நெருப்பாய் ஒரு நிலவு
By Devibala
()
About this ebook
அப்பா இரைந்து கத்திக் கொண்டிருந்தார் காலையில்.
காரணம் இருந்தது.
கண்ணை விழித்ததும் கடன்காரனின் தரிசனம். அவனை ஒரு மாதிரி அனுப்பிவிட்டு நிமிர, பால்காரர் பழைய பாக்கி கேட்டு.
கடைசிப் பெண்ணின் கல்யாணத்தைப் போன மாதம்தான் முடித்திருந்தார்.
முதல் பெண்ணுக்கு அடுத்த மாதம் பிரசவம்.
"சாப்பிட வர்றீங்களா?''
அம்மாவின் பயந்த குரல்.
"எனக்குப் பசிக்கலை"
"ராத்திரியே நீங்க சரியாச் சாப்பிடலை"
"செத்துடமாட்டேன். விடு!"
அம்மா தட்டு வைத்துவிட்டு, "ஜனா நீயும் சாப்பிட வா!''
"ஓ... உன் அழகுப் புள்ளை வீட்லதான் இருக்கானா?''
ஜனா சட்டையை 'டக்' செய்தபடி வெளியே வந்தான்.
"இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. ஒரு வேலையைத் தேடிக்கத்தான் துப்பில்லை! உங்கண்ணன் தனிக்குடித்தனம் போயிட்டான். அடுத்த அண்ணன் சம்பாதிக்கறது அவனுக்கே போதலை. ஏண்டா, நானும்கேக்கறேன். சாகறவரைக்கும் எனக்கு மட்டும் ஓய்வே கிடையாதா? உங்களையெல்லாம் பெத்ததுக்கு நான் செத்திருக்கலாம்"
வாசலில் ஸ்கூட்டர் வந்து நின்றது.
"என் தம்பி வர்றான். உங்க கோபம் அவனுக்குத் தெரிய வேண்டாம். அடக்கி வாசிங்க"
மாமா உள்ளே நுழைந்தார்.
"வா தம்பி சாரு வரலையா?''
"நான் ஒரு முக்கிய வேலையா வந்தேன்க்கா. ஜனா இப்படி வா!"
"என்ன மாமா?"
"இந்தக் கம்பெனில ஒரு வேகன்ஸி வருது. சம்பளமும் ஓரளவு தருவான். போகப்போக அதிகமாகும். உன் சர்டிபிகேட்ஸ் எடுத்துட்டு இப்பவே புறப்படு. உனக்கிந்த வேலை கிடைக்கும். சீக்கிரம்"
"மாமா"
"நேரத்தைக் கடத்தாதே ஜனா. இந்த லெட்டரை எம்.டி.கிட்ட குடு. உனக்கு வேலை உறுதி!"
தன் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு ஜனா போய்விட்டான்.
"தம்பி சாப்பிடாம போறான்''
"விடு ஒரு நாள் சாப்பிடலைனா சாகமாட்டான்! நீ உட்காரு கோவிந்த். நான் சாப்டுட்டு வந்துர்றன். ஆபீசுக்கு நேரமாச்சு?"
"நீ சாப்பிடறியா தம்பி?"
"வேணாம்கா. நீ அத்தானுக்குப் போட்டுட்டு வா"
அவர் சற்று நேரத்துக்கெல்லாம் கிளம்பிப் போய்விட்டார்.
"என்ன அத்தான் மூட் அவுட்டா?''சொல்லித் தப்பில்லை. அவர் ஒருத்தர் உழைச்சு என்னல்லாம் செய்ய முடியும்? சலிப்பு வருது!''
"ரொம்பக் கடனா?''
அம்மா பேசவில்லை.
"சொல்லுக்கா! நிறையக் கடனா?"
"ம்! வாங்கற சம்பளத்துல பாதி வட்டிக்கே போனா எப்படிப்பா குடித்தனம் பண்றது?''
"ஜனாவுக்கு இந்த வேலை கிடைச்சிடும்."
