Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பஞ்சவர்ணக் கி(ளி)லி
பஞ்சவர்ணக் கி(ளி)லி
பஞ்சவர்ணக் கி(ளி)லி
Ebook144 pages34 minutes

பஞ்சவர்ணக் கி(ளி)லி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதிரவன் இன்னமும் கண் திறக்காத விடியற்காலை. நேரம் 5.45.
 மகள் நித்யகல்யாணியின் அறைக்குள் நுழைந்தார் திருஞானம்.
 "என்னம்மா... ரெடியா...?"
 ஸ்கர்ட்டும் கான்வாஸ் ஷூக்களும் அணிந்து டென்னீஸ் கோர்ட் போகத் தயாராக இருந்த இருபத்தேழு வயது நித்யகல்யாணி கண்ணாடி முன் நின்றிருந்தாள்.
 "நான் அஞ்சரை மணிக்கே ரெடிப்பா...! டி.வி. பீப்பிள் வந்துட்டாங்களாப்பா...?"
 "ம்... வந்துட்டாங்க...! உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..."
 "அப்பா...!"
 "என்னம்மா...?"
 "பேட்டி பத்து நிமிஷம்தான்...! அதுக்குள்ளே அவங்க கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டுட்டு போயிட்டே இருக்கணும்..."
 "சொல்லிட்டேன்...!"நித்யகல்யாணி சுவரின் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த டென்னீஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு மாடிப்படிகளில் இறங்கி கீழே இருந்த வரவேற்பறைக்கு வந்தாள். 'வானம் டி.வி'யைச் சேர்ந்த மூன்று பேர் சோபாவினின்றும் எழுந்தார்கள்.
 "குட்மார்னிங் மேடம்...!"
 "குட்மார்னிங் டூ எவ்ரி படி..." சிக்கனமாய் ஒரு புன்னகையை வெளிப்படுத்தியபடி அவர்களுக்கு முன்பாய் போய் உட்கார்ந்தாள் நித்யகல்யாணி.
 "உங்கள்ல ரிப்போர்ட்டர் யாரு?"
 " மைசெல்ஃப் மேடம்..."
 "கேள்விகள் ரெடியா...? இல்லை இனிமேத்தான் யோசிக்கணுமா...?"
 "கேள்விகள் ரெடி மேடம்...!"
 "ம்... காமிராவை ஸ்டார்ட் பண்ணிட்டு சீக்கிரமாய் கேள்விகளைக் கேட்டு முடிங்க... சரியாய் ஆறு மணிக்கெல்லாம் நான் வீட்டை விட்டு கிளம்பிடுவேன். 6.10க்கெல்லாம் நான் டென்னீஸ் கோர்ட்டில் இருக்கணும்."
 "காமிரா ஸ்டார்ட் மேடம்...!"
 "கேள்விகளைக் கேளுங்க...!"
 ரிப்போர்ட்டர் தன் கையில் இருந்த உருண்டை மைக்கை அவளுக்கு முன்பாய் நீட்டியபடி கேட்டார்.
 "மேடம்...! பிசினஸில் நீங்க சாதனை புரிஞ்சதுக்காக 'டேலண்ட்டட் யங் பர்சன் அவார்ட்' உங்களுக்கு கிடைச்சிருக்கு. இந்த அவார்ட் உங்களுக்குக் கிடைச்சதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க...?"
 "சரியான நபர்க்கு - சரியான நேரத்தில் - சரியான அவார்ட் கொடுக்கப்பட்டு இருக்கு... இந்த அவார்ட்டுக்கு நான் நூற்றுக்கு நூறு பர்ஸண்ட் தகுதியானவள். இந்த பதிலைக் கேட்டுட்டு யாராவது எனக்குத் தற்பெருமைன்னு சொன்னாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை"உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?"
 "நீங்களே 'ரகசியம்' என்று சொல்லிவிட்ட பிறகு அதை எதற்காக நான் வெளியில் சொல்ல வேண்டும்?"
 "நீங்கள் பிசினஸுக்கு வர என்ன காரணம்?"
 "இது என்ன கேள்வி... பணம் சம்பாதிக்கத்தான்...!"
 "பிசினஸ் என்று சொன்னால் போட்டிகள் இருக்கும். அந்த போட்டிகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?"
 "நான் என் போட்டியாளர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. காரணம், அப்படி கவலைப்படும் அளவுக்கு அவர்கள் ஒன்றும் திறமையானவர்கள் அல்ல..."
 "நீங்கள் அதிகம் கோபப்படுவீர்களாமே...?"
 "கோபம் வராத மனிதன் இந்த உலகத்தில் உண்டா என்ன...? எதற்குக் கோபப்பட வேண்டும்... எதற்குக் கோபப்படக் கூடாது என்று எனக்குத் தெரியும்."
 "உங்களுக்கு 'ரோல் மாடல்' யார்...?"
 "எனக்கு நானேதான்... 'ரோல் மாடல்.' இன்னொருவரைப் பார்த்து ஏன் காப்பியடிக்க வேண்டும்?"
 "கடவுள் உங்கள் முன் தோன்றினால்...?"
 "தொழில் துறையில் நான் நிறைய சாதிக்க வேண்டும். எனவே ஆயிரம் வருடம் ஆயுள் கேட்பேன்."
 "நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை?"
 "அதை நான் சொல்ல விரும்பவில்லை."
 "ஏன்...?"
 "அது ஒரு கெட்ட வார்த்தை...!"
 "நீங்கள் மறக்க நினைக்கும் விஷயம் எது?"நான் வாழ்க்கையில் எதையும் மறக்க விரும்பவில்லை. என் உண்மையான விரோதி என் வாழ்க்கைதான். அதை ஜெயிக்க நான் பல விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224779338
பஞ்சவர்ணக் கி(ளி)லி

