Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கரைக்கு வராத அலைகள்
கரைக்கு வராத அலைகள்
கரைக்கு வராத அலைகள்
Ebook129 pages30 minutes

கரைக்கு வராத அலைகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் டயரியிலிருந்து...
 மிகவும் சுவாரஸ்யமாகத்தான் என்னுடைய போலீஸ் வாழ்க்கை ஆரம்பித்தது.
 பணிச் சேர்க்கை பதிவேட்டில் கையெழுத்ட்டுவிட்டு - என்னுடைய சீனியர் இன்ஸ்பெக்டர் ரகுமானிடம் கையைக் குலுக்கின நிமிடம் போன் அடித்தது.
 மறுமுனைக் குரலைக் காதில் வாங்க ஆரம்பித்ததுமே - அபவர் முகம் சீரியசாகிப்போனது.
 பொதுவான சேம நலங்கள் ஏதும் விசாரிக்க அவகாசம் இல்லாமல் - தொப்பியை மாட்டிக் கொண்டு - அவசரம் ததும்பிய குரலில் –
 "வாங்க போகலாம்." என்றார்.
 "எங்கே சார்...?" என்று கேட்க வாயெடுத்தவன் வார்த்தைகளைத் தொண்டைக் குழிக்குள்ளேயே அடக்கி கொண்டேன்.
 புது உத்தியோகம். புது மேலதிகாரி. புரிந்து கொள்ளும்வரை அநாவசியக் கேள்விகளை சென்சார் செய்து கொள்வது நல்லது. கூடப் போகத்தானே போகிறோம். போனதும் - எங்கே என்று தெரிந்துவிடப் போகிறது.
 எனக்குள் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தபோதே ரகுமான் இரைந்து ஆணைகளைப் பிறப்பிக்க ஆரம்பிதிருந்தார்.
 "ஏட்டு..."
 "எஸ் சார்...ஜீப் ரெடியா?"
 "ரெடி சார்..."
 "ட்யூட்டி கான்ஸ்டபிள்ஸ் நாலு பேரை அனுப்புங்க..."
 "ஓக்கே சார்..."
 "பிரேத அறைக்கும், தடயவியல் நிபுணர்களுக்கும் சொல்லி குளத்தேரிக்கு ஆளுங்களை அனுப்பச் சொல்லுங்க..."
 ஜீப்புக்குள் போலீசார் இருந்தார்கள்.
 நானும் ரகுமானும் முன்னால் ஏறிக் கொண்டோம். அவரே ஸ்டியரிங்கைப் பிடித்தார்.
 ஜீப் விரைய ஆரம்பித்தது.
 குளத்தேரி பகுதியில் ஜிலு ஜிலுவென ஈரக் காற்று வீசிக்கொண்டிருக்க - சொற்பமாய் ஜனக் கும்பல் கூடியிருந்தது.
 கும்பலை ஒட்டினாற்போல சென்று ஜீப் நிற்க - ரகுமான் உட்பட எல்லோருமே கீழே இறங்கினார்கள்
 அந்தக் கும்பலுக்கு அருகே இருந்து வெளிப்பட்ட போலீஸ்காரர் வேகமாய் முன்னால் வந்து ஒரு சல்யூட் வைத்தார்.
 ரகுமான் அவரிடம் கேட்டார்.
 "எங்கேய்யா...?"
 இடது பக்கம் கையைக் காட்டினார் அவர்.
 "அங்கே சார்..."
 பாசிபடர்ந்த குளத்துத் தண்ணீர் சலனமில்லாமல் நின்றிருக்க - ஈரப்பதமான கரை மண்ணில் பூட்ஸ் தடங்கள் பதிய நடந்து சென்றோம்கான்ஸ்டபிள் காண்பித்த இடத்தில் ஒரு உடம்பு நீளமாய்க் கிடத்தப்பட்டு வெள்ளை வேட்டியால் மூடப்பட்டிருந்தது.
 லாட்டியால் போலீஸ்காரர் அந்தத் துணியை விலக்க தண்ணீரில் ஊறிப்போய் வீங்கிக் கிடந்த ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223140702
கரைக்கு வராத அலைகள்

Read more from Rajeshkumar

Related to கரைக்கு வராத அலைகள்

Related ebooks

Related categories

Reviews for கரைக்கு வராத அலைகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கரைக்கு வராத அலைகள் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த அலுவலக உதவியாளன் தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிலிருந்து அந்த நீள் செவ்வகத்தாள்களை எடுத்து நீட்டினான்.

    இந்தாங்க சார்...

    விமலானந்த் நிமிர்ந்தான்.

    "கிடைச்சுதா...?

    கிடைச்சுது சார்...

    எத்தனை மணிக்கு...?

    சரியா ஆறு மணிக்கு...

    சரி, நீ போகலாம்.

    உதவியாளன் அறையைவிட்டு வெளியேறவும், மேசைமேலிருந்த டெலிபோன் குரலைத் துப்பவும் சரியாயிருந்தது.

    அலோ...