"கிடைச்சா, கொஞ்சம் தெளியும். அப்புறம் சாருவுக்கு ஏதாவது வரன் வந்ததா?''
மாமா பெருமூச்சு விட்டார்.
"வருதுக்கா, ஜாதகம் சேருது. கிட்ட வர்றாங்க. ஆனா பெண்ணைப் பிடிக்கறதில்லை. இதுவரைக்கும் ஆறு இடம் தட்டிப் போயாச்சு. வெளியில சொன்னா பொறுக்காது. ஆனா நமக்கு நிஜம் தெரியுதே! இந்த அளவுக்கு ரொம்ப சுமாரா உள்ள பெண்ணை யாருக்கா கட்டிப்பாங்க?"
"ஏன்பா நிறமும், அழகும்தான் எல்லாமா? ஒரு பெண்ணோட குணத்தைப் பார்க்க வேண்டாமா?"
"அது உனக்குத் தெரிஞ்ச மாதிரி எல்லாருக்கும் தெரியுமா?"
"தெரியணும்?"
"பேசறது சுலபம்கா. தனக்குனு வரும்போது யாருமே கிட்ட வரமாட்டாங்க. அதுதான் நிஜம். இந்தப் பெண்ணை எப்படி நான் கரையேற்றப் போறேன்னு எனக்கே தெரியலை."
வெகு நேரம் புலம்பிவிட்டு மாமா போய்விட்டார்.
ஜனாவுக்கு மாமா சிபாரிசு இருந்ததால் வெகு சுலபமாக அந்த வேலையைத் தந்து விட்டார்கள்.
ஓரளவு நல்ல சம்பளம். வேலையும் நல்ல வேலை.
வேலைக்கான உத்தரவுடன் உற்சாகமாக வீடு திரும்பினான் ஜனா
Read more from Devibala
புது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsஊர்மிளா - '96' Rating: 0 out of 5 stars0 ratingsபல்லக்கில் ஏறு... Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணகி - '96' Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்ச(ம்) வா! Rating: 0 out of 5 stars0 ratingsமேடைக்கு வாங்க! Rating: 0 out of 5 stars0 ratingsஇது ஆரம்பம்தான்! Rating: 0 out of 5 stars0 ratingsகோடைத் தள்ளுபடி Rating: 0 out of 5 stars0 ratingsபின்னர் அறிவிக்கப்படும்! Rating: 0 out of 5 stars0 ratingsசரித்திரம் திரும்புகிறது! Rating: 0 out of 5 stars0 ratingsகைகேயி - 96 Rating: 0 out of 5 stars0 ratingsசீதைக்கு ராமன் சித்தப்பா Rating: 0 out of 5 stars0 ratingsமூச்சுவிட நேரமில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsசின்ன மணிக் குயிலே! Rating: 0 out of 5 stars0 ratingsஆலயப் பூக்கள்... Rating: 0 out of 5 stars0 ratingsகோலாகலம்..! Rating: 0 out of 5 stars0 ratingsவேண்டாம் விளையாட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsவருவது நீதானா? Rating: 0 out of 5 stars0 ratingsகோலம் இடும் மயிலே! Rating: 0 out of 5 stars0 ratingsசிரிக்காமல் விடமாட்டோம்! Rating: 0 out of 5 stars0 ratingsதாய் பிறந்தாள்! Rating: 0 out of 5 stars0 ratingsதாம்பத்ய சர்க்கஸ்! Rating: 0 out of 5 stars0 ratingsதிருமகள் தேடி வந்தாள்..! Rating: 0 out of 5 stars0 ratingsகண் பேசும் வார்த்தைகள்... Rating: 0 out of 5 stars0 ratingsசிம்ம சொப்பனம்..! Rating: 0 out of 5 stars0 ratingsதொடாதே..! Rating: 0 out of 5 stars0 ratingsபோகட்டும், விடு..! Rating: 0 out of 5 stars0 ratings
Related to நெருப்பாய் ஒரு நிலவு
Related ebooks
Neruppaai Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPadhma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Un Arukil Naan Rating: 4 out of 5 stars4/5Nandha Rating: 0 out of 5 stars0 ratingsPoovukul Uyir Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பிற்கு தலைவணங்கு! Rating: 0 out of 5 stars0 ratingsAnbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsஏனழுதாய் என்னுயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMalarkanai Rating: 5 out of 5 stars5/5Ettavathu Swaram..! Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsNishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Yaathumagi Nindrai Rating: 0 out of 5 stars0 ratingsஆசை ஊஞ்சலில்... Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Thevai... Oru Appa! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Pesum Mozhi Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsSithra Salabam Rating: 0 out of 5 stars0 ratingsOru Chinna Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணோரம் மின்சாரம் Rating: 0 out of 5 stars0 ratingsமடியில் சாயும் நேரம் Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for நெருப்பாய் ஒரு நிலவு
0 ratings0 reviews
Book preview
நெருப்பாய் ஒரு நிலவு - Devibala
1
கண்ணாடி முன் நின்று தலையைப் படிய வாரிக் கொண்டிருந்தான் ஜனா ஏழாவது முறையாக.
