Ponnolir Bharatham!
By S. Nagarajan
()
About this ebook
இந்திய நாட்டின் பெருமையை விளக்கும் ‘இது தான் இந்தியா’ என்ற நூலை அடுத்து இந்த நூல் வெளியாகிறது. கடந்த காலத்தில் இந்திய நாடு முழுவதும் ஆங்காங்கே ஏராளமான வீரர்கள் அந்தந்தப் பகுதிகளைப் பாதுகாத்து வந்ததை நமது சரித்திரம் கொண்டிருந்தாலும் ‘மெக்காலே படிப்பால்’ அவை மறைக்கப்பட்டு விட்டன. அவற்றை வெளிக் கொணரும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது.
இதில் நமது வீரர்களின் வீரம், நம்மை ஆக்கிரமித்தவர்களது தாய்க்குலத்தை நாம் போற்றும் பண்பு, இதர நாட்டினர் நம்மை வியந்து போற்றும் பாங்கு, நமது அபூர்வமான கலைகள் உள்ளிட்டவை சித்தரிக்கப்படுகிறது. வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை, சீக்கியர்களின் ஒப்பற்ற தியாகம், அப்பக்கா சௌதா, மேவார் வீரன் ராணா சங்ராம் சிங், ராமசிம்மன், துர்காதாஸ் ரதௌவ்ரா, மார்த்தாண்டவர்மர், அயோத்யா பற்றிய உண்மைகள், பல கலை வல்லுநர் சுப்பராய சாஸ்த்ரி, பராக்ரம பாண்டியனின் அதிசய கல்வெட்டு உள்ளிட்ட கட்டுரைகளை இந்த நூல் தருகிறது.
Read more from S. Nagarajan
Deiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsJothidam Paarkkum Mun Therinthu Kollungal! Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Subhashitham 200! Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsPsychic Wonders And Pathway To Success Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Thirukkural Rating: 0 out of 5 stars0 ratingsNoi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam! Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsSethu Dharisanam! Rating: 0 out of 5 stars0 ratingsGeethai Vazhi! Rating: 0 out of 5 stars0 ratingsAnaivarukkum Aarogyam - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kaattu! Rating: 0 out of 5 stars0 ratingsSiruvargalukkaana Puraana Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSelvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal! Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsVakkirkku Arunagiri! - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsArivukkum Appaal! Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi! Rating: 0 out of 5 stars0 ratingsJothidam Unmaiya? Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Athisayangalum Marmangalum Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ponnolir Bharatham!
Related ebooks
இராஜராஜ சோழன் பேசும் வரலாறு Rating: 3 out of 5 stars3/5100 Thalaivargal 100 Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsSethupandhanam Rating: 5 out of 5 stars5/5Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!! Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Rating: 0 out of 5 stars0 ratingsManimudiyum Udaivaalum Rating: 0 out of 5 stars0 ratingsParanthakan Magal Rating: 5 out of 5 stars5/5Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal! Rating: 0 out of 5 stars0 ratingsAnaiya Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Ula! Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naagar - South America Maya Naagariga Arputha Ottrumaigal Rating: 0 out of 5 stars0 ratingsMadurai Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - Thirai/Naadaga Vadivam Rating: 0 out of 5 stars0 ratingsAaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5Ponniyin Selvan - Part 5 Rating: 5 out of 5 stars5/5Paraparapu Poogambam Rating: 0 out of 5 stars0 ratingsMr. Vikramathithan Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsஐ.எஸ்.ஐ Rating: 5 out of 5 stars5/5Pattinapaalai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2022 Rating: 0 out of 5 stars0 ratingsSangathara Rating: 4 out of 5 stars4/5Kanaiyazhi - July 2022 Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Kathaigal 100 Rating: 0 out of 5 stars0 ratingsSarithira Nayakan Irandaam Serfoji Rating: 0 out of 5 stars0 ratingsTajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara? Rating: 0 out of 5 stars0 ratingsV.O. Chidambaranar Vazhkkai Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsUnnathamana Uraiyadalgal Rating: 0 out of 5 stars0 ratingsNavakaali Yathirai Rating: 0 out of 5 stars0 ratingsPuranangal Pulugu Moottaigala? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ponnolir Bharatham!
