வாய்மையே கொல்லும்!
By Rajeshkumar
()
About this ebook
அவளை அணைத்திருந்த கரங்களை இன்னும் கொஞ்சம் இறுக்கினான். வர்ஷன். வர்ஷனின் அகலமான மார்பில் கோழிக்குஞ்சு மாதிரி பொதிந்திருந்தாள் செண்பகா.
"செண்பகா-"
அவன் கூப்பிட்டதும்-கிறக்கம் கை கோர்த்த குரலில் 'ம்'? என்ற செண்பகா கட்டியிருந்த பிங்க் நிற கார்டன் சில்க் கொஞ்சம் தாறுமாறாக நழுவியிருந்தது. முடியிருந்த இமைகளில் கண்ணின் அகலப் பரிமாணம் புரிந்தது. செழிப்பான நந்தவனம் மாதிரி இருந்தாள்.
"என்னிக்கு உன் பர்த் டே?"
"நட்சத்திரப்படியா? அல்லது ஆங்கிலத்தேதி பிரகாரமா?"
"எப்பவும் எப்படி கொண்டாடுவே?"
"வழக்கமா நட்சத்திரப்படி என்ன தேதியில் வருகுதோ, அந்த தேதியில் பிறந்த நாள் கொண்டாடுவேன்."
"இந்த தடவை ஆங்கிலத்தேதி பிரகாரம் கொண்டாடுவோமே?"
"உங்க இஷ்டம்."
"பர்த்டேக்கு உனக்கு நான் என்ன ப்ரசண்ட்டேஷன் வாங்கித் தரட்டும்?"
"நீங்களே, ஒரு விலைமதிக்க முடியாத அன்பளிப்பு!"
அவனுடைய விரல்கள் அவளின் கூந்தலை இணைத்தது.
"விளையாடாம சொல்லு... உனக்கு என்ன பிடிக்கும்?"அவனுடைய அடர்த்தியான பின்னந்தலையில் தன் நீளமான விரல்களை செலுத்திக் கோதியபடியே- "உங்களைப் பிடிக்கும்" என்றாள்.
"என்ன பொருள் பிடிக்கும்?"
"பர்த்டேக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு... மெல்ல யோசிச்சு அப்புறமா சொல்றேனே?"
"ஓக்கே..."
"என்னங்க... எனக்கு ஒரு ஆசை..."
"என்ன?"
"ஒரு நாள் கொடைக்கானல் போகணும்."
"இவ்வளவுதானா! இன்னும் கொடைக்கானலுக்கு நீ போனதில்லையா?"
"காலேஜில் படிக்கிறப்போ எஸ்கர்ஷன் மாதிரி ஒரு தடவை போயிருக்கேன்."
"அப்புறம் ஏன்? இத்தனை ஆசையா கேக்கறே?"
"உங்களோட போனா அது ஒரு தனி எக்ஸ்பீரியன்ஸாத்தானே இருக்கும், அந்த ஜீரோ டிகிரி குளிரில் ஒரு ராத்திரியாவது தங்கணும்."
"சொல்லிட்டே இல்ல! கூடிய சீக்கிரம் இந்த ஆசை நிறைவேற்றப்படும்."
சொல்லிவிட்டு அவளின் ஸ்பாஞ்ச் கன்னத்தோடு தன்னுடைய முகத்தை வர்ஷன் இழைத்தபோது அந்த அறையில் இருந்த ஆகாய வர்ண டெலிபோன் மவுனத்தைத் துறந்து அலறியது.
"சென்பகா, யாருன்னு கேளு..."
அவள் மனசில்லாமல் அவனிடமிருந்து பிரிந்தாள். படுக்கையில் புரண்டு கையை நீட்டி - ரிசீவரை எடுத்தாள். காதில் பொருத்தினாள்.
"ஹலோ...""…………"
"அப்படியா?"
"…………"
"சரி..."
ரிஸீவரை தாய்வீடு அனுப்பிவிட்டுத் திரும்பினாள். இன்னொரு புரளலில் அவனிடம் வந்து ஒண்டினாள்.
"போன்ல யாரு?"