என்னங்க டிபன் ரெடி. வர்றீங்களா?
ம்!
குரல் கொடுத்துவிட்டு ஜன்னல் வழியாகப் பார்வையை வெளியே செலுத்தினான்.
ஜன்னலில் அந்த முகம் உறைந்து கிடந்தது.
அந்த இரண்டு பெரிய (?) சமுத்திர விழிகள் இவனையே தாபத்துடன் நிரப்பிக் கொண்டு அங்குலம் கூட அசையாமல் காத்திருக்க,
ஜனா எந்தவித முக பாவமும் காட்டாமல் ஒரு நொடி பார்த்தான் அங்கே.
உங்களைத்தானே? ஆறிப் போய்த்தான் சாப்பிட வருவீங்களா?
சாருவின் குரல் வெகு அருகில் கேட்க,
பார்வையை ஜன்னலிலிருந்து மீட்டு, இந்தப்பக்கம் திரும்பினான்.
வந்து விட்டாள் சாரு.
உங்களுக்குப் புடிச்ச குழிப்பணியாரமும், தேங்காப் பாலும் பண்ணியிருக்கேன்
ம்!
"நேரமாகலை ஆபீசுக்கு?’’
கிளம்பியாச்சு!
சமையல் கட்டில் பாய் போட்டிருந்தாள். உட்கார்ந்து கொண்டான். பரிமாறத் தொடங்கினாள்.
நாலு வை! சாப்பிட வேண்டாம் நான்?
ஏன் இப்படி அரைகுறையா சாப்பிடறீங்க? வயிறு ரொம்ப வேண்டாமா?
"போதும். இஷ்டத்துக்குத் தின்னுட்டு சதை மலையா மாறணுமா? பார்க்க ஒரு அழகு வேண்டாம்?’’
அவள் முகம் ஒரு நொடி சுத்தமாகச் சுருங்கிப் போனது.
இனி யாரும், யாரையும் கட்டிக்க வேண்டாம். இருக்கற அழகு போதும். காபி தரட்டுமா?
குடு!
அதைக் குடித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டான்.
வெள்ளைப் பேன்ட்டும், கறுப்பு நிற சட்டையும் அணிந்து கொண்டான். அவனது பிரவுன் நிறத்துக்கு கறுப்புச் சட்டை அசாத்தியமாக இருந்தது.
திரும்பவும் கொஞ்சமாகப் பவுடர் எடுத்து ஒற்றிக் கொண்டான்.
தன் கறுப்புக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டதும், அழகு அள்ளிக் கொண்டு போயிற்று.
இந்தாங்க மத்யானச் சாப்பாடு!
பையை வாங்கிக் கொண்டான்.
சீக்கிரமா வாங்க. சாயங்காலம் மார்க்கெட் போகணும்!
பாக்கறேன்
வாசலில் அவன் இறங்க, எதிர்வீட்டுக் கதவு தற்செயலாக திறப்பது போலத் திறந்து கொண்டது.