    மறுமுனையிலிருந்து டெலிபோன் ஆபரேட்டரின் குரல் கேட்டது.

    உங்களுக்கு போன் சார்...

    யாரு...?

    உங்க மனைவி...

    சரி... கொடு...

    பீத்தோவனின் சிம்பொனி இசை சில விநாடிகளுக்கு கேட்டது. அதைத் தொடர்ந்து விமலானந்த்தின் மனைவி கற்பகாவின் குரல்.

    அலோ...

    சொல்லு கற்பகா... நான்தான் பேசறேன்...

    இன்னிக்கு நீங்க சீக்கிரம் கிளம்பணும்... ஞாபகம் இருக்கா...

    நல்லா ஞாபகம் இருக்கு...

    இப்படித்தான் சொல்லுவீங்க... ஆனா கடைசி நேரத்துல முக்கியமான வேலை வந்துடுச்சு... வேலை மும்முரத்துல மறந்தே போயிட்டேன்னு... இழுப்பீங்க...

    இல்லை... இல்லை... கண்டிப்பா வந்துடுவேன்...

    சரியா ஆறு மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கணும். அப்பதான் கோயிலுக்குப் போக சரியா இருக்கும் ஏழு மணிக்கு அபிசேகம்...

    நான் அஞ்சரை மணிக்கெல்லாம் வீட்டில் இருப்பேன்...

    அவ்வளவு சீக்கிரமே வந்துடுவீங்களா...?

    ஆமா... நான் வேற நிகழ்ச்சி போட்டு வெச்சிருக்கேன்...

    என்ன நிகழ்ச்சி?

    நாம் கோயிலுக்குப் போகலை... சினிமாவுக்குப் போறோம்...

    என்னங்க நீங்க... பிறந்த நாளும் அதுவுமா கோயில்ல போய் அர்ச்சனை பண்ண வேண்டாமா...?

    சாமி மனசில் இருந்தா போதும்... காலைல வீட்ல சாமி கும்பிட்டோமே... அதுவே போதும்... நானும் நீயும் என்ன சாமியார் சாமியாரிணியா...?

    ......

    என்ன பேச்சையே காணோம்.?

    கோயிலுக்குப் போறோம்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். அதைத் தடை பண்ணிட்டு சினிமாவுக்குப் போறதுக்கு மனசுக்குள்ளே லேசா கிலேசமா இருக்கு...

    அதனாலென்ன...? சாமிகிட்டே மன்னிக்க சொல்லிடு... நான் டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டேன்... இப்பதான் பியூன் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனான். ஆக நாம சினிமாவுக்குத்தான் போறோம்...

    சரி...

    சொல்லி ரிசீவரை வைத்தான்

    டொக்...

    டொக்.

    டொக்...

    கதவுத் தட்டலும் - அதைத் தொடர்ந்து குலாப்ஜாமூனில் குழைத்த மாதிரிக் குரலில்...

    மே ஐ கமின் சார்...?

    எஸ்.

    வழவழ ஷிபான் சேலைக்குள் இருந்த எக்சிகியூட்டிவ் பிரியா உள்ளே வந்தாள்.

    புன்னகை உறைந்திருக்கும் உதடுகள். சிரத்தை மேக்கப். தூக்கலாய் வாசனைத் திரவியம்.

    குட் ஈவினிங் சார்... நீங்க அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிடுவிங்கன்னு பியூன் சொன்னான். உங்ககிட்ட சில அலுவலக விசயம் பேசலாமா?

    என்ன விசயம்...?

    டெண்டர் அறிவிப்பு பண்ணியிருந்தோமே... அதுக்கு நிறைய பதில் வந்திருக்கு...

    எத்தனை பேர் அனுப்பியிருக்காங்க...?

    மொத்தம் பதினைஞ்சு சார்...

    அதை இப்போ பார்க்க ஆரம்பிச்சா எப்படியும்? இரண்டு மணி நேரம் தேவைப்படுமே...

    ஆமா சார்... அதை நான் பெண்டிங் வெச்சிடட்டுமா...?

    ஏன் பெண்டிங் வெக்கறிங்க...?

    சீலை உங்க முன்னாடி 'ப்ரேக்' பண்ணி... நீங்க கையெழுத்துப் போடணுமே சார்...

    சரி... நாளைக்குக் காலைல முதல் வேலையா இந்த டெண்டர்களைப் பார்த்துடுவோம்...

    சரி சார்...

    வேறு ஏதாவது...?

    இன்னொரு கடிதம் வந்திருக்கு சார்...

    என்ன கடிதம்...?

    இது உங்களுக்கு வந்திருக்கும் தனிப்பட்ட கடிதம் மாதிரி தெரியுது...

    தனிப்பட்ட கடிதமா...?

    விமலானந்த் நெற்றியைச் சுருக்கினான்.

    ஆமா சார்... அதனாலதான் 'ஓப்பன்' பண்ணலை...

    கொடுங்க...

    பொதுவாய் அலுவலகக் கடிதங்கள் தவிர வேறெதுவும் ஆபீசுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1