Read more from Rajeshkumar

Related to பஞ்சவர்ணக் கி(ளி)லி

Related ebooks

Related categories

Reviews for பஞ்சவர்ணக் கி(ளி)லி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பஞ்சவர்ணக் கி(ளி)லி - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    தமிழ் பழமொழி ஆங்கிலம் பேசினால் எப்படியிருக்கும்?

    இதோ...! ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும்!

    * நெருப்பு இல்லாமல் புகையாது.

    * NO SMOKE WITHOUT FIRE.

    அந்த நள்ளிரவு ஹைவேஸ் சாலையில் பயணம் செய்த போலீஸ் ஜீப் அரசுக்கு சொந்தமான மயானத்துக்குள் நுழைந்து நின்றது.

    ஒரு இன்ஸ்பெக்டரும் சப்-இன்ஸ்பெக்டரும் இறங்கினார்கள். மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் அந்த இடம் இருட்டை பூசிக் கொண்டு சிதிலமான கல்லறைகளை மட்டும் காட்டியது. மயானத்தின் கோடியில் இருந்த தகரக் கொட்டகையிலிருந்து நேற்று மாலை எரியூட்டப்பட்ட உடல் இன்னமும் எரிவதற்கு அடையாளமாய் லேசாய்ப் புகைந்து கொண்டு இருந்தது.

    இன்ஸ்பெக்டர் ஜீப்புக்கு சாய்ந்து நின்று கொண்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருக்க, சப்-இன்ஸ்பெக்டர் மெல்ல நடந்து போய் வெட்டியானின் குடிசைக்குப் பக்கத்தில் போய் நின்று குரல் கொடுத்தார்.

    செந்தட்டி...!

    பதிலுக்கு குடிசையிலிருந்து எந்த சத்தமும் வராமல் போகவே சப்-இன்ஸ்பெக்டர் தன் பூட்ஸ் காலால் கதவை எட்டி உதைத்தார். ‘டொம்’ என்ற சத்தத்தோடு அந்தத் தகரக் கதவு அதிர்ந்தது. உள்ளேயிருந்து சாராயம் நிரம்பிய குழறல் வார்த்தை வெளியே வந்தது.

    யாழது...?

    செந்தட்டி... கதவைத் திற...! பூட்ஸ்கால் மறுபடியும் கதவை உதைக்க, செந்தட்டி கயிற்றுக் கட்டிலிலிருந்து அரக்கப்பரக்க எழுந்து, தரையில் அவிழ்ந்து கிடந்த லுங்கியை எடுத்துச் சுற்றிக் கொண்டு தள்ளாட்ட நடையோடு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் பாதி போதை தெளிந்து போய் மார்புக்கு குறுக்காக பவ்யமாய் கைகளைக் கட்டிக் கொண்டு அய்யா! என்று பம்மினான்.

