Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Kalai
Kaadhal Kalai
Kaadhal Kalai
Ebook251 pages5 hours

Kaadhal Kalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாலியல் கல்வியின் பல்வேறு கூறுகளையும் ஆராயும் திருமணக் கையேடுகள் பல உண்டு. ஆயினும் வேறு எந்த நூலும் இந்நூலைப் போல் அத்தனை சிறந்த கண்கூடாகப் பயனளிக்க வல்ல வழிகாட்டியாக அமையவில்லை எனலாம்.
மிக எளிதாகத் தோன்றும் இந்நூலின் எழுத்துகள் உடலின் பௌதிக அறிவின் அடிப்படை அம்சங்களை மிகத் தெளிவாக விளக்குகின்றன. பாலியல் குறித்த தவறான கருத்துகளை இந்நூல் தகர்த்தெறிகிறது.
சிறந்த பாலுறவுக்கு இந்நூலின் அணுகுமுறை மிகமிகத் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. அதனாலேயே இந்நூலின் ஆசிரியர் டாக்டர் எல்லிஸ் ஒரு தனித்தன்மை வாய்ந்த பாலியல் வல்லுநராகக் கருதப்படுகிறார்.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136806090
Kaadhal Kalai

Read more from Aranthai Manian

Related to Kaadhal Kalai

Related ebooks

Reviews for Kaadhal Kalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Kalai - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    காதல் கலை

    Kaadhal Kalai

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    Dr. ALBERT ELLIS Ph.D.,

    அறிமுகம்

    மனிதர்களின் பாலுணர்வுக் கருவிகள்

    ஆண் - பெண்களின் உடலுறவு நடத்தை அல்லது செயல்முறை

    விதவிதமான 'இச்சை - வடிகால்கள்'

    உடலுறவு இச்சையைத் தூண்ட உதவும் உளவியல் முறைகள்

    உடலியல் ரீதியாக வேட்கையைத் தூண்டும் வழிமுறைகள்

    உடலுறவுக்கான ஆரம்ப நடவடிக்கைகள்

    குறிப்புணர்ச்சி: உளவியல் ரீதியான அடிப்படை நியதிகள்

    கலவியில் உடலியல் அம்சங்கள்

    குறிப்புணர்ச்சி - முக்கிய ‘நிலைகள்'

    பாலியல் கோளாறுகளுக்கான காரணங்கள்

    உடலுறவுச் சிக்கல்களை சரி செய்தல்

    மாறுபட்ட சூழ்நிலைகளில் உடலுறவு கொள்ளுதல்

    பாலியல் வக்கிரங்கள்

    உடலுறவுக் குறைபாடுகளும் நோய்களும்

    கருத்தரித்தலும் மலட்டுத் தன்மையும்

    கருத்தரிப்பு

    கருத்தடை முறைகள்

    Dr. ALBERT ELLIS Ph.D.,

    Born in PITTSBURGH,U.S.A.

    Grew up - New York City M.A., & Ph.D., In Clinical Psychology, COLUMBIA UNIVERSITY

    Professor - RUTGERS UNIVERSITY & NEWYORK UNIVERSITY

    Chief Psychologist - New Jersey State Diagonostic Center, New Jersey Department of Institutions and Agencies.

    Executive Director - Institute of Rational Emotive Therapy

    Psychotherapist

    Marriage and Family Counsellor

    Chairman - Marriage Counselling Section of the National Council of Family Relations.

    Vice-President - American Academy of Psychotherapists, Fellow of the American Psychological Association, President of its Division of Consulting Psychology, Member of its Council of Representatives, American Association of Marriage Counsellors

    Fellow and Past President of the Society for the Scientific Study of Sex

    Fellow of the American Association for Advancement of Science

    Fellow of the American Association for Applied Anthropology

    Fellow of the American Sociological Association

    Diplomate in Clinical Psychology of the American Board of Professional Psychology

    Diplomate in Clinical Hypnosis of the American Board of Psychological Hypnosis

    Diplomate of the American Board of Psychotherapy HONOURS HUMANIST OF THE YEAR AWARD from American Humanist Association Distinguished Practitioner Award of the Academy of Psychologists in Marital and Family Therapy

    Distinguished Psychologist Award of the Division of Psychotherapy of the American Psychological Association.