0 ratings0 reviews
Book preview
Ponnolir Bharatham! - S. Nagarajan
http://www.pustaka.co.in
பொன்னொளிர் பாரதம்!
Ponnolir Bharatham!
Author :
ச. நாகராஜன்
S.Nagarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/s-nagarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
1. வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!
2. சத்ரபதி சிவாஜியின் நமஸ்காரம்! - ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
3. குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்!
4. போர்த்துகீசியரை அலற அடித்த மஹாராணி அப்பக்கா சௌதா!
5. ஜகாரியா கானை எதிர்த்த சீக்கியர்களின் வீரம்!
6. மேவார் வீரன் ராணா சங்ராம் சிங் - || : சுவையான சம்பவங்கள்
7. டச்சுக்காரர்களைத் துரத்தி அடித்த மார்த்தாண்ட வர்மாவின் சாகஸம்!
8. சித்தீ! கவலைப்படாதே! சித்தப்பாவின் உடலை
9. மார்வார் ராணியைக் காப்பாற்றிய மாவீரன் துர்காதாஸ் ரதௌவ்ரா!
10. ரஜபுதனத்து துர்காதாஸ் இஸ்லாமிய ராஜகுமாரியிடம் காட்டிய அன்பு!
11. சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை!
12. கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடி மோதிரமும்!
13. மஹாராஜா ரஞ்சித் சிங்கின் பதில்!
14. அயோத்யா - சில உண்மைகள்! – 1
15. அயோத்யா - சில உண்மைகள்! – 2
16. அயோத்யா - சில உண்மைகள்! – 3
17. அயோத்யா - சில உண்மைகள்! – 4
18. வேதம் கூறும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி இடம்!
19. அதிசய மேதை ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! – பகுதி 1.
20. அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி! பகுதி - 2
21. வேத கணிதம் - ஒரு பார்வை!
22. ஜோத்பூர் கோட்டையில் உள்ள சக்ரங்கள் அடங்கிய பட மர்மம்!
23. மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 1
24. மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 2
25. ஹர் பிலாஸ் சர்தா - ஹிந்து நாகரிக மேன்மையை எழுதியவர்!
26. அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக்!
27. ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்! - 1
28. ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்! - 2
29. ஹிந்து வீரம்!
30. வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!
31. மெழுகுவர்த்தியில் பிறந்த அக்னி - || ஏவுகணை!
32. ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!
33. உலகின் தாயகம் இந்தியா! அறியுங்கள்! நேசியுங்கள்!!
என்னுரை
‘இது தான் இந்தியா’ என்ற எனது நூலை அடுத்து பொன்னொளிர் பாரதம் என்ற இந்த நூல் வெளியாகிறது.
இந்தியாவின் அறப்பண்புகளையும், சிறப்பு அம்சங்களையும் நாம் தெரிந்து கொண்ட வேளையில் ஒரு முக்கியமான சந்தேகம் எழுவது இயல்பு.
இப்படிப்பட்ட அரும் தேசம் எதனால் பல நூற்றாண்டுகள் அன்னியர் பலரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதே அது. கலைகளில் சிறந்தது, அறப் பண்புகளில் சிறந்தது, வீரத்தில் சிறந்தது ஏன் வீழ்ந்து பட்டிருக்க வேண்டும்?
இதற்கான பல காரணங்களில் தலையாய காரணங்களாக நம் முன் இரண்டு காரணங்கள் அறியப்படுகின்றன.
ஒன்று நம்மிடையே ஒற்றுமை இல்லை.
இரண்டாவது வீரத்தையும் பொறுமையையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை அறிந்து கொள்ளத் தவறி, அறப்பண்புகளையே முற்றிலுமாகக் கடைப்பிடித்து எல்லையற்ற சகிப்புத்தன்மையை மேற்கொண்டது தான்!
