ணிக்கிறது.

    ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் முதலில் சொல்லும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

    கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

    ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

    ஆருஹ்ய கவிதா ஷாகாம் – கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி

    கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் – ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்

    வந்தே வால்மீகி கோகிலம் – அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

    முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார்.

    24000 ஸ்லோகங்களில் ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம் என்று ஒரு அக்ஷரத்தைச் சொன்னாலே மஹா பாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருப்பதால் முடிந்த அளவு அதை நாம் கற்று பாராயணம் செய்வது நலம் பயக்கும்.

    ராமாயணத்தில் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில நல்ல ஸ்லோகங்களை இனம் காட்டும் முயற்சியே ராமாயண வழிகாட்டி.

    இதன் மூலம் மூல ராமாயணத்தின் அனைத்து ஸ்லோகங்களையும் படிக்கும் ஆசை எழுந்தால் அதுவே இந்த முயற்சிக்கான வெற்றி.

    மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

    தன்யா: கலு மஹாத்மானோ முனயஸ்த்யக்த கில்பிஷா I

    ஜிதாத்மானோ மஹாபாகா யேஷாம் நஸ்த: ப்ரியா ப்ரியே II

    எவர்களுக்கு சுகதுக்கம் இரண்டும் இல்லாமல் இருக்கின்றதோ அவர்கள் தான் மஹாத்மாக்கள். ஜிதேந்திரியர்கள். மஹாபாக்கியசாலிகள். முனிவர்கள். தன்யர்கள். மனப்பூர்வமாகக் கொண்டாடப்படவேண்டியவர்கள்.

    (கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது - வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 49ஆம் ஸ்லோகம்)

    மஹான்களுக்கு சீதையின் நமஸ்காரம்

    ப்ரியாந்ந ஸம்பவேத் து:க்க

    மப்ரியா ததிகம் பயம் I

    தாப்யாம் ஹி யே வியுஜ்யந்தே

    நமஸ்தேஷாம் மஹாத்மனாம் II

    சுகமெனக் கொண்டதால் மன அஸந்துஷ்டி இல்லாதிருக்கிறது. துக்கமெனக் கொண்டதால் அனாவஸ்யமான மன ஏக்கம் உண்டாகிறது. எவர்கள் அவ்விரண்டுகளாலும் விடுபட்டிருக்கிறார்களோ அந்த மஹாத்மாக்களுக்கு நமஸ்காரம்

    (கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது - வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 50ஆம் ஸ்லோகம்)

    மஹாத்மாக்களை நமஸ்கரிப்பதால் ஆபத்து மா சம்பத்து ஆகி விடுகிறது!

    2. பொறுமையே அழகு!

    அலங்காரோ ஹி நாரீனாம் க்ஷமா ஹி புருஷஸ்ய வா I

    பொறுமையே பெண்களுக்கும் புருஷர்களுக்கும் அழகு.இது பிரசித்தம்.

    பாலகாண்டம் 33ஆம் ஸர்க்கம் 8ஆம் ஸ்லோகம்

    Enjoying the preview?
    Page 1 of 1