Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Periyamma
Periyamma
Periyamma
Ebook127 pages49 minutes

Periyamma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603608
Periyamma

Read more from Devibala

Related to Periyamma

Related ebooks

Reviews for Periyamma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Periyamma - Devibala

    http://www.pustaka.co.in

    பெரியம்மா

    Periyamma

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    காலை முதலே வீடு பரபரப்பாக இருந்தது. அதிகாலை நாலு மணிக்கே மொத்த வீடும் விழித்துக் கொண்டது!

    பெரியம்மா தைலா பரபரப்பின் உச்சத்தில் இருந்தாள்! இன்றல்ல! நேற்றல்ல! ஒரு வார காலமாகவே பெரியம்மா தைலாவுக்கு படபடப்பு அதிகமாகிவிட்டது!

    வீட்டை ஒழுங்கு படுத்துவதிலும், வாங்க வேண்டிய புதிய பொருட்களுக்கு பட்ஜெட் போடுவதிலும், வெளியே போய் ஷாப்பிங் செய்வதிலும் முழுமையாக இருந்தாள். வீட்டில் இருப்பவர்களையெல்லாம் ஆட்டி வைத்தாள்!

    காரணம் என்ன?

    மகேஷ் வரப் போகிறான்!

    இரண்டு வருடங்களாக லண்டனில் உத்யோக நிமித்தம் இருக்கும் மகேஷ், இந்தியா திரும்பப் போகிறான்!

    அதற்காகத்தான் இத்தனை பரபரப்பும், இந்த ஏற்பாடுகளும் மகேஷ் வருவதற்கு முன் அவனுடைய இந்த வீட்டைப் பற்றி, இங்குள்ள உறவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், இன்னும் சுவையாக இருக்கும்.

    மகேஷின் படிப்பு எம்.டெக்., எம்.பி.ஏ., தங்க மெடலுக்கு சொந்தக்காரன்! படிப்பு முடிந்ததும் நீ, நான் என்று கம்பெனிகள் போட்டிப் போட்டி அவனை அழைக்க, அவன் கம்பெனியைத் தேர்ந்தெடுக்கும் நிலை!

    எடுத்த எடுப்பில் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புள்ள ஒரு நிறுவனம் உலக அரங்கில் முன்வரிசையில் நிற்கும் ஸ்தாபனம் மகேஷை அழைத்து பெருமை தேடிக் கொண்டது!

    ரெண்டு லட்சம் சம்பளம், கார், கம்பெனி வீடு போன்ற சர்வ வசதிகளும் உடனே தரப்பட்டன!

    ஒரு வருடம் இங்கே வேலை பார்ப்பதற்குள் கம்பெனியே அசந்து போகும் அளவுக்கு மகேஷ் சாதிக்கத் தொடங்கிவிட்டான்!

    வர்த்தக ஆங்கில நாளேடுகளில் பேட்டி, கவர்ஸ்டோரி என கலக்கல்!

    உடனடியாக லண்டனுக்கு விசேஷ பயிற்சிக்காக கம்பெனி அனுப்ப முடிவெடுக்க, அதற்கான சம்பள உயர்வு இத்யாதிகள். மகேஷ் புறப்பட்டு விட்டான்!

    இரண்டு வருட வெற்றிகரமான பயிற்சிக்குப்பின் இதோ இன்று இந்தியா வருகிறான்!

    அழகன், துடிப்பான இளைஞன்! சாதிக்கத் துடிக்கும் மனிதன்! வயது இருபத்தி ஏழு!

    இனி குடும்பம்!

    மகேஷின் அப்பா சிவராஜ் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மனிதர். ஒரு தனியார் கம்பெனியில் வேலை! அவர் மனைவி கஸ்தூரிக்கு மாநில அரசாங்க உத்யோகம்! சிவராஜிக்கு மூன்று தங்கைகள்!

    அனைவருக்கும் கடன் வாங்கிக் கல்யாணம் செய்வதற்குள் அவருக்கு வயது முப்பத்தி. மூன்று விதவைத் தாய் தவிர ஏராளமான கடன்!

    கல்யாணமே வேண்டாமென்று நினைத்தவர் சிவராஜ்! ஆனால் பணப்பற்றாக்குறை எல்லை மீறி, வேலைக்குப் போகும் பெண் மனைவியாக வந்தால், குடும்பச் சுமையில் பெரும் பங்கு வகிக்கலாம் என்ற நப்பாசையில் திருமணத்துக்கு சிவராஜ் சம்மதிக்க, கஸ்தூரி மனைவியானாள்.

    அவரது கடன் சுமையை, குடும்ப பாரத்தை கஸ்தூரி உடனே ஏற்றுக் கொண்டாள். ஆனால் ஒரு நிபந்தனையுடன்!

    கஸ்தூரிக்கு ஒரு விதவைத்தாய்!

    ஒரு வாழாவெட்டி அக்கா-தைலாம்!

    அந்தக்குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் ஒரே தாண் கஸ்தூரி!

    தன் குடும்பத்துக்கு பணரீதியாக உதவ வேண்டும் என்று கஸ்தூரி சொல்ல, சிவராஜுக்கு பிரச்சனை! அவர் கஸ்தூரியை மணப்பதே தன் கடன்களை அடைக்கத்தான்! அவள் சம்பளம் வராவிட்டால், இந்தக் கல்யாணத்துக்கே அர்த்தமில்லை!