"மதிப்பிற்குரிய - என் கணவர் பூர்ணசந்திரன்! காலேஜ்ல நிறைய வேலையாம். வீடு திரும்ப பனிரெண்டு மணிக்கு மேலாயிடுமாம்! ஒன்பது மணிக்கெல்லாம் உங்களை அனுப்பிவிட்டுரணுமேன்னு கவலைப்பட்டிருந்தேன். பதினோரு மணி வரைக்கும் உங்களோட ஜாலியா இருக்கலாம்."
Read more from Rajeshkumar
நயாகரா புயல்...! Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னுடைய ஆகாயம் Rating: 0 out of 5 stars0 ratingsபோகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை Rating: 0 out of 5 stars0 ratingsஇப்படிக்கு இறந்துபோன ரமா! Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக் வான்ட்டட்! Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு தாரணி தப்பு Rating: 0 out of 5 stars0 ratingsமெழுகுவத்திகள் Rating: 0 out of 5 stars0 ratingsநான் நளினா நள்ளிரவு Rating: 0 out of 5 stars0 ratingsகாதலுக்கு கண் இருக்கு Rating: 0 out of 5 stars0 ratingsரோஜா முள் துரோகம்! Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய பூ பூத்தது Rating: 0 out of 5 stars0 ratingsபணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி Rating: 0 out of 5 stars0 ratingsகாவ்யாவின் கறுப்பு தினங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகரைக்கு வராத அலைகள் Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னைக் கொலையாவது செய் கண்ணே! Rating: 0 out of 5 stars0 ratingsதப்பித்தே ஆக வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratingsஉயிர் எடுப்பான் தோழன் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாமூச்சி! Rating: 0 out of 5 stars0 ratingsமதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஷீலா சிம்லா சிறிது ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு நவம்பர் Rating: 0 out of 5 stars0 ratingsஅரை விநாடி அநியாயம் Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் ஒரு ஆச்சர்யக்குறி Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கிருந்தோ ஆசைகள்! Rating: 0 out of 5 stars0 ratingsதனியாக ஒரு தவறு! Rating: 0 out of 5 stars0 ratingsநான் கொல்லுவதெல்லாம் பெண்மை Rating: 0 out of 5 stars0 ratingsஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…! Rating: 0 out of 5 stars0 ratingsநீலம் என்பது நிறமல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsஇறப்பதற்கு நேரமில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsநியூ டெல்லி 2001 Rating: 0 out of 5 stars0 ratings
Related to வாய்மையே கொல்லும்!
Related ebooks
Vaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5மற்றொரு மகாபாரதம் Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Thaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Kavithai Rating: 4 out of 5 stars4/5Thedu Kidaikathu Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Uyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Theeyai Theendiya Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5தப்பித்தே ஆக வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratingsGomathiyin Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsPerum Mazhai Naatkal Rating: 2 out of 5 stars2/5Nee Engey... En Anbe...! Rating: 0 out of 5 stars0 ratingsKaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsThodathoda Malarnthathenna...! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Oru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Kannale Oru Kaadhal Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsMin Miniyai Naan... Rating: 4 out of 5 stars4/5Ivarthan, Konjam Kavani... Rating: 0 out of 5 stars0 ratingsUyire Unaithedi Rating: 4 out of 5 stars4/5Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for வாய்மையே கொல்லும்!
0 ratings0 reviews
Book preview
வாய்மையே கொல்லும்! - Rajeshkumar
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
Copyright © By Pocket Books
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
1
"அப்படி என்னத்தையடா படிச்சிட்டிருக்கே...?"
குரல் கேட்டு புத்தகத்திலிருந்து நிமிர்ந்தான் நிர்மல். நண்பன் பாலா பான் பீடா வாசனையோடு தெரிந்தான். இடம் பாரதி பார்க். மாலை ஆறு மணி.
நிர்மல் சொன்னான்.
இளம் பறவைன்னு ஒரு புத்தகம். ஜி. சி. டி. ஸ்டூடண்ட்ஸ் போட்டி வெச்சாங்க. ஒவ்வொரு கவிதையும் ஆணியடிச்ச மாதிரி இருக்கு...
உனக்கு வேற வேலையில்லை. எப்பப் பார்த்தாலும் கவிதை தானா...! மூணு வேளையும் கவிதை படிச்சா பசி போயிடுமா...?
சில கவிதைகளுக்கு அந்த சக்தி இருக்கு. சாம்பிளுக்கு ஒரு கவிதையை படிச்சு காட்டட்டுமா...?
படி பார்க்கலாம்.
மொதல்ல கவிதையோட தலைப்பு.