    Associate Editor: Journal of Marriage and the Family, International Journal of Sexology, Sex Research and Rational Living, Existential Psychiatry, Journal of Contemporary, Psychotherapy, Journal of Individual Psychology, Journal of Sex Research, Voices : The Art & Science of Psychotherapy, Cognitive therapy & Research, The Psychotherapy Patient

    Publications: Over 500 papers in Psychological, Psychiatric and Sociological Journals, Periodicals and Anthologies, has authored 49 Books & MONOGRAPHS.

    Information Courtesy: Muthiah Ramanathan

    "மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்

    செவ்வி தலைப்படு வார்!"

    பூவைவிட மெல்லியது பொங்கிவரும் காமமது. அதனை அறிந்தவரும், அதனாலே மகிழ்ந்தவரும் எத்தனை பேர் பூமியிலே? ஏதோ சிலர்தான்! - இது வள்ளுவர் கருத்து.

    இவ்வரிய கலையை கற்றுத் தேர்ந்து கையாள்பவர்களது வாழ்க்கை உன்னதமாக அமையும் என்று மேநாட்டு மேதைகள் மனோதத்துவமாகவும், உடல் ரீதியாகவும் ஆராய்ந்து தெளிவு படுத்தியுள்ளார்கள். இதை நம்மவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் எனக் கருதியே இதனை வெளியிட்டுள்ளோம்.

    பாலுணர்வுக் கல்வி கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் திசைதோறும் எழுந்து வலுப்பெற்று வரும் காலத்தில் இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

    இருபாலரும் மனமொத்துப் படிக்கும் வண்ணம் சொல்ல வேண்டிய செய்திகளை சிறிதும் விரகமின்றி திரு. அறந்தை மணியன் பெயர்த்துத் தந்துள்ளார். முறைப்படி உரிமை பெற்று இந்நூல் பெயர்க்கப்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே 'காமசாஸ்திரம்' குடும்ப சூத்திரம், குடும்ப சுகம், ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளோம். இப்போது பிற மொழி நூல்களையும் தமிழில் பெயர்த்து வெளியிட்டுள்ளோம்.

    எமது வெளியீடுகளை தொடர்ந்து வாங்கி மகிழும் நண்பர்கள் இதனையும் வாங்கி ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம்.

    அறிமுகம்

    இல்லற வாழ்வில் இன்பம் காண்பது எப்படி? என்ற தலைப்பில் ஏராளமான நூல்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. இன்னும் ஒன்று ஏன் என்ற கேள்வி எழலாம்.

    ஏற்கெனவே உள்ள நூல்களைப் படித்துப் பலரும் பயன் பெற்றுள்ளனர் என்பதில் ஐயமில்லை; ஏனெனில் அவை நன்கு எழுதப்பட்டுள்ளன. ஆயினும், இவ்வகை நூல்களில், ஒரு 'இலட்சிய' நூலில் இருக்கவேண்டிய எல்லாவிதமான அம்சங்களும் முழுமையாக இருப்பதாகச் சொல்ல முடியாது. அந்தக் குறைபாட்டை நீக்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், இந்நூல் ஓர் இலட்சிய நூல் என்பதையும் நூலைப் படித்து முடித்ததும் நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள்.

    அத்தகைய அம்சங்கள் என்னென்ன?

    நீதிபோதனை செய்யாமல் நடுநிலையுடன் நின்று எழுதப் பட்டிருக்கவேண்டும்.