    கல்யாணம் நடந்த பிறகே கஸ்தூரியின் நிபந்தனை!

    சிவராஜ் தவிக்க,

    தைலா குறுக்கே புகுந்தாள்!

    எங்களுக்காக ஒரு வீடும், செலவும் வேண்டாம்! நாங்க உங்க வீட்டுக்கே வந்துட்டா ஒரே செலவா ஆயிடும்!.

    சிவராஜ் உடனே சம்மதிக்க,

    கஸ்தூரியின் அம்மா ரொம்பவே தயங்கினாள்.

    இது எப்படி? பொண்ணைக் கட்டிக் குடுத்த கையோட அவளோட அக்கா, அம்மா ரெண்டு பேரும் கூடவே போனா நல்லாருகுமா? மரியாதை இருக்குமா? நாம அவங்க வீட்ல சுதந்திரமா இருக்க முடியுமா? எனக்கு இது சரியா வரும்னு தோணலை!

    அம்மா வேற வழியில்லை கஸ்தூரியால ரெண்டு குடும்பத்தை பராமரிக்க முடியுமா?

    இது சிக்கலாச்சே தைலா?

    உனக்கென்ன சிக்கல்? மாப்ளையே சம்மதிக்கறார்! அப்புறமா என்ன

    இது ஒரு புறமிருக்க,

    சிவராஜ் குடும்பத்தில் புயல் வீசியது!

    அவரது அம்மா லஷ்மி கொந்தளித்துவிட்டாள்.

    அவளோட அம்மாவும், அக்காவும் நம்ம கூட நிரந்தரமா எப்படிடா இருக்க முடியும்?

    "வேறவழியில்லைம்மா! அவங்க எங்கே போவாங்க?

    இத்தனை நாள் எங்கே போனாங்க? அவங்க வீட்லயே இருக்கட்டுமே

    எப்படீம்மா? அவங்க வீட்ல சம்பாதிக்கறவ கஸ்தூரி ஒருத்தி தான் அவளும் இங்கே வந்துட்டா, அவங்க குடும்பம் பட்டினி கிடக்க முடியுமா?

    அதுக்கு நீயா பொறுப்பு

    என்னம்மா இப்படி பேசற? நான் பொறுப்பெடுத்துக்கலைன்னாலும், கஸ்தூரி அவங்களை விட முடியுமா? கஸ்தூரி இந்தக் குடும்பத்துக்கு பொறுப்பு எடுத்துக்கறது நியாயம்னா, அவ குடும்பப் பொறுப்பை நானும் ஏத்துக்கத்தானே வேணும்? அதுதானே தார் மீகம்?

    "என்னடா உளர்ற? ஒரு பொண்ணுதான் புருஷன் வீட்டுக்கு வாழ வரணும்? அதுதான் இந்த சமூகத்தோட நியதி?

    ஆம்பளை அவ வீட்டுக்கு வாழப் போகலை!"

    அதுதானேமா நடக்குது? இப்பவும் நீ அவங்க வீட்டுக்குப் போகலையே? அவங்கத்தானே வர்றாங்க?

    எதுக்கு இதை முன்னாலயே அவ சொல்லியிருந்தா, நாம வேற பொண்ணைப் பார்த்திருக்கலாமில்லை? கழுத்துல தாலி ஏறின பிறகு அவ குடும்பத்துக்கு அவ செய்யணும்னு சொன்னா நியாயமா?

    அம்மா பிரச்சனையை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல், தன் பெண்கள் வரை கொண்டு போக, கல்யாணமான சகோதரிகள் உள்ளே புகுந்து விட்டார்கள்!

    அண்ணே! இது சரியில்லை! நம்ம வீட்ல அவங்க வந்து எப்படி நிரந்தரமா இருக்கலாம்?

    எது நம்ம வீடு? எப்ப என் தாலி கஸ்தூரி கழுத்துல ஏறியாச்சோ, அப்பவே இந்த வீடு அவளுக்கும் சொந்தம்தான்! நம்ம அப்பா சேர்த்து வைக்கலை! அவர் சுமையை நான் சுமந்தேன்! உங்களையெல்லாம் வாழ வைக்க கடன்பட்டேன்! அதை அடைக்க ஒருத்தி வரும்போது, அவ சுமைகளை நான் சுமக்கறதுதான் நியாயம்! அதைக் கேள்வி கேக்க யாருக்கும் உரிமை இல்லை

    பேயறை விழுந்தது!

    அத்தனை பேரும் வாயை மூடிக் கொண்டார்கள்!

    விளைவு?

    கஸ்தூரியின் அம்மாவும், அக்கா தைலாவும் இங்கு குடிபுகுந்தார்கள்.

    முதலில் ஒதுங்கிப் போய் ஓரமாக நின்றார்கள்!

    கஸ்தூரி வேலைக்குப் போகும் பெண்! கடனை அடைப்பதற்காக பார்ட் டைம் வேலையையும் ஏற்றுக் கொண்டாள்!

    காலை ஏழு மணிக்கு கஸ்தூரி வீட்டை விட்டு புறப்பட்டால், வீடு திரும்ப இரவு எட்டரை ஆகிவிடும்!

    அதற்கு மேல் கஸ்தூரியால் வீட்டில் என்ன வேலை செய்ய முடியும்?

    சகலமும்

    Enjoying the preview?
    Page 1 of 1