ஈரக் கூந்தலைத் துவட்டியபடி அவள் இயல்பாக வந்தாள்.
ஆனால், இவனைப் பார்க்கத்தான் அந்த வரவு என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
சாருவின் பார்வையில் உஷ்ணம் இருந்தது.
தன் மொபெட்டை இயக்கி, அதில் வெகு நாசுக்காகப் படர்ந்து தெருவைக் கடந்து விட்டான் ஜனா.
எதிர் வீட்டுப் பெண் பெருமூச்சு விட்டபடி வெளியேறினாள்.
ஜனா...
ஜனார்தன் என்ற முழுப்பெயர் கொண்ட ஜனாவை அத்தனை சுலபத்தில் வர்ணித்துவிட முடியாது.
ஆண்களில் இப்படியொரு அழகா என்ற ஆச்சர்யம் ஜனாவைப் பார்த்த எல்லாருக்குமே வந்து விடும்.
அப்படி ஒரு நிறம். சூரியனின் தங்க கிரகணங்களை தன் உடம்பில் வாங்கிக்கொண்டதைப் போல ஒரு தகதகப்பு. லேசான பெண்மை கலந்த முகத்தில் அழகான எடுப்பான கண்கள் - அளவான மூக்கு... ஈரப்பசை கலந்த உதடுகள்... அதன் மேல் ‘நறுக்’கென்ற கட்டையான மீசை... உடம்பும் செதுக்கி வைத்ததைப் போல... ஆண்களுக்கே அவனைப் பார்த்தால் ஒரு மாதிரித்தான் இருக்கும்.
பள்ளி நாட்களிலிருந்தே அவன் அழகு மற்றவர்களால் வியப்புடன் விமர்சனம் செய்யப்பட்டுக்கொண்டே வந்ததால் ஜனாவுக்கு அதில் ஒரு கிறக்கமும், லேசான கர்வமும் உண்டானதில் அதிசயமில்லை. அதனால், அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற வேகம் உண்டாகிவிட்டது.
அதிகம் வெயிலில் சுற்றமாட்டான்.
காரமான பொருட்களை சாப்பிட மாட்டான்.
கண்ணுக்கு அயர்ச்சி தரும் காரியங்களைச் செய்யமாட்டான். கடுமையான தேகப்பயிற்சி, ஓட்டம், யோகா என்று தொடங்கிவிட்டான். உணவிலும் சபலமே இல்லை. சீரான முறைகளைக் கையாளத் தொடங்கிவிட்டான்.
படிப்பில் ஒன்றும் ஜனா புலியல்ல.
கிட்டி முட்டி ஒரு பி.எஸ்.ஸி. பட்டத்தை அதுவும் இரண்டாம் வகுப்புதான், வாங்குவதற்குள் மூச்சு முட்டி விட்டது.
வீட்டில் மூன்றாவது பையன்.
இரண்டு அண்ணன்மார். இரண்டு தங்கைகள்.
அப்பாவுக்குக் குடும்பக் கவலையே பெரிதாக இருந்தது.
வேலை கிடைக்காமல் மூன்று வருடங்கள் காத்திருந்தான் ஜனா.
மாமாதான் எப்படியோ ஒரு தனியார் வேலையில் அவனை உட்கார வைத்து விட்டார். சுமார் சம்பளம்தான்.
மாமாவின் மகள்தான் சாரு. இங்கே சாரு பற்றியும் சொல்லியாக வேண்டும். கட்டை, குட்டையாக இருட்டுக்குப் பிறந்தவள் போல அப்படி ஒரு கறுப்பு.
ஒரு முறை பார்த்த யாரும் நிச்சயம் மறுமுறை பார்க்கமாட்டார்கள். வயது இருப்பதைக் கடந்து விட்டது.
யாரும் சாருவை அத்தனை சுலபமாக மணக்கமாட்டார்கள். மாமாவுக்கு பண வசதி கணிசமாக