    படித்துத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், அவற்றை நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய யோசனைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

    வெறும் பாலுணர்வைப் பற்றி மட்டும் கூறாமல் 'பாலுணர்வு மனோதத்துவம்' பற்றி விளக்குவதாக இருக்க வேண்டும்.

    வெறும் மனோதத்துவ நூலாகவோ அல்லது வெறும் உடற்கூறு பற்றிய நூலாகவோ அல்லாமல் இரண்டையும் ஒரு சேர இணைத்து ஆய்வதாக இருக்க வேண்டும்.

    மேலோட்டமாகவோ அல்லது அடித்துப் பேசுவதாகவோ இல்லாமல், நேர்மையாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

    பழைய கோட்பாடுகளை வலியுறுத்தாமல், நவீனமாக, இக்கால சிந்தனைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

    தேவையற்ற ஏராளமான செய்திகளைச் சொல்லாமல், அவசியமானவற்றை முழுமையாகச் சொல்வதாக அமைய வேண்டும்.

    படிப்பவர்களின் பொறுமையைச் சோதிக்காமல், தெளிவாகவும், விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும்.

    மேற்சொன்ன தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஆண்களும், பெண்களும், தம்மைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் அடிப்படை அறிவைப் பெறும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    முழுமையான பாலியல் உறவுமுறைகளை அனுபவிக்கும் பிறப்புரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு; அதற்கு வழிகாட்டியாக இந்நூல் அமையுமென நம்புகிறோம்.

    நியூயார்க்

    டாக்டர் ஆல்பர்ட் எல்லிஸ்

    மனிதர்களின் பாலுணர்வுக் கருவிகள்

    பாலுணர்வுக் கருவிகள் என்பவை ஆண்குறி, பெண்குறி ஆகிய உறுப்புகளும் அவற்றின் தொடர்புள்ள உடல் அமைப்புகளும் மட்டுமே என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆண்-பெண்களின் முழு உடலுமே பாலுணர்வுக் கருவிதான். பாலுணர்வைத் தூண்டுவதற்கும் உச்சநிலை இன்பத்தை அடைவதற்கும் நமது உடலின் மிகப் பெரும்பாலான பகுதிகளும் அவசியமானவை.

    1953ல் பேராசிரியர் கின்ஸியும் அவரது கூட்டாளிகளும், பாலுணர்வுத் தூண்டலுக்கும் உச்சநிலை இன்பத்துக்கும், உடலின் எல்லாப் பாகங்களும் எவ்வாறு நேரடித் தொடர்புள்ளதாக இருக்கின்றன என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கினர்.

    பாலுணர்வைத் தூண்டுவதிலும், ஈடுபடுவதிலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருக்கின்ற நமது உடலின் உறுப்புகளை பொதுவாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:

    அ) மூளையும், மத்திய நரம்பு மண்டலமும்;

    ஆ) தானாக இயங்கும் நரம்புகள்;

    இ) தொடு உணர்வு உறுப்புகளும் தசைகளும்;

    ஈ) நாளமில்லாச் சுரப்பிகள்; மற்றும்

    உ) ஆண்குறி, பெண்குறி இதர பிறப்புறுப்புகள்.

    மேற்சொன்ன ஐந்து பிரிவுகளும் எவ்வாறு நமது பாலுணர்வுத் தூண்டலுக்கும், 'இச்சை - நிறைவேறலுக்கும்' உதவுகின்றன என்பதைப் பார்க்கலாம்.

    மூளையும் மத்திய நரம்பு மண்டலமும்

    மனித மூளை, குறிப்பாக பெருமூளை, தொடு உணர்வு உறுப்புகளிலிருந்து வரும் செய்தித் துடிப்புகளைப் பெற்ற உடனேயே பாலுணர்வு இச்சையைத் தூண்டிக்கொள்ளுகிறது.

    1947ல் 'லாஸ்ட்ராட்சி' என்பவர் இதைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.

