Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathirangal – Part 3
Natchathirangal – Part 3
Natchathirangal – Part 3
Ebook136 pages24 minutes

Natchathirangal – Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோள்கள் ஒன்பது - ராசிகள் பன்னிரெண்டு - நட்சத்திரங்கள் இருபத்தேழு. இவற்றைக் கூட்டினால் நாற்பத்தெட்டு வரும். இதைத்தான் ஒரு மண்டலம் என பரிகார காலமாக ஜோதிடத்தில் சொல்கிறோம்.

சந்திராயன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி கோள்களுக்கும் நமது ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளதை நம்புவதாக கூறுகிறார். தேவாரத்தில் ஞானசம்பந்தப் பெருமான் கோளறு பதிகம் பாடி நவக்கிரஹகங்களைத் துதிக்கிறார். ராசிகள் - நட்சத்திரங்கள் பற்றி கவிதை வடிவில் தருகிறார் மன்னை பாசந்தி.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580162310267
Natchathirangal – Part 3

Read more from Mannai Pasanthy

Related to Natchathirangal – Part 3

Related ebooks

Reviews for Natchathirangal – Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathirangal – Part 3 - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நட்சத்திரங்கள் - பாகம் 3

    Natchathirangal – Part 3

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    மூலம் நட்சத்திரம்

    பூராடம் நட்சத்திரம்

    உத்திராடம் நட்சத்திரம்

    திருவோணம் நட்சத்திரம்

    அவிட்டம் நட்சத்திரம்

    சதயம் நட்சத்திரம்

    பூரட்டாதி நட்சத்திரம்

    உத்திரட்டாதி நட்சத்திரம்

    ரேவதி நட்சத்திரம்

    ‘குருவே மாணவனை நினைத்தாலும்

    குருவை மாணவன் நினைத்தாலும்

    குருவருள் திருவருள் நிச்சயம்’

    மன்னை பாசந்தி

    அணிந்துரை

    இறைவனின் திருவுளம் நமக்கு வழிகாட்டுகிறது. நம்மையெல்லாம் வாழ வைக்கிறது. நம் ஐம்புலன்களையும் ஆறாதாராச் சக்கரங்களையும் நவக்கிரஹங்கள் இயக்குகின்றன.

    ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ என்கிறார் ஆதிசங்கரர். அத்வைதம் த்வைதம் விஷிஷ்டாத்வைதம் என ஞானிகள் ஆன்மிகப் பாதைகளில் நம்மை ஆற்றுப்படுத்துகிறார்கள்.

    ஞானத்தின் வழியில் மகாப் பெரியவாளின் அநுக்கிரஹம் பெற்றவர் மன்னை பாசந்தி. நல்ல ஞானம் நிறைந்தவர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கு நடமாடும் சான்றானவர்.

    மன்னை பாசந்தியின் படைப்புகள் புத்தகங்கள் யாவும் எளிமையும் ஆழமும் பொருந்தியவை. நல்ல விஷய ஞானம் உடையவர். அதை எளிதில் பிறருக்குப் புரிய வைக்கிறார்.

    கோள்கள் ஒன்பது - ராசிகள் பன்னிரெண்டு - நட்சத்திரங்கள் இருபத்தேழு. இவற்றைக் கூட்டினால் நாற்பத்தெட்டு வரும். இதைத்தான் ஒரு மண்டலம் என பரிகார காலமாக ஜோதிடத்தில் சொல்கிறோம்.

    சந்திராயன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி கோள்களுக்கும் நமது ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளதை நம்புவதாக கூறுகிறார். தேவாரத்தில் ஞானசம்பந்தப் பெருமான் கோளறு பதிகம் பாடி நவக்கிரஹகங்களைத் துதிக்கிறார்

    ராசிகள் - நட்சத்திரங்கள் பற்றி கவிதை வடிவில் தருகிறார் மன்னை பாசந்தி. இவருடைய முயற்சி போற்றத்தக்கது. மஹான்களின் கையினால் விருதுகள் வாங்கியிருக்கிறார். வாய் மணக்க சங்கீதம் சாதிக்கிறார். ஒளிவு மறைவில்லாத உண்மையைப் பேசுகிறார்.

