Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sangeetha Mahangal
Sangeetha Mahangal
Sangeetha Mahangal
Ebook142 pages22 minutes

Sangeetha Mahangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது என்பது வெகு சிரமம். சங்கீத மகான்கள் என்கிற இந்த தொகுப்பு நூலில்,

1. சத்குரு தியாகப்ரும்மம்

2. முத்துசுவாமி தீட்சிதர்

3. ஸ்யாமா சாஸ்திரிகள்

4. ஸ்வாதி திருநாள்

5. பத்ராசல ராமதாசர்

6. புரந்தரதாஜர்

7. சமர்த்த ராமதாஸர்

8. பக்த துக்காராம்

9. துளசிதாசர்

10. சதாசிவ பிரும்மேந்திரர்

போன்றதான பத்து சங்கீத மகான்களின் வாழ்க்கைக் குறிப்புகளை நூற்றியெட்டு மூவரி மாலையாக தொகுத்துள்ளேன். புடிக்கப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். படித்துப் பயனுற வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580162309552
Sangeetha Mahangal

Read more from Mannai Pasanthy

Related to Sangeetha Mahangal

Related ebooks

Reviews for Sangeetha Mahangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sangeetha Mahangal - Mannai Pasanthy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சங்கீத மகான்கள்

    Sangeetha Mahangal

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    2. ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர்

    3. ஸ்ரீ ச்யாமா சாஸ்திரிகள்

    4. ஸ்ரீ ஸ்வாதி திருநாள்

    5. ஸ்ரீ பத்ராசல இராமதாசர்

    6. ஸ்ரீ புரந்தரதாஸர்

    7. ஸ்ரீ சமர்த்த ராமதாசர்

    8. ஸ்ரீ பக்த துக்காராம்

    9. ஸ்ரீ துளசிதாசர்

    10. ஸ்ரீ சதாசிவ ப்ரும்மேந்திரர்

    1. சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    சங்கீத மும்மூர்த்திகள்

    மூவரில் முதன்மையானவர்

    சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    தியாகராஜ சுவாமிகள்

    தியாகப்ரும்மம் என

    போற்றப்படும் தியாகராஜர்

    தென்னிந்திய இசைக்கு

    அளப்பரிய சேவைகள் புரிந்த

    இசைஞானி தியாகராஜர்

    ஸ்ரீராமநாமத்தையே கீதங்களாக்கி

    கீர்த்திமிகு கீர்த்தனைகளால்

    பாடித்துதித்த தியாகப்ரும்மம்

    பரமாத்மாவின் ப்ரத்யக்ஷ

    தரிசனத்தைக் கண்டு

    உருகித்திளைத்த தியாகப்ரும்மம்

    ஸ்ரீமத் ராமாயணத்தை அருளிய

    வால்மீகிமுனிவரின் மறு அவதாரம்

    சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    நாரதமகரிஷியின் அருளைப்பெற்று

    நெஞ்சம் நெகிழ கீர்த்தனைகளால்

    பாடிப் பரவசமுற்ற சத்குரு

    இப்பூவுலகில் கர்நாடக இசையில்

    இசையோடு இசையாய் கலந்தவர்

    சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

    வைராக்கியம் நிறைந்த ஆத்மஞானி

    சிறந்த நாடக ஆசிரியர்

    சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    பதினெட்டாம் நூற்றாண்டில்