    இச்சை எழுந்ததும், அதை நிறைவேற்றிக்கொள்ளவும், உச்சநிலையை அடையவும் குறிகளையும் பிற உறுப்புகளையும் தூண்டுவது மூளைதான்.

    ஒருவனுக்கு முதுகெலும்பு உள்ளே பாதுகாப்பாக அமைந்துள்ள தண்டுவடம், முழுமையாகச் செயலற்று விட்டால், மூளைக்கும் பிற உறுப்புகளுக்குமான நரம்புத் தொடர்பு அற்றுவிடும். அந்த நிலையில், அவன் தனது குறியை கைகளால் (சுய-இன்பம் பெறும் முறையில்) கையாண்டால், அவனுக்கு எந்த விதமான மகிழ்ச்சியோ, இன்ப நிலையோ, உச்சகட்டமோ ஏற்படாது.

    இச்சையையும், உச்சநிலை மகிழ்ச்சியையும் கட்டுப்படுத்துவது மூளைதான் என்பது இதன் மூலம் விளங்கும்.

    ஒருவனது குறியை மற்றவர் பிடித்து அவனது பாலுணர்வைத் தூண்ட முயற்சி செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது கூட அவன் தனது எண்ணங்களை பாலுணர்வு சம்பந்தப்படாத விஷயங்களில் (உதாரணமாக வீட்டைச் சுத்தம் செய்வது அல்லது சதுரங்கம் விளையாடுவது) தீவிரமாகச் செலுத்துவானானால் காம இச்சையிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும்... என்று 1946ல் 'வாக்கர்' என்பவர் எடுத்துரைத்தார்.

    மத்திய நரம்பு மண்டலம் என்பது பெருமூளை, சிறுமூளை, முகுளம், தண்டுவடம், உடல் முழுதும் பரவியுள்ள நரம்புகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

    இந்த மண்டலத்தில், 'பாலுணர்வுத் தூண்டலுடன் சிறப்பாகத் தொடர்புள்ளது முதுகின் கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள தண்டுவடத்தின் இறுதிப் பகுதியாகும்' என்று 1952ல் டுராண்ட் வேவர் என்பவர் கண்டுபிடித்தார்.

    குறிகளின் நுனி வரை நீண்டு படர்ந்திருக்கும் மிகச் சிறிய நரம்பு முனைகளில் ஏற்படும் உணர்வுகள், இப்பகுதியிலுள்ள மிக முக்கியமான நரம்பு செல்களின் முடிச்சுகளை அடைகின்றன. அந்த உணர்வுகளை இந்த முடிச்சுகள் கட்டுப்படுத்துகின்றன.

    ஒருவனின் உடலில் உள்ள பிற பகுதிகளைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம், விபத்தினாலோ, பாரிச வியாதியினாலோ பாதிப்படைந்திருக்கலாம். ஆனால் குறிகளில் உள்ள நரம்புகளும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முதுகின் அடிப்பகுதியில் உள்ள நரம்பு - முடிச்சுகளும் வலுவாக இருந்தால், ஆண்குறி விறைப்படையவும், உச்சநிலையை அடையவும் அவனால் முடியும். ஆனால் உச்சநிலை இன்ப உணர்வு மட்டும் அவனது மூளையை எட்டாது.

    மத்திய மற்றும் துணை நரம்பு மண்டலங்கள் வலுவாக இருந்து முறையாகச் செயலாற்றும்போது, பாலுணர்வுத் தூண்டலும் அதனால் நிகழும் 'இச்சை நிறைவேறலும்' இரு வழிப்பாதையில் நடக்கின்றன

    1. மனத்தில் ஏற்படும் கிளர்ச்சி, நரம்பு மண்டலம் வழியாக, குறிகளை அடைந்து அங்கு பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படலாம்;

    2. உடல்ரீதியாக குறிகள் தூண்டப்படும் போது அங்கு ஏற்படும் உணர்வுகள் மத்திய நரம்பு மண்டலம் வழியாக மூளையை அடைந்து அங்கு கிளர்ச்சியாக மாறலாம்.