    மன்னை பாசந்தியின் படைப்புகள் வாசிக்கத் தக்கவை. போற்றத் தக்கவை. குருவின் ஆசீர்வாதம் இவரை வழி நடத்தும்.

    ஞான மெனும் தேரிலேறி

    நவக்கிரஹ மொழி சொன்னாய்

    கானமெனும் கவி படைத்து

    காலபுருஷ ராசி சொன்னாய்

    வான மெங்கும் நிறைந்துள்ள

    விண்மீனின் ரகசியத்தை

    தானெழுதும் பேறு பெற்ற

    தவப் புதல்வன் வாழியவே!

    வாக்கு சித்தர்

    ஆத்மார்த்த ஜோதிடர்

    டாக்டர் ச.பஞ்சநாதன்

    செல்பேசி : 9444453693

    என்னுரை

    மன்னை பாசந்தி

    இலக்கிய மேடைகளிலும் ஆன்மிக விழாக்களிலும் எண் கணிதம் -ராசிகள் - லக்னங்கள் - நட்சத்திரங்கள் - மாதங்கள் பற்றி பற்பல செய்திகளை சொல்லி கைதட்டல் பெற்றுள்ளேன்

    இருபத்தேழு நட்சத்திரங்கயைக் பற்றி ஒவ்வொன்றுக்கும் 108 மூவரி மாலைகள் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன்

    இந்நூலுக்கு அணிந்துரை அளித்த எனது ஆறாவது குரு ஆத்மார்த்த குரு ஜோதிட குரு டாக்டர் ச.பஞ்சநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்

    படிப்பதற்கு சுவாரஸ்யரமாகவும் மிகவும் பிடித்தமாக இருக்கும். வாசகர்கள் படித்து பயனுற வேண்டுகிறேன்.

    உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மாணவ மாணவியருக்கு பரிசாகவும் அன்பளிப்பாகவும் இந்நூலை அளித்து மகிழலாம்.

    மன்னை பாசந்தி

    மூலம் நட்சத்திரம்

    (தனுசு ராசி)

    மூலநாயகன் அனுமன் துணைகொண்டு

    மூலம் நட்சத்திரம் சிறப்பினை

    மூலாதாரம் நாம் அறிவோம்

    வானத்தில் உள்ள

    நட்சத்திரங்கள் மொத்தம்

    இருபத்து ஏழு

    ஓன்பதாம் ராசி தனுசு

    பத்தொன்பதாம் நட்சத்திரம்

    மூலம் நட்சத்திரம்

    மூலம் நட்சத்திரம் அதிபதி

    ஞானகாரகன் கேது பகவான்

    எடைபோடும் ஆற்றல் மிகுதி

    இடுப்பு தொடை நரம்புகள்

    ஆளுமை செய்கின்ற நட்சத்திரம்

    மூலம் நட்சத்திரம்

    மூலம் கோள் கேது

    மூலம் தேவரை நிரிதி

    மூலம் கூர்மை தன்மை

    மூலம் பிராமண சாதி

    மூலம் புலத்தியர் கோத்ரம்

    மூலம் மூன்றாம் பால்

    மூலம் இராட்சத குணம்

    மூலம் இயற்கை வாயு

    மூலம் இடை நாடி

    மூலம் மரம் மரா

    மூலம் பறவை செம்போத்து

    மூலம் விலங்கு நாய்

    திருஞானசம்பந்த மூர்த்தி

    நாயனார் அவதரித்தது

    வைகாசி மூலம் நட்சத்திரம்

    திருநீலகண்ட யாழ்ப்பாணர்

    நாயனார் அவதரித்தது

    வைகாசி மூலம் நட்சத்திரம்

    நாயன்மார்களில் ஒருவரான

    முருக நாயனார் அவதரித்தது

    வைகாசி மூலம் நட்சத்திரம்

    நாயன்மார்களில் ஒருவரான

    திருநீலநக்க நாயனார் அவதரித்தது

    வைகாசி மூலம் நட்சத்திரம்

    நாயன்மார்களில் ஒருவரான

    குங்கிலிகலையனார் அவதரித்தது

    ஆவணி மூலம் நட்சத்திரம்

    நாயன்மார்களில் ஒருவரான

    ஐயடிகள் காடவர்கோன்

    Enjoying the preview?
    Page 1 of 1