    என்னடா... பேட்ரி செல் சாராயமா...? இந்த நாறு நாறுது...!

    இல்லீங்கய்யா... கொஞ்சம் போல...!

    உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா... எண்பது வயசுல சாக வேண்டியவன், ஐம்பது வயசிலேயே மண்டையைப் போட்டுடுவே போலிருக்கு... சரி... சரி... வந்து ஒரு குழியை வெட்டு... பாடி ஒண்ணு வருது...!

    செந்தட்டி தன் பரட்டைத் தலையைச் சொறிந்தான்.

    அய்யா...! இந்நேரத்துக்கு... பாடியா...?

    டேய்...! போன வாரம் ரெட்டிகுப்பம் கிராமத்துல ஒரு ஜாதிச்சண்டை வந்து ஏழெட்டு பேர் செத்துப் போனாங்களே... அதுல ஒருத்தன் பாடி அடையாளம் தெரியாமலேயே மார்ச்சுவரியில் இருந்தது. ஒரு வாரம் வெச்சுப் பார்த்தோம். யாரும் வரலை... உடம்பை அடக்கம் பண்ணச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டு இருக்கு. பாடியை பகல்ல கொண்டு வந்தா அந்த கிராமத்துக்காரங்க ஏதாவது பிரச்னை பண்ணு வாங்கன்னுதான் ராத்திரியில் கொண்டு வந்துட்டு இருக்கோம். இந்தா... ஆஸ்பத்திரி சீட்டு. போய்க் குழியை வெட்டு

    அய்யா...!

    என்ன...?

    வந்து... வந்து...

    சொல்லுடா...!

    ராத்திரி பத்து மணிக்கு மேல் எந்த ஒரு பாடியையும் மயானத்துல புதைக்கவோ எரிக்கவோ கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்கு.

    சப்-இன்ஸ்பெக்டர் வெகுண்டார்.

    சாராய நாயே...! சட்டமா பேசறே...? மறுபடியும் அந்தக் கிராமத்துல ஜாதிச் சண்டை எங்கே ஸ்டார்ட் ஆயிடுமோன்னு பயந்து போய் நாங்க இந்த ஏற்பாட்டை பண்ணியிருக்கோம். நீ என்னடா பம்மறே...?

    ஜீப்புக்கு சாய்ந்து சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் குரல் கொடுத்தார்.

    என்ன... முரளி... அங்கே என்ன பிரச்னை?

    செந்தட்டி சட்டம் பேசறான் ஸார்...

    சட்டமா...?

    ம்... ராத்திரி பத்து மணிக்கு மேல எந்த ஒரு பாடியையும் மயானத்துல புதைக்கவோ எரிக்கவோ கூடாதாம்.

    சட்டம் பேசற அந்த நாயைத் தூக்கி ஜீப்ல போடு. ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் லாக்கப்புல வெச்சு சட்டத்தோட அகல நீளம் எவ்வளவுன்னு காட்டலாம்.

    அய்யா...! வேண்டாங்கய்யா...! நான் தெரியாமே பேசிட்டேன்யா. பொதுவாய் இருக்கிற வழக்கத்தை சொன்னேன். அவ்வளவு தான்ய்யா...! செந்தட்டி அழுகிற குரலில் சொல்லிக் கொண்டே கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டான்.

    சரி... சரி... போய் குழியை வெட்டு...

    செந்தட்டி மறுபடியும் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு குடிசைக்குள் போய் ஒரு பெரிய கடப்பாரையையும் மண் வெட்டியையும் எடுத்து வந்தான். அதே விநாடி-

    மயானத்தின் பிரதான கேட் வழியாக அந்த மார்ச்சுவரி வேன் உள்ளே வந்தது. ஹெட் லைட்டுகளை அணைத்துக் கொண்டு நின்றது.

    அய்யா...! செந்தட்டி கூப்பிட்டான்.

    என்னடா...?

    "பாடி சைஸ் பார்த்துட்டு குழியை

    Enjoying the preview?
    Page 1 of 1