    சோழ நாடு திருவாரூர்

    பிறந்த மகான் தியாகராஜர்

    தாய் சீதாம்மா

    தந்தை இராமபிரம்மம்

    மூன்றாவது மகனாய் தியாகராஜர்

    சர்வஜித் வருடம்

    சித்திரை மாதம்

    தியாகப்ரும்மம் திருவவதாரம்

    ஆரூரின் இறைவனான

    ஸ்ரீதியாகராஜ ஸ்வாமியின் பெயர்

    சூட்டப்பட்ட தியாகப்ரும்மம்

    சிறுவயதில் இருந்தே

    இராமபக்தியில் லயித்து

    திளைத்த தியாகப்ரும்மம்

    தனது ஆரம்பக்கல்வியை

    திண்ணைப் பள்ளிக்கூடத்தில்

    பயின்ற தியாகப்ரும்மம்

    சங்கீதம் அவரது

    ரத்தத்தில் ஊறி இருந்த

    தியாகப்ரும்மம்

    தன் தாயாரிடம்

    ராமதாசர் புரந்தரதாசர்

    கீர்த்தனைகளைக் கற்ற தியாகப்ரும்மம்

    ராமாயணத்தைப் படித்துப்

    ராம பாராயணம் செய்து

    ராம சைதன்யரான சத்குரு

    சமஸ்கிருத மொழியில்

    சிறந்த புலமை

    தியாகராயர்

    எட்டு வயதில்

    உபநயனம்

    தியாகராயர்

    கர்நாடக இசையிலும்

    நாட்டம் அதிகரித்த

    ஸ்ரீதியாகப்ரும்மம்

    தஞ்சாவூர் அடுத்த

    திருவையாறு

    குடிபெயர்ந்த தியாகராஜர்

    சோந்தி (சொண்டி) வெங்கட்ரமண ஐயரிடம்

    சங்கீதம் பயின்ற

    தியாகராஜர்

    குருவருளாலும் திருவருளாலும்

    சங்கீதம் ஞானம் ஊற்றெடுத்து

    பெருகிய தியாகராஜர்

    குருவின் அருள் வழிநடத்தல்

    இறைவனில் பரிபூரண அருள்

    சங்கீதம் தேர்ந்த தியாகராஜர்

    பதினெட்டு வயதில்

    பார்வதி அம்மையாருடன்

    திருமணம் தியாகராஜர்

    பல அபூர்வ ராகங்களில்

    பற்பல அற்புதக் கீர்த்தனைகள்

    இயற்றிய ஸ்ரீதியாகப்ரும்மம்

    ஒரே ராகத்தில்

    பல கீர்த்தனைகள்

    சங்கீத புலமை தியாகப்ரும்மம்

    பல ராகங்களை ஒன்றாக

    இணைத்து ராகமாலிகையாக

    கிருதிகள் புனைந்த தியாகப்ரும்மம்

    தன் தாய்மொழி தெலுங்கில்

    தன்னிரகற்ற கீர்த்தனைகள்

    சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    தஞ்சை சரபோஜி மன்னர்

    தம்மைப் பற்றிப்பாட விருப்பம்

    தியாகராயரிடம் வேண்டுதல்

    மனம் வருந்தி

    அரசவைக்கு செல்ல மறுத்த

    தியாகையர்

    மனிதர்களைத் துதிசெய்து பாடி

    பொருள் சம்பாதிக்க விரும்பாத

    ஸ்ரீதியாகராஜர்

    ‘நிதிசால சுகமா’

    கல்யாணி ராக கீர்த்தனை

    பாடிய தியாகையர்வாள்

    ‘அரசனது நிதியைவிட

    ஸ்ரீராமனின் சந்நிதியே நிம்மதி’

    என்று குறிப்பிட்ட சத்குரு

    தமது இருபத்தோராம் வயதில்

    ஸ்ரீஇராமகிருஷ்ணானந்தா துறவியிடம்

    ஸ்ரீஇராமஷடாசஷரி மந்திரோபதேசம்

    தொண்ணூற்று ஆறு கோடி

    ராம நாம ஜெபம்

    ஜெபித்த சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண அனுமத்

    விக்ரஹங்களுக்கு நித்ய பூஜை

    புரிந்துவந்த சத்குரு

    சதாசர்வ காலம்

    ஸ்ரீராமநாம ஜபம்

    புரிந்த சத்குரு

    சீதா ராகவம்

    சதா ப்ரேமம்

    சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    சங்கீத சாகரம்

    சாஹித்ய ஸ்வரூபம்

    சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    சுஸ்வர சுகலயம்

    சுத்த சங்கீதம்

    சத்குரு ஸ்ரீதியாகப்ரும்மம்

    இதனைக்கண்ட

    இவரது சகோதரர்

    சத்குரு மீது கோபம்

    இராம விக்ரஹங்களை

    காவிரி நதியில் வீசுதல்

    சத்குரு இல்லாத சமயம்

    இதனை அறியாது

    விக்ரஹகங்களைத்

    Enjoying the preview?
    Page 1 of 1