இந்த சகிப்புத்தன்மையை ஆக்கிரமிப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டதோடு தங்களது அரக்க குணங்களுக்கேற்ப பிரித்தாளும் சூழ்ச்சி, சிரித்துப் பேசியவாறே முதுகில் குத்தச் செய்வது, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட எண்ணற்ற வழிகளைக் கையாண்டு நம்மை அடிமைப் படுத்தினர்; சுரண்டினர். என்றாலும் கூட அறப்பண்புகள் ஒரு நாளும் அதைக் கடைப்பிடித்தோரை கை விடாது என்பதை அறிவிக்கும் வண்ணம் நம் நாடு சுதந்திரம் பெற்றது; இப்போது வலிமையான நாடாக, உலகிற்கு பண்டைய காலம் போல வழி காட்டும் தேசமாக ஆகி வருகிறது.
கடந்த பல நூற்றாண்டுகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல.
அவற்றில் முக்கியமானவை ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் சகிப்புத்தன்மையை எல்லை மீறி கடைப்பிடித்து நம்மை கோழைகளாக வெளி உலகம் கருதும் அளவு நடப்பது கூடாது என்பவையே அவை கடந்த காலத்தில் ஆங்காங்கே தேசம் முழுவதும் ஏராளமான வீரர்கள் அந்தந்தப் பகுதிகளைப் பாதுகாத்து வந்ததை நமது சரித்திரம் கொண்டிருந்தாலும் ‘மெக்காலே படிப்பால்’ அவை மறைக்கப்பட்டு விட்டன. ஆகவே மறக்கப்பட்டு வருகின்றன.
அவற்றை வெளிக் கொணர்ந்து அதிலிருந்து உத்வேகத்தை நமது நாட்டு இளம் தலைமுறையினர் பெற வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சியில் ஒரு சிறு துளியே இந்த நூலாக அமைகிறது.
இதில் நமது வீரர்களின் வீரம், ஆக்கிரமிப்பாளர்களது தாய்க்குலத்தை நாம் போற்றும் பண்பு, இதர நாட்டினர் நம்மை வியந்து போற்றும் பாங்கு, நமது அபூர்வமான கலைகள் உள்ளிட்டவை சித்தரிக்கப்படுகிறது.
இன்னும் இது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுரைகள் வெளி வந்து அவை ஒரு கலைக் களஞ்சியமாகத் தொகுக்கப்பட வேண்டும்.
பொன்னொளிர் பாரதத்தின் உண்மையான வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்பட வேண்டும்.
இந்தக் கட்டுரைகளில் சில கட்டுரைகள், ஞான ஆலயம், ஶ்ரீ ஜோஸியம் பத்திரிகைகள் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக்கில் பிரசுரிக்கப்பட்டவை. இதை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக,
கட்டுரைகளில் பெரும்பாலானவை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழான ட்ரூத் இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்தவை.
அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தேன்.
ட்ரூத்(TRUTH - www.sdpsorg.com இதழ் சாஸ்திர தர்ம பிரசார சபாவினால் கடந்த 90 ஆண்டுகளாக வாரம் தோறும் தவறாமல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதில் வெளியாகும் அருமையான கட்டுரைகள் நமக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பவை.
அதன் ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் அவர்கள் எனது உற்ற நண்பர். எனது இந்தப் பணியில் ஊக்கம் தருபவர்.
அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
ச. நாகராஜன்
சான்பிரான்ஸிஸ்கோ
5-9-2022
1. வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!
மாவீரனான சத்ரபதி சிவாஜிக்கு வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருக்கிறது என்ற செய்தி நம்ப முடியாத அதிசயமான செய்தி தானே! என்றாலும் அது உண்மை தான்!
சைகோன் என்று பழைய நாட்களில் அழைக்கப்பட்ட இந்த நகரம் புரட்சி வீரன் ஹோசிமின் பெயரால் இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.
சத்ரபதி சிவாஜி மஹாராஜா வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தைத் தன் சிறு படையினால் கதி கலங்க அடித்தார். இதற்கான காரணம் அவரது புதிய முறையிலான போர் உத்திகள் தாம்! சிறிய தொகுதிகளாக உள்ள படைவீரர்களைக் கொண்ட படைப்பிரிவுகளைக் கொண்டு அவர் நடத்திய தாக்குதல் முறைக்கு கொரில்லா தாக்குதல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஔரங்கசீப்பின் மாபெரும்