    தானாக இயங்கும் நரம்பு மண்டலம்

    அமர்தல், எழுதல், நடத்தல், ஓடுதல், பிடித்தல் போன்ற 'இச்சை'ச் செயல்களை மத்திய நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது.

    மத்திய நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்த முடியாத சில செயல்களும் நமது உடலில் நடக்கின்றன. இதயத்துடிப்பு, மூச்சை இழுத்தல், வெளிவிடுதல் போன்றவை 'அனிச்சைச் செயல்கள்'; இவற்றை ஒரு சிறப்பு நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது.

    இது எப்படி செயல்படுகிறது என்பது இதுவரை தெளிவாகவில்லை.

    இந்த தானாக இயங்கும் சிறப்பு நரம்பு மண்டலமும், பாலுணர்வைத் தூண்டவும், உச்சநிலை இன்பத்துக்கும், அதன் பிறகு உடனே உடலின் பிற பகுதிகளில் ஏற்படும் சில விளைவுகளுக்கும் காரணமாக அமைகிறது. இதனால்தான் பாலுணர்வு இச்சையாக மாறும்போது, நமது இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், மூச்சு, ஆகியவற்றில் வேகம் கூடுகிறது. உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறது. குறிகளில் ஒரு திரவம் வழுவழுப்பிற்காக சுரக்கிறது. இந்த விளைவுகள் எல்லாமே, 'தானாக இயங்கும் சிறப்பு நரம்பு மண்டலத்தின்' கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. அந்த நரம்புகளின் துடிப்பால் ஏற்படுபவை.

    தொடு உணர்வு உறுப்புகளும், தசை மண்டலமும்

    நரம்பு மண்டலத்தின் கிளைகள் தசைகளை ஊடுருவிக் கொண்டு தொடு உணர்வு உறுப்புகளின் முனைகளை அடைகின்றன. நாவிலுள்ள சுவை அரும்புகள், வெப்பம் மற்றும் குளிர்ச்சியை உணரும் தோல் பரப்புகள், வலியுணரும் புள்ளிகள் ஆகியவற்றிலும் நரம்பு முனைகள் உள்ளன. இத்தகைய தொடு உணர்வு மையங்களும், நரம்பு முனைகளும் இல்லையென்றால் மனித உடலுக்கு எந்தவித உணர்ச்சியையும் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும். ஆகவே இன்பமும் இருக்காது; வேதனையும் இருக்காது. உடல் இயங்க முடியாமலும் போய் விடும்.

    பாலியல்படி, தொடு உணர்வு நரம்புகள் தான் குறிகள், கண்கள், மூக்கு, வாய், விரல்கள், மற்றும் உணர்ச்சி உறுப்புகளிலிருந்து பல்வேறு உணர்வுகளையும் தண்டு வடத்திற்கும் மூளைக்கும் எடுத்துச் செல்கின்றன. அதேபோல இடை, தொடை, குறிகள் மற்றும் பிற தசைகளின் அசைவுகள், உரசல்கள் போன்றவற்றையும் மூளைக்கு அறிவிக்கின்றன.

    மறுவழியில், மத்திய நரம்பு மண்டலமானது, தசைகளுக்கு செய்தித்துடிப்புகளை அனுப்புகிறது. இதனால்தான் தசைகள் தேவைக்கேற்றாற்போல் இயங்கி உடலுறவு அசைவுகளை ஏற்படுத்துகின்றன.

    அடிப்படையில் பாலுணர்வு என்பது தொடு உணர்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால்தான் பாலுணர்வு இச்சையும், உச்சகட்ட இன்பமும் நேர்வது நமது உணர்வுகளும், தசைகளும் முறையாக நடப்பதைப் பொறுத்தே அமைகின்றன. இவையிரண்டிலும் பழுதேற்பட்டால், 'இச்சை -

    Enjoying the preview?
    Page 1 of 1