Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pokkisham
Pokkisham
Pokkisham
Ebook71 pages27 minutes

Pokkisham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பான வணக்கங்கள். உங்கள் கைகளில் தவழ்வது உங்கள் அன்பான குழந்தைகளுக்கான கதைகள். அவர்களை, நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றும் நன்னெறிக் கதைகள். பொக்கிஷம் என்ற தொகுப்பு உண்மையில் சிறுவர்களுக்கான பொக்கிஷம். அவர்களின் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் பாதை.

நல்ல பண்புகளும், நடவடிக்கையும், சத்தியம், நேர்மை தவறாத ஒரு தலைமுறை உருவாக வேண்டும் என்பதே என் ஆசை. இதை இந்தக் கதைகள் செய்ய வேண்டும். இதை நிறையப் பேர் படியுங்கள். உங்கள் குழந்தைகளைப் படிக்க வையுங்கள். பரிசாக இந்தப் புத்தகத்தை அளியுங்கள்.

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580101009235
Pokkisham

Read more from Ga Prabha

Related to Pokkisham

Related ebooks

Reviews for Pokkisham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pokkisham - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பொக்கிஷம்

    சிறுகதைகள்

    Pokkisham

    Sirukadhaigal

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. தேவதை வந்தாள்

    2. தீபமாக இரு.

    3. வாழ்வை நிர்ணயிக்கும் வார்த்தைகள்

    4. அன்னதானம்

    5. முயற்சியே வெற்றி

    6. சந்திரனாய் மாறிய சிறுமி

    7. சந்திப்பு

    8. அதிர்ஷ்டம்

    9. மதிப்பு

    10. பிள்ளைக் குரு

    11. மண்ணுடன் பேசலாம் மௌனமாக

    12. வாழ்க்கைத் தரம்

    13. பெட்டி நிறைய முத்தம்

    14. பொக்கிஷம்

    15. சாதனைப் பெண்மணி

    முன்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு

    அன்பான வணக்கங்கள். உங்கள் கைகளில் தவழ்வது உங்கள் அன்பான குழந்தைகளுக்கான கதைகள். அவர்களை, நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றும் நன்னெறிக் கதைகள். பொக்கிஷம் என்ற தொகுப்பு உண்மையில் சிறுவர்களுக்கான பொக்கிஷம். அவர்களின் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் பாதை.

    முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி நெறி வகுப்புகள் இருந்தது. இதிகாசங்கள், புராணங்களில் இருந்து நல்ல பண்புகளை வளர்க்கக் கூடிய கதைகளை ஆசிரியர்கள் கூறுவார்கள். வீட்டில் பாட்டி, தாத்தா இருந்தார்கள். குழந்தைகளுக்கு நல்ல கதைகள் சொல்லி வளர்த்தார்கள்.

    இப்போது அந்த நிலையே மாறி விட்டது. இன்றைய குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆசையும் இல்லை. மொபைல், கேம், என்று உலகை விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். அவர்களை நன்மையையும், நல்ல மகிழ்வான உலகத்திற்குள் இழுக்க இந்த மாதிரிக் கதைகள் அவசியம்.

    இன்று சிறுவர்களுக்கான இலக்கியங்கள் அதிகம் இல்லை. அதைப் படிக்கும் ஆர்வமும் இல்லை. டிஜிடல் மயமாகி விட்ட இந்த உலகில் அச்சிதழ்கள் குறைந்து விட்டது. சிறுவர்களை கதைகளுக்குள் இழுக்க டிஜிடல் கதைகள் தேவை.

    புஸ்தகா என் குழந்தைக் கதைகளை ஈ புத்தகமாக வெளியிட சம்மதித்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

    இவை அத்தனையும், கல்கி குழுமத்தின் கோகுலம் பத்திரிகையில் வெளியானது. வெளிவந்த நேரத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு பெற்ற கதைகள்.

    இவை புஸ்தகா மூலம் தொகுப்பாக வெளிவருவதில் மிகப் பெரிய ஆனந்தம் எனக்கு. என் பல கதைகள் புஸ்தகா மூலம் வந்தாலும் இதுவே முதல் குழந்தைக் கதைகள்.

    சிறுவர்களுக்கான கதைகள் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். அடுத்து மகாபாரதக் கதைகள் எழுதும் முயற்சியில் இருக்கிறேன். அதுவும் புஸ்தகா மூலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இக்கதைகள் அதிக அளவில் குழந்தைகளைச் சென்று சேரவேண்டும்.

    நல்ல பண்புகளும், நடவடிக்கையும், சத்தியம், நேர்மை தவறாத ஒரு தலைமுறை உருவாக வேண்டும் என்பதே என் ஆசை. இதை இந்தக் கதைகள் செய்ய வேண்டும்.

    இதை நிறையப் பேர் படியுங்கள். உங்கள் குழந்தைகளைப் படிக்க வையுங்கள். பரிசாக இந்தப் புத்தகத்தை அளியுங்கள்.

    படிப்பவர்கள், படிக்கப் போகிறவர்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். என் ஆசையை நிறைவேற்றிய புஸ்தகா நிறுவனத்திற்கு என் நெகிழ்வான நன்றிகள்.

    அன்புடன்,

    ஜி.ஏ.பிரபா.

    1. தேவதை வந்தாள்

    பூங்கொடி வாசலில் மாலை தீபம் வைக்க வந்த போது மூன்று பெண்கள் தன் வீட்டு வாசலில் நின்றிருப்பதைப் பார்த்தாள்.

    ஒருத்தி கரு நிறம், முகத்தில் ஒரு வேதனை, அதிக சுசுறுப்பு இல்லாமல் வாடித் தெரிந்தாள். அடுத்தவள் கம்பீரமாக, முகம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளைச் சுற்றி ஒரு நறுமணம் பரவி இருந்தது. அதிக உற்சாகமாக இருந்தாள். மூன்றாமவள்

    Enjoying the preview?
    Page 1 of 1