சொல்லு.
அரிய கண்டுபிடிப்புகள்...
கவிதையைப்படி பார்க்கலாம்.
நிர்மல் மடிக்க ஆரம்பித்தான்.
"யார் கூறியது.
இந்தியாவில்
கண்டுபிடிப்புகளே நிகழவில்லையன்று
வந்தாண்டு திட்டங்களில்
வறுமைக்கோட்டை
கண்டுபிடித்திடுவோம்.
நீதிகளுக்காக சண்டையிட்டு
வறட்சியை
கண்டுபிடித்து இருக்கிறோம்.
தேர்தல் பிரசாரத்திற்கு
மதவாதம்.
கண்டுபிடித்து இருக்கிறோம்.
மக்களிடம் ஓட்டு வாங்க"
வதந்திகளை
கண்டுபிடித்து இருக்கிறோம்.
கல்லூரிகளை அமைத்து
வேலையின்மையை கண்டுபிடித்திருக்கிறோம்"
நாங்கள் கண்டுபிடிப்புகளில்
கவனமாய் இருந்ததால்
காணாமல் போய்விட்டது
நேரம்"
"எப்படி கவிதை? என்றாள் நீர்மல்.
பாலா பான் எச்சிலை துப்பிவிட்டு கேட்டான்.
எழுதினது யார்...?
கே. ராஜேஷ்ங்கிற ஸ்டுடண்ட்...
சரி... சினிமாவுக்கு வர்றியா போகலாம். சென்ட்ரல்ல ஒரு மலையாளப்படம். மோகன்லால், மம்முட்டி ஆக்ட் பண்ணியிருக்காங்க...
நான் வரலை பாலா... வீட்டுக்கு போகணும்.
எப்பப்பாரு வீடு… வீடுன்னு... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோடா...
அதுக்குத்தான் இந்த புஸ்தகம் இருக்கே?
நீ... திருந்த மாட்டே ! வரட்டுமா... லேட்டா போனா படம் போட்டுடுவான்...
பாலா கிளம்பிப் போய்விட நிர்மல் கையில் வைத்திருந்த புத்தகத்துடன் மறுபடியும் நுழைந்தான்.
பத்து நிமிஷம் கரைந்து இருக்கும் காற்றில் மல்லிகை வாசம் மணக்க வளையல் சத்தம் பின்பக்கமிருந்து கேட்டது.
திரும்பினான்.
அந்த இளம்பெண் தெரிந்தாள். கண்களில் கலக்கம். ஸார்...?
என் பேர் ரஞ்சிதா. தொழில் கால்கேர்ள். ஆறு மணிக்கு ஒருத்தர் வந்து என்னை பிக்கப் பண்ணிக்கிறதா சொன்னார். இதுவரைக்கும் வரலை. வீட்ல ஏகப்பட்ட கஷ்டம். அம்மாவுக்கு மருந்து வாங்கணும். பார்ட்டி வரலைன்னா நான் வீட்டுக்கு போக முடியாது. ஸார்... அதனால்...
அதனால...?
நீங்க எனக்கு கம்பெனி கொடுக்க முடியுமா ஸார். நூறு ரூபாய் கொடுத்தா போதும் ஸார். ரெண்டு நாளைக்கு பொழுது போயிடும்...
"நிர்மல் அவளையே பார்த்தான்.
உனக்கு வீடு எங்கே...?
எஸ். என். காலனி...
நீ என்னை கஸ்டம்ரா நினைக்காம ஒரு ப்ரதரா நினைக்கிறதாயிருந்தா உதவிப் பண்ணத் தயார்.
உங்களை ப்ரதராவே நினைக்கிறேன் ஸார்...
அப்படின்னா... இந்தா...
தன் இடது கை விரலில் இருந்த அரை பவுன் மோதிரத்தைச் கழற்றி அந்த ரஞ்சிதாவின் கையில் திணித்தான்.
வித்து பணத்தை எடுத்துக்க...
2
அவளை அணைத்திருந்த கரங்களை இன்னும் கொஞ்சம் இறுக்கினான். வர்ஷன். வர்ஷனின் அகலமான மார்பில் கோழிக்குஞ்சு மாதிரி பொதிந்திருந்தாள் செண்பகா.
செண்பகா-
அவன் கூப்பிட்டதும்-கிறக்கம் கை கோர்